1 ஒரு வாய் சோறு இருந்தா கொடு சாமி யென்கிற யாரோ ஒரு அம்மாவின் அழுகைக் குரல் போதும் போதும் என்று நான் தலையசைத்த போதும் இன்னும் கொஞ்சம் தான் சாமி சாப்பிடு என்று வாய் துருத்திய என் அம்மாவின் குரல்…
1 கடன் அதிகாரம் ------------------------------- கை நீட்டி வாங்கிவிட்டான். வீட்டிற்குள் கால் நீட்டிப் படுத்திருக்கிறது பார்ப்பவர்கள் அதிகம்பேர். ****** துக்க வீட்டிற்கு வந்தவன் செத்துச் செத்துப் பிழைக்கிறான். கடன்காரன் தலை மறைகிற வரை. ****** அவசரத்திற்குத் தந்து உதவியவன். பிறகு கேட்கவேயில்லை.…
ஏனெனில் யாரேனும் என் கவிதைகளை வேறு ஒருவர் பெயரிலாவது அவளிடம் கடத்தி விடுங்கள். ஏனெனில், நாம் யாருக்காக எழுதுகிறோமோ அவர்கள் மட்டும் அதை வாசிப்பதே இல்லை... சாவி அதி தீவிரமாக காதலுக்குள் நுழையும் எந்த ஆணும் அக்கதவின் சாவியினை பத்திரப்படுத்திக்…
ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் **** இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ ****அம்மாவின் சேலைக்குள் மழலை மேகங்களுக்குள் நிலவு ****சிறகுகளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டது பறவை வானத்தை **** பூஜையறையில் நாடாவாக…
1. ஏறும் விலைவாசி நடிகரின் ஆளுயர படத்துக்கு, பால் அபிஷேகம். 2. கடற்கரை சாமானியர்களின், கட்டணமில்லா பொழுதுபோக்கு. 3. தேர்தல் விடுமுறை குளிர் பிரதேசங்களுக்கு, மக்கள் கூட்டம் படையெடுப்பு. எழுதியவர் ஆ.சார்லஸ். இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள…
நீயே என் வாழ்வு நிலைகுலைந்து போகும் என அறியவில்லை ! நீயே என் உலகம் நிலநடுக்கம் எப்போது தெரியவில்லை ! நீயே என் கனவு விழி உறக்கம் போகும் என நினைக்கவில்லை ! நீயே என் இன்பம் பருகுவது நஞ்சென்னும் நினைப்புமில்லை…
1 கிடைத்தகாசுக்கெல்லாம் புத்தகப் பண்டல் வாங்கி அத்தனை அழகாய் அடுக்கி பூரித்துப் போய் புன்னகைக்கிறான் பாரதி. பக்கத்துவீட்டில் கைப்பிடிஅரிசி கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாள் செல்லம்மா. 2 கடுஞ்சண்டை. பெரும்வாக்குவாதம். மனம்வெதும்பி புத்தனைப்போல் இல்லறத்திலிருந்து விடுதலையடைய எண்ணி அவனைப் போலவே நடு இரவில் வீடு துறந்து…