தங்கேஸ் கவிதை thangesh kavithai

தங்கேஸ் கவிதை

இதயங்கள்... இருளின் முலைக்காம்பை சப்பியபடி விழித்துக் கொண்டிருக்கும்  ஒற்றை நிலவை  பார்க்கச் சகிக்கவில்லை எட்டினால் அப்படியே கையோடு அழைத்துக் கொண்டு வந்துவிடலாம் மடியில் அமர்த்திக்கொள்ள  இங்கே இப்படி  இருளில்  கைவிடப்பட்ட  எத்தனை எத்தனை இதயங்கள் பரிதவித்துக் கொண்டு  இருக்கின்றனவோ யார் கண்டது?…