அமீபாவின் கவிதைகள் (Amoeba'poem) - 1. ஆள் பாதி | 2. குசுகுசுப்பு ( முதலாளித்துவம் - tamil poetry - https://bookday.in/

அமீபாவின் கவிதைகள்

அமீபாவின் கவிதைகள் 1. ஆள் பாதி ************ ஒரு தலைமுறை வெறும் கோவணத்துடன் கண்ணெதிரே நடமாடிக் கொண்டிருந்தது போன தலைமுறை வெற்று மார்புடன் வீதியில் உலவிக் கொண்டிருந்தது இந்த தலைமுறை பனியன் அணியாமல் வெளி வர வெட்கப்படுகிறது இப்படித்தான் எங்களுக்கும் ஆனதென…
வீடுபேறு - கவிதை தமிழ் (Veedu Peru - Kavithai ) அமீபா | Veedu Peru Tamil Poem - Kavithai Amoeba - Book Day - https://bookday.in/

வீடுபேறு – கவிதை

வீடுபேறு - கவிதை   எப்படி யாரால் எனத் தெரியாமல் ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் தொலைந்து போகிறது ஒருமுறை நக வெட்டி மறுமுறை நல்லதொரு கரண்டியென சின்னச் சின்னதான பொருட்கள் சந்தேகத்துடன் அவற்றைப் புதிதாகச் சந்தையில் வாங்கி வந்த…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல் வழக்கு உண்டு. பசியின், பஞ்சத்தின் வலிகள் கூட மனித சமூகத்திற்கு அவ்வளவு சுலபத்தில் புரிந்து விடுவதில்லை. அதை தெளிவாக மனதிற்குள் பதிய வைக்கிறது "நெருங்கி…
அமீபாவின் கவிதைகள்

அமீபாவின் கவிதைகள்




1
செய்த தவறுகளைக் கூட
நியாயமாக்க முடிகிறது
என்னால்
எனது நியாயங்களை எல்லாம்
தவறுகள் என தூக்கிப் போட முடிகிறது உங்களால்

கைவிடப்பட்ட மனநோயாளி போல நினைவெங்கும்
அலைந்து கொண்டிருக்கிறது
அச் செயல்கள்.

2
அந்தப் பூவை
அப்படியே வரைந்து விடுவது தான்
என் திட்டம்
அதே அழகாய்
அதே வடிவத்தில்
அதே நுட்பத்துடன்
அழித்து அழித்து
வரைந்து கொண்டு இருந்தேன்
திருப்தியடையாமல்

வாடத் துவங்கி இருந்தது
அந்தப் பூ.

3
எத்தனையோ முறை
எதிர்கொண்டு விட்டேன்
இக்கேள்வியை
“இப்போது என்ன செய்கிறீர்கள்.”

நான் செய்யும் செயல்களில்
சிலது
அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது சிலது
அவர்களுக்குத் தேவையே இல்லாதது
சிலது
நான் சொல்ல விரும்பாதது

அவர்கள் விரும்பியதை
சொல்லி இளிக்க
நான் அவர்களின் அடிமை இல்லை
அவர்கள் வெறுப்பதை
சொல்லி எரிச்சலூட்ட
நான் அவர்களின் எதிரி இல்லை

செய்வதைச் சொன்னால்
என்ன செய்யப் போகிறார்கள்
செய்வதைச் சொல்வதால்

வேறென்ன செய்து விடப் போகிறேன்

இந்த மௌனத்தில்
இடம்பெயர்வார்கள்
“ஏதேனும் செய்யுங்கள்” எனச் சொல்லி.

– அமீபா.