தலைப்பை படித்த உடனேயே தோன்றும் சாமிகள் பிறக்குமா?😳 அல்லது அவற்றிற்கு இறப்பு தான் உண்டா🙄?சாமிகள் தானே நம்மை படைத்தது..🤔 இவ்வுலகைப் படைத்தது ..இவ்வாறிருக்கையில் சாமிகளால் எப்படி பிறக்கவும் இறக்கவும் முடியும்? கேள்விகளுக்கு விடைகாண தொகுப்பை ஆராய்வோம் .. கடவுள்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது? இதில் பணக்காரர்களுக்கு ஒரு கடவுள், ஏழைகளுக்கு ஒரு கடவுள், மேல் சாதிக்காரனுக்கு ஒரு கடவுள், கீழ் சாதிக்காரனுக்கு ஒரு கடவுள், இந்து மதத்திற்கு ஒரு கடவுள் ,இஸ்லாம் மதத்திற்கு ஒரு கடவுள், ஏன் தெருவுக்கு தெரு ஒரு கடவுள்..🤦 எதுக்கு இத்தனை சாதிகள் என்ற கேள்வியும் முக்கியம்தான்… இத்துணை தெய்வங்கள், சாதிகள் அனைத்தும் எதற்காக? யாரால்? உருவாக்கப்பட்டன?, அறிவியல் பூர்வமான பதிலை தேடித்தருகிறது இத்தொகுப்பு புத்தகம்..
தோழர் ச.தமிழ்ச்செல்வனின் இலக்கிய நடை படிக்க மிகவும் அருமையானது… அவரின் எழுத்துக்கள் என்னை எப்பொழுதும் கட்டிப் போடுகின்றன… சரி கேள்விக்கு விடை தேடுவோம்😄 அது என்ன ஏழை சாமி? ஏழை மக்களால் முன்னர் வாழ்ந்த மக்களை தெய்வமாக வணங்கப்படும் சாமியே ,ஏழை சாமி.. அய்யனார் ,அண்ணமார் ,மதுரை வீரன் ,காளியம்மன் ,முத்தாலம்மன் முனியப்பன், காத்தவராயன், கருப்பண்ணன் ,கருப்புசாமி ,சீனியம்மாள் இன்னும் எண்ணற்ற ஏழை சாமிகள் உள்ளன… இவர்கள் அனைவருமே முன்னொரு காலத்தில் இறந்த அல்லது கொல்லப்பட்ட மனிதர்களே.. உதாரணத்திற்கு மதுரை வீரனின் கதையை எடுத்துக்கொள்ளலாம்.. சக்கிலிய சாதியில் பிறந்த இவர், மன்னரின் மகளை திருமணம் செய்து கொண்டதற்காக கொல்லப்பட்டார்..
மன்னரை எதிர்த்து பேச இயலாத தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை வீரனை தெய்வமாக வணங்கி தம் எதிர்ப்பைக் காட்டினர் .இன்றளவும் பல சமூகத்தினருக்கு தெய்வமாக மதுரை வீரன் வணங்கப்பட்டு வருகிறார்.. தன்னை ஒரு வார்த்தை தவறாக கூறிவிட்டனர் என உயிரை மாய்த்த மலட்டு அம்மாளை இன்றளவும் மதுரை மாவட்டத்தில் வணங்கி வருகின்றனர்.. இது போன்ற எண்ணற்ற நாட்டார் வழி தெய்வங்களுக்கு உண்மை சான்றுகள் உள்ளன.. முன்னர் வாழ்ந்து மறைந்த மனிதர்களையே தெய்வமாக்கி கும்பிட்டனர் ஏழை சாதி மக்கள்.. ஆனால் பணக்கார சாமிகள் என சிவனையும், பார்வதியையும் ,கிருஷ்ணரையும் உள்ளே திணித்து இவர்களின் அவதாரம் தான் ஐயனாரும் அன்னமாரும் என்ன பிராமணிய கும்பல் பிரச்சாரம் செய்கிறது.. என்றைக்கு பணக்கார சாமிகளை கும்பிடுவோர் ஏழை சாமிகளை ஏறெடுத்து பார்த்து இருக்கின்றனர்? இப்படி சாமிகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே..
தவிர மனிதர்கள் சாமியால் உருவாக்கப்படவில்லை ..சாதி கவுரவத்தினால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் நம்மை பழி வாங்குவான் என்ற பயத்தின் காரணமாகவும் அல்லது செய்த பாவத்தின் காரணமாகவோ கொல்லப்பட்ட அவனை பரிகாரமாக கோவில் கட்டி தெய்வமாக கும்பிட்டனர்.. இதேதான் எண்ணற்ற கடவுளர்களுக்கு பின்புலம்.. சாதியற்ற கிறிஸ்துவையே ,சாதி உள்ள மதமாய் மாற்றிய பெருமை நம்மூராரயே சேரும்… “மக்களை மேல் எழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்ற தோழர் லெனினின் வார்த்தை ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டு இருக்கிற நூல்.. அறிவியல் பூர்வமாக நாம் வணங்கி வரும் அனைத்து தெய்வங்களும் நம்மால் உருவாக்கப்பட்டவையே.. இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை ..”கடவுளை நம்புபவன் முட்டாள்” என்ற பெரியாரின் வார்த்தைகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது..
நாட்டார் வழிபாடு இந்து மதத்திற்குள் மட்டும் இல்லை ,அது கிறிஸ்தவ மதத்திற்குள்ளும், இஸ்லாமிய மதத்திற்கு உள்ளேயும் உள்ளது.. அவையாவும் உண்மையில் நடந்த சம்பவங்கள் தான் என்பதையே ஆசிரியர் நமக்கு எடுத்துக் கூற விழைகிறார்… நாம் வணங்கி கொண்டிருக்கக்கூடிய குலசாமி ,குடும்ப சாமி அனைவரும் நமது முன்னோர்கள் ..ஆனால் தினம் ஒரு அலங்காரம் செய்யும், ஆடம்பர ஊர்வலம் செல்லும் ,கீழ் சாதிக்காரன் தொட்டால் தீட்டு என ஒதுக்கி வைக்கப்படும் கோவிலில் வாழும் சாமிகளை “ஏமாற்று சாமிகள்” அல்லது மக்களை ஏமாற்ற பிராமணர்களின் கட்டுக்கதை என்பதை இன்றி வேறு எப்படி சொல்ல இயலும்? இப்புத்தகத்தில் தெளிவான, தேவையான, ஆதாரபூர்வமான தகவல்களை கடவுள் எப்படி தோன்றினார்? எதற்காக தோன்றினார்? என்ற விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.. இதன்மூலம் முன்வைக்கப்படும் கேள்வி கடவுள் உண்டா? இல்லையா? நான் சிறு வயது முதலே கடவுள் இல்லை என்ற கருத்தை பிடி மானத்துடன் பற்றி கொண்டிருக்கிறேன்.. அப்பொழுது நீங்கள்?
சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ச. தமிழ்ச்செல்வன்
முதல் பதிப்பு :டிசம்பர் 2011
வெளியீடு :பாரதி புத்தகாலயம்
,421 ,அண்ணாசாலை தேனாம்பேட்டை, சென்னை 600018,
தொலைபேசி: 044-24332424
– மதிப்புரை வினிஷா
மாவட்ட தலைவர்
இந்திய மாணவர் சங்கம் (sfi)
ஈரோடு மாவட்டம்
புத்தகத்தை படிக்க தூண்டும்படியான விமர்சனம்.வினிஷா அவர்களுக்கு நன்றியும் ப்ரியமும்.
தோழர் ச.தமிழ்செல்வனின் எழுத்து நடை எளிமையானது ஆழமான கருத்துக்களை கொண்டது.அவரின் விளக்கங்கள் நம்முள் பல கேள்விகளை உருவாக்கி தேடலை துவக்கும்.
பகிர்ந்தமைக்கு நன்றி .
நல்ல அறிமுகம்.மகிழ்ச்சி தோழர்