பேசி என்ன பயன்?

என் மௌனம்
உனக்கு புரிந்து இருந்தால்
நான் உச்சரிக்கும் வரிகளில்
வலம் வரும்
வார்த்தைகளின் வலிகள்
உனக்கு புரிந்திருக்கும்!

வார்த்தைகளை
கோர்த்திருக்கும்
எழுத்துகளின்
ஏக்கம் புரிந்திருக்கும்!

ஆனால்
உனக்கு தான் என்
மௌன மொழியே
புரியாதே!

பின் உன்னிடம்
பேசி எனன பயன்?

கடவுள் இருக்கானா?

தொட்டிலில்
சிசுவும்

கட்டிலில்
முதுமையும்

பார்வையில்
பேசிக் கொண்டன…

கடவுள் இருக்கிறானா என?

அனாதை இல்லத்தில்.

– திருமதி. சாந்தி சரவணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “சாந்தி சரவணனின் கவிதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *