உயிர்கொள் கவிதை – பிரியா ஜெயகாந்த்

உயிர்கொள் கவிதை – பிரியா ஜெயகாந்த்




நொடிதனில் கடந்தவை
முடிவற்றுக் கிடந்திட

நிமிடத்தில் கடந்தவை
திரும்பிடா நிலைதொட

நாள் பொழுதில் கடந்தவை
மீளாமல் உறங்கிட

வாரத்தில் கடந்தவை
வாராமல் மறைந்திட

மாதத்தில் கடந்தவை
காததூரம் அடைந்திட

வருடத்தில் கடந்தவை
வரும்திசை மறந்திட

நூற்றாண்டில் கடந்தவை
காற்றொடு கலந்திட

நிரந்தரம் என்று ஒன்றல்ல
நிகழ்காலத்தைத் தவிர

தோற்றது நீயல்ல
தோல்விகள் முடிவல்ல

நேற்றோடு நிறைவல்ல
நேரமும் குறைவல்ல

இனியும் தாமதமா…..
இலட்சியம் உயிர்கொள்ள….?

பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
9840308787
acuhealerpriya@gmail.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. சி.பேரின்பராஜன்

    தோழர் மிகவும் ஆழமான கவிதை… சிறப்பாக எழுதுகிறீர்கள்.. எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்…

  2. பிரியா ஜெயகாந்த்

    மிக்க நன்றி தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *