தொடர் - 36: சமகால சுற்று சூழல் சவால்கள் - பா. ராம் மனோகர் - WebSeries - Contemporary Environmental Challenges - Samakala SUtrusuzhal Savalakal -https://bookday.in/

தொடர் – 36: சமகால சுற்று சூழல் சவால்கள்

தொடர் – 36: சமகால சுற்று சூழல் சவால்கள்

சூழல் மதிப்பீட்டு முறை, நீர்த்து போன
நிலையா!!??

ஒரு தொழிற் சாலை அல்லது வளர்ச்சி திட்டம், நாட்டின் எந்த பகுதியில் துவக்கம் செய்தாலும், அந்த குறிப்பிட்ட செயல்பாடு, அப்பகுதியின் இயற்கை சூழலை பாதிக்கக்கூடிய நிலை, ஏற்படும் என்ற அய்யம் வருவது இயல்பு! மேலும் அந்த பாதிப்புகள் அந்த சமூகத்தில் பொருளாதார, கலாசாரம், மனித ஆரோக்கியம் ஆகியவற்றில், நாம் விரும்பத் தகாத மாற்றங்கள் உருவாக்க வாய்ப்புகள் உள்ளதால், சூழல் மதிப்பீட்டு முறை (ENVIRONMENT IMPACT ASSESSMENT ) நடைமுறையில் உள்ளது.

இந்த மதிப்பீட்டு முறைக்கு எட்டு அடிப்படை கொள்கைகள் உண்டு. அவையாவன, முழுமையான பங்கேற்பு, பாதுகாப்பு வெளிப்படையான செயல்,,நம்பிக்கைத் தன்மை , செலவு தொகைக்கான திறன், நெகிழ்வு தன்மை,, பொறுப்புணர்வு,
செயல் எளிமை ஆகியன ஆகும்.

இந்த மதிப்பீட்டு முறை பல்வேறு நிலைகளில், குறிப்பாக காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசு, உயிரின பாதிப்புகள், நில மாசு அல்லது நிலம் தகுதியற்ற நிலை, மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வு பிரச்சினை,சுகாதார நிலை ஆகிய காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் முடிவுகள் வழியாக, பாதிப்பு காரணிகள் கணக்கெடுப்பு (RISK ASSSESMENT ) அறிந்து, சரியான சுற்றுச் சூழல் மேலாண்மை திட்டம் உருவாக்க வேண்டும்.

சூழல் மதிப்பீட்டு முறையில் மிக முக்கியம், திட்டம் சார்ந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுடன் ஆலோசனை செய்த பின்னர், உரிய முடிவுகள் எடுக்க வேண்டும். முடிவுகள் அடிப்படையில் திட்டம் நிறைவேற்ற செயல்பட வேண்டும். செயல்பாட்டில் திட்டம் இருக்கும் நிலையில், தொடர்ந்து மதிப்பீட்டு பணிகள், திட்டத்தினை கண்காணித்து, மதிப்பீட்டு முறைகளில் கண்டறிந்த பாதிப்பு உண்மைகள், அதற்குரிய தீர்வுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா, என்பது அறிவதும் அவசியம் ஆகும்.

சரி, சூழல் மதிப்பீட்டு முறை என்பது வளர்ச்சி சரியான திசையில் செல்லும்போது, அந்த குறிப்பிட்ட திட்டம் மூலம் இயற்கைக்கு பாதிப்பு, மக்களுக்கு துன்பங்கள் வராமல் இருக்க உருவாக்கப்பட்டது ஆகும். இது முதலில் நம் நாட்டில்
1994 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவிக்கையாக, வெளியிட்டது. பின்னர் பல்வேறு மாற்றங்கள், உருவாக்கி 2006 ஆம் ஆண்டு முழுமையாக ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் மூலம் சூழல் மதிப்பீட்டு முறை மேற்கொண்ட பின்னரே, தொழில் விரிவுப்படுத்துதல், புதிய திட்ட அனுமதி ஆகியவற்றிற்கு “பசுமை அனுமதி “(GREEN CLEARANCE ) வழங்கப்படுகிறது.இந்த சட்டம் காலத்திற்கு ஏற்ப, புதிதாக உருவாகும் மாற்றங்களுக்கு உரிய தேவைகளுக்கு இணக்கம் கொள்ளும் வகையில் செயல்படுத்த இயலும்.

ஆனால், சமீப காலத்தில், அரசு துறை நடவடிக்கைகள், மாசு உருவாக்கும் தொழிற் சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கும் வகையில் மதிப்பீட்டு முறையில், பல்வேறு நீர்த்து போகும் முறைகளை சடங்குகள் நிலையில் மேற்கொண்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், E I A எனப்படும் சூழல் மதிப்பீட்டு முறைகளில், ஒன்றிய சுற்றுசூழல், வனத்துறை, பருவகால மாற்றம் அமைச்சகம்,110 மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் திட்டத்தை பற்றிய தகவல்களை பொது மக்கள் அறியவோ, அது பற்றிய விமர்சனம், உரிய ஆலோசனைகள் தர இயலாது. எனினும் தேசிய பசுமை
தீர்ப்பா ணையம் வழியாக (NATIONAL GREEN TRIBUNAL ) இந்நிலையினை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டுள்ளது. ஆனால் 2020 EIA அறிவிக்கையில், மாற்றங்கள் தொடர்ந்து வருகிறது. 2022-23 ஆம் ஆண்டுகளில், மட்டுமே 2006 அறிக்கையில் அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலை வேதனைக்குரியது!அலுவல் பூர்வ செயல்பாடுகள் மற்றும் EIA அறிக்கை ஆகியவை பொது பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் EIA அறிக்கை மாற்றங்களில் கீழ் குறிப்பிட்டவை ஆகும்.

1. மாநில சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் செயல்பாடு ஆய்வு (STATE EIA RATING)

2. தவறான மதிப்பீடு இணக்கம் கட்டகம் (FAULTY COMPLIANCE MODULE )

3.பொது மக்கள் கருத்து ஆலோசனை தவிர்த்தல்
(UNDERMINING PUBLIC HEARING PROCESS )

4.கூடுதல் தகவல் பெறுதல், சுமை (EXTRA DETAILS SOUGHT IS A BURDEN)நிலக்கரி எடுத்து வருதல் முறை மாற்றம் (CHANGEIN THE COAL SOURCE WITHOUT AMENDMENT) மற்றும் 2006 ஆம் ஆண்டு அறிக்கை மூலம் சட்ட அங்கீகாரம் மறுத்த திட்டங்களுக்கு முன்னுரிமை தருதல் (VIOLATION CASES GETS RECOGNITION UNDER THE 2006 EIA NOTIFICATION ) மாநில சுற்று சூழல் ஆணையங்களின் மதிப்பீட்டு முறை செயல் பாட்டினை ஒன்றிய அரசின் சுற்று சூழல் அமைச்சகம் “நட்சத்திர மதிப்பீடு முறை “மூலம் ஆய்வு செய்கிறது.

மாநில ஆணைய செயல்பாடு திறன் மேம்படஇந்த முறை என்று கூறப்பட்டாலும்,  உற்று நோக்கினால் 2006 அறிக்கை யினை நீர்த்து போக செய்யும் முயற்சி என
கருத்து உள்ளது. ஆம். ஏழு காரணிகள் அடிப்படையில், மாநில ஆணையம் செயல் முடக்கப்படுவது உண்மை.

80 நாட்களுக்குள் மாநில மதிப்பீடு, ஒன்றிய அமைச்சகம் அனுப்பினால் 2 மதிப்பெண் தந்து முன்னுரிமை தரப்படும்.120 நாட்களுக்கு மேல் போனால் 0 மதிப்பீடு தந்து மாநில ஆணையம் செயல்பாடு சரியில்லை என்று முடிவு எடுக்கப்படுகிறது. இதே போல் மாநில ஆணையம் அதிக தகவல்களை திட்டம் பற்றி கேட்டு பெற அனுமதி இல்லை.

மதிப்பீடு இணக்கம் கட்டக முறை 14.06.22 வெளியிடப்பட்டது.2006 ஆம் ஆண்டு அறிக்கை அடிப்படையில் காத்திருந்த திட்டங்கள் இதன் மூலம் இணக்கம் கொண்டு அனுமதி பெற இயலும். இதிலும் பல்வேறு தவறுகள் உள்ளன. பொது மக்கள்கருத்து பங்கேற்பு மறுப்பு, விரைவான, அணுகுமுறை, இடைத் தரகர் தலையீடு போன்றவை கண்டனத்துக்குரியது ஆகும்.

அனைத்து திட்டங்கள், தொழிற்சாலைகள் போன்றவை பற்றி 2006 ஆம் ஆண்டு EIA முறையில் மக்கள் ஆலோசனை முறையில், இணைய வழி, செய்தி தாள் விளம்பரம் அறிவிக்கப்பட்டு, பின் மாவட்ட நீதிபதி தலைமையில் குறைகள், ஆலோசனை கேட்டல் முறை இருந்து வந்தது. இந்த நடைமுறை, அக்டோபர் 2021 அலுவலக கடிதத்தின்படி குறிப்பிட்ட 20% விரிவாக்கம் மட்டுமே சுரங்க திட்டங்களுக்கு அனுமதி தந்துள்ளது.. மேலும் மக்கள் கருத்து கேட்பு கட்டாயம் இல்லை என்ற நிலை கவலை அளிக்கக் கூடியது.

2006 ஆம் ஆண்டு அறிக்கை படி திட்டம் உருவாக்க பொறுப்பாளர், ஆணையம் கூடுதல் தகவல் கேட்டாலும் தர வேண்டும் என்ற முறை இருந்து வந்தது. இதுவும் ஜூன் 2021 அலுவலக ஆணைப்படி, இதனை தவிர்க்க மாநில ஆணையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் திட்டம் பற்றிய நிபுணர்களின் அறிவியல் மதிப்பீடு இல்லாமல் போய்விட்டது. மின்சார ஆற்றல் நிறுவனங்கள் நிலக்கரி எரித்தல், அதனால் கார்பன் உமிழ்வு பற்றிய சட்ட வரையறைகள் மீறப்பட்டு, எங்கு வேண்டுமானாலும் கரி எடுத்து கொள்ள நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் அனுமதி அளித்துவிட்டது.

இதே போல்,2006 EIA அறிக்கை படி தகுதி அற்ற, சட்டம் மீறிய திட்டங்கள் அனைத்தும்,2021ஜூலை முதல் அனுமதி அளிக்கப்பட்ட நிலை வருந்துதற்குரியது.
மேற்கண்ட சட்ட மீறல் நிலைகளி னால் 2006 EIA அறிக்கை படி தரம், சூழல் மதிப்பீடு செய்யும் நிலை நீர்த்து போகிறது. எதிர் காலத்தில் சுற்று சூழல் பாதிக்கும் அளவிற்கு நம்முடைய திட்டங்கள் அனுமதி எளிதில் பெற்று, தொழிலதிபர்களுக்கு, வெகு சாதகமாக நம் அரசு துறைகள் துணை போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் இயற்கை பகுதி, மக்கள், அவர்கள் வாழ்வாதாரம் பற்றிய அக்கறை இல்லாத ஒரு அவல நிலை வந்துவிட்டது. பாராளுமன்ற நடைமுறை மூலம் சூழல் மதிப்பீடு செயல்பாடு ஒப்புதல் பெறும் நிலை வரும் அளவிற்கு மாற்றங்கள் வரவேண்டும்.

இயற்கை காப்பாற்ற ஒரு அரசு, அமைச்சகம் அதனை மீறும் நிலை மாறுமா!!? மக்கள், அரசு, அறிவியல் விஞ்ஞானிகள் அனைவரும் சிந்திக்க வேண்டும்!!!!

பா. ராம் மனோகர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *