சடாமுடி வழுதாச்சக்கரத்துடன் கள்ளர்
திருக்கோலத்தில் மண்டகப்படி கடந்துவரும் மாமாயனுக்கு தல்லாகுளத்தில்
எதிர்சேவை
ஊரெல்லாம்
பந்தலிட்டு உற்சவ வீதியெல்லாம் தோரணங்கட்டி
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட சொக்கனோடு மலையத்துவசன் மகளுக்கு
தெற்காடிவீதியிலே தங்கத்தாலி பூட்டி தடபுடலாய்க் கல்யாணம்
சேறுஞ்
சகதியுமாய் சிறுத்து சீரழிந்து சீவன் ஓய்ந்த சிலப்பதிகார நதியில்
சிவபானப் பிரியர்களின் மதுக்குவளை மகோத்சவம்
நினைத்ததெல்லாம்
நடக்குமென்று நெஞ்சாரப் பொய்யவிழ்த்து அபாண்ட அருள்வாக்குரைக்கும்
கள்ளழகன் வேடமிட்ட கபடதாரியின் கால்சராயில் கசங்குகிறது மகாத்மாவின்
புன்னகை
முல்லைப்பெரியாறும் வைகையும்
முப்போகத்திற்கு வருகிறதோ
இல்லையோ? வட்டாவட்டம்தட்டாமல் வந்துவிடுகிறது மருதை ஜில்லாவுக்கு
சீரும் சிறப்புமாய் சித்ரத்திர்ழா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

