Sir, வணக்கம்… ஷண்முகமா? (ஒரு area பெயர் சொல்லி, அந்த காவல் நிலைய SI பேசுறேன்)

ஆமா சார், என்னாச்சு sir?

உங்க பையன் பேரு, திவாகரா?

ஆமா sir…

ஸ்டேஷன் வாங்க, விளக்கம பேசிக்கொள்ளலாம்….. ஷண்முகம், அய்யோ என்ன செய்தான் தெரியல, பொண்ணு வீட்ல தெரிஞ்சா என்ன ஆவது…. என எண்ணி ஸ்டேஷன் விரைகிறார்….

இதே போல், இன்னொரு area SI, உங்க பொண்ணு சுபாஇங்க ஸ்டேஷன்ல இருக்காங்க கொஞ்சம் வாங்க என சீனிவாசனை அழைக்க, கல்யாண முடிய போற பொண்ணு, மாப்பிள்ளை வீட்ல தெரிஞ்சா என்ன ஆக போகுதோ, பதற்றத்தில் காவல் நிலையம் போக….

அங்க போன இரு பெற்றோருக்கும் புது தகவல் காத்து இருந்தது, அதாவது மாவட்ட SP அலுவலகம் போங்க என…..இருவருக்கும் ஒரே மாவட்டம்.

இருவரின் பெற்றோரும் ஒன்று போல் SP அலுவலகம் போக, நுழைய, யாருக்கு தெரியக் கூடாது என நினைத்தோமோ, அவர்கள் முன்னாடியே நிறுத்தி விட்டாயே ஆண்டவா என எண்ணிக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்டு நாணப் பட்டனர், விவரம் தெரியாமல்.

திவாகரும் சுபாவும் ஒன்று போல் இருந்ததால், ஒரு மகிழ்ச்சி, ஆனால் ஏன் இருவரும் இங்கே ஏன் இருக்கிறார்கள்? என சந்தேக நோக்கில் காண, விவரத்தை விளக்கினார் SP.

அதாவது, இது புது கேஸ் sir எங்களுக்கு…. நீங்க இவங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க போய் இருக்கீங்க, இவங்கள தனியா… விட்டு விட்டு…. சரியா….

ஆமா sir….(ஒன்று போல்)

இவங்க, ஒருவரை ஒருவர் சந்திக்க அவங்க அவங்க வீடுகளுக்கு போய் இருக்காங்க சொல்லிக் கொள்ளாமல், மாற்று சாவி எங்க வைத்து இருப்பீங்க என்பது முதல் தெரிந்து கொண்டு இருப்பாங்க போல…..(முன்னாடியே இருவரும் டிஸ்கஸ் பண்ணி இருப்பாங்க போல)

வீட்டுக்கு போனதும் பூட்டி இருந்ததால் , திரும்பி வந்து இருக்கலாம் ஆனால் வரல…. மாற்று சாவி ஞாபகம் வர அதை தேடி எடுத்து உள்ள போய் இருந்து இருக்காங்க…..

ஆள் இல்லாத வீட்டில் சத்தம் கேட்குது, என காவல் துறைக்கு தகவல் வர அந்த அந்த area காவல் ஆய்வாளர்களை முடுக்கி, அங்க உள்ள ஸ்டேஷன்ல வைச்சி விசாரிச்சா…. அவங்க சொன்ன விசயம் அப்பப்பா….. அதான் இங்க கூட்டிட்டு வர சொன்னேன், உங்களையும் வர சொன்னேன்…..

உண்மையில் உங்களை பாராட்டனும், நல்லா வளர்த்து இருக்கீங்க…. இவங்க ஒரு நல்ல முன் உதாரணமாக இருப்பாங்க… எனக்கு உண்மையில் செம சந்தோசம்….. Keep it up…. ஒரு வேண்டுகோள், மாற்று சாவியை வெளியில் வைக்காதீங்க, உங்க பிள்ளைகள் தான், வெளியில் உள்ள ஆளுகளுக்கு தெரிஞ்சி, விபரீதம் நடந்து விட்டால். அதில் கொஞ்சம் கவனம்.

உங்க பிள்ளைகளை கூட்டிட்டு போங்க….
Congratulations guys, Happy anniversary.

Thank you sir.

குறிப்பு:- ஏன் இருவரும் ஒரே நேரத்தில் அவன் வீட்டுக்கு இவளும், இவள் வீட்டுக்கு அவளும் போனார்கள் என்பது தான் சஸ்பென்ஸ்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *