அம்பானி அதானி ராஜ்யங்களிலே உய்யலாலா கட்டுரை – இரமணன்

அம்பானி அதானி ராஜ்யங்களிலே உய்யலாலா கட்டுரை – இரமணன்




மோடிஜி! மோடிஜி! என்று அரசியல் அரங்கில் குரல்கள்

கூச்சலிட்டுக்கொண்டிருக்கும்போது கார்ப்பரேட் அரங்கில் 5ஜி! 5ஜி! என்று குரல்கள் கேட்கின்றன. இதுவரை நிலக்கரி, மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என்றிருந்த அதானியின் சாம்ராஜ்ஜியம் தொலைதொடர்புக்குள் நுழையப்போகிறது. தொலைதொடர்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, நுக ர்வோர் துறை என்றிருக்கற அம்பானியின் சாம்ராஜ்ஜியத்திற்கும் அதானியின் சாம்ராஜ்ஜியத்திற்கும் பயங்கர மோதல் நிகழப் போகிறதா என்று ஒரு கட்டுரை கேட்கிறது.கேவலம் வெறும் 2டாலர்களுக்கா அதானி மிகப் பெரும் தொகையை ஒதுக்குவார் என்றும் கேட்கிறார்கள்.அதென்ன 2 டாலர் என்று தெரிந்துகொள்ளு முன் 5ஜி பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

5ஜி என்றால் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் என்று புரிந்துகொள்ளலாம். 4ஜி எல்லா இடங்களுக்கும் இணைப்பு கொடுப்பது குறித்து கவனம் செலுத்தும்போது 5ஜியானது அதை கிளவுட் தொழில்நுட்பம் மூலம் செய்கிறது. அதிக வேகம், செல்லுலார் முறையிலிருந்து வைஃபை முறைக்கு எளிதாக மாறுதல் போன்றவை இதில் அடங்கியுள்ளன.

அதிக வேகம் பயனாளர்களுக்கு நல்லதுதானே என்று கேட்டால் நம்மைப் போன்ற சாதாரண பயனாளர்களுக்கு 5ஜி யில் கிடைக்கும் வேகம் தேவையில்லை. சில எடுத்துக்காட்டுகள் மூலம் நமக்கு தேவையான இணைய வேகங்களைப் பார்க்கலாம்.

1.நெட் பிளிக்ஸ், டிஸ்னி, அமேசான் பிரைம் போன்ற தளங்களை பார்ப்பதற்கு 2 முதல் 6Mbps. நேரடி ஒளிபரப்பு என்றால் 8Mbps.

2.சூம், மைக்ரோசாப்ட் டீம், கூகுள் மீட் போன்ற காணொளி கூட்டங்களுக்கு 1-3Mbps.

3.நமது பிராதன கவலையான வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்புகளுக்கு 0,1-0,25Mbps

இந்தியாவில் 4ஜி சேவை வேகம் சராசரியாக 14Mbps. (நாம் இதில் உலக நாடுகள் தர வரிசையில் 115ஆவது இடத்தில் இருக்கிறோம் என்பது வேறு விஷயம்). ஆகவே நமது இப்போதைய தேவைகளுக்கு 4ஜி சேவை வேகம் போதுமானது. இதைவிட 10 மடங்கு வேகமான 5ஜி சாதாரண மக்களுக்கு எதற்கு?

இங்குதான் 5ஜியானது பிரச்சனைகளை தேடும் தீர்வு என்று சொல்லப்படுகிறது. முதலாளித்துவம் மக்களிடையே தேவைகளை உண்டாக்கி தனது லாபகரமான பண்டங்களை விற்கும். அது மக்களின் இயல்பான தேவைகளை நிறைவேற்றுவதில் இலாபம் இல்லையென்றால் அதில் இறங்காது. அதைத்தான் கொரோனா காலத்தில் மருத்துவ மனைகள் மூடிக்கிடந்ததையும் தடுப்பு ஊசி தயாரிப்பில் போட்டி போட்டுக்கொண்டு இறங்கியதையும் பார்த்தோம்.

5ஜி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறாது என்பதற்கு இன்னும் சில காரணங்கள் உண்டு. ஒன்று அதன் கட்டணம் அதிகமாக இருக்கும். முதலில் சொன்ன 2 டாலர் விவகாரம் இதைத்தான் பேசுகிறது.. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நுகர்வோரிடமிருந்து மாதம் ஒன்றிற்கு பெறும் வருவாய் 2 டாலர்கள்தானாம். அதை ரூபாயில் பார்த்தால் மன்மோகன் காலம் என்றால் ரூ 130-140 என்று இருந்திருக்கும். நமது மோடிஜி காலம் என்றால் 140-160 ஆக இருக்கும். இன்னும் ரூபாய் சதம் அடிக்கும் என்கிறார்கள். அப்படியானால் தொலை தொடர்பு நிறுவனங்களின் வருமானம் மாதம் ஒன்றிற்கு ரூ 200/. மிக சொற்பமாக தெரிந்தாலும் இந்திய நுகர்வாளர்களின் எண்ணிக்கை 100கோடி என்பதையும் பார்க்க வேண்டும்.. தேவையான வேகம் 4ஜியிலேயே கிடைக்கும்போது அதிக கட்டணம் செலுத்தி சாதாரண மக்கள் 5ஜிக்கு மாற மாட்டார்கள். மேலும் அதற்கான கைபேசிகள் சராசரியாக ரூ 30000/ வரை இருக்கும். ஆக 5ஜி இணைப்புகள் பொதுமக்களுக்கு இப்போதைக்கு பயன்படாது. அது நிறுவனங்களின் தேவைகளுக்கே பொருத்தமானது. அப்படியானால் ஏன் அதானி அம்பானியுடன் போட்டி போடுகிறார்?

அவரது நிறுவனங்களுக்குத் தேவையான 5ஜி அலைக்கற்றையை அவர் பிரத்தியேக உபயோக ( captive private network) திட்டத்தின் கீழ் மிக மலிவாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் தனது பயன்பாட்டிற்கு மட்டும் என்றால் வெறும் ரூ 50000 / மட்டும் செலுத்தி 10 வருடங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வளவு சலுகை கட்டணம் பாருங்கள்! உரிமக் கட்டணமும் கிடையாதாம்; அலைக்கற்றைக் கட்டணமும் கிடையாதாம். இந்தக் கட்டணம் ஒரு வருடத்திற்கு ரூ 5000/ என்று ஆகிறது.சாதாரண பொது மக்களே இதைவிட அதிகம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

வணிக பயன்பாட்டிற்கு வேண்டுமென்றால் ஏலத்தில் பங்கு பெற்று அங்கு நிர்ணியிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில்தான் அதானி நுழைகிறார். அவரது நிறுவனமே பெரும் கடன் தொகையை சர்வீஸ் செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த நிலைமையில் இலாபமில்லாத ஒரு முதலீட்டில் பெரும் தொகையை அவர் ஏன் முடக்குகிறார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அம்பானியின் எடுத்துக்காட்டையே கூறுகிறார்கள். அவர் 2016இல் தொலைத்தொடர்பு துறையில் நுழையும்போது அலைக்கற்றைகளை வாங்கி வைத்துக்கொண்டார். ஐந்து ஆண்டுகளில் அந்த துறை வளர்ச்சி அடைந்து இப்போது இலாபம் சம்பாதிக்கிறார். அது போல அதானியும் சிந்திக்கலாம் என்கிறார்கள். தள்ளாடிக்கொண்டிருக்கும் வோடோபோன் ஐடியா நிறுவனத்தை கபளீகரம் செய்யலாம்.

இரண்டு பெரும் சாம்ராஜ்ஜியங்கள் மோதிக்கொண்டிருக்கட்டும். பொதுமக்களுக்கு பி எஸ் என் எல் 4ஜி அலைக்கற்றை சேவையை தொடங்க அரசு உதவ வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

கட்டுரைக்கு உதவிய இணைப்புகள்
5G in India – does the common man even need it? – Crast.net

https://economictimes.indiatimes.com/industry/telecom/telecom-policy/no-license/entry-fee-for-enterprises-seeking-5g-spectrum-for-captive-networks-dot/articleshow/92499835.cms

https://telecom.economictimes.indiatimes.com/news/adani-vs-ambani-are-indias-richest-men-about-to-battle-over-2-customers/92882234?action=profile_completion&utm_source=Mailer&utm_medium=ET_batch&utm_campaign=ettelecom_news_2022-07-17&dt=2022-07-17&em=cmFtYW5hbnNhdHR1cjUzQGdtYWlsLmNvbQ==

Essential requirements for internet classroom 72th Series - Suganthi Nadar. Book Day. Technical inequalities and education தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 – சுகந்தி நாடார்



தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள் உலகம் முழுவதும் கல்வியைக் கண்டிப்பாகப் பாதிக்கின்றது. கணினி கல்வியின் துணைக்கருவியாக செயல்பட வேண்டியக் கட்டாயம் நமது வாழ்க்கை முறையினால் ஏற்பட்டு உள்ளது. கரும்பலகைகளாக நழுவல் காட்சிகளும் மின்னூல்களாகப் பாடப்புத்தகங்களும், செய்முறை விளக்கங்களாக வலையொளிகளும் இன்று பயன்பாட்டில் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நூலகங்கள்கூட தங்கள் வளங்களை மின் வழி வழங்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டே இருக்கின்றன.

இப்படிக் கல்விக்கான வளங்கள் மின் எண்ணியியலாக மாறும் போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இரு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது கணினிக் கருவிகளின் தட்டுப்பாடு, இரண்டாவது, கற்றல் கற்பித்தலுக்கான வளங்கள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு.
Essential requirements for internet classroom 72th Series - Suganthi Nadar. Book Day. Technical inequalities and education தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்
இந்த இரு காரணிகளால் கல்வியில் தொழில்நுட்பத்தால் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. அது போதாது என்று கணினி computer chip உலகையே பற்றாக்குறை தலைமேல் தொங்கும் கத்தியாய் அச்சுறுத்திக் கொண்டே உள்ளது. சாம்சங் நிசான் போன்ற நிறுவனங்கள் செய்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளன.

புதுப்புது கணினிகள் தாயரிக்க நிறுவனங்கள் முன்வரும் இந்த நிலையில் இணைய வசதியே இல்லாத அமெரிக்க கிராமப்புறங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பேரிடர் காலத்தில் இந்த ஏற்றத் தாழ்வுகள் கிராமப்புற மக்களின் சுகாதாரத்திற்கும் அன்றாடக் கல்விக்கும் பெரிய இடையூறாக இருந்து வந்தது. கொரானா நோய் தாக்காதவர்கள் நேரடியாக மருத்துவமனைக்குக் செல்லாமல் இணையம் வழி மருத்துவர்களைச் சந்தித்துப் பேச இயலாமல் போனது. மாணவர்கள் கல்வி கற்க கணினி சாதனங்கள் இருந்தும் வேகமான இணைய வசதி கிடைக்காமல் தவித்தனர். பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களில் இணைய வசதி வேகமாக உள்ளது. இங்கு உள்ள பல மாநாகரங்களில் ஏறத்தாழ 110 mpbs வேகத்திற்கு இணைய வசதிக் கிடைக்கின்றது. பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாகாணங்களில் சராசரியாக 50 mpbs வேகத்திற்கு இணைய வசதி கிடைக்கின்றது.

இந்த வித்தியாசத்திற்குக் காரணம் கிழக்குக் கடற்கரையிலுள்ள மாகாணங்கள் வர்த்தகச் சூழலுக்கு ஏற்றபடி உள்ளதால் இங்கு மக்கள்தொகையும் வாழ்க்கை வசதிகளும் மேற்குக் கடற்கரையில் உள்ளவர்களை விட அதிகமாக உள்ளது. பொதுவாக விவசாயத்தை நம்பி இருக்கும் மேற்குக் கடற்கரை மாகாணங்கள் தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆளுகைக்குள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இங்கு இணைய வசதி ஒரு பற்றாக்குறையாகவேக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மேரிலாந்து மாகாணத்தில் இணைய வேகம் ஏறத்தாழ 190 mpbs என்றால் அலாஸ்கா மாகாணத்தின் இணைய வசதி 17 mpbsல் இருக்கின்றது. இணைய வசதி எந்த வேகத்தில் இருந்தாலும் அதன் விலை நாடு முழுக்க ஓரளவு ஓரே மாதிரியாக உள்ளது. மாதத்திற்குக் குறைந்தது $70.00 இணைய வசதிக்காக ஒரு குடும்பம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதில் சில குடும்பங்களில் ஒவ்வோருவருக்கும் மூன்று கணினி சாதனங்கள் இருக்கும் போது பல குடும்பங்களில் ஒருவருக்கு ஒரு கணினி சாதனம் இருப்பதே சிரமமாக உள்ளது.

அமெரிக்காவின் NPR9 தேசிய அரசு வானோலியின் இணையதளத்தில் இந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி இது பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்க மேற்குக் கடற்கரை மாகாணமான நவடாவில் அமெரிக்க இந்தியர்களுக்கான நிலப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இணையவசதி இல்லாமல் மிகவும் சிரமபட்டதாகத் தெரிகிறது ஏறத்தாழ 450 சதுரடியில் உள்ள இந்த பாதுகாக்கப்பட்டக் குடியிருப்பிற்கு ஒரே ஒரு இணையவசதிக் வழிதான் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அதிகமாக உள்ள நகரங்களிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ளதால் இந்த இடத்தில் சரியான, வேகமான, இன்று அதிக அளவு புழக்கத்தில் உள்ள இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகின்றது. அமெரிக்க நாட்டில் மட்டும் இவ்வாறு ஒதுக்குப்புறமாக வாழும் 42 மில்லியன் மக்கள் சரியான தொலைத்தொடர்போ அல்லது இணைய வசதியோ இல்லாமல் தவிக்கின்றனர் என்று இத்தளம் கூறுகின்றது. இத்தளத்தின் கருத்துப்படி, அமெரிக்காவின் (FCC) ஒன்றிணைந்த அரசின் தகவல் ஆணையம் கூறுவதாவது 14.5 மில்லியன் மக்கள் இவ்வாறு ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கின்றனர். இப்பகுதியில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் இணைய வசதியும் அடிப்படையாக மின்னஞ்சல் செய்யவும் அடிப்படை இணைய உலா வர மட்டுமே வசதி படைத்துள்ளது. கற்றல் கற்பித்தலுக்கான எந்த தொழில்நுட்பமும் சிக்கல் இல்லாமல் இந்த இணைய வசதியில் வேலை செய்யாது. மேலும் ஒரு வீட்டில் ஒருவர் இணையத்தில் இருந்தால் அவ்வீட்டிலுள்ள மற்றவர்களால் இணையத்தில் இணைய முடியாது.
Essential requirements for internet classroom 72th Series - Suganthi Nadar. Book Day. Technical inequalities and education தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்
டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் நகரைச்சுற்றி வாழும் மக்களிலொன்பது சதவித மக்களிடம் எந்த ஒரு கணினிக் கருவியும் இல்லை என்றும் 18 சதவித மக்களிடம் சரியான இணைய வசதி இல்லை என்றும் Broadband Breakfastமெனும் இணையதளம் கூறுகின்றது. எங்கள் மாகாணமான பென்சில்வேனியாவிலுமே இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்கின்றது. வருடத்திற்கு $25,000ஆயிரத்திற்குக் குறைவாக ஊதியம் வாங்கும் குடும்பத்தினர் கல்விக்குத் தேவையான இணைய வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இது இம்மாகாண மக்கள் தொகையில் ஏறத்தாழ 14% மக்கள் தொகையாகும்.

2021ம்ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில் யுனெஸ்கோ கூறுவதாவது, இப்போது உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால், கல்வியால் ஒரு அமைதியான நீதி நிறைந்த குறைவு இல்லாமல் தொடர்ச்சியாக இயங்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவது மிகவும் கடினம். இவ்வறிக்கை மேலும் கூறூவதாவது இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் புதுப்புது கண்டுபிடிப்புக்களும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொன்டு இருந்தாலும் இவை ஒரு ஜனநாயக முறைப்படி அனைவரும் பங்கேற்கவும். வேறுபாடில்லாமல் அனைவரையும் தன்னுள் ஏற்றுக்கொண்ட சரியான தகைமை முறையில் வளர்ச்சி காணவில்லை என்று கூறுகின்றது. இந்தப் பாதிப்பு கல்வியில் பெரிய பாதிப்பை உருவாக்கி வருவதால் கல்விப் பற்றி நாம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கல்வி என்பது என்ன என்பதைப் பற்றிய மாற்றுச் சிந்தனையின் அவசியம் அதிரடியாக நடக்க வேண்டும் என்று இவ்வறிக்கை வலியுறுத்துகின்றது.

கல்வி என்பது ஒருவரின் பொருளாதாரத் தரத்தை உயர்த்த வழி செய்யும் ஒரு முறையாகத் தொழில்புரட்சி அடையாளம் காட்டியது. அதையே நாம் இன்று வரைப் பின்பற்றி வருகின்றோம். ஆனால் உண்மையில் கல்வி என்பது, நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை, நாம் ஏற்கனவே அறிந்து இருக்கும் ஒரு விவரத்தின் துணைகொன்டு ஆழமாக அறிந்து அனுபவித்துக் கொள்ளுவதும், அப்படி நாம் பெற்ற அறிவை செயலாக்கம் செய்யும் போது ஒரு மேம்பட்ட பயனை, எதிர்கால சிக்கல்களை யோசித்து அதற்கான தீர்வுகளை கொடுக்கக் கூடிய ஒரு பயிற்சியே இன்றையக் கல்வியின் தேவையாக உள்ளது. ஒருவர் வகுப்பில் படிக்கும் பாடங்கள் தேர்வுகளைத் தாண்டி , ஒருவர் வாழ்க்கை முழுவதும் தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தெரிந்து கொண்ட விஷயங்களை சுயதேவைக்காகவும் சமுதாயத்தின் தேவைக்காகவும் பயன்படுத்த முனைவது தான் கல்வியாகும். இதனாலேயே கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்று சொல்லும் ஔவைப் பாட்டி அப்பாடலிலேயே, கல்விக் கடவுளான சரஸ்வதி கூட படித்துக் கொண்டே இருக்கிறாள் என்று கூறுகின்றார்.

கல்வி என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் நடைமுறையிலிருந்து மாறுபட்டு நீண்ட காலத் தீர்வை கண்டுபிடிக்கக் கூடிய ஒரு சக்தியை மனிதர்களுக்குக் கொடுக்கின்றது.

ஏறத்தாழ பதினான்கு நாடுகளில் 200 மில்லியன் குழந்தைகள் இணைய வழி இல்லாமல் கல்வி கற்க வழி இல்லாமல் இருக்கின்றனர். மழலைக் கல்விக்கூடங்கள் இணைய வசதி இல்லாமல் இயங்காமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இணைய வசதியும் கணினி சாதனங்களும் இருந்தால் மட்டும் இங்கே கல்வித் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள் சீரடைந்து விடுவதில்லை.
Essential requirements for internet classroom 72th Series - Suganthi Nadar. Book Day. Technical inequalities and education தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்
இணையவசதியும் கணினி சாதனங்களும் இல்லாதது மட்டுமல்ல, இந்த கணினித் தொழில்நுட்பங்களை வைத்து பாடம் நடத்துவதும் பொருளாதார ரீதியில் சிக்கலை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்ல, பள்ளி நிறுவனங்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இது கணினி வழிப் பாடங்கள் பொருளாதார ரீதியாகப் பல சிக்கல்களைக் கொடுக்கிறது.

மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை செய்யாமல் வருவது, இரண்டாவது. கணினிக் கருவிகளையோ அல்லது கல்விக்கான மற்றத் தொழில்நுட்பங்களையோ பயன்படுத்தத் தேவையான அடிப்படை, கணினிக்கான பொது அறிவு இன்மை, பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பங்கள் கிடைக்காமல் அனைத்துத் தொழில்நுட்பங்களும் கணினி சாதன இடைமுகங்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியில் இருப்பதும் பலச் சிக்கலகளை பொருளாதார ரீதியாக உருவாக்குகின்றது. ஆசிரியரிடம் நேரடியாகத் தங்கள் சந்தேகங்களைக் கேட்க இயலாமல் மாணவர்கள் தங்கள் வகுப்பிலிருந்து தேர்ச்சி அடைவதும் கடினமாகின்றது. கணினி சார்ந்த பாடத்திட்டங்களும் பாடநூல் வளங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.

ஒவ்வோரு தொழில்நுட்பமும் ஒவ்வோரு ஆண்டும் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக தங்கள் சாதனங்களையும் மென்பொருட்களையும் மாற்றி, தரத்தை உயர்த்தி சேவைகளை அதிகரித்துத் தருவதாக கூறி (update) புதிப்பித்துக் கொண்டே உள்ளனர். எனவே பழைய சாதனங்கள் விரைவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயனில்லாமல் போகின்றன. கருவிகளின் பற்றாக்குறையும் கல்வி வளங்களில் உள்ள பற்றாக்குறையும் எளிதில் தீர்க்க க் கூடிய பிரச்சனைகளா?

முந்தைய தொடரை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 (வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்)  – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 71th Series - Suganthi Nadar. Book Day. The computerized future and the evolution of education Essential requirements 2 கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும் 2

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71 – சுகந்தி நாடார்




ஒவ்வோரு நாடும் தங்கள் வானெல்லைகளுக்குள் பயணப்படும் அலைவரிசைகளை  நிர்மாணிக்கின்றன. அமெரிக்காவில் நான்கு அலைவரிசைகள் அலைபேசி வழி தொலைத்தொடர்புக்குக்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 GSM bands, 2 UMTS bands, and 3 LTE bands என்று 3 வித அலைவரிசைகள் நுகர்வோர் தொலைத் தொடர்பிற்காகப் பயன்படுத்தபடுகிறது. இந்தியாவில் இன்னும் முதல் தலைமுறை அலைபேசிகளிலிருந்து 4ஆம் தலைமுறை அலைபேசிகள் வரை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நான்கு அலைவரிசைகள் தொலைத் தொடர்பிற்கான உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு அலைவரிசைகளில், பயணப்படும் தரவுகளின் அளவு அதிகரித்துக் கொண்டே போவதால்  அமெரிக்கத் தொலைபேசி நிறுவனங்கள் 3ம் தலைமுறை பயன்படுத்தும் அலைபேசிகளை முற்றிலுமாக முடக்க முடிவு செய்துவிட்டன.
Essential requirements for internet classroom 71th Series - Suganthi Nadar. Book Day. The computerized future and the evolution of education Essential requirements 2 கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும் 2

வயதானவர்களையும்  அடிமட்ட வருமானம் பெறுபவர்களையும் இம்மாற்றம் தாக்கும் என்பது குறிப்பிடதக்கது. அது மட்டுமல்ல பல மருத்துவ சாதனங்கள் உதவி செய்யாது. இந்த ஒரு சிறு நடவடிக்கை எத்தனைப் பெரிய  தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வை அமெரிக்காவில் உருவாக்கப் போகின்றதோ? ஏற்கனவே குறைந்த வருமானம் உடையவர்களிடம் அதிகமாகத் திறன்பேசிகள் இல்லை. இவர்களில் 41% மக்களிடம் broadband இணைய வசதிக் கிடையாது. அமெரிக்க நகரில் வாழும் மக்களிடம் ஒவ்வோருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிக் கருவிகளும் திறன்பேசிகளும் இருக்கும்போது  அமெரிக்க அடிமட்ட மக்களில் 40% க்கு திறன்பேசியோ, மடிக்கணினியோ அல்லது மேசைக் கணினியோக் கிடையாது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அரசுபள்ளிகளில் கிடைக்கும் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
Essential requirements for internet classroom 71th Series - Suganthi Nadar. Book Day. The computerized future and the evolution of education Essential requirements 2 கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும் 2
நேற்று வந்த செய்திகளின் படி அமெரிக்க வான் துறை ஆணையம் 5G தொழில்நுட்பம் விமானப் பயணங்களுக்கு ஊறு விளைவிக்க கூடும் என்று கருதுகின்றனர். அமெரிக்க வான் துறை ஆணையமும் அமெரிக்கத் தொலைத் தொடர்பு ஆணயமும் இந்த மாற்றத்தால் வரும் பலச் சிக்கல்களை ஆராய்ந்து வருகின்றனர். விமானங்கள் எந்த தூரத்தில் பறக்கின்றன என்று ஆராய்ந்து அறியும் கருவிகளும் 5G பயணிக்கும் தரவுகளும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும் அதற்கு எப்படித் தீர்வு காணலாம் என்று இரு ஆணைய நிருவாகமும் தொலைத் தொடர்ப்பு நிறுவனங்களுடன் பேசி வருகின்றன.

நம் வயிறு 73.9338 மிலி அளவுத் திரவத்தைத் தான் தான் கொள்ளும் திட உணவு எனும் போது 946.353 கிராம். இந்த உணவை நம் உலகில் உற்பத்தி செய்து பசிப்பிணியை போக்கக் கூடிய விளைநிலங்கள் இல்லை. பூமியின் அளவும் வயிற்றின் அளவையும் ஒரு போதும் மாற்ற முடியாது. அதனால் ஏதோ ஒரு வகையில் உலகை வாட்டும் பசிப்பிணிக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் ஒரு மனித மூளையின் சிந்தனைக்கு ஒரு அளவு கோல் உண்டா? அதே போல இன்று வானம் பரந்து கிடக்கின்றது. இப்போது அதுதான் நமக்கு அள்ள அள்ளக் கொடுக்கும் அமுத சுரபி. அதனால் இலவசமாக கிடைக்கும் இவை இரண்டையும் இணைத்து திறம்பட வேலை செய்ய வைப்பது நாகரீகத்தின் முக்கியக் கூறாக மாறி வருகிறது. இன்றைய திறன்பேசிகள் மூலம் மனித சிந்தனைகள் வானிலில் எலக்ட்ரான்களாக வலம் வந்து கொண்டே இருக்கின்றன. (எதிர்மின்மம்) அவை எழுத்துக்களாக, ஒலியாக ஒளியாக வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

நம்முடிடைய அவசர உலகத்தில் நம் எண்ண அலைகள் ஒலியை விட, ஒளியை விட வேகமாக மற்றவர்களை அடைய வேண்டியச் சூழ்நிலையில் உள்ளோம். ஒலி ஒளி ஏன் நம் சிந்தனையை விட வேகமாக இந்த எதிர்மின்மத் தரவுகள் நம்மை விடாமல் தொடர்ச்சியாகத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம் சிந்தனையின்  வேகத்தைவிட அதிகமாக நம்மைத் தரவுகள் சூழ்ந்தால் தானே நம்மால் விழிப்புணர்வோடு செயலாற்ற முடியாது. திறன் பேசிகள் கொடுக்கும் மதிமயக்கத்தில் நமக்கு நாமே புதைகுழி தூண்டுகின்றோமோ என்ற அச்சம் ஏற்படத்தான் செய்கின்றது.

இப்படி வரும் தரவுகள் வேகவேகமாக பயணிக்க வான் வழி- பறக்கும் விமானங்களுக்குப் போக்குவரத்து சிக்கல் ஏற்படுமோ? அல்லது தரவுகளின் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படுமோ? 

இலாப நோக்கோடு நிறுனங்கள் செயல்பட செயல்பட தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள் பெருகிக்கொண்டே போகின்றன. உலகமே இப்படிப்பட்ட நிறுவனங்களின் கையில்தான் இருக்கின்றது என்று தெரிகின்றது. அதற்கு சான்றாக உலகிலேயே புகழ்பெற்ற பங்கு மேலாண்மையை நாம் பார்க்கலாம். உலகில் உள்ள ஒவ்வோரு நாடும் தங்களின் குடிமக்களின் ஓய்வூதியத்தைப் பெருக்க பங்கு சந்தைகளில் முதலீடு செய்கின்றன. அப்படி செய்த முதலீட்டில் உலகிலேயே முன்ணனியில் இருப்பது நார்வே நாடு அந்த நாட்டின் முக்கியமான ஓய்வூதிய நிதிமேலாண்மை உலகில் உள்ள 69 நாடுகளில் உள்ள 10,000 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யபட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் செயல்கள் தான் எதிர்கால பொருளாதாரத்தை ஆளப்போகின்றன.

தங்கள் இலாப நோக்கைச்செல்லும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஊக்கம் கொடுக்குமா அல்லது ஒரு தனிமனிதன் தன்னிறைவு பெற உதவி செய்யுமா?
Essential requirements for internet classroom 71th Series - Suganthi Nadar. Book Day. The computerized future and the evolution of education Essential requirements 2 கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும் 2
இங்கே கண்டிப்பாக இன்றையக் கணினித் தொழில்நுட்பத்திற்கு எதிராக கருத்துக்களுக்கு இடமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையின் பின்ணனியைக் கொஞ்சம் அலசிப் பார்க்கின்றேன் அவ்வளவுதான். கணினியுகத்தாலும் திறன்பேசிகளின் வளர்ச்சியாலும் கண்டிப்பாக உலகம் பல பயன்களைப் பெற்றுள்ளது. இந்தப் பேரிடர் காலத்தில் நாம் அனைவரும் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். ஆனால் இப்படிப்பட்ட அனுபவங்கள் மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் இருக்கத்தானே செய்கின்றது? இந்த சமுதாயத்தைப் பற்றிய கவலை இந்நிறுவனங்களுக்கு வருமா என்பது தெரியாது. ஆனால் அப்படி ஒரு சமுதாயமாக நாம் இருந்து விடக்கூடாது, அப்படிப்பட்ட சமுதாயம் உருவாக ஒரு தடைக்கல்லாக நாம் இருக்க வேண்டும். அதற்குக் கல்வியில் மாற்றங்களும் கல்வியின் பரிணாம வளர்ச்சியும் கண்டிப்பாகத் தேவை.

ஒரு காலத்தில் பெரிய தொழில்நுட்பமாகக் கருதபட்ட தொலைக்காட்சியும், வானொலியும் இன்று நம் கைக்குள் அடங்கி விட்டது. அது மட்டுமல்ல நமது தொலைபேசியும் இதற்குள் அடக்கம். ஆனால் 2020- 30க்குள் மனித குலத்தின் நுண்ணிய விவரங்கள் அனைத்துமே தரவுகளாக மாறி கணினிக்குள் புகுந்து விடும். உள்ளங்கையில் உலகம் என்பது போய் உலகம் என்பது வெறும் புள்ளி விவரங்களாகிவிடும். இது கணினித் தொழில்நுட்பத்தின் ஒரு எச்சரிக்கையாகவும் அதே நேரத்தில் மனித குலத்தின் சாதனையாகவும் கருதப்படுகின்றது.

நாம் சாமான்யர்கள் நாம் என்ன செய்ய முடியும் என்று கண்டிப்பாய் சிந்திக்கும் காலக்கட்டம் இது. உணவு தரும் விவசாய நிலங்களைவிட அதிகமாகக் காலி வயிறுகள் தான் உலகத்தில் உள்ளன. அதே போல நம்முடைய தரவுகளின் அளவும் மனித சிந்தனையை விட வேகமாக வளர்ந்துவிடுமா? வளரவிடலாமா?

பெரிய பெரிய நிறுவனங்களோடு ஒரு சாமான்யன் என்ன செய்ய முடியும் என்ற தயக்கம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. டேவிடும் கோலியாத்தும் என்ற பரிசுத்த ஆகமக் கதை ஒன்று உண்டு. கெளரவர்கள் பாண்டவர் கதையும் நமக்குத் தெரியும். எந்த ஒரு நேரத்திலும் ஆக்க சக்திகளுக்கு வலிமை குறைந்து நேர்மறை செயல்பாட்டிற்கும் எதிர்மறை செயல்பாட்டிற்கும் இடையே உள்ள சமன்நிலை பாதிக்கப்படும் போது, அதிகமான எதிர்மறை ஓட்டத்தைக் கட்டுப்படுத்த சிறிதளவு நேர்மறை செயல்பாடு ஒரு சமநிலையை உருவாக்கி விடும் என்பதே இக்கதைகளின் கருத்து.

எனவே சாமான்யர்களாகிய நாம் நமது ஆக்க சக்தியை அதிகரிக்க கல்வி 4.0 கண்டிப்பாய் உறுதுணையாக இருக்கும். நாம் ஒவ்வோருவரும் உலகை மாற்றத் தேவையில்லை. நம்மில் நாமே தன்னிறைவு பெற முயற்சிக்க ஆரம்பிக்க வேண்டும்.
Essential requirements for internet classroom 71th Series - Suganthi Nadar. Book Day. The computerized future and the evolution of education Essential requirements 2 கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும் 2
உலக நிலப்பரப்பில் 37.6% விவசாய நிலமாக இருந்தாலும் உலக உணவுத் தேவையில் 70% சதவிதத்தை தயாரித்துத் தரும் விவசாயிகள் அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் உணவு உண்டு வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது. இதைக் சுட்டிக்காட்ட நமக்கு அறிக்கைகள் தேவையில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கண்டிப்பாகப் பார்க்கின்றோம். இந்த நிலை ஏன்? தொழில்துறை பொருளாதாரம் சார்ந்த கல்வியை நாம் முன்னிலைப்படுத்தியதால், விவசாயக்கல்வியும் விவசாயத் தன்னிறைவும் உருவாக வழி இல்லாமல் போய்விட்டது.

2030ல் எந்த அளவுக்குத் மின் எண்ணியியல் தொழில்நுட்பம் வளர்ந்து வருமோ அதே அளவு வேகத்தில் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வுகள் கண்டிப்பாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும்.

அடுத்து கல்விக்கான தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகள்களின் நிதர்சனத்தையும், நமக்குப் பின்வரும் தலைமுறைகள் சந்திக்க இருக்கும் சூழவியல் ஆபத்துக்களையும், இன்றைய தலைமுறையின் அடிப்படை குணாதிசியங்களும் கல்வியின் எதிர்காலப் பரிணாமத்தை முடிவு செய்யும்.

முந்தைய தொடரை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 (வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்)  – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்