ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கருணையைப் பிடிங்கிக் கொண்ட வேக யுகத்தில் நிதானத்தை உடைத்துவிட்ட குரூர நகர்வில் பரிதவிப்பைப் புறந்தள்ளிய அவசர ஓட்டத்தில் நீளும் கரத்தை ரணமாக்க தட்டிவிடும் விசாரணையில் அன்பின் அழுகையை நிராகரிக்கும் பணி இலக்குகளில் உனக்கென்ன வந்ததெனும் குடும்ப நச்சரிப்பில் வேறென்ன செய்வது வேடிக்கை…