Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: சஞ்சீவி மாமா – மலம் அள்ளும் மாமாவை நேசிக்க ஓர் உலகம் – இராசகுரு கார் பாலன்.

திருமணம், காதுகுத்து, புதுமனைப் புகுவிழா என விழாக்கள் எதுவாயினும், சிறுவர்களின் படங்களோடு சாதிப்பெருமையை தூக்கிப்பிடிக்கும் பிரமாண்டமான பதாகைகளுக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் வளர்ந்தவர்களுக்கு தெரியும், இங்கே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சாதி தான் முதன்மையான அடையாளம் என்று.
 சிறார்களுக்கு எழுதும் புதினத்தில், ஆடிப்பாடும் விலங்குகளும், ஆயிரம் யானைகளை வெல்லும் வலிமைமிக்க இளவரசர்களும், கேட்டதைக்கொடுக்கும் பூதங்களும் தான் கதையின் நாயகர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை, மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி கூட நாயகனாக வலம்வரலாம் என்பதை உணர்த்திய புதினம் இந்த, “சஞ்சீவி மாமா”
 இந்தியாவுக்கு நேரு மாமா…
இந்த தெருவுக்கு யாரு மாமா?”
Image
என்ற முன் அட்டையின் கேள்வியோடு நம்மை வரவேற்கிறார், சஞ்சீவி மாமா. அன்புள்ளமும், பாசமும் நிறைந்த சஞ்சீவி மாமாவின் பேச்சும் செயலும், தொடர் அடக்குமுறையால், தாழ்வுமனப்பான்மையை பல நூறு ஆண்டுகளாக தாங்கிவரும் குருதித்தொடரின் வெளிப்பாடாகவே அமைகிறது.
 பேச்சிராசு என்ற சிறுவனின் பார்வையில் சுழல்கிறது, மேற்குத்தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்த அந்த சிற்றூரில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகள் எல்லாம். அடிபட்டுக்கிடக்கும் போதும், ஆறுதல் தேடும் போதும், தீண்டாமை உள் நுழைய முயல்வதையும் அதனை மனிதம் எவ்வாறு எதிர்கொண்டு வெல்கிறது என்பதை காட்சிகள் மூலம் உணர்த்தியவிதம் அருமை.
சாதி பேதம் நிறைந்த கிராம சமூகத்தில் ‘ஏன் இந்த பேதம்?’ எனும் கேள்வியுடன் சமத்துவ சிந்தனையுடன் வளைய வருகிறான் சிறுவன் பேச்சிராசு. அவனுக்கும் தோட்டி சஞ்சீவிக்கும் இடையிலான பாசப்பிணைப்புடனும், அவனுக்குள் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுடனும் நகர்கிறது கதை. குழந்தைகளும், ஏன் பெரியர்களும்கூடத் தெரிந்துகொள்ளவேண்டிய கிராமத்துச் சொல்லாடல்களை ஆங்காங்கே விதைத்துச் செல்கிறார் ஆசிரியர். தனது சமத்துவச் சிந்தனையை தன் குடும்பத்தாரிடமும் ஊர்மக்களிடமும் கொண்டுசெல்வதில் வெற்றி அடைகிறானா பேச்சிராசு?
Image
கொ. மா. கோ. இளங்கோ.
பல்லவர்களின் வருகைக்கு முன், தமிழ்கூறும் நல்லுலகத்தில் சாதியில்லை, இராசராச சோழனிற்கு முன் வைதீக தீட்டு இல்லை, விசய நகரப்பேரரசின் காலத்திற்கு முன், இங்கே வீட்டில் மலம் கழிக்கும் வழக்கமும் இல்லை அதனை அள்ள மனிதர்கள் யாரும் பணியமர்த்தப்படவுமில்லை. விசய நகர பேரரசின் கடை நிலை ஊழியர்களாக, அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் தான் இந்த பணிக்கு அமர்த்தப்பட்டார்கள், சுல்தான், வெள்ளையன், இந்திய குடியரசு என ஆட்சியின் பெயர்களில் மட்டுமே இருந்தது மாற்றம், அவை, இந்த துப்புரவு சாதியினரின் வாழ்வை எந்தவகையிலும் மாற்றியமைக்கவில்லை.
ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் எண்ணற்ற சிறுகதைகள் எழுதியவரும், தமிழ் சிறுவர் இலக்கிய வானில் வெள்ளியாக மின்னும், அண்ணன் கொ. மா. கோ. இளங்கோ அவர்களின் படைப்புகளில், சஞ்சீவி மாமாவிற்கென தனியிடம் உண்டு. இந்த நூல், பாரதி புத்தகாலயத்தின், ‘Books for Children’ என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சென்ற ஆண்டு வெளியான தோழர். திவ்யா அவர்களின் ‘கக்கூசு’ என்ற ஆவணப்படத்தை பார்த்தபோது தான், சஞ்சீவி மாமாக்கள் இன்றளவும் அதே வேதனையோடு தான் தம் வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மை, விளங்கியது.
Image
1935ல் வெளிவந்த முல்க் ராச் ஆனந்த் அவர்களின், உலகப்புகழ் பெற்ற ‘தி அன்டச்சபிள்’ என்ற ஆங்கில புதினத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒரு படைப்பாக, சஞ்சீவி மாமாவை நான் கருதுகிறன், இவ்விரு நூல்களையும் வாசித்த பலரும் இதற்கு உடன்படுவார்கள் என்றும் நம்புகின்றேன்.
விண்வெளி அறிவியலில் சாதனைகள் பல படைக்கும் இந்திய ஒன்றியம், துப்புரவுத் துறையை முழுவதுமாக எந்திரமயமாக்கும் அந்த நாளே சஞ்சீவி, சொக்கத்தாய் போன்றோரின் அடிமைச்சிந்தனை ஊறிய குருதித்தொடருக்கான விடுதலை கிடைக்கும். நம்மிடையே மலம் அள்ளும் மாமாவை நேசிக்கும் ஓர் உலகைக் காண்பிக்கும் நூலாசிரியரை மனதார வாழ்த்தலாம் வாருங்கள். 
 நன்றி,
வெல்க தமிழ்!
 
புத்தகம்:  சஞ்சீவி மாமா
ஆசிரியர்: கொ. மா. கோ. இளங்கோ.
வெளியிடு : புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
விலை: ரூபாய் 90/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sanjivimama/

 

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here