பழனித்தாத்தா சொன்ன கதைகள் – ‘சூரிய ஒளியின் நன்மைகள்’ கட்டுரை – முனைவர் ம. அபிராமி

பழனித்தாத்தா சொன்ன கதைகள் – ‘சூரிய ஒளியின் நன்மைகள்’ கட்டுரை – முனைவர் ம. அபிராமி




காலைப் பொழுது அழகாகப் புலர்ந்தது. சுபி மெல்லக் கண் விழித்தான். உடல் முழுதும் அடித்துப் போட்டது போன்ற வலி. காய்ச்சல் மிகுதியாகக் காய்ந்தது. பழனித்தாத்தா அப்பாவிடம் பேச வந்தவர் சுபியை கவனித்தார். அம்மா கசாயம் காய்ச்சி கொண்டுவந்து குடிபாட்டினாள். தலைக்குத் தைலம் தேய்த்து விட்டாள் போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டாள். அப்பா 10 மணிக்கு மேல் ஆஸ்பி;ட்டால் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

இரண்டு நாட்களுக்குப் பின் சுபி குணமானாள். தோழிகளுடன் விளையாடிவிட்டு போர் அடிக்கவே தாத்தாவிடம் கதை கேட்கலாம் என்று சென்றார்கள்.
தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார் ராமு, சோமு என இரு நண்பர்கள் இருந்தனர். ராமு செல்வந்தர் வீட்டுப்பையன். சோமு ஏழை விவசாயின் மகன். ராமு காலையில் 9 மணிக்கு எழுந்திரிப்பான். பெட் காபி சாப்பிடுவான் அவசரமாக பல்துலக்கி அவசரமாகக் குளித்துமுடித்து அம்மா கொடுக்கும் டிபனை சாப்பிட்டு முடித்து பள்ளிக்கு காரில் செல்வான். இதுவே இவனது வழக்கமாக இருந்தது. சோமு அப்படியல்ல காலை வெள்ளி முளைத்தவுடன் எழுந்துவிடுவான்.

அப்பாவுடன் வயல் வரப்பில் முளைத்த புற்களின் மேல் வெறுங்காலுடன் செல்வான். அப்பாவிற்குத் துணையாக வயலில் வேலை செய்வான். அதற்குள் சூரியன் உதித்து இளம் வெயிலைப் பரப்பும் அப்பா ஒடித்துக் கொடுத்த வேப்பிலைக் குச்சியால் பல் துலக்குவான். ஆற்றுநீரில் நீந்தி விளையாடுவான். பின் வீட்டிற்கு வந்து அம்மா கொடுக்கும் பழைய சோற்றையோ, கஞ்சி கூழையோ குடித்துவிட்டு பள்ளிக்குக் காலாற நடந்து செல்வான். இருவரும் வளர்ந்தனர் ராமு நோயாளியாக மாறிப் போனான் சோமு நல்ல திடமான ஆரோக்கியத்துடன் காணப்பட்டான். இன்று ஊரிலேயே பெரிய மருத்துவர் சோமுதான். இதற்கு, காரணம் என்ன என்று தாத்தா கேட்டார். ஒவ்வொருவரும் கூழ், கஞ்சி. பழைய சோறு புல்வெளியில் நடந்தது. ஆற்றுநீரில் நீந்தி விளையாடியது என கூறினர். தாத்தா நீங்கள் அத்துணை பேர் கூறியதும் உண்மை ஆனால். அதையும் தாண்டி ஒரு வி~யம் உள்ளது. அதுதான் காலை இளம் வெயலில் நிற்றல் சோமு செய்த அனைத்துச் செயல்களுமே நல்ல உடற்பயிற்சி தான். இவையனைத்தையும் அவன் இளம் வெயிலில் செய்தான். மாலை 4 மணிக்கு மேல் உள்ள வெயில்படும்படி விளையாடினான். அதுவே அவனுடைய ஆரோக்கியத்திற்குக் காரணமாக அமைந்தது என கதையைச் சொல்லி முடித்தார் தாத்தா.

சூரிய ஒளியின் விஞ்ஞான ரகசியம்:

காலை நேர சூரிய ஒளி நம் உடலில் படும்பொழுது விட்டமின் டி யை உறிஞ்சுகிறது. இது கால்சியத்தை உறிஞ்சி நம் உடலில் உள்ள நரம்புகளை வலுவடையச் செய்கிறது கிருமி நாசினி, உடல் கொழுப்பைக் குறைக்கும்.

விட்டமின் டி குறைபாட்டினால் குழந்தைகளுக்கு மெட்ட பாலிக் எலும்பு நோய்கள் ஏற்படும். மெலடோனின் என்ற திரவம் நம் தூக்கத்திற்கு உதவுகிறது. சூரிய ஒளியில் நிற்பதினால் நம் உடல் எடை குறையும்.

விட்டமின் டி நம் உடலில் குறைவாக இருந்தால் இதய நோய்கள், புற்றுநோய் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் குளிர் நீடிக்கும் பொழுது பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கான சிகிச்சை சூரிய ஒளி தான்.

தினமும் காலை 15 நிமிடங்கள் வெயிலில் நின்றால் முகப்பரு. அரிக்கும் தோலழற்சி, மஞ்சள் காமாலை தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள் போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை.

சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி குறைபாட்டினால் இன்சுலின் பாதிப்பு குறைந்து டைப் 2 நீரழிவு நோயை உண்டாக்கும். சூரிய ஒளியின் மூலம் இயற்கையாக இவ்வளவு நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

முனைவர் ம. அபிராமி,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *