தொலைந்தவளைத் தேடியும்
கிடைக்க வில்லை…
எப்போதிருந்து,….
தெரியவில்லை….
தொலைந்தது எங்கே?
புரியவில்லை…
இரவிலா….?
பகலிலா?
எப்போது…. விளங்கவில்லை.
இன்னும்
தேடிக்கொண்டேயிருக்கிறேன்..
மகிழ்ச்சியும் மலர்ச்சியுமாக
கொண்டாட்டமும் கும்மாளமுமாக
இருந்த அவளை….
யார்…விரட்டியது…?
அவளின் மழலைப் பேச்சும்
விளையாட்டுத்தனமும்
குறும்புப் பேச்சும்
குழந்தைத் தனமும்
எங்கே…?…. எங்கே….?
இன்னும்
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
நானெனும்..அவளை…
எங்கே போனாள்?
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

