06.09.2021 திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு பாரதி புத்தகாலயம், ஸ்டேட் பேங்க் ரோடு, ஈரோட்டில் எழுத்தாளர் வே. சங்கர் எழுதிய “டுட்டுடூ” (சிறார் நாவல்) புத்தக வெளியீடு குறைந்த எண்ணிக்கையிலான வாசகர்களின் முன்னிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.
புத்தக ஆர்வலரும் வாசகருமான திரு.ரமேஷ் அவர்கள் வந்திருந்த வாசகர்களை வரவேற்று நூல் ஆசிரியரைப் பற்றியும் நூலைப் பற்றியும் சிறந்தமுறையில் அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை நல்கினார்.
தொடர் நிகழ்வாக திரு.ரமேஷ் அவர்கள் “டுட்டுடூ” சிறார் நாவலை வெளியிட முதல் பிரதியை நூல் ஆசிரியரின் நெருங்கிய நண்பரான திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அடுத்த பிரதியை பாரதி புத்தகாலயத்தின் செல்லப்பிள்ளையும் நெடுநாளைய வாசகருமான திரு.பாபு அவர்கள் வெளியிட அதை பசுமை உலகம் பொறுபாளர் திரு.மனமோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூலின் சிறப்பு குறித்தும் கதையின் சாராம்சம் குறித்தும் பாரதி புத்தகாலயத்தின் விற்பனையாளர் திருமதி.ராணி அவர்கள் சிறப்புரை ஆற்றியது நூல் வெளியீட்டு விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது.

சிறார் இலக்கியத்தின் கூறுகள் குறித்தும் சிறார் இலக்கிய நூல்களை குழந்தைகளின் மத்தியில் கொண்டு செல்லவேண்டியதின் அவசியம் குறித்தும் திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பேசியது சிறப்பு.
வந்திருந்த வாசகர்களில் திரு.மகேஷ், திரு.பாலஜவகர் மற்றும் திரு.ஸ்டீபன் ராஜா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
”டுட்டுடூ” சிறார் நாவலின் ஆசிரியர் வே. சங்கர் அவர்கள் தனது ஏற்புரையில் இந்நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் குறித்தும் அது எவ்வாறு வடிவம் பெற்றது என்பதனையும் விலாவாரியாகப் பேசினார்.

இறுதியாக, பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் தோழர்.இளங்கோ அவர்கள் நன்றி நவிழ புத்தக வெளியீட்டு விழா எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவுற்றது.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

