Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம் : ஜெ. பால்முருகனின் `ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளிப் பயணம் – மா.மகேந்திரவர்மன்




நூல்: ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிப் பயணம்
ஆசிரியர்: ஜெ. பால்முருகனின்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 120
பக்கம்:128
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

தமிழில் தரமான புத்தம் புதிய தொழில்நுட்பசெய்தியை கொண்ட விண்வெளி சார்ந்த உலக அளவில் நடைபெற்று வரும், ஆராய்ச்சிகளை பற்றிய விளக்கங்களை எளிமையாக எடுத்துரைக்கும் புத்தகம்.

விண்வெளி ஆய்வில், உலகில் உள்ள எல்லா ராக்கெட்டுகளை விட சிறந்த மற்றும் மலிவு விலையில் ராக்கெட்டை உருவாக்கி பல்வேறு நாடுகளின் அரசு சார்ந்த நிறுவனங்களை கூட
ஆச்சர்ய படவைத்த எலன் மாஸ்க் மற்றும் அவரது நிறுவனத்தின் பிற நிறுவன அமைப்புகள், எலன் மாஸ்கின் எதிர்கால திட்டம் உள்ளிட்ட பற்பல செய்திகளை சுவைபட எளிமையாய்
எடுத்துச் சொல்கிறது இந்த புத்தகம். தொழில் முனைவோராக உருவாக விரும்பும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய தன்னம்பிக்கை செய்தியையும் அழகாய் ஊட்டுகிறது. எந்த துறையில் இருந்தாலும் அதற்கான ஆர்வம், அதைபற்றிய ஆழ்ந்த அறிவு, கடின உழைப்பு இவை இருந்தால் எல்லோரும் வெற்றி பெறமுடியும் என்பதன் அறிவியலை அழகாய் புரிய வைக்கிறார் ஆசிரியர். ஆசிரியரும் ISRO நிறுவனத்தில் பணிபுரிவதால் ராக்கெட் அதன் என்ஜின், எரிபொருள் இதன் ஆரம்பகால கட்ட வளர்ச்சி, தற்போதைய வளர்ச்சி (SLV, PSLV, GSLV, ESCAPE ROCKET) ஆகியவற்றை தரவுகளோடு ஒப்பிட்டு எளிமையாய் எல்லோருக்கும் புரிய வைக்கிறார். பதினைந்து உப தலைப்புகளோடு எலன் மாஸ்கின் மனித இனம் Multi Planet
இனமாக மாற வேண்டும் என்ற சிந்தனை ஒட்டி, Space X நிறுவனத்தின் செயல்பாடுகளை அவற்றின் வெற்றி ரகசியங்களை மறுபயன்பாடு மூலம் நிறுவனம் பெற்ற பணபலன்களை பட்டியலிடுகிறார்.

ராக்கெட்டின் வடிவம், வடிவமைப்பு, இயக்கநிலை 1,2,3 எரிபொருள் (திட, திரவ, வாயு), எடை, சுமந்து செல்ல எடை (Pay Load) அவற்றின் விலை நவீன வகை ராக்கெட் அவற்றின் சிறப்பு அம்சங்கள் பால்கன் வகை ராக்கெட்டை Space X நிறுவனம் ஏன் பயன்படுகிறது? என்பது உள்ளிட்ட சாதக, பாதக அம்சங்களை அலசுகிறது இந்த புத்தகம்.

மறு பயன்பாடு (Reuse) சுற்றுச் சூழலோடு மட்டுமல்ல விண்வெளிதுறைக்கும் மிக முக்கிய பயன்பாடு தருகிறது என்பது புதிய சிந்தனை. Space X நிறுவனத்தின் புதிய செயற்கை கோள் மூலம் நிறுவப்படும் இணையதள சேவை, விண்வெளி சுற்றுலா, HyperLoop ஆராய்ச்சி, மூலமாக உலகில் எந்த ஒரு மூலையிலும் அதிகபட்சமாக 90 நிமிடங்களுக்குள் செல்லமு டிகி றது . புதிய
தொழில்நுட்ப செய்தி நம்மை வேறு உலகிற்கு கொண்டு செல்லும்.

“நிலாவிற்கு போய் வடை சாப்பிட்டு விட்டு வரலாமா? அப்படியே ஒரு டீயும் சாப்பிட செவ்வாய் கிரக‌த்திற்கு சென்று வர முடியும்’’ என்பதனை எதிர் வரும் ஆண்டுகளில் தொழில்நுட்பம் எளிமைப் படுத்த போகிறதை அழகாக எடுத்துரைக்கிறது. இந்த புத்தகம் அறிவியல் வாசிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் வாங்கி வாசியுங்கள்.

அறிவியலை நேசிக்கிற அனைவருக்கும் ராக்கெட், விண்வெளி நவீன தொழில்நுட்பங்களை அழகு தமிழில் எளிமைபடுத்தி இருக்கிறார் ஆசிரியர் பால் முருகன். அறிவியல் தமிழுக்கு புதிய அறிவியல் கொடை வழங்கிய பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள் நன்றிகள்..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here