சிறந்த சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்பாளருமான ச. சுப்பாராவ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
தலைப்பில் உள்ள கட்டுரை ஒரு மொழிபெயர்பாளரின் சொற்கற்றைகளை குறித்ததாக அமைந்திருக்கிறத. இரண்டுவகையான சொற்கற்றைக்குள் மூழ்கி முத்தெடுத்து பட்டை தீட்டி தரும் வேலை என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை வாசகர்களுக்கு புரியவைக்கும் கட்டுரை.
இந்த புத்தகத்தில் மொத்தம் 27கட்டுரைகள் 96 பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கால கண்ணாடி போன்றது. இன்றைக்கு இருக்கும் குழந்தைகளுக்கு டிவி சேனல்களில் வந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியை பற்றி தெரியுமா என்று தெரியவில்லை. அது குறித்த பதிவு ஒன்று இங்கே உள்ளது. அதே போல சினிமா பற்றி கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக என்.எஸ்.கே வின் போராட்டகுணத்தை அதுதான் அந்த பைத்தியக்காரன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். நீங்க திரைப்படங்கள் தொடங்கிய காலத்தில் ஜாதிய பாகு பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதையும் அதை எதிர்த்து குரல் கொடுத்த முதல் குரல் என்.எஸ்.கே என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது.
எழுத்துக்கள் சும்மா வந்துவிடவில்லை என்பதைற்கான ஒரு அற்புதமான கட்டுரையும் இதில் உள்ளது.
ஒரு சில கட்டுரைகள் தவிற மிக எளிமையாக இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு மிகாமல் அமைந்திருப்பதால் விரைவாகவும் எளிமையாகவும் வாசிக்க முடிகிறது. சமூக அக்கரை கொண்ட வாசிப்பாளர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.
நூலின் பெயர் : சொற்களைத் தேடும் இடையறாத பயணம்
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
வெளியீடு :பாரதி புத்தகாலயம்
சென்னை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

