ஓவியம் வரையும் தூரத்து நிலா : ஹைக்கூ நூல் அறிமுகம் -கவிஞர். தனபால்

ஓவியம் வரையும் தூரத்து நிலா : ஹைக்கூ நூல் அறிமுகம் -கவிஞர். தனபால்



கவிஞர் கவிதா பிருத்வி அவர்களின்
“ஓவியம் வரையும்
தூரத்து நிலா ” ஹைக்கூ நூல் கிடைக்கப்பெற்றேன். தமுஎகச-அறம் கிளையுடன் இணைந்து அகநி வெளியீடாக வெளிவந்துள்ளது.
அழகிய ஓவியத்தோடு அட்டைப்படம் மிக அருமையாக உள்ளது. 64 பக்கங்களில் மிக அருமையான ஹைக்கூ நூல்.
செம்பருத்தி பூத்திருக்கிறது/
தேன்சிட்டைக் காணவில்லை/
அடை மழை
என்ற மிக மென்மையான அழகிய ஹைக்கூவைப் படைத்திருக்கிறார். இப்படி ஹைக்கூவை படிக்கும்போதே நமக்குள் செம்பருத்தி யையும் தேன்சிட்டையும் அடை மழைத் தூறல்களையும் அதன் குளிரையும் நமக்குள் கொண்டு வருவதே சிறப்பானது.  நாம் படிக்கும் போது கோடைகாலமானாலும் நம்மை அடைமழை காலத்திற்குக் கொண்டு செல்லும் இது போன்ற ஹைக்கூக்கள் வரவேற்கத்தக்கது.
அடிவானம் கருக்கையில்/ கருவண்ணம் பூசிக் கொண்டன/
தூரத்து மரங்கள்
தேங்கிய நீரில்/
நிலவின் நடனம்/
மழை விட்ட இரவு
இது போன்ற அழகிய காட்சிகளை ஹைக்கூவாக புத்தகம் எங்கும் பதிவு செய்திருக்கிறார்.
கூடடைய விரையும்/ பறவைக் கூட்டம்/ தொடரும் மழையோசை
காட்சிகளோடு மழையின் ஓசையையும் மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். பலரும் காட்சிகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் போது இப்படி ஓசையை வித்தியாசமாகக் கூறியிருப்பது மிகச் சிறப்பானது. ஹைக்கூவின் நுட்பங்களை உணர்ந்தவர்கள் மட்டுமே இது போன்ற காட்சிகளையும் ஓசைகளையும் பதிவு செய்கிறார்கள். அந்த வகையில் கவிஞர் இதை சிறப்பாக இந்த ஹைக்கூவில் செய்திருக்கிறார்.
  நூலில் ஆங்காங்கே மிக அருமையான ஹைக்கூகளைப் படைத்திருக்கிறார்.  ஆனாலும் சென்ரியுவும் அங்கங்கே கலந்தே இருக்கின்றன. பல ஹைக்கூக்களிலும்  மூன்று வரிகளை இரண்டு இரண்டு சொற்களாக
அமைத்திருப்பதை, நடு வரி கொஞ்சம் நீளமாக உள்ளவாறு மாற்றி அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
  கவிஞர் கவிதா பிருத்வி அவர்கள் நல்ல முயற்சி எடுத்து எழுதி புத்தகமாகப் வந்திருப்பது பாராட்டுகளுக்குரியது.  இன்னும் சிறப்பாக உணர்ந்து மேன்மேலும் மிக அருமையான ஹைக்கூக்களையும், ஹைக்கூ நூல்களையும் படைத்திட நெஞ்சம் நிறைந்த  வாழ்த்துகள்!
குறிப்பு: ஹைக்கூ படைப்பாளர்கள் மற்றும் ஹைக்கூ ரசிகர்கள் இது போன்ற நூல்களை வாங்கி ஆதரித்து ஹைக்கூ வளர ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
கவிஞர். தனபால்
முசிறி.
நாங்கள் வாயாடிகளே : நூல் அறிமுகம் -இரா.சண்முகசாமி 

நாங்கள் வாயாடிகளே : நூல் அறிமுகம் -இரா.சண்முகசாமி 



‘நாங்கள் வாயாடிகளே’

ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில்  மார்ச் 2023ல் ஆசிரியர் சாந்த சீலா அவர்கள் எழுதி வெளியான சிறப்பான புத்தகம் தான் ‘நாங்கள் வாயாடிகளே’.

04.04.2023 பாரதி புத்தகாலயம் ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டில் அவரை சந்தித்தபோது இப்புத்தகத்தை அளித்தார்கள். இந்நூலை ஏற்கனவே அவர் முகநூலில் பதிவிட்ட போதே “வாயாடிகளை வாசித்து அடங்கி விடுகிறேன்” என்றுதான் பதிவிட்டிருந்தேன். தற்போது அக்கட்டுரை உட்பட ஏழு கட்டுரைகள் வாசித்துவிட்டேன். இன்னும் 17 கட்டுரைகள் வாசிக்க வேண்டும். வாசித்த வரை அனைத்து கட்டுரைகளும் சமூகத்தில் நிறைய பீடித்துள்ள கட்டுகளை உடைத்துத் தள்ளியுள்ளது. அதுவும் ‘வாயாடிகளே’ கட்டுரையில் பெண்கள் ஏன் அதிகம் பேசினர் அதற்கான வரலாறு என்ன என்பனவற்றிற்கு மிகச்சிறப்பாக அறிவியல் விளக்கம் கொடுத்திருப்பார்கள். வேட்டைச் சமூகத்தில் தான் மொழி தோன்றியது. அப்போது முதல் குழந்தைக்கு பேசக் கற்றுகொடுத்தவள் தாய். விலங்குகள் வாழும் உலகில் பேசுவதற்கான மொழி ஏன் தேவைப்பட்டது என்பது இப்போது நமக்கு புரிகிறது.

பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் பலவற்றிற்கு உடைப்பு வேலை கொடுத்திருப்பார். வாயாடிகளை வாசித்தால், வாயாடாமல் விட்டிருந்தால் ஒருவேளை நாமெல்லாம் இந்தக் காலத்திலும் பேசமுடியாமல் தான் இருந்திருப்போமோ என்கிற சந்தேகம் இயல்பாக எழுந்தது.

அதேபோல் பெண்களின் ஆடையில் பாக்கெட் வைக்காதது, உணவில் சமத்துவம், ‘பொட்டை’ என்கிற வார்த்தையின் பின் உள்ள உளவியல் சிக்கல் குறித்த கட்டுரை, சிறுநீர் கழிக்காததன் விளைவு, பொண்ணு கறுப்பா இருந்தா எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கும் இந்த சமூகத்தில் பொதுப்புத்தியாய், கல்வியில் சமமான வகுப்பறை இருக்கா என்கிற கேள்வி’ இப்படி படித்த வரைக்குமான கட்டுரைகளே நிறைய உள்ளத்தைக் கிளறுகிறது. தோழரின் ஆசிரிய வாழ்க்கை அவருக்கு நிறைய கிடைத்த அனுபவமாக இந்நூலை நான் கருதுகிறேன். எழுத்து நடையும் மிக இயல்பாக இருக்கு. அவர் தொடர்ந்து மென்மேலும் கல்வி குறித்த சிக்கல்களை எழுதவேண்டும் என்று அவரை அன்புடன் வாழ்த்துகிறேன். வெகுசிறப்பு!
மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர்!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்

இரா.சண்முகசாமி

புதுச்சேரி.

நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – உஷாதீபன்

நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – உஷாதீபன்

இத்தொகுதியின்  முதல் கதையில் நாம் கவனிக்க வேண்டியது இதன் தலைப்புதான். குருகும் உண்டு மணந்த ஞான்றே…. இது குறுந்தொகையின் 25-வது பாடலின் கடைசி வரி. யாருமறியாமல் நான் தலைவனோடு கூடிய காலையில் அங்கே ஓடிக் கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையும்,…