காலையில் கலைந்த தலையுடைய என்னைப்பார்த்து விசிலடிக்கும் முதல் விசிறி பால் குக்கர்!

காப்பி, டீ, பூஸ்ட் என கலக்கும் என்னையே ரசிக்கவைக்கும் குக்கரின் விசில்!

இட்லியுடன் நான் வெந்தாலும் பூ போல இட்லி சிரிக்கும் என் கணவனை பார்த்து!

நெய் ஊற்றிய பெரிய வட்ட தோசை அன்பு மகனின் அன்பைப் பெற்றுத் தரும்!

நெய் மணக்கும் எண்ணெய் கத்திரிக்காய் சிடுமூஞ்சி மாமனாரை சிரிக்க வைக்கும்!

தக்காளி, பூண்டு மணக்கும் ரசமும், கூட்டும் அதிகார மாமியாரை அன்பாக பேச வைக்கும்!

என் வீட்டு டாமிக்கு நான் ஊற்றும் பால் கலந்த சத்துமாவு கஞ்சி வாலையாட்டி என்னை சுற்ற வைக்கும்!

நவ கிரகங்களை போன்ற என் வீட்டினரை ஒன்றாக பாசம் வைக்க வைத்தது என் சமையல்!

தினந்தோறும் வீட்டில் நான் விரும்பி பொழுதை கழிக்கும் இடம் என் சமையலறை!

ஆனாலும்

சமையலறை மட்டும்தான்

எனக்கான அறையா?

– சத்யா சம்பத்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *