சக.முத்துக் கண்ணன் & ச.முத்துக்குமாரி (Saga. Muthu Kannan & Muthumari S) எழுதிய "நோ சொல்லுங்க" (No Sollunga) புத்தகம் ஓர் அறிமுகம்

சக.முத்துக் கண்ணன் & ச.முத்துக்குமாரி எழுதிய “நோ சொல்லுங்க” புத்தகம் ஓர் அறிமுகம்

“நோ சொல்லுங்க” (No Sollunga) ஆசிரியர்கள் அறிமுகம்:

திரு சக.முத்துக் கண்ணன் அவர்கள் தேனி மாவட்டம் கூடலூரைச் சார்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர். இவர் மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் அதிக ஆர்வம் உடையவர். வாசிப்பு இயக்க செயல்பாட்டாளர்.

அதுபோலவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ச.முத்துக்குமாரி அவர்களும் வாசிப்பு இயக்க செயல்பாட்டாளர் மட்டுமின்றி கொரோனா காலத்தில் வீதி வகுப்பறை செயல்படுத்திய அரசு பள்ளி ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

இருவரும் எழுதிய நோ சொல்லுங்க புத்தகம் அனைவரும் வாங்குவதற்கு YES சொல்ல வேண்டும்.

NO சொல்வது சுலபம் சொல்வது தான் திறமை

NO நோ சொல்வது திறன் கலை தன்னம்பிக்கை

*NO* என்பது
*சிறந்த பதில்*

NO சொல்பவர்
*கெட்டவர் இல்லை*

YES கூட தாமதமாக சொல்லலாம், ஆனால் NO உடனே சொல்ல வேண்டும்.

_கதை மூலம் NO_ :

13 வயது உள்ள சுதாவிற்கு அவள் அம்மா சுடிதார் ஒன்று வாங்கி வந்தார். அந்த சுடிதார் பிடிக்காத சுதா, அம்மாவிடம் சொல்ல பயந்து கொண்டே இருந்தாள். NO சொல்ல கற்றுக் கொண்ட ஒரு குழந்தை இதை எவ்வாறு கையாளும் என்பதை பார்ப்போம்:

*பிடித்துள்ளது.ஆனால் எனக்கு PINK ரொம்ப பிடிக்கும் அம்மா.

*என்னையும் துணிக்கடைக்கு கூட்டிப் போயிருக்கலாம்ல?

*ப்ளீஸ் அடுத்த முறை சுடிதார் எடுக்கும்போது என்னை கூட்டி போங்கம்மா.

இப்பொழுது அம்மா கேட்டாள், ஏன் சுடிதார் பிடிக்கவில்லையா?

ஆமாம் அம்மா. ப்ளீஸ் எனக்கு PINK கலர் சுடிதார் வாங்கி கொடுங்க என்று பொறுமையாக சொன்னாள்.
*இப்பொழுது நோ சொல்ல முடிகிறது தெரிகிறதா குழந்தைகளே!!*

ஆதலால் சொல்லி பழகுங்கள் NO… *தேவையானதற்கு*

NO சொல்வது மட்டும் முக்கியமல்ல, பிறர் NO சொல்வதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும் என்பதுதான் முக்கியம்.
பல சுயநலவாதிகள் [Selfish] நம்மிடம் காரியத்திற்காக நட்பு கொள்வர். அப்போது அவசியம் தேவை NO.

சக.முத்துக் கண்ணன் & ச.முத்துக்குமாரி (Saga. Muthu Kannan & Muthumari S) எழுதிய "நோ சொல்லுங்க" (No Sollunga Tamil Book) புத்தகம் ஓர் அறிமுகம்

வரலாற்றின் நோ சொன்னவர்கள்:

சாக்யா ,கோலி என்ற இரு சிறிய நாடுகளுக்கு இடையே ஆற்று நீரை யார் பருகுவது? என்ற சண்டை தொடங்கிய போது ,

*போர் தான் இதற்கு நிரந்தர தீர்வு* என பலர் முடிவு எடுத்தனர்.
ஆனால் சித்தார்த்தர் என்பவர் மட்டும் போருக்கு NO சொல்ல, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் இறுதியில் போர் நிறுத்தப்பட்டு பல உயிரிழப்பு தடுக்கப்பட்டு பேச்சு வார்த்தையில் சுலபமானது.

ஒரு NO ஒரு போரை நிறுத்தியது.
*அவர்தான் புத்தர்*

ஆங்கிலேய அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போகாத காந்தி NO சொன்னதால்தான் , மக்கள் இயக்கமாக மாறி இந்திய விடுதலைக்கு வித்திட்டது.

பொம்பள பிள்ளைங்க எல்லாம் கல்யாணம் பண்ணனும் சமைக்கணும். எதுக்கு படிப்பு? என சொன்ன எல்லோருக்கும்….
NO சொன்ன ஒரே வார்த்தையால்தான் *_இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை முதன் முதலில் ஆரம்பித்தார் சாவித்திரிபாய் பூலே_..*

அவர் சொன்ன NO தான் இன்று பல பெண்கள் படிக்கிறார்கள்.

என் அன்பு குழந்தைகளே சரியான நேரத்தில் சரியான இடத்தில் நோ சொல்ல பழகுங்கள்.
*அது திமிர் அல்ல!* உங்களுடைய ஆகச் சிறந்த குணமாக மாறட்டும்…

உன் மனதிற்கு பிடிக்காத நிகழ்விற்கும், தாய் தந்தையிடம் சொல்ல முடியாத நிகழ்விற்கும் No அவசியம்.
உடல் வெறுக்கத்தக்க பிறர் பார்வைக்கும், விரல் தீண்டலுக்கும் மறுகணமே மறுத்துவிட்டு NO சொல்லவும். அதை பெற்றோரிடம் சொல்ல தைரியமும் வேண்டும்.

வாய்ப்பு கிடைக்கும் பொழுது மறுத்து பேசும் திறன் பற்றிய சிறார் நூலை
வாங்கி படியுங்கள்
இதற்கு தந்தையிடம் YES சொல்லுங்கள்.

நூலின் விவரம்:

புத்தகம்: நோ சொல்லுங்க
ஆசிரியர்: சக.முத்துக் கண்ணன் & ச.முத்துக்குமாரி
விலை : ரூ.199
வெளியீடு: எதிர் வெளியீடு (Majic lamp)
முதல் பதிப்பு : ஜனவரி 2024

✍️ எழுதியவர்:

யாழ்.மாரி
கும்பகோணம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *