1
கருவறை காவியம்…
***************************
கருவறை காவியமாய்
இப்பூமியில் பூத்தப் பூவே…..
மலரினும் மெல்லிய மழலையே
உதிரத்தில் உதித்த உயிரே…..
நீ என்னுள் கருவான அன்றே
ஈருயிர் கொண்டேன்
உன்னுருவைக் காண
பத்துமாதம் பத்திரமாய் பாதுக்காத்தேன்
பத்தியங்கள் பல ஏற்றேன்
உருவம் தெரியா உன்னை நினைத்து
அதிர்ந்து நடக்கக்கூட மறந்தேன்….
என் தொப்புள்க்கொடியில்
மலர்ந்த மலரே….
இன்று உயிர்ப்பெறுகிறேன்
உன்னைக்கண்டு….
பெண்ணாய் பிறந்தப்பலனை அடைந்து
தாய்மை உணர்வில்
நிறைவடைகிறேன்……
2
ஊமை விழிகள்…
************************
இதயம் கவரும் காந்த விழிகள்
வலிகளைப் பேசுகையில் ஊமை விழிகளாகிறது…
ஊமை விழிகளும் கவிதை பேசும்
சில சமயம் கண்ணீரால் காவியம் வரையும்
காதலை மறைத்திட நினைக்கையில்
நாணத்தால் ஓவியம் வரையும்…
சில சமயங்களில்
நெருப்பைக் குடித்து தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொள்ள எத்தனிக்கும்…
சில சமயங்களில்
இரவின் இறுதி சொட்டு தீர்ந்து போகும் வரை
விடியலை தேடி அலையும்…
சில சமயங்களில்
விழிகள் தேடும் மொழிகளாய்
இவளின் ஊமை விழிகள்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

