ச.சக்தியின் கவிதைகள்

ச.சக்தியின் கவிதைகள்

1 ஒரு வாய் சோறு இருந்தா கொடு சாமி யென்கிற யாரோ ஒரு அம்மாவின் அழுகைக் குரல் போதும் போதும் என்று நான் தலையசைத்த போதும் இன்னும் கொஞ்சம் தான் சாமி சாப்பிடு என்று வாய் துருத்திய என் அம்மாவின் குரல்…
Father -Poem | அப்பா - கவிதை

ச.சக்தி கவிதைகள்

வரைதல்  யானையையும் காட்டையும் ஒருசேர  வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே  நிற்கிறது காட்டையும் தன் தாயையும் ‌ இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…
ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

        அதிகமில்லாத மழை உழவுக்கு ஏற்றாற் போல் மாலைநேர மிதமான மழை கலப்பையை வயலில் இறக்கினார் தாத்தா வரிசை வரிசையாக ஊர்ந்து உழுகும் செதிலைமாடுகள் நொங்கு பூத்திருக்கும் பனை மரத்தின் நிழலில் இளைப்பாறுகிறன்றன பச்சைமிளகாயும் பொன்னியரிசி கஞ்சியுமிருக்கும்…
கவிதை: கல்வி –  ச.சக்தி

கவிதை: கல்வி – ச.சக்தி

      ஆண்டு ஆண்டுகாலமாய் செருப்பு தைப்பதே வேலையாக கொண்டிருக்கும் அந்த தாத்தாவிடம் எப்படி கூறுவேன் உன் பேரனின் காலுக்கு பூட்ஸ் வந்து இரண்டு நாள் ஆகிவிட்டதென்று, கவிஞர் ச.சக்தி அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி
ச.சக்தி கவிதைகள்

ச.சக்தி கவிதைகள்

    1.பறை மாடறுக்கும் மாடசாமியிடம் கடனாகக் கேட்டு வாங்கிய மாட்டு ஜவ்வை பண்ணையார் வீட்டில் கொடுத்த கொட்டாங்காச்சியில் மூடி இறுக்கி வெட்ட வெயிலில் காய வைத்து கொதித்து நெருப்பென காயும் சூரியனிடம் முகம் காட்டி வெம்மையேறிய அப்பறையை ஊரெங்கும் அடித்து…
கவிதை: கொடி – ச.சக்தி

கவிதை: கொடி – ச.சக்தி

      நீங்கள் எங்களின் கூடாரத்தின் வழியாக தேசியக்கொடியை ஏந்திச்செல்லும் பொழுதெல்லாம் கிழிந்து போன எங்களது அப்பாவின் சட்டை தேசியக்கொடியை விட மிக வேகமாகப் பறக்கிறது .... உடுத்த உறங்க படிக்க உரிமையில்லாத இவ்வூரில் எங்களுக்கு எங்களின் மேலாடையே ஒரு…
kulam poetry written by sakthi கவிதை: குளம் -  ச.சக்தி

கவிதை: குளம் –  ச.சக்தி

கூடடையும் மீன்கொத்தி குஞ்சுகளின் அலகில் நெளியும் மீனின் ‌உயிர் வற்றிய குளம் வேடிக்கை பார்க்கும் பறவையின் கண்களில்  கானல் நீர் , மண் சுவரில் குழந்தை வரைந்த குளம் நீர் முகர்ந்து மேலேறும் நத்தை புதர் மண்டிய குளம் வீடு திரும்பும்…
கவிதை : ச.சக்தி kavithai : sa.sakthi

கவிதை : ச.சக்தி



சைக்கிள் ….!

அப்பா
ஆசையாக
வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
பழுதாகி பழைய
இரும்புக் கடையில்
ஒரு மூளையில் கிடக்கிறது

அந்த
சைக்கிளில் தான்
பள்ளிக்கு சென்று வந்தேன்,
அம்மாவுக்காக
மளிகை கடைக்கு
போயிட்டு வந்தேன்,
அக்காவுக்காக
டைலர் கடைக்கு போயிட்டு வந்தேன்,
அண்ணனுக்காக
டிபன் கடைக்கு போயிட்டு‌ வந்தேன்,
என் காதலிக்காக
களத்துமேட்டுக்கு போயிட்டு ‌ வந்தேன்,

எல்லா இடத்திற்கும்
போயிட்டு வந்த
அப்பா வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
போகாத
இடத்திற்கு போய்விட்டது
பழுதடைந்த
பழைய சைக்கிளாய் ……!!!!

கவிஞர் ச.சக்தி
பண்ருட்டி.