Subscribe

Thamizhbooks ad

சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் | மதிப்புரை ஜோன் மார்ஷல்

நாவலுக்கு பொருத்தமான பெயர் தான், ‘சாய்வு நாற்காலி’. மணியடித்தால் வடித்து கொட்டவும், ஆவி பறக்க சாயா நீட்டவும், ஏன் என்று கேள்வி கேட்காமல் அடுப்பாங்கரை புகையோடு கரையவும், அடிகள் உதைகளை மானியமாக பெறவும் ஒரு மனைவி. அவளை கறவை மாடாக மேய்க்க அதக பிரம்பும், அதிகாரத்தை அங்கீகரிக்க சாய்வு நாற்காலியும் கொண்ட பகலில் படி தாண்டா ஒரு கணவன். ஒரு குடும்பம் கொண்டு பல குதர்க்கங்களை நுணுக்கமான நிகழ்வுகள் ஊடாக விவரிக்கிறார் ஆசிரியர்.

மிகவும் அருமையான, உண்மைத்தன்மை நிறைந்த நாவல். வரலாற்று படிவங்களில் கறைகளாக படிந்து கிடக்கும் நிலவுடைமைச் சமூகத்தின் குடலைப் பிரட்டும் மூத்திர நெடி முட்டி நிற்கும் சவ்தா மான்ஸிலில், செடியின் மீது காரி துப்பிய சளியின் நூல் இழைகளின் இடுக்கில் கேமரா முஸ்தபாகண்ணை போக்கஸ் செய்கிறது.

இந்த கதாபாத்திரம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கன்னிப் பெண்களின் மாமிச வணப்பை பகலில் கண்களிலும், இரவுகளில் காடுகளிலும் சூரையாடும் களிப்பில் மனைவியை கறவை தீர்ந்த மாடாகவும், அடுப்படிக்கு அர்ப்பணித்த ‘ஆ’ வாகவும் நடத்தும், முன்பு தோன்றிய சளிக்கும் சிகரெட் புகை கலந்த மூத்திர நெடிக்கும் சொந்தக்காரர். சவ்தா மன்ஸிலின் கடைசி காரணவர். நிலவுடைமை சமூகத்தின் கடைசி பெருமை பீத்தும் பிரபு. நம் நாவலின் ஹீரோ.

...
                                                        தோப்பில் முகமது மீரான்

இந்த ஒற்றை கதாபாத்திரம் எத்தனை எத்தனை ஆதிக்க கற்பிதத்தை, பழம் பெருமை பேசும் பகட்டுகளை, பெண்களின் உரிமைகள் மீதான வன்முறை தாக்குதல்களை, ஜாதிய அடக்குமுறைகளை, அதிகார விசுவாசிகளின் மழுங்கிய அறிவை, சுயநலத்திற்காக எதையும் செய்ய துடிக்கும் மனித மனநிலையை நிகழ் காலம், கடந்த காலம் என மாறி மாறி உணர்த்திக்கொண்டே கதையை நகர்த்துகிறது.

இந்த நாவல் கூறும் களம் இன்றைய சூழலில் கூட சிறப்பாக பொருந்தும். நம்மில் எத்தனை எத்தனை முஸ்தபாகண்கள் தங்கள் ஆதிக்க சவுக்கை எத்தனை எத்தனை மரியம், இஸ்ரயேல் என நீளும் கதாபாத்திரங்களின் மேல் வீக்கங்களையும், தழும்புகளையும் தாராளமாக பதித்துக்கொண்டிருக்கிறோம்?
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். 1997 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்.

வாசிக்க பழகு!

நூல்: சாய்வு நாற்காலி
ஆசிரியர்: தோப்பில் முகமது மீரான்

– ஜோன் மார்ஷல்

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா

      கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத் தொடங்கும். எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று மெதுவாக பார்த்துக் கொண்டிருந்த நாம் பேருந்து வேகமாக செல்லத் தொடங்க முழுமையான பயணியாகி விடுவோம். அதுபோல,...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகள் அறிவித்தன. இல்லாத தங்கள் கடவுள்களின் பெயரால் அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். போரால் அனாதையாகிப் போயிருக்கும் எந்தவொரு குழந்தையிடமும் கேட்டுப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது வாழிடம், குடியிருப்பு, வீடு மற்றும் அலுவலகம், பல்வேறு காரணங்களுக்கான கட்டிடங்கள், தேவை என்பதை நாம் அறிவோம்! அவற்றை உருவாக்க உதவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here