ஒரு திங்கள் கிழமை பிறந்தான்
சாலமன் கிரண்டி.
காதுகுத்தி பெயர் வைத்தார்கள்
செவ்வாயன்று.
அவன் திருமணம் நடந்ததோ
ஒரு புதன் கிழமை.
நோயில் விழுந்தான்
வியாழனன்று.
வியாதி முற்றியது
வெள்ளிக்கிழமை .
மரித்துப் போனான்
ஒரு சனிக்கிழமை.
நல்லடக்கம் நடந்தது
ஞாயிற்றுக்கிழமை .
இப்படித்தான் முடிந்தது
சாலமன் கிரண்டியின் கதை.
1960களுக்கு முன் பிறந்தவர்கள் ‘Solomon Grundy’ எனும் ஆங்கிலப் பாடலை பாடமாகப் படித்திருப்பார்கள். அதனை தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்த ஆங்கிலப்பாடலை 1842ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஆர்ச்சார்ட் ஹல்லிவேல் (James Orchard Halliwell ) என்பவர் கண்டறிந்து வெளியிட்டாராம்.
‘புத்தகம் பேசுது’ இதழில் இரா.நடராசன் அவர்கள் அழ..வள்ளியப்பாவின் ‘திங்கள் கிழமை பிறந்த குழந்தை ‘ பாடலின் நேர்மறையான பொருளுக்கும் இந்த ஆங்கிலக் கவிதையின் எதிர்மறையான உள்ளடக்கத்திற்கும் ஒப்பிட்டிருக்கிறார்..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.