எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் | Vishnupuram Saravanan | Kayiru | கயிறு

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் “கயிறு” இளையோர் சிறுகதை நூல் அறிமுகம்

எழுத்தாளர் நக்கீரன் சொல்வதைப் போல் "மிகச் சிறிய கதை ஆனால் மிகப்பெரிய சமூக நோயான சாதிய சிக்கலை பேசுவது இதன் சிறப்பு." எங்க ஏரியா பக்கமெல்லாம் கையில் அல்ல இடுப்பில்தான் கயிறு கட்டுவார்கள் (அரைஞாண் கயிறு). எதற்காக எனில் அதுவும் ஒரு…
Vasikkatha Puthakathin Vasani (வாசிக்காத புத்தகத்தின் வாசனை)

கொ.மா.கோ. இளங்கோ எழுதிய “வாசிக்காத புத்தகத்தின் வாசனை” நூல் அறிமுகம்

மரங்கள் வெட்டிக் கடத்துதல் என்பது எங்கும் காணும் செய்தியாகவே இருந்து வருகிறது பல பெரும்புள்ளிகளின் துணையோடு. ஆனால் அப்படி காட்டை அழித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் கடத்தல் கும்பல்களிடையே புத்தகத்தின் வாசனையை முகர்ந்த ஒரு குழந்தையின் கதைதான் இந்நூல். ஆம் ஆப்பிரிக்க மண்ணில்…
Sultanavin Kanavu book review written by shanmuga samy

ரொக்கேயோ பேகமின் “சுல்தானாவின் கனவு”

  இந்தியாவின் முதல் பெண்ணிய அறிவியல் புனைக்கதை நூல் என்றும் ஆசியாவிலேயே இதுதான் முதல் படைப்பு என்ற கருத்தும் கொண்ட நூல் தான் இது. 1905ல் இந்தியன் லேடீஸ் மேகசின் என்னும் இதழில் வந்த கதை தான் இது. அப்பவே மேகத்திலிருந்து…
நாங்கள் வாயாடிகளே : நூல் அறிமுகம் -இரா.சண்முகசாமி 

நாங்கள் வாயாடிகளே : நூல் அறிமுகம் -இரா.சண்முகசாமி 



‘நாங்கள் வாயாடிகளே’

ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில்  மார்ச் 2023ல் ஆசிரியர் சாந்த சீலா அவர்கள் எழுதி வெளியான சிறப்பான புத்தகம் தான் ‘நாங்கள் வாயாடிகளே’.

04.04.2023 பாரதி புத்தகாலயம் ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டில் அவரை சந்தித்தபோது இப்புத்தகத்தை அளித்தார்கள். இந்நூலை ஏற்கனவே அவர் முகநூலில் பதிவிட்ட போதே “வாயாடிகளை வாசித்து அடங்கி விடுகிறேன்” என்றுதான் பதிவிட்டிருந்தேன். தற்போது அக்கட்டுரை உட்பட ஏழு கட்டுரைகள் வாசித்துவிட்டேன். இன்னும் 17 கட்டுரைகள் வாசிக்க வேண்டும். வாசித்த வரை அனைத்து கட்டுரைகளும் சமூகத்தில் நிறைய பீடித்துள்ள கட்டுகளை உடைத்துத் தள்ளியுள்ளது. அதுவும் ‘வாயாடிகளே’ கட்டுரையில் பெண்கள் ஏன் அதிகம் பேசினர் அதற்கான வரலாறு என்ன என்பனவற்றிற்கு மிகச்சிறப்பாக அறிவியல் விளக்கம் கொடுத்திருப்பார்கள். வேட்டைச் சமூகத்தில் தான் மொழி தோன்றியது. அப்போது முதல் குழந்தைக்கு பேசக் கற்றுகொடுத்தவள் தாய். விலங்குகள் வாழும் உலகில் பேசுவதற்கான மொழி ஏன் தேவைப்பட்டது என்பது இப்போது நமக்கு புரிகிறது.

பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் பலவற்றிற்கு உடைப்பு வேலை கொடுத்திருப்பார். வாயாடிகளை வாசித்தால், வாயாடாமல் விட்டிருந்தால் ஒருவேளை நாமெல்லாம் இந்தக் காலத்திலும் பேசமுடியாமல் தான் இருந்திருப்போமோ என்கிற சந்தேகம் இயல்பாக எழுந்தது.

அதேபோல் பெண்களின் ஆடையில் பாக்கெட் வைக்காதது, உணவில் சமத்துவம், ‘பொட்டை’ என்கிற வார்த்தையின் பின் உள்ள உளவியல் சிக்கல் குறித்த கட்டுரை, சிறுநீர் கழிக்காததன் விளைவு, பொண்ணு கறுப்பா இருந்தா எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கும் இந்த சமூகத்தில் பொதுப்புத்தியாய், கல்வியில் சமமான வகுப்பறை இருக்கா என்கிற கேள்வி’ இப்படி படித்த வரைக்குமான கட்டுரைகளே நிறைய உள்ளத்தைக் கிளறுகிறது. தோழரின் ஆசிரிய வாழ்க்கை அவருக்கு நிறைய கிடைத்த அனுபவமாக இந்நூலை நான் கருதுகிறேன். எழுத்து நடையும் மிக இயல்பாக இருக்கு. அவர் தொடர்ந்து மென்மேலும் கல்வி குறித்த சிக்கல்களை எழுதவேண்டும் என்று அவரை அன்புடன் வாழ்த்துகிறேன். வெகுசிறப்பு!
மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர்!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்

இரா.சண்முகசாமி

புதுச்சேரி.