1.காலஞ்சென்ற அம்மா
நிலாச்சோறூட்டினாள்
அதிகாலைக் கனவில்.
2.உள்நுழையும் முன்பே
உற்சாகபோதை
மதுக்கடை விளம்பரப்பதாகையில்
சில்க் ஸ்மிதாவின் கண்கள்
3 புதிய தபால்காரர் ஊருக்கு வந்தார்
பழைய தபால்காரரின்
மரணச் செய்தியோடு
4.புதுச்செருப்பு வாங்குகிறபொழுதெல்லாம்
அனிச்சையாய் தோன்றுகின்றன
அப்பாவின் ஆணிக்கால்கள்.
5. பார்வையற்ற பாடகனை
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது
உண்டியலின் ஒற்றைக்கண்.
6.சாவு வீட்டிலும்
வாழச் சொல்கின்றன
ஆட்டக்காரியின் ஏற்ற இறக்கங்கள்
7.கலர்கோழிக்குஞ்சு விற்பவரின்
பத்து விரலும்
வானவில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

