Sakthiyin Kavithaigal 4 சக்தியின் கவிதைகள் 4

சக்தியின் கவிதைகள்

கடவுளும் கந்தசாமியும்
****************************
இரவு
முழுவதும் மூட்டையை
சுமக்கிறான்
ஓடாய் தேந்து
போன கந்தசாமி,

மூட்டையை
சுமந்த கந்தசாமிக்கு
முதுகுவலி ஏற்படுகிறது
அழுது கொண்டே கோவிலில்
உள்ளே உள்ள சிலையை
வனங்குகிறான்,
சிலையும் அழுகிறது
நானும் பல ஆண்டுகளாக
இங்கேயே கிடக்கிறேனென்று,

மூட்டையை சுமந்து
வாங்கிய சம்பளத்தில்
சம்பங்கி மாலை,
கற்பூரம்,
பத்தி,
இரண்டு வாழைப்பழம்,
வெற்றிலை பாக்கு,
தட்சணை பத்து ரூபாய், எடுத்துக்கொண்டுகோவிலின்
உள்ளே நுழைகிறேன்
கடவுளை காணோம்
கற்சிலை மட்டும் தெரிகிறது,

சிலையும் தெரிகிறது
கற்பூரமும் எரிகிறது,
ஊதுபத்தியும்
புகையை கக்குகிறது,
கோவிந்தா,
கோவிந்தா என
அழுதுகொண்டே
என்று குரல் எழுப்புகிறான் கந்தசாமி …..!

இருட்டு அறையும்  கருப்பு பூனையும்
*******************************************
ஜன்னல்கள் இல்லாத
பழைய பொருட்கள்
வைக்கப்பட்ட இருட்டு அறையில்
உடைந்த நாற்காலியில் மேல்
படுத்து தூங்குகிறது
கருப்பு பூனை,

இருட்டிலே படுத்த
பூனையின் கண்கள்
வெளிச்சத்தை
கொடுக்கிறது
இருட்டு அறையில் எரியும்
குண்டு பல்புகளைப்போல,

அந்த இருட்டு அறையின்
தகர கதவை திறக்கும் ஒலியினாள் தூங்கிய பூனைக்குட்டி
துள்ளிக் குதித்து ஓடுகிறது
பானை சந்தின் ஓரத்திலே

கருப்பு பூனையின்
வெள்ளை நிற மீசைகள்
தயிர் பானைகள்
முழுவதும் பரவிக்கிடக்கிறது
இரவு நேரத்திலே அடுப்பு மோடையில் நுழைவதால்,

வீடுகள் முழுவதும்
பாத்திரங்களை
உருட்டி விளையாடுகிறது
கருப்பு பூனை பாத்திரங்களை விளையாட்டு பந்துகளாக நினைத்துக்கொண்டு,

மாட்டுக்கறியின்  எலும்பு
துண்டுகளை கடித்து குதறிய
பூனைக்குட்டி
அம்மாவின் முந்தானை
துணியால் முகத்தை
துடைத்துக்கொண்டு ஓடுகிறது,
விளக்குகள் இல்லாத
இருட்டு அறையை நோக்கி….!!!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *