ஆ.சூரியாதேவியின் ஹைக்கூ கவிதைகள்
*************************************************
1.
என்றோ கசக்கி எறியப்பட்ட காகிதங்கள்
குப்பையில் கண்டெடுக்க
மீண்டும் மலர்கின்றன கவிதைகள்
*************************************************
2.
வற்றிப்போன நதியின்
பிளவுற்ற கீறல்கள்
விரியும் முடிவில்லா தேடலாய்
*************************************************
3.
சிலைகள் சிரித்துப் பேசுகின்றன
சிந்தனையற்ற மனிதர்கள்
தன்னிடம் மண்டியிடுவது கண்டு
*************************************************
4.
கருவறைக் குழந்தையிடம்
கைநிறைய வளையல் ஓசையால்
உரையாடுகிறாள் அன்னை..
*************************************************
5.
பசித்திருக்கும் பக்தருக்கு
பழையதும் கிடைக்கவில்லை.
படையலாக. ருசிக்கும் பலகாரம் ..
*************************************************
எழுதியவர்:
✍🏻 – ஆ.சூரியாதேவி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
