Samathuvam Nilaikkattum Poem by Jeyasri. ஜெயஸ்ரீயின் சமத்துவம் நிலைக்கட்டும் கவிதை

சமத்துவம் நிலைக்கட்டும் கவிதை – ஜெயஸ்ரீ




சாதிகள் இல்லையடி பாப்பா
என்ற பாரதி மறைந்து விட்டான்
சாதிகள் வாழ்கின்றன..
கோனார் மெஸ்ஸிலும்
ஐயர் கேன்டினிலும்…

முச்சந்தியில் இருக்கும்
கடவுளும் கூட
சமத்துவமாய் வழிகாட்டுகிறார்
சாதி தான் கண்களை
மறைத்து விடுகிறது..

பகுத்தறிவுப் பகலவனின்
தடியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்
சாதிச் சங்கங்களைத்
தகர்த்து எறிவதற்கு..

முகம் மூடிய முகத்தவளுக்கும்
நூல் அணிந்த புதல்வனுக்கும்
உடலில் ஓடுவது ஒரே குருதி
அதில் சாதி இருந்தால்
குருதியும் சாக்கடையே…

சாதிப்பேய் குரல் வளையை
கடித்து விட்டதால்
எங்கள் மாணவர்களின்
கனவு பிணமாகி விட்டது…

கண்டவுடன் சுடும் உத்தரவை
சாதிக்குப் பிறப்பியுங்கள்
சாதி சோம்பிகள் அழியட்டும்
சமத்துவம் நிலைக்கட்டும்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Nice poem Jayasri! You nailed it. We need to focus on Humanity, Unity , Sprituality and Nationality, by going beyond Caste politics, religious politics and language politics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *