தொடர்- 3 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
3. இந்திய வான் இயற்பியல் அறிஞர் அன்னபூரணி சுப்ரமணியம்
சர்வதேச வானியல் ஒன்றியம் எனும் கூட்டமைப்பு பெல்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனுடைய தலைமையகம் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது…வானியல் இயற்பியலாளர்கள் பலரை இது அங்கத்தினராக பெற்றுள்ளது..IAU எனும் இந்த அமைப்பில் ஒரு இந்திய அறிஞர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார் அவர்தான் அன்னபூரணி சுப்ரமணியம். வானியல் இயற்பியலின் அறிவியல் மாநாடுங்களுக்கான ஒரு மன்றமாக இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது. வான் இயற்பியலுக்கான சர்வதேச மாநாட்டை நடத்தும் போது யார்யாரை அழைக்க வேண்டும் என்கிற பட்டியலை சமீபத்தில் IAU வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியரின் பெயர் பேராசிரியர் அன்னபூரணி சுப்ரமணியம்.
இந்திய வான் இயற்பியலாளர் அன்னபூர்ணி சுப்ரமணியம் தற்போது பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். நட்சத்திர கூட்டங்கள் நட்சத்திரங்களின் பரிணாமம் மற்றும் விண்மீன் திறனாளிகள் போன்றவற்றை பற்றிய உலக அளவிலான ஆய்வாளர்களில் ஒருவராக அவர் பெயர் பெற்றிருக்கிறார். 13. 8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருவெடிப்பு இன்றைய நம் அது பிரபஞ்சமாக உருவெடுத்துள்ளது. பெருவெடிப்பு நடந்த பொழுது ஏராளமான வாயுக்கள் சிறு துகள்களின்ப் புழுதி மற்றும் பல திட பொருட்கள் இவரோடு இணைந்து கண்ணுக்கு புலப்படாத கரும் பொருள் ஆகியவை வெளி முழுவதும் பரவின. இத்தகைய தொடக்கத்தின் வழியே தற்போதைய பிரபஞ்சம் எப்படி பரிணாமம் அடைந்தது என்பது தான் அன்னபூரணி சுப்ரமணியம் அவர்களின் வானியல் ஆய்வு பகுதி.
பால்வெளி மண்டலத்தை பொறுத்த வரை நாம் இரண்டு முக்கியமான அண்டை நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு இருக்கிறோம். மெக்காலானிக் நட்சத்திர கூட்டங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. பெரிய மெக்காலானிக் நட்சத்திர கூட்டம் என்பது 1,63,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சிறிய மெக்காலானிக் நட்சத்திர கூட்டம் என்பது 2,00,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது பால்வெளி மண்டலத்தோடு ஒப்பிடும் பொழுது இவை இரண்டும் மிக சிறிய நட்சத்திர கூட்டங்கள் தான் என்றாலும் இவை இரண்டும் நம்பால் வழிமண்டலத்தை எப்படி நம் முடைய பூமி சூரியனை சுற்றிவருகிறதோ அதேபோல அவை இரண்டும் பால்வெளி மண்டலத்தை சுற்றி வருகின்றன என்கின்ற அரிய கண்டுபிடிப்பு சமீபத்தில் அன்னபூரணி சுப்பிரமணியம் அவர்களை உலக அளவில் அறியவைத்திருக்கிறது.
2015 ஆம் ஆண்டு இந்தியா அஸ்ட்ரோசாட் என்கின்ற விண் வெளி தொலை நோக்கி செயற்கை கோள் ஒன்றை அனுப்பி இருக்கிறது இந்த செயற்கைக் கோள் சூரியனிலிருந்து வெளி வருகின்ற புற ஊதா ஒளியையும் எக்ஸ் கதிர்களையும் கூட விடாமல் ஆய்வு செய்யும் ஒரு பிரம்மாண்டமாகும். இந்த செயற்கை கோளில் ஒரு புதியவகையான சிறப்பு தொலை நோக்கி இணைக்கப்பட்டுள்ளது. இங்க தொலை நோக்கி சூரியனிலிருந்து வரும் ஒளியை தடை செய்து இதன் மூலம் சூரியனை சுற்றியுள்ள ஏனைய நட்சத்திரங்களை ஆய்வு செய்ய உதவுகிறது.. இது போன்ற17 விதவிதமான தொலை நோக்கிகளை ஒழுங்கமைத்து ஒன்றாக சேர்த்து இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் பெறுகின்ற பலவகையான விண்வெளி குறித்த புள்ளிவிவரங்கள் HUBBLE தொலை நோக்கி மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி போன்றவைகளை போலவே ஆழமான அறிய தகவல்களை கொண்டுள்ளது. இந்த தகவல்கள் இந்திய வான் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பெங்களூரில் தீவிர தேடலுக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படுகின்றன.
30 ஆண்டுகளுக்கு முன் அன்னபூரணி சுப்ரமணியம் தொடங்கிய இந்திய வான் வெளியின் மெக்காலானிக் நட்சத்திர கூட்டங்கள் குறித்த விவர சேகரிப்பு முயற்சி இன்று நம்முடைய இந்தியாவின் அஸ்ட்ரோசாட் மூலமாக விரிவடைந்து இந்தியாவை தன்னிச்சையான விண்வெளி ஆய்வுமையமாக மாற்றி இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் அஸ்ட்ரோசாட் இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் விபரங்களை உலகெங்கிலும் உள்ள பல்வேறு வானியல் ஆய்வு நிறுவனங்கள் பயன்படுத்தும் விதமாக அன்னபூரணி சுப்ரமணியம் அவற்றை தொகுத்து வகைப்படுத்தி இரவும் பகலும் உழைத்து சரிசெய்து கொண்டிருக்கிறார்.
இது போன்ற வானியல் தகவல்களுக்காக நாம் அயல் நாடுகளை நம்பி இருந்தோம் அன்னபூரணி சுப்ரமணியம் போன்றவர்களின் பிடிவாதமான உழைப்பால் ஹவாய்தீவு, பெல்ஜியம் வடகொரியா, ரஷியா என்று அலைந்து திரியாமல் அவர்கள் நம்மிடம் வந்து விவரங்களை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு நாம் புற ஊதா விண்வெளி தொலை நோக்கிகளை துல்லியமாக செய்யவும் பயன்படுத்தவும் தற்போது கற்றுக்கொண்டிருக்கிறோம். அதற்கு அன்னபூரணி சுப்ரமணியம் போன்ற இந்திய வானியற்பியலாளர்ரின் பங்களிப்பு மகத்தானதாகும்.
அன்னபூரணி சுப்ரமணியம் பாலக்காட்டில் பிறந்தவர். அங்குள்ள விக்டோரியா கல்லூரியில் இயற்பியல் பாடத்தை எடுத்து இளங்கலைப் பட்டமும் முதுகலை பட்டமும் பெற்றவர். நட்சத்திர கூட்டங்கள் மற்றும் விண்வெளினுடைய பரிணாமம் என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் வென்றார் இந்த முனைவர் பட்டத்தை அவர் வென்ற இந்திய வான் இயற்பியல் நிறுவனத்திலேயே தற்போது அவர் இயக்குனராக பணியாற்றுகிறார். பேராசிரியர் அன்னபூரணி சுப்ரமணியம் நட்சத்திர உருவாக்கம் மற்றும் பரிணாமம் குறித்த தன்னுடைய ஆய்வை தற்போது புதிதாக தோன்றுகின்ற நட்சத்திரங்களின் அடிப்படையை வைத்து ஆய்வு செய்பவர்.
ஒரு நட்சத்திரம் எப்படி பிறந்து, எப்படி உருவாகிறது என்பதை ஏற்கனவே ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியாது ஆனால் புதிதாக உருவெடுக்கும் மெக்காலானிக் மேகங்கள் போன்ற விண்வெளி அமைப்புகளில் மாற்றங்களை இரவும் பகலும் கவனித்து தீவிரமாக விவரங்களை சேகரித்து ஆய்வு நடத்தினால் மட்டுமே நட்சத்திரங்களின் பரிணாமம் குறித்த ஒரு அறிவியல் கொள்கையை உருவாக்க முடியும் ஜேர்மனி ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் ஈவா கிரேவல் மற்றும் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் வான் ஆராய்ச்சி மாணவர் குழுவினர் ஆகியோர் பால்வெளி மண்டலத்தில் நடக்கும் நட்சத்திரங்களின் சிறுசிறு மாற்றங்கள் குறித்த ஆய்வுக்காக அன்னபூரணி சுப்ரமணியம் அவர்களுடைய ஆய்வகத்தின் புள்ளிவிவரங்களை பயன் படுத்திக்கொள்ள அனுமதி பெற்று தன் ஆய்வுகளை தொடர்கின்றனர்.
இப்படி உலகெங்கிலும் இந்திய வானிலை ஆய்வு பெங்களூர் நிறுவனத்தின் புகழ் பரவிவருகிறது.மேலும் மேலும் புதிய தலைமுறையை சேர்ந்த மாணவர்கள் வான் இயற்பியலை தன்னுடைய துறையாக தேர்வு செய்ய வேண்டும் அவற்றை இந்தியாவிலேயே வளர்த்தெடுப்பதன் மூலம் உலகின் கவனத்தை முழுமையாக நாம் இந்தியாவின் பக்கம் திருப்ப முடியும் என்பது அன்னபூரணி சுப்ரமணியம் என்னும் அறிஞரின் நம்பிக்கை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போலவே அன்னபூரணி சுப்ரமணியம் அறிவியல் உரைகள் நிகழ்த்துதல் அறிவியல் ஆராய்ச்சி வான் இயற்பியல் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் இவற்றோடு ஒரு தலை சிறந்த வயலின் வாசிக்கும் இசைக்கலைஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர் :
ஆயிஷா இரா. நடராசன்
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : இந்திய இயற்பியலின் அபூர்வ நட்சத்திரம் அசோக் சென்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நட்சத்திரங்கள் பற்றி ஆய்வில் இவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது. ISRO அனுப்பிய விண்வெளி தொலைநோக்கியான அஸ்ட்ரோ சாட் தகவல்கள் நல்ல முறையில் தொகுக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு உதவுகின்றன என்பதை அறியும் பொழுது மனம் நிம்மதி அடைகிறது
Pingback: Chemical Biologist கோவிந்தசாமி முகேஷ் - Thyroid Hormone
BOOKDAY