சிறுகதை : சூசனா செய்த கலாட்டா (Susana Seitha Galata) Galata made by Susana | மலையாளத்தில் - அஷீதா | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : சூசனா செய்த கலாட்டா | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : சூசனா செய்த கலாட்டா

மலையாளத்தில் – அஷீதா
தமிழில் – உதயசங்கர்

ஒரு தடவை சூசனா ஆட்டுக்குட்டி சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியோருடன் கள்ளன்போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. பூனை தான் போலீஸ். பூனை போலீஸ் பிடிக்காதிருக்கவேண்டும் என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைக்கு ஓடினார்கள்.

சூசனா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள். நாய்க்குட்டி பாய்ந்து சென்று கதைப்பாட்டியின் பின்னால் போய் படுத்து உறங்கி விட்டது. அது கதைப்பாட்டிக்குத் தெரியாது. சூசனா பதட்டமாய் ஓடி ஓடி ஆற்றங்கரைக்கே சென்று விட்டது.

அப்போது தான் நீலகண்டன் குள்ளநரியும், ஒரு செந்நாயும், பல்லைக்காட்டிக் கொண்டு சூசனாவை நோக்கி வருவதைப் பார்த்தது. சூசனா ஒரே ஓட்டம். செந்நாயும் குள்ளநரியும் பின்னால் பாய்ந்து சூசனாவைப் பிடித்துக் கொண்டன.

“ சூசன்னா… எங்கள் அருமை பூங்குயிலே! உன்னுடைய நண்பன் தான் நான், நீலகண்டன் குள்ளநரி, என்னுடன் கூட இருப்பது பெரிய அறிவாளி் செந்நாய்ஜி. ஜங்கில் புக் ஜங்கில் புக் என்ற சினிமாவைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்தச் சினிமாவின் கதை, கதாநாயகன் வேடம் எல்லாம் செந்நாய்ஜி தான் செய்தது கண்ணு, சூசன்னா..”

சூசனா திரும்பிப் பார்த்தாள். செந்நாயின் கண்களில் தெரிந்த ஆசையைப் பார்த்ததும் அவளுடைய அனைத்துச் சந்தேகங்களும் தீர்ந்து விட்டன..அது ஒரு குதி குதித்து ஓடியது. முதலில் தெரிந்த தேவாலயத்துக்குள் நுழைந்து விட்டது. அங்கே திருப்பலிபூசை நடந்து கொண்டிருந்தது. பாதிரியார் ஓடிவந்த சூசனாவை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார்.

ஆட்டுக்குட்டி 𓃵 (@goatkutti) / X

தேவலாயத்தின் முற்றத்தில் நின்று நீலகண்டன் குள்ளநரி சத்தமாய் கத்தியது.

“ இறங்கி வந்துரு சூசனா.. தேவாலயத்தில் உன்னைப் பலி கொடுத்து விடுவார்கள்.. நான் சொல்லலைன்னு நெனைக்காதே..”

“ செந்நாய் கொல்வதைக் காட்டிலும் பலியாடாவது பரவாயில்லை..” என்று சூசனா சொன்னது.

செந்நாய்க்குக் கோபம் வந்தது. ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட கைவசப்படுத்த முடியாத முட்டாள்… குள்ளநரியால் என்ன பயன்? கோபத்தைத் தீர்க்க நீலகண்டன் குள்ளநரியின் காதில் ஒரு கடி கடித்தது.

நீலகண்டன் குள்ளநரி கூப்பாடு போட்டுக் கொண்டு ஓடியது.

தமிழில் – உதயசங்கர்

Rent the entire collection of famous author Udhayasankar novels online
நன்றி: பறயாம் நமுக்கு கதகள்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *