சாய் பல்லவி படத்தில் காதலியாக வந்தால் அனைவருக்கும் சந்தோசம் தான். இவ்வளவு ஏன் சாய் பல்லவி திரையில் வந்தாலே சந்தோசம் தான். அந்த ரோஸ் கலர் கன்னம் இயற்கையான பதின் பருவ பருக்கள். அழகு தான். முற்றிலுமாக மாறுபட்ட வேடத்தில் வறுமையில் வாடும் குடும்பத்தின் மூத்த பெண்ணாக வேலைக்கு செல்லும் சாய் பல்லவி தான் கார்கி. தோற்றமும் கதையும் ஒன்று சேராதோ என்ற எண்ணம் ஆரம்பத்தில் தோன்றும். சில நிமிடத்திலேயே நம்மை நடிப்பில் திக்கு முக்காட செய்கிறார். தந்தை ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி. தாய் மாவு அரைத்து விற்று வருமானத்தில் உதவும் குடும்ப பெண். சாய் பல்லவி டீச்சர். தங்கை பள்ளி மாணவி. இப்படியாக இருக்க நல்ல திருமண வரம் சாய் பல்லவிக்கு சாய் பல்லவி டீச்சர் வேலை தாண்டி டியூஷன் எடுத்தும் சம்பாதிக்கிறார். நல்ல வரன் நல்ல இடம் இருப்பினும் குடும்ப பலத்துக்கு மீறின செலவுகள் ஒரு புறம்.

இப்படியாக இருக்க. திடீரென செக்யூரிட்டி தந்தையை போலீஸ் அரெஸ்ட் செய்து செல்கின்றனர். கதை கரு தலைகீழா மாறும் இடம் இதுவே. அடுத்த வீட்டு UNCLE தந்தையுடன் செக்யூரிட்டி வேலை பார்ப்பதால் அந்த வீட்டுப் பெண்ணும் கார்க்கியும் நடு இரவில் போலீஸ் ஸ்டேஷன் சென்று விசாரித்து தந்தையை மீட்டு வரும் எண்ணத்தோடு புறப்படுகின்றனர். அங்கே சென்ற பின் கார்க்கியை உதவி ஆய்வாளர் உங்கள் தந்தை குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் விஷயம் மீடியாவிற்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் தெரியும் முன்னமே ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விடுங்கள் அதுதான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது என்று எச்சரிக்கிறார். கார்க்கி செய்வதறியாது தன் தந்தையின் நண்பர் வக்கீல் ஒருவருக்கு போன் செய்து உதவி கேட்கிறார் அந்த வக்கீல் தன்னால் ஆன முயற்சியை செய்துவிட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் ஊட்டிவிட்டு திடீரென கவுன்சிலில் இந்த கேசில் வாதாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதனால் என்னால் என்னுடைய எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் உங்கள் தந்தைக்காக அழித்துக்கொள்ள முடியாது மன்னிக்கவும் என்று விலகி விடுகிறார். அவருக்கு அசிஸ்டெண்டாக வேலை செய்யும் இந்திரன் என்பவர் எந்தவித கேசும் தனக்கு கிடைக்காததாலும் தான் திக்கு வாய் என்பதாலும் இந்த கேசை எடுத்து நடத்தினால் தன் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்பதாலும் தைரியமாக இந்த கேசில் இறங்கி வாதாடவும் வருகிறார் கார்க்கியும் அவருடன் இணைந்து அலைந்து தந்தையை மீட்டெடுப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டறிகிறார்.

ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு பெண் குழந்தை தினமும் வாக்கிங் செல்லும் ஒரு அங்கிளின் நாயை பிஸ்கட் போட்டு கொஞ்சுகிறாள். சரியாக மாலை நேரத்தில் அந்த நாய் வாக்கிங் அழைத்து செல்வது அவரின் வழக்கம் அந்த நேரத்தில் மாடிப்படி வழியாக நாயை அழைத்து வரும்போது யாரும் இல்லை என்பதை அந்த மனிதன் நன்கு உணர்ந்து கொள்கிறான் தன்னுடன் சேர்ந்த சக மனிதர்களையும் ஒன்று கூட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டு தப்பி செல்கிறான் செக்யூரிட்டி வேலை முடித்து வரும் கார்க்கியின் தந்தை அவளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு செல்கிறாள் விஷயம் தெரிந்த பின் காவல்துறைகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி ஆராயும் போது அந்த வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண் கார்க்கியின் தந்தையையும் அடையாளம் காட்டுகிறாள். அவள் மனநிலை சரியில்லை என்பதாலும் மயக்கத்தில் இருப்பதாலும் தன்னால் முடிவெடுக்க முடியாததாலும் சரியான ஆளை சுட்டி காட்டும் மனப்பக்குவம் இல்லாததாலும் தன் தந்தை தண்டனைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்பதே கார்க்கியின் வாதாட்டம்.

விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஷிவரிங் நடுக்கு தன்மை குறைவதற்கு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது அந்த மாத்திரை வயதானவர்களுக்கு கொடுக்கும் மாத்திரை, டோசேஜ் அதிகம் உள்ள மாத்திரை அது கொடுத்தால் முடிவெடுக்கும் திறன் குறையும் என்பதும் டாக்டரால் நிரூபணம் செய்யப்படுகிறது இது போன்ற சின்ன சின்ன துணுக்குகளை ஆராய்ந்து தந்தைக்கு ஆதரவாக விஷயங்களை அவரை மீட்டெடுக்க கார்கி அலைந்து திரிந்து கண்டெடுக்கிறாள். எது எப்படி கெட்டாலும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக் காட்டாமல் இருந்தால் ஒழிய தந்தையை மீட்டெடுக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட கார்கி அந்த பெண்ணிடம் பேச முயற்சி செய்யும்போது அவருடைய தந்தை (பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தந்தை) ஒரு ஐந்து நிமிடம் அழுது கொண்டே கார்கியிடம் பேசுவார் பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த அனைத்து தந்தைக்கும் அடிவயிறு கலங்கிவிடும் அருமையான நடிப்பை அந்த ஒரு காட்சியில் முழுங்கிவிட்டு செல்வார் சரவணன் என்னும் நடிகர். பல போராட்டத்திற்குப் பிறகு அந்த பெண்ணை சம்மதிக்க வைத்து அந்த பெண்ணிடம் நடந்த உண்மையை கேட்டரிந்து கார்கி மீண்டும் ஒருமுறை சுட்டி காட்டுவதற்கான ஏற்பாடு செய்வாள். 

தந்தையை மீட்டெடுத்தாரா உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்தார்களா அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் கடைசி 15 நிமிடக் கதை உங்களை உருக்குலைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

படத்தின் பலம் : சரவணன் நடிப்பு 

பலவீனம் : சிறு குழந்தைகள் பார்க்க முடியாத படம் ( இருப்பினும் பெண் குழந்தைகளை பார்க்க வைக்க வேண்டும் என்பது என் கருத்து )

மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.

சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *