Subscribe

Thamizhbooks ad

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சந்தை – கூடல் தாரிக்

 

 

 

காலத்தால் அழிக்கவியலா
வணிகத் தடயம்

சந்தை என்னும் வணிகக் கலாச்சாரம், மனிதகுலம் சந்தித்த விந்தைகளுள் ஒன்று.

அது, இரத்தமும் சதையுமான ஒரு சமூகப்பண்பாட்டு ஒருங்கிணைப்பு.
பொருட்களை விடவும் அதிகமாகப் பாசங்களைப் பங்கிட்டுக்கொள்ளும் .
பண்டமாற்றை, தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் ஆச்சர்யம்!

தத்தம் பகுதியில் விளையும், தத்தம் பகுதிகளில் மட்டுமே செய்யப்படும் பொருட்களையும் ஒரு சந்தை என்னும் பெயரிடப்பட்ட இடத்தில் வைக்கும் பொழுது, குவிக்கப்பட்ட பொருட்களுக்கு இணையாக மனித மனமும் குவியத் தொடங்கிவிடுகின்றது.

வாழ்வியல் சூழலால் கிராமங்களிலிருந்து நகரங்களில் குடிபெயந்தவர்களுக்கெல்லாம் சந்தை என்னும் சொல்லைக் கேட்டவுடன் மனதுக்குள் கிராமிய நறுமணம் தவழ்ந்து விடும்.

முனைவர் யாழ்.எஸ். இராகவனின் இந்தச் சந்தை நாவலானது, நாற்பதாண்டுகளுக்கு மேலாக மனிதர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த சந்தையைப் பேசுவது.

வடநாட்டவரின் ஆதிக்கத்தினால் இங்குள்ள சந்தை, மெல்ல மெல்ல தன் சுயத்தை இழப்பதை உணர்த்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு திகழ்கின்றது.

இந்த நாவலை ஒரு திரைக்கதையினைப் போலவே வடிவமைத்துள்ளாரோ என்று நினைக்கும் அளவுக்கு வாசிக்கும் பொழுது கருதத் தோன்றுகிறது.

ஒரு சம்பவத்தை கதாபாத்திரங்களோடும் திரைப்பட நடிகர்களோடும் இணைத்து விடுவது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

பட்லர் பொன்னுச்சாமி தொடங்கி அவரின் பேத்தியான பேச்சியம்மாளின் காலம் வரையிலான கதையில் இடை இடையே எண்ணற்ற கதாபாத்திரங்கள்.

அவர்களுக்கான வாழ்வுகள் இழையோடும் காதல்கள், போகிற போக்கில் சிரிக்க வைக்கின்ற நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் என ஒரு சமூகச் சந்தைக்குள் நுழைந்து திரும்பிய உணர்வு ஏற்படுகின்றது.

இத்தனை கதாபாத்திரங்களில் தேநீர்க்கடைக்காரரான தஞ்சை பார்த்திபன் எனக்கு மிகவும் பிடித்தமானவராகிப் போகின்றார்.

பெரிய வணிக நிறுவனங்களின் வரத்துக்குப்பிறகும் நரைத்த தலையோடு காய்கறிகளைப் பரப்பி விற்கும் பேச்சியம்மாளைக் காட்சிப்படுத்துவதோடு முடிவடையும் இந்நாவல், மண் சார்ந்த இயற்கை சார்ந்த வாழ்வியல் சூழல் சார்ந்த மறக்க முடியாத அழிக்க முடியாத அதன் தடம் இன்னும் நம்மிடம் பேசுபொருளாக தன் இருப்பினைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. என்பதைப்புலப்படுத்துகின்றது.

கூடல் தாரிக்

 

நூலின் பெயர் : சந்தை (நாவல்)
ஆசிரியர்:  யாழ். எஸ். ராகவன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 240 /

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

.

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பதி

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here