Tag: கவிதை
கவிதை: கவியரங்கில் தமிழன்பன் – நா.வே.அருள்
Bookday -
ஒரு காட்டுத் தாவரம்
தனித்து நடந்து வருவதுபோல்
தமிழன்பன்.
கட்டெறும்புபோல் நிறம்!
கவிதைகளில்
சேவலின் கொண்டைபோல்
சிவப்பு.
தங்கத் தகடு நாக்கானது போல்
தமிழன்பன் உச்சரிப்பு…
கவிதை வாசிப்பு
செவிக்குச் செவிப்பறை
மூளைக்கு முத்தம்.
கைத்தட்டியவர்களுக்கெல்லாம்
கட்டாயம் ஞாபகம் வரும்….
ஒரு காலத்தில்
கவியரங்கக் காட்டில்
ஒரு சிங்கம்
ஒரு புலி
ஒரு யானை போல
ஒரு அப்துல் ரகுமான்
ஒரு...
கவிதை: நம்பிக்கையின் ஈரம் – ஐ.தர்மசிங்
Bookday -
ஜன்னல்களின்
கண்ணாடிக் கதவுகள்
அவசரகதியில் கீழிறங்கின
வாசலருகில் நின்றவர்கள்
நடுப்பக்கத்தில்
பதுங்கத் தொடங்கினர்
அமர்ந்திருந்தவர்கள்
முன்னும் பின்னும்
இடமும் வலமுமாக
இடம் பெயர்ந்தனர்
அடித்துப் பிடித்து
இடத்தை ஆக்கிரமித்த பலர்
இருக்கையை விட்டுக் கொடுத்தனர்
சில தலைகளுக்கு
கவசமானது
கைக்குட்டை
சில குழந்தைகளை
மூடி மறைத்தது
முந்தானை
அலைபேசிகள்
கைப்பைகளிலும்
கைக்கடிகாரங்கள் சட்டைப்பைகளிலும்
தஞ்சம் அடைந்தன
எதையும் கண்டு கொள்ளாமல்
நகரப் பேருந்தின்
இரகசிய துவாரங்களில் நுழைந்து
எட்டப்பன் பணியை
சிறப்பாக...
கவிதை: நெஞ்சப் பட்டறையில்… – ஜலீலா முஸம்மில்
Bookday -
மிகவும்
பாதுகாப்பாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
நெஞ்சப்பட்டறையில்
சந்தர்ப்பங்கள்
அமையாது போகலாம்
அதைப் பயன்படுத்த
காற்றின் அலைகளில்
மூழ்கிக் கரைந்து போகலாம்
மூச்சுக்காற்றின்
அனலில் மறைந்து போகலாம்
முகவரி தெரியாமல்
அண்டவெளி எங்கும்
அலைந்து திரியலாம்
முட்டி முட்டி
மௌனமாக மேடை தேடி
ஓடிக்கொண்டிருக்கலாம்
கட்டவிழ்த்த சுதந்திரம் கேட்டுக்
கானகங்களில் கண்ணீர்
விட்டு விசும்பலாம்
ஆனால்...
நேசச்சுழலில்
சிக்கிய சில
கவிதைகளில் அது
நிச்சயம்
தஞ்சமடையும்
நேசத்தின் அச்செழுதும்
சில இதழ்களில்
நிச்சயம்
பவ்வியமாக உட்கார்ந்து...
கவிதை: அறுசுவை – பாங்கைத் தமிழன்
Bookday -
இனிப்பு மட்டுமல்ல...
காரமும் உண்டு!
கசப்பு மட்டுமல்ல
துவர்ப்பும் உண்டு!
புளிப்பு மட்டுமல்ல
உவர்ப்பும் உண்டு!
என்றாலும்....
கேட்கக் கேட்க...
படிக்கப் படிக்க...
திகட்டாத தீஞ்சுவை!
ஒன்பான் சுவைகளும்
உண்டு!
அவைகளை
ஒப்புமைப் படுத்த இயலாது
இங்கு!
ஆனால்...
ஒரு சுவையை மட்டும்
ஒதுக்கவே முடியாது
அது
பெருமிதச்சுவை!
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் நிறைந்தப்
பெருமிதம்!
யார் புகட்டுவரோ
இப்பெரும் சுவையை
எதிர்கால
இந்நாட்டுப் பிள்ளைகட்கு!
பெருந்தலைவ
நின் சுவையை!
கவிதை: ஒப்பாரி – ச.சக்தி
Bookday -
ஏவ் எப்போதும் போல
இன்னிக்கும்
நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா
ஆமாம் டி இன்னிக்கும்
நா குடிச்சிட்டு
தான் வந்திருக்கேன்
யாயா
படுபாவி இப்படி
தெனமும் குடிச்சிட்டு
வந்தேனா
உடம்புக்கு என்னையா ஆகுரது
நீ பட்டுனு
நாக்கு வறண்டு
செத்து தொலைஞ்சிட்டனா
எங்களுக்குனு
யாருயா இருக்கிறாங்க...?
வானம்
கூரையின்
வாசலை
பார்த்துக்கொண்டிருக்க
குடித்து குடித்து
குடல் சுருங்கி
செத்து போன
அப்பாவின் கண்கள்
எண்ணிலடங்கா
நட்சத்திரங்களை
என்னிக்கொண்டியிருந்தது
...."அய்யோ பாவி
மனுஷா...
கவிதை: துளி கவிதை – கவிஞர். ச.சக்தி
Bookday -
நானொரு பறவை
நீங்கள்
எவ்வளவு தூரம்
வேண்டுமானாலும்
என்னை தூக்கியெறியுங்கள்
நான் காற்றோடு காற்றாகவே
பறந்து வருவேன்
உங்கள் கிளைகளை
பற்றிக்கொண்டு
சிறிது நேரம் இளைப்பாற...
ஒரு செடியை
பார்க்கிற பொழுது
என் பார்வைகள்
அங்கு ஆயிரம்
ஆயிரம் பூக்களாகவே
பூக்க ஆரம்பிக்கின்றன
அதில் ஒரு
வண்ணத்துப்பூச்சியாகவே
வந்து அமர்கிறது
சில கனவுகள்...
சக்தி கவிதை
Bookday -
நீயே நேசி....!!!
உன்னை நம்பித்தான்
கண்களை மூடிக்கொண்டு
காற்றில் நடந்தேன்
அடுத்த கட்டம்
பற்றி நீ பேசியவைகள்
காதுகளில்
இதமாக இன்னமும்.
அவ்வளவு தான்
நான் இப்போதும் பார்க்கிறேன்
என் கண்களால்
ஆனாலும்
என் விழியில் பார்வையில்லை
அடுத்த கட்டமும் இல்லை
ஆனாலும்
உன்மேல் கோபப்படவில்லை
உன்னை
இன்னமும் நேசிக்கிறேன்
உன்னை நம்பியதும்
நேசித்ததும்
நான் தானே
நீ சொல்லியவைகளை நீயே
மறந்து போனாய்
நான்...
தங்கேஸ் கவிதை
Bookday -
தேசம்
பிறவிக்குள்ளேயே சாதியைப் புதைத்து வைத்திருக்கும்
ஒரு தேசத்தைக் கொண்டாட
எந்த முகாந்திரமுமில்லை
இந்த மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தைகளும்
உங்கள் கடவுள்களை
மன்னித்துக் கொண்டேதானிருக்கின்றனர்
இந்த நாட்டில் தான்
வெட்ட வெட்ட
ரயில் தண்டவாளங்களில்
தலைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
அரிவாள்களின் தீராப் பசிக்கு
அட்சய பாத்திரங்கள்
சோற்றுப் பருக்கைகளாக
உயிர்களை தந்த வண்ணமே...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...