Saguavarathan Poems. சகுவரதன் கவிதைகள்

சகுவரதன் கவிதைகள்




பின் புத்தி
=========
தலைப்பைப் பற்றி
தலையை
சொரிந்துகொண்டிருக்கையில்
கவிதை வரிகளில்
அலைந்துகொண்டிருந்த
எறும்பு
சுருக்கென கடித்துவிட்டது.
நசுக்கிய பிறகுதான்
யோசித்தேன்.
என்ன சொல்ல வந்திருக்கும் ?

கார்ப்பரேட்
=========
விலை அதிகமென்று
வேண்டாமென
உதறி நடந்தேன்.
வாங்கச் சொல்லி
நச்சரித்தபடியே
வருகிறது
மல்லி வாசனை.

ஆறுவது சினம்
=============
உரோமங்கள் சிலிர்ப்பதை
நன்கு உணர்கிறேன்.
உதடுகள் துடிக்க
குத்தீட்டியாய்
நிற்கிறது மீசை.
சிவந்த கண்களுடன்
நறநறவென
பற்களைக் கடிக்கிறேன்.
ஆயினுமென்ன…
நிரப்பிய பெட்ரோலுக்கான
விலையை
புன்முறுவலுடன்தான்
கொடுக்கிறேன்.

கௌரவம்
=========
பசிக்கிறதா என்றேன்.
இல்லை.
இப்போதுதான்
தின்று முடித்தேன்
பசியை
என்றான்.

மெய் பிம்பம்
=============
மிஸ்ஸைப்போலவே
அபிநயம் பிடிக்கிறாள்
சிறுமி.
பார்க்கப் பயந்து
கண்ணை
மூடிக் கொண்டது
கண்ணாடி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *