செதுக்கும் சிற்பங்கள் - ஜோல்னா ஜவஹர்

ஜோல்னா ஜவஹர் எழுதிய “செதுக்கும் சிற்பங்கள்” – நூலறிமுகம்

சிற்பி தானே சிற்பங்களை செதுக்குவார்! இது என்ன சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்? தலைப்பே வியக்க வைக்கிறதல்லவா?.. காலம் காலமாய் தன்னிடம் வரும் குழந்தைகள் கல்லை போலவும், களிமண்ணை போலவும் இருப்பதாகவும் அவர்களைத் தாங்கள் சிற்பமாக்குவதாகவும் , ஆசிரியர்கள் உலகில் இருக்கும் பிரம்மையை…
kadavul,madhakkattukadhaikalum kasu parikkum saamiyarkalum book reviewed by ponviji நூல் அறிமுகம்: கடவுள், மதக்கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும் - பொன் விஜி 

நூல் அறிமுகம்: கடவுள், மதக்கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும் – பொன் விஜி 

புத்தகத் தலைப்பு:- கடவுள், மதக்கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும் ஆசிரியர் :- டாக்டர் கோவூர் தமிழாக்கம் :- த. அமலா நூல் வெளியீடு :- அலைகள் வெளியீட்டகம் பக்கங்கள் : - 432 விலை :- 325/- வணக்கம் நண்பர்களே, எப்போதுமே…
magizhini ifs book reviewed by s.harini நூல் அறிமுகம்: மகிழினி IFS - எஸ்.ஹரிணி

நூல் அறிமுகம்: மகிழினி IFS – எஸ்.ஹரிணி

நூலின் பெயர் : மகிழினி IFS ஆசிரியர் : ஈரோடு சர்மிளா ஓவியம் : ஜமால் வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் பக்கங்கள் : 48 ஒரு பள்ளி மாணவி தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வில் ஊக்கமடைந்து பிற்காலத்தில்…
en peyar nu book reviewed by - s.harini நூல் அறிமுகம்: என் பெயர் ‘ஙு’ - எஸ். ஹரிணி

நூல் அறிமுகம்: என் பெயர் ‘ஙு’ – எஸ். ஹரிணி

நூலின் பெயர் : என் பெயர் ‘ஙு’ (எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்) ஆசிரியர் : வே.சங்கர் வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் பக்கங்கள் : ௪௮ விலை : ரூ.50/- எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும்…
pazanthamizhar vaazviyalum varalaarum book reviewed by prof.p.jambulingam நூல் அறிமுகம்: பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் - முனைவர் பா.ஜம்புலிங்கம்

நூல் அறிமுகம்: பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் – முனைவர் பா.ஜம்புலிங்கம்

முனைவர் ஆ. ராஜா எழுதியுள்ள "பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்" என்ற நூல் ஆலங்குடி வட்டாரப்பகுதியில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப்படுகையில் நுண்கற்காலத் தடயங்கள், கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும், கீழடி அகழாய்வுகள், பல்லவர் கால மூத்த தேவி சிற்பம்,…
நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -ராஜேஷ் நெ பி

நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -ராஜேஷ் நெ பி


புத்தகம்: ஓங்கூட்டு டூணா.! ஆசிரியர்:தேனி சுந்தர் பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:88 விலை:90

 

 

அரசுப் பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களின் வகுப்பறையில் குழந்தைகளுடனான உரையாடல்களில் இருந்து பலவற்றை தொகுத்து புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம். அவருடைய முந்தைய புத்தகங்களான “டுஜக் டுஜக்-ஒரு அப்பாவின் டைரி” மற்றும் “சீமையில் இல்லாத புத்தகம்” ஆசிரிய பெருமக்களையும்,மாணவர்களையும் மற்றும் பல்வேறு விதமான வாசகர்களின் கவனத்தை பெற்றவர். இந்த முறை அதைவிட அதிகமான கவனத்தை இதன் மூலம் பெறுவார் என்பது உறுதி. ஒவ்வொரு குறிப்புகளும் நம்மை மாணவப் பருவத்திற்கு இட்டுச் செல்வதோடு பல்வேறு நினைவுகளையும், நிகழ்வுகளையும் மலரவிடும் என்று கூறினால் அது மிகையில்லை.

குழந்தைகளை உரையாட விட்டு அவர்களைக் கேள்வி கேட்கச் செய்து அதற்கு உண்டான சரியான பதிலை நாம் தேட ஆரம்பித்தாலே பல்வேறு விதமான அடிப்படைகளை சரியாக எவராலும் புரிந்து கொள்ள முடியும் என்பதை மீண்டும் புத்தகம் வழியாக பெரும்பாலும் நாம் உணரலாம்.
பள்ளிகளில் குழந்தைகளின் மூலமாக நடைபெறும் உரையாடல்களை குறிப்பெடுத்து வைத்தால் நல்லது என்ற சிறப்பானதொரு அறிவுரையை வழங்கிய எழுத்தாளர் மாடசாமி அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார். அதை சரியாக உள்வாங்கி முக்கிய குறிப்புகளை எடுத்து வைத்து தொகுத்து புத்தக வடிவில் செயல்படுத்திய எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களும், புத்தகமாக வெளியிட்ட பாரதி புத்தகாலயமும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
இது போன்ற குழந்தைகளுடனான உரையாடல்களை மற்றும் குறிப்புகளை வாசிக்கும் போதே அந்த தருணம் நாமும் குழந்தைகளாக மாறுகிறோம் என்பதை உணர முடிகிறது. அல்லது குழந்தை பருவத்திற்கு நம்மை இட்டுச் செல்வதை உணர முடிவது இதன் சிறப்பம்சமாகும்.
ஆசிரியர்கள் மாணவர்கள் அல்லாமல் அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்னால் நிச்சயமாக கூற முடியும்.புத்தகத்தில் உள்ள குறிப்புகள் அனைத்தும் கவிதைகள்போல் அல்லது ஹைக்கூ கவிதைகள் போல் உணர்கிறேன்.
ராஜேஷ் நெ பி

சித்தாலப்பாக்கம், சென்னை

நூல் அறிமுகம்: ஆசிரியர் நாட்குறிப்பு -இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ஆசிரியர் நாட்குறிப்பு -இரா.சண்முகசாமி


நூல் : ஆசிரியர் நாட்குறிப்பு
வெங்களத்தூர் பள்ளி
ஆசிரியர் : தோழர் உதயலட்சுமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : மார்ச்-2023
விலை : ரூ.140
“மாணவர் மனசு தபால்பெட்டியெல்லாம் சிலந்திப்பூச்சிகள் குடியிருக்கத்தான்…- ஆசிரியர் #உதயலட்சுமி.”
‘மலர்களைத் தொடுக்கும் விரல்கள் தேவை- பேராசிரியர் ச. மாடசாமி ;
எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகள். அவர்களைக் கவனித்து, அவர்களின் சிக்கல்களை களைந்து கற்றலின்பால் கவனம் செலுத்தச் செய்வது பெரும் தவம்- விழியன் உயிர்த்துடிப்பு உள்ள குழந்தைகளை இயந்திரமாக ஆக்குவதா வகுப்பறை?- சிவா கலகலவகுப்பறை .’
ஆளுமைகளின் சிறப்பான அணிந்துரைகளுடன் நாட்குறிப்பு தொடங்குவது இந்நூலுக்கு மிகுந்த வலு. ஓர் ஆசிரியரின் வெற்றி குழந்தைகளின் மனதில் இடம் பிடிப்பதிலிருந்து தொடங்குகிறது.
ஆசிரியர் உதயலட்சுமி அவர்கள் குழந்தைகளை தனது அன்பால் கட்டிப்போட்டு குழந்தைகளின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பளித்து அவர்களை சமூகத்தின் ஆணிவேர் என்பதை ஆழப் புரிய வைத்திருக்கிறார் தனது ‘ஆசிரியர் நாட்குறிப்பு’ மூலம்.  வகுப்பறைகள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
எங்கெல்லாம் உரையாடல் நடக்கிறதோ அங்கெல்லாம் கற்றல் நிகழும் என்பதை தனது வகுப்பறை அனுபவங்களின் பல குறிப்புகள் மூலம் நம்மை அசத்துகிறார்.
தனது அம்மாவின் மரணம் மற்ற அம்மாக்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக ஒரு பெண்குழந்தை மருத்துவராக ஆக விருப்பம் தெரிவித்தது;
வகுப்பறை ஆண்/பெண் சமத்துவமாய் இயங்கக் கூடிப் பணியாற்றுவது;
வகுப்புத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வகுப்பறை சனநாயகம்;
ஆசிரியர்களின் உணர்வை மதிக்கும் சக ஆசிரியர் பண்பு;
ஆசிரியர் என்பவர் சாமானிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான உரிமைகளுக்கான பார்வையில் அரசியல் பேசும் அழகு;
குழந்தைகளின் தேவைகளுக்காக உதவும் மனப்பான்மை உள்ளவர்களை அணுகிப் பெற்று குழந்தைகளின் மனதில் ஒளிவிளக்காய் திகழும் பாசம்;
கல்வித்துறையில் இருக்கும் முரண்பாடுகளை அச்சமின்றி இடித்துரைக்கும் பண்பு’  இப்படி நிறைய அவருடைய பணிகளை, பண்புகளை இந்நூலை வாசிக்கும்போது அறியமுடியும்.
உதாரணம் ஒன்றிரண்டு மட்டும் –
அம்பேத்காரின் படத்தை குடியரசு நாளில் கூட வைக்கக்கூடாதா? என்கிற அவருடைய அறச்சீற்றம்;
மாணவர் மனசு தபால்பெட்டியெல்லாம் சிலந்திப்பூச்சிகள் குடியிருக்கத்தான்…’
இப்படி ஆங்காங்கே நமக்கு கோடிட்டுக் காட்டிக்கொண்டே தனது நாட்குறிப்பை பூர்த்தி செய்திருப்பார்.
ஆசிரியர்கள் வாசிப்பதே சில சதவீதம் மட்டுமே. அதில் சில சதவீத ஆசிரியர்கள் வாசிப்புடன் அடுத்தகட்ட நகர்வுக்கு அதாவது எழுத்தாளர் என்கிற படிகட்டிற்கும் காலை வைத்துவிடுகின்றனர். அப்படித்தான் ஆசிரியர் உதயலட்சுமி அவர்களும் தனது இந்நூலின் மூலம் எழுத்தாளர் என்கிற நகர்வுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
நாட்குறிப்பில் பல பயன்விளைவுகளாகவும், பல எதிர்பார்ப்புகளாகவும் முடித்திருப்பார். அவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா என்பதை அவர் தனது அடுத்த நூலில் வழங்குவார் என எதிர்பார்ப்போம்.
அவருடைய இந்நூலை வாசித்ததன் மூலம் “கடந்த 26 ஆண்டுகளாக நாமும் நாட்குறிப்பு எழுதியிருக்கலாமே ஏன் விட்டுவிட்டோம்?” என்கிற எண்ணத்தை என்னுள் எழுப்பி விட்டார்.
ஆசிரியர்களை எழுதத் தூண்டிய தோழர்  உதயலட்சுமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நூலை வாங்கவேண்டுமென்று காத்திருந்த வேலையில் தோழரே என் முகவரிக்கு அனுப்பி வைத்தார். தோழருக்கு மனமார்ந்த நன்றி!
நூலின் உள்ளடக்கத்தை வாசித்தறிய வேண்டுகிறேன்!
நாமும் நாட்குறிப்பு எழுதத் தொடங்குவோம் ஆசிரியர் பெருமக்களே!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்
தோழர்களே!!