சுடுநீர்க் குடுவைக்குள்
வெந்துகொண்டிருக்கிறது
நிரந்தரமற்ற வாழ்வின் பகல்
திறக்கப்படாத அறையினுள்
புழங்கிய வெம்மை
மனசின் நரம்புகளில் ஊறிக்கிடக்கிறது
தெறிக்கும் உமிழ்நீர்க் கங்குகளாக
இதயத்தைத் துளைக்கிறது
அடர் சிவந்த கனலைத் தூக்கிய
கண்களில் ஈரம் காய்ந்திருந்தது
நட்சத்திரங்களை விரலில் சுமந்து
புற்களை எரித்துக்கொண்டிருக்கிறார்கள்
தன் பாதையை
யாரும் பயன்படுத்தாமல் இருக்க
எரிந்த மரத்துண்டுகளைச் செப்பனிடுகிறார்கள்
விடும் மூச்சுக்காற்றில்
ஒரு மிடறு வெப்பம் கூடியிருந்தது
அனல்காற்றுக்குள் சிக்கி
தகித்துக்கிடக்கிறது மனிதனின்
சிறிய வாழ்வு
அன்புஎனும் பெருமழை என்மீது
பெய்துவிடாதாயென எங்கும்
ஒவ்வொருவரும் தனக்குள்
வெடிக்கும் எரிமலையை
சுமந்து அலைந்துகொண்டிருக்கிறார்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சோலைமாயவனின் கவிதை அருமை.