ஆசிரியரின் படைப்பில் முதலில் நான் வாசித்த கதை “அன்னம்” மனிதனுக்கு உணவு என்பது எத்தனை முக்கியமான பொருள். அந்த உணவை அன்போடு ஒருவர் பரிமாறினால் அதை புசிக்கும் மனம் எப்படி நிறைகிறது என்பதை நமது உணர்வுகளுக்குள் அவரின் எழுத்தின் ஊடே செலுத்தி இருப்பார். சாப்பிட்டால் வயிறு தானே நிறையும், மனம் எப்படி என நீங்கள் கேட்பது கேட்கிறது? ஒருவர் பசியாறும் போது அவர்கள் வயிறு மட்டுமே நிறைவது இல்லை. மனமும் தான் என ஒவ்வொரு காட்சியும் ‘அன்னம் ” சிறுகதை பிரதிபலிக்கும். அதற்கு சற்றும் குறையாத படைப்பு இந்த சோற்றுக் கணக்கு.
பசி. இதை உணர்ந்து உணவு அளிப்பவரை அம்மா என்று அல்லாமல் என்ன சொல்லி அழைப்பது. இந்த கதை முழுவதும் ஒருவரின் ஈகை குணத்தை விவரித்துக் கொண்டே பயணிக்கிறது. ஒருவரின் பசி அறிய ஒரு மனம் இருந்தால் மட்டுமே போது
ஆண், பெண், ஏழை, பணக்காரன் ஜாதி என எந்த ஒரு அடையாளமும் தேவையில்லை. அந்த மனம் அந்த கட்டையான உருவத்தில் குடி கொண்டு உள்ளது. உணவு ருசியாக இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் அல்ல. அந்த உணவை சமைப்பவரின் மனம் சார்ந்து ருசி கூடுகிறது.
உறவுகளின் வீட்டில் தங்கி படிக்கும் நிலை பலரும் கடந்து வந்துள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம். அவ்வாறு தங்கிய நபர்கள் உறவுகளின் வீட்டில் அந்தியப்பட்டு தான் காலத்தை கடந்து வந்து இருக்கின்றனர். நிதர்சனமான நிகழ்வு நம் கண் முன்னே காட்சி படலமாக படைக்கப்பட்டுள்ளது.
கையில் காசு இல்லாமல் ஒரு உணவு விடுதியில் அமர்ந்து கொண்டு அதை மறந்து பசி என வந்தவுடன் அள்ளி அள்ளி சாப்பிட்டு படபடவென்று அமர்ந்து இருக்கும் உணர்வு அப்பப்பா …… பசியின் கொடுமை உணர்ந்தவனுக்கே புலப்படும்.
திருவனந்தபுரத்தில் அப்படிப்பட்ட உணவு விடுதி எது? அதன் உரிமையாளர் யார்? அப்படிப்பட்ட ருசியான உணவிற்கு என்ன கட்டணம் நிர்ணயித்து இருந்தார்? அதை எப்படி வசூலித்தார்? உறவுகளில் அந்தியப்பட்டு வெளிவந்த மனிதன் யார்? அவருக்கு அந்த உணவு விடுதி எப்படி உறுதுணையாக இருந்தது? வாழ்க்கை என்னும் படகில் அவர் பசியற்று கடக்க எப்படி உதவியது? அவர் படித்து முடித்தபின் பணி கிடைத்ததா?
பணி கிடைத்த பின்னர் அவரை நிராகரித்த உறவுகளின் உறவு தொடர்ந்ததா? அந்த உணவு விடுதிக்கு என்ன கைமாறு செய்தார்? கால மாற்றம் அந்த உணவு விடுதி முதலாளியின் மனதில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தி இருந்ததா? என நமது பல கேள்விகளுக்கு இந்த புத்தக வாசிப்பு ஒரு அறுசுவை உணவு பரிமாறுவது போல் பரி மாறுகிறது.
படித்து இல்லை உணவு உண்டு பசியாறி தெரிந்துக் கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நூலின் தகவல்கள்
புத்தகத்தின் பெயர்: “சோற்றுக் கணக்கு”
எழுத்தாளர் : திரு. ஜெயமோகன்
பக்கங்கள்: 32
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ்
அறிமுகம் எழுதியவர்
திருமதி சாந்தி சரவணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆசிரியர்
ஜெயமோகன் அவர்களின்
சோற்றுக் கணக்கு நூல் விமர்சனம் அருமை.
வாழ்த்துகள் சாந்தி சரவணன்