நீ
உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?
உன் உதடுகள் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
சொந்தமானது என
மறந்தது ஏன்?
தீ பிழம்பாய் சுட்டு எரிக்காமல்
அமிழ்தாய் இனிக்கட்டுமே உனது சொல்!
இனிய நாவே
கனிவான சொல்
உதிர்த்து
நீடூழி வாழ்!
-சாந்தி சரவணன்
9884467730
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

