1. மேகம்
ஒரே இடத்தில்
நின்று குளிக்காமல்
நீந்திக்கொண்டே இருக்கிறது
வான் நதியில்
மேகம்!
2. காதல் கல்வெட்டு
கடற்கரையில்
உதிரும்
மணலெழுத்தாய்
உதிர்ந்து
போகுதடி உங்காதல்…
கல்மலையில்
அதிரும்
கல்வெட்டெழுத்தாய்
உறைந்து போகுதடி
எங்காதல்!
3. குருவி
குளித்து முடித்த
சிறகோடு
தெளித்துச்
செல்கிறது
குருவிகள்
குளிர்விக்கும்
அருவிகளை
சுறுசுறுப்பாய் விளையாடும்
சிறுவர்களிடம்!
4. புகைக்கும் வாகனம்
கச்சா
அருந்தி கண்ணீர்ப் புகையைக்
கசக்கிச் செல்கிறது
வேகமாக
திருகிய
மனவேதனையில்
வாகனம்!
5. கருங்கடல்
இருளை தன்னால்
முடிந்தளவு வாரி
இறக்கைக்குள்
அணைத்துத் தழுவி
அரைகுறையாகவே
அனுபவித்து அனுப்பிவிட்டது
கருங்கடல்
கரையில் காதலர்கள் போல…
வைகறையில் விறுவிறுவென வெய்யோன் வந்து
அம்பலப்படுத்தி
விடுவானென!
6. ஆகாயக்கூரை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.