Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: துளைத்தெடுக்கும் கேள்விகளின் ஊடாக சாக்ரடீஸ் வரலாறு – மு.சிவகுருநாதன்

 

(ஜூலை  2018 இல் பாரதி புத்தகாலயத்தின்  ‘Books for Children’  வெளியிட்ட யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில்  ‘சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்?’ என்ற  நூல்  பற்றிய  பதிவு.)

தத்துவ அறிஞர் சாக்ரடீசை குழந்தைகளுக்கு எவ்வாறு அறிமுகம் செய்வது? அவரது தத்துவக் கருத்துகளைச் சொல்லிக் குழந்தைகளைச் சலிப்படைய வைக்கக் கூடாதல்லவா? அவரது அடிப்படை கேள்வி கேட்பதுதானே! அதுவும் குழந்தைகள் கேள்வி கேட்பதைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களிடம் கிளர்ந்தெழும் கேள்விகளுக்கு பஞ்சமிருக்குமா? கேள்விகள் மூலம் சாக்ரடீஸ் கதை மட்டுமல்ல, அவரது தத்துவமும் உயிர் பெறுகிறது.

குழந்தை மல்லிகாவின் துளைத்தெடுக்கும் வினாக்களுக்கு அவளது அப்பா சொல்லும் பதில்களின் வழியே சாக்ரடீசின் வரலாறு குழந்தைகளிடம் முன்வைக்கப்படுகிறது. எம்.எம்.சசீந்திரன் சிறப்பான உத்தியைத் தேர்வு செய்து எளிமையான வடிவில் விளக்கியுள்ளார். அதை யூமா வாசுகி மொழிபெயர்ப்பு என்ற தெரியாத அளவிற்கு தமிழாக்கியுள்ளார்.

காவியத் தன்மை ஊடுருவும் Jaques Louis David இன் ஓவியமும்,  ‘சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்?’ என்ற கேள்வித் தலைப்பும் நூலுக்கு கூடுதல் மதிப்பூட்டுகின்றன.

“என்ன கேள்வி கேட்டதற்கு விஷம் கொடுத்தார்களா? அடக்கடவுளே! அப்படியென்றால் என் பள்ளிக்கூடத்தில் இப்போது ஒரு வாத்தியாரும் டீச்சரும் மிச்சமிருக்க மாட்டார்கள்”, (பக்.16) என்று மல்லிகா சொல்வது நமது கல்வி முறையின் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாம்.

அன்று சாக்ரடீஸ், புத்தர் போன்றோர்  கேள்வி கேட்கச் சொன்னது விடுதலைக்கான, தன்னெழுச்சிக்கான கேள்விகள். அவை குழந்தைகள், இளைஞர்களிடமிருந்து வெளிவர வேண்டுமென இவர்கள் விரும்பினர். ஆனால் இயற்கையாக எழும் வினாக்களை அழித்தொழித்துவிட்டு, செயற்கையாக முன் தயாரிக்கப்பட்ட வினாக்களோடும் அதற்கான ‘நோட்ஸ்’களோடும் கல்விக்கூடங்களும் ஆசிரியர்களும் காத்திருக்கின்றன. கேள்வி கேட்பது ஆசிரியர்கள் பதில் சொல்வது குழந்தைகள் என நமது கல்விமுறை சென்றுகொண்டுள்ளதை விமர்சிக்க இது மட்டும் போதுமே.

Buy Socratesku visham koduthathu Yean - சாக்ரடிஸூக்கு ...

மல்லிகா கேட்டாள்: “கடவுளுக்கு விஷம் கொடுப்பது ஏன்?

(…)

“அப்புறம் சிறை அதிகாரி என்ன சொன்னார்? சாக்ரடீஸ் சொன்னதை ஏற்றுக்கொண்டாரா?”

“இல்லை, ‘ஒருவர் இறப்பதற்குத் தேவையான அளவு மட்டுமே நாங்கள் விஷம் தயாரிக்கிறோம்’ என்று சொன்னார்”.

“எப்படியானாலும் அது நல்லதுதான், அப்பா”

“ஏன் நல்லது?”

“இல்லை கடவுளுக்கு விஷத்தை சமர்ப்பித்தால் சாக்ரடீஸுடன் சேர்ந்து கடவுளும் இறந்து போய்விடுவார் அல்லவா, அதனால் கேட்டேன்”.

“உனக்கு தமாஷாக இருக்கிறதா?”. (பக்.56 & 57)

சாக்ரடீஸுடன் சேர்ந்து கடவுளும் இறந்து போயிருந்தால் நல்லதுதானே! உண்மையில் குழந்தைகள் இப்படி யோசிப்பார்கள்தானே! இன்னும் சாகாமல் இருந்துகொண்டு இந்த உலக மக்களை அச்சுறுத்தும் கடவுள்கள் மரணிப்பது எந்நாளோ?

குழந்தைகளிடம் வரலாற்றையும் அறிவியலையும் முறையாகக் கொண்டு சேர்க்க இம்மாதிரியான புதிய உத்திகளைக் கண்டடைந்து அவற்றை முயற்சிப்பது நமது குழந்தைகளின் வருங்காலத்தை வளமாக்கும். கேள்வி கேட்கவும் ஆராயவும் காரண காரியத்தைத் தேடவும் அவர்களை முன்னோக்கி செலுத்த இவை உதவும்.

நூல் விவரங்கள்:

 சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்?

எம்.எம்.சசீந்திரன்

(தமிழில்) யூமா வாசுகி

வெளியீடு: Books for Children  – பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு: ஜூலை 2018

பக்கங்கள்: 64

விலை: ரூ. 50

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: [email protected]

இணையம்: www.thamizhbooks.com 

 

 

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here