Solaimayavan Poem சோலைமாயவனின் கவிதை

சோலைமாயவனின் கவிதை




சுடுநீர்க் குடுவைக்குள்
வெந்துகொண்டிருக்கிறது
நிரந்தரமற்ற வாழ்வின் பகல்
திறக்கப்படாத அறையினுள்
புழங்கிய வெம்மை
மனசின் நரம்புகளில் ஊறிக்கிடக்கிறது
தெறிக்கும் உமிழ்நீர்க் கங்குகளாக

இதயத்தைத் துளைக்கிறது
அடர் சிவந்த கனலைத் தூக்கிய
கண்களில் ஈரம் காய்ந்திருந்தது
நட்சத்திரங்களை விரலில் சுமந்து
புற்களை எரித்துக்கொண்டிருக்கிறார்கள்
தன் பாதையை
யாரும் பயன்படுத்தாமல் இருக்க
எரிந்த மரத்துண்டுகளைச் செப்பனிடுகிறார்கள்
விடும் மூச்சுக்காற்றில்
ஒரு மிடறு வெப்பம் கூடியிருந்தது
அனல்காற்றுக்குள் சிக்கி
தகித்துக்கிடக்கிறது மனிதனின்
சிறிய வாழ்வு
அன்புஎனும் பெருமழை என்மீது
பெய்துவிடாதாயென எங்கும்
ஒவ்வொருவரும் தனக்குள்
வெடிக்கும் எரிமலையை
சுமந்து அலைந்துகொண்டிருக்கிறார்கள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. வீ.வைகை சுரேஷ்

    சோலைமாயவனின் கவிதை அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *