மு.அழகர்சாமி (Alagar Samy Tamil Poems) எழுதிய மூன்று கவிதைகள் | என் கண்களுக்கு எவ்வளவு ஏக்கமோ? | Alagar Samy Kavithaikal

மு.அழகர்சாமியின் கவிதைகள்

மு.அழகர்சாமி எழுதிய மூன்று கவிதைகள் 1 ஏரிகளையும் கம்மாய்களையும் அபகரித்து வீடுகளாய் மாற்றினர்.... ஆற்றுக் கரையோரங்களை அபகரித்து தோட்டங்களாய் மாற்றினர்...... நீர் வழித்தடங்களை மறித்து புறவழிச்சாலையாக மாற்றினர்... காத்திருக்கும்..... அடுத்து..... எத்தனை வருடங்கள் ஆனாலும். நீதிமன்றம் செல்லாமலே தன் உடைமைகளை தனதாக்கி…
அழகர்சாமியின் கவிதைகள் - Alagar Samy's poems | Tamil Poems,Tamil Kavithaikal,Bookday Kavithaikal | https://bookday.in/

அழகர்சாமியின் கவிதைகள்

1) நீயோ அழகாய் நடனமாடிக் கொண்டிருக்கிறாய்... என் கண்களோ உன் விரல் அசைவுகளுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றன.... 2) உன் நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்கிறேன் நான்..... நீயோ என் நினைவில்லாமல் இருக்கிறாய்... நினைவுகளை நினைவு படுத்த நான் என்ன செய்ய…
இதயநிலவன் (Idhaya Nilavan) ஓரெண்டே.....ரெண்டே (orende rende) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் - Books For Children - https://bookday.in/

ஓரெண்டே…..ரெண்டே – நூல் அறிமுகம்

ஓரெண்டே.....ரெண்டே - நூல் அறிமுகம் ஓரெண்டே.. ரெண்டே... என ஆரம்பள்ளியில் வாய்ப்பாடு சொல்லும் போது இருகைகளை கட்டி வளைந்து. குனிந்து ஒரு சேர உச்சரித்த ஞாபகம் கண்முன்னே மீண்டும் ஒரு முறை வந்து போனது எனக்கு இதுவும் ஒரு உடல் பயிற்சி…
மு. அழகர்சாமியின் கவிதைகள் (Kavithaikal) | தமிழ் கவிதைகள், சிறந்த தமிழ் கவிதைகள்(Tamil Poetry) - Alagar Samy - https://bookday.in/

மு.அழகர்சாமியின் கவிதைகள்

மு.அழகர்சாமியின் கவிதைகள் 1.தோற்றுப்போகிறோம்........ எப்போதோ!! ஒரு இரவில் நீயும் நானும் சண்டையிட்டுக் கொள்கிறோம் நடு இரவைத்தாண்டி... நமக்கான சண்டையில் மாட்டிக் கொண்டது நம் பிள்ளையே!! உனக்குப் புரிய வைப்பதில் நானும்.. எனக்குப் புரியவைப்பதில் நீயுமாய்.. நீளும் சண்டையில் நமக்குப் புரியாமல் போனது…
மு. அழகர்சாமியின் கவிதைகள்

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள்…
கடைசி யுத்தம் கவிதை – மு. அழகர்சாமி

கடைசி யுத்தம் கவிதை – மு. அழகர்சாமி




உனக்கும் எனக்குமான
பரிமாறுதலில்
மேலோங்கி நிற்பவை முத்தங்களே….

ஒவ்வொரு முறையும்
எடுத்துக் கொண்ட
முத்தங்களின் ஈரம்
உலர்வதற்குள்
அடுத்த முத்தத்திற்கு
அடித்தளமிடுவேன்….

பொய்க் கோபங்களோடு
நீ கொடுக்கும்
முத்தத்தால்
மொத்தமாய் நான்
கரைந்து போய் விடுவேன்….

அத்தி பூத்தாற்போல்
சந்திக்கும் நேரங்களிலும்
முத்தப் பரிமாறுதலில்
எப்போதும் நீயே
வெற்றி பெறுவாய்…

உன்னிடத்தில் நானும்
என்னிடத்தில் நீயும்
முத்தங்களை நித்தம் பெற
இல்லற வாழ்வில் இணைந்தோம்….

இப்போது முன்னைவிட
முத்தப் பரிமாற்றங்கள்
காமத்தையே மெருகூட்டின…

என் வயது குறைத்து
நோய் நீக்கும்
அருமருந்தாக

உன் முத்தங்கள்…

வாழ்க்கைச் சூழல்
பொருளாதார மாற்றம்
உனக்கும் எனக்குமான
பணிப் பொறுப்புகளால்
நம்
முத்தப் பரிமாற்றம்
சுருங்கிப் போனது…..

காலம் நம்மை
பேரப் பிள்ளைகளின்
உலகத்தில் தள்ளியதால்
முத்தப் பரிமாற்றத்தைத் துறந்து நோயில் வீழ்ந்தோம்….

வாழ்க்கையில் இறுதிப் போராட்ட நொடியில்
புதுச் சங்கில் பால் ஊற்றினால் உயிரடங்குமென
சுற்றம் பேசுகிறது…

எனக்கு மட்டுமே தெரியும்
உன் இதழ் தரும்
முத்தத்தால் என்
மொத்தமும் அடங்கும் என….

மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு
தேனி மாவட்டம்
9585676345