Anand Prabhu Poems | கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கடன்காரனைக்கண்டு பெட்டிக்கடையின் பின்னால் பதுங்குகிறது பீடிபுகைத்துக்கொண்டிருந்த திருவிழா புலியொன்று. ******* சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு டாஸ்மாக்கில் பாய்கிறார் சற்றுமுன்வரை அனுமனாய் அருள்பாலித்தவர். ******** மேலாளரின் எந்தக்கேள்விக்கும் பதிலில்லாதவர் சப்பென அறைகிறார் கேள்விகேட்ட மனைவியை. ********** சமையலயறையின் அடுக்குகளின்கீழே ஒளிந்துகிடப்பவரை முதல்தகவலறிக்கை இல்லாமலே கைதுசெய்து…
Anand Prabhu Poems | கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 கிடைத்தகாசுக்கெல்லாம் புத்தகப் பண்டல் வாங்கி அத்தனை அழகாய் அடுக்கி பூரித்துப் போய் புன்னகைக்கிறான் பாரதி. பக்கத்துவீட்டில் கைப்பிடிஅரிசி கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாள் செல்லம்மா. 2 கடுஞ்சண்டை. பெரும்வாக்குவாதம். மனம்வெதும்பி புத்தனைப்போல் இல்லறத்திலிருந்து விடுதலையடைய எண்ணி அவனைப் போலவே நடு இரவில் வீடு துறந்து…
Poem - Anand Prabhu |கவிதை

கௌ.ஆனந்தபிரபு கவிதைகள்

1 வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை சாமிவந்து தெருவுக்கே குறிசொல்லும் அவளிடம் எந்தச்சாமியும் சொல்லவில்லை குடித்துவிட்டு அடிக்கிற கணவனை திருத்துகிற வழியை.. 2 யாரென தெரியவில்லை. இரத்தச் சகதியில் கிடக்கிறான். சட்டையின் வண்ணம்கண்டு சட்டென அதிர்ந்துபோய் கூட்டம் விலக்கி முகம்பார்த்து நிம்மதியடைகிறேன். இருப்பினும்…