தொடர் 15: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 15th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 15: கவிதை உலா – நா.வே.அருள்

உறவுகள் இல்லையெனில் வாழ்க்கை வெறுமையாகிவிடும். தனித்து விடப்படுவதைப் போல ஒரு சோகம் வேறெதுவும் இருக்க முடியாது. தனித்துவிடப் பட்டவர்களின் உடலில் கார்ட்டிசால் என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இந்தக் கார்ட்டிசால்தான் இதய நோய் முதல் பக்கவாத நோய் வரைக்குமான…
தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 14th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள்

காதல் காவிய காலம் முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் காலம் தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு காலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், காவியத்திற்குள்ளும் சரி, இன்ஸ்டாகிராமுக்குள்ளும் சரி, காதல் காதலாகத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் காதலிக்கப் புதிய எந்திரங்கள் வந்துவிடுமா என்ன? ஓர் ஆணும் பெண்ணும்…
திடீர் அரசியல்: சில அரசியல் அவதாரங்கள் திடீர் திடீரென ஆஜராகிவிடுகின்றன. எதற்கும் தேசம் எச்சரிக்கையாய் இருக்கட்டும் | Sudden Politics | கவிதை

கவிதை: திடீர் அரசியல் – நா.வே.அருள்

திடீர் அரசியல் ******************** சில அரசியல் அவதாரங்கள் திடீர் திடீரென ஆஜராகிவிடுகின்றன எதற்கும் தேசம் எச்சரிக்கையாய் இருக்கட்டும் நேற்று விதை போட்டு இன்று மரம் ஆகி நாளை அறுவடைக்கு ஆள் கூப்பிடுகிறார்கள் திடீர் ரசம் திடீர் சாம்பார் போல சில அரசியல்வாதிகளுக்குத்…
கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி (Poetry) - Kill the joiner - சிறந்த தமிழ் கவிதைகள் - Tamil Poetry - https://bookday.in/

கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி

கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி ******************************* கோபத்தில் என் நாக்கு உலர்ந்து விடுகிறது இதயம் சூடேற கை கால்கள் படபடக்க கண்கள் சிவந்து விடுகின்றன என் உடல் கொதிக்கிறது எதிரியின் போர்வையைப் போல உருமாறிய என் நாக்கு அவன் கவனிக்காதபோது அவன்…
அஞ்சலிக் குறிப்புகள் (கவிதை) | கள்ளச் சாராயம் | Na .Ve. Arul | நா.வே.அருள் | https://bookday.in/

அஞ்சலிக் குறிப்புகள் – கவிதை

அஞ்சலிக் குறிப்புகள் ***************************** கள்ளச் சாராயத்தால் இறந்து போனவர்களே நீங்கள்தான் எங்களுக்காக இரங்க வேண்டும். நாங்கள் உயிரோடு இருக்கும்போதே மரித்துப் போனவர்கள். உங்கள் உடல் வலி தீர்க்க மலிவு விலை சாராயத்தால் மடிந்தீர்கள் என்றொரு வதந்தி உண்மையில் எங்கள் மூளை போதையில்…
கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

இன்று ஒரு தொலைதூரப் பயணத்திற்குத் தயாராகிவிட்டோம் நீங்களும் என் அருகில்தான் இருக்கிறீர்கள் என்பதால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கவிதையின் வெளிச்சத்தில் கைப்பிடித்துச் செல்கையில் காட்டுவழி கூட அவ்வளவு பயங்கரமாகத் தெரிவதில்லை. விலங்குகளின் ஆபத்தான கொம்புகள் நம்மைக் குறிபார்த்துக் கொண்டிருக்கின்றன அசாத்தியமான…
கவிஞர். நா.வே.அருளின் கவிதைகள் (Na.ve.Arul Poems) Kavithaikal

கவிஞர். நா.வே.அருளின் கவிதைகள்

1. இதயத்தின் வடிவத்திலேயே ************** நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன் என் வீட்டில் எல்லோருக்கும் எத்துணைப் பாசம்! நான் குழந்தையாக ஒடியாடிய போது இதயத்தின் வடிவத்திலேயே பிஸ்கட் கொடுத்தார்கள். வளர்ந்த பின்னாலும் குறையவில்லை… வளர்ந்தது பிரியம் என் விருப்பமறிந்து இதயத்தின் வடிவத்திலேயே கட்லட்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்:  நூலறிமுகம் -மாசேதுங் கவிதைகள் – நா.வே.அருள்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் -மாசேதுங் கவிதைகள் – நா.வே.அருள்

      சிவந்த சீனத்திலிருந்து மலர்ந்த வெள்ளைப் பூக்கள் உலகைப் புரட்டிப் போடும் அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கியதில் இன்றளவும் ஜெர்மானியத் தாடிக்காரன் மார்க்சுக்குத் தனியிடம் உண்டு. ரஷ்யாவில் அந்த மண்ணுக்கு ஏற்ற வகையில் இலெனின் வடிவமைத்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ், இலெனின்…
தொடர் 10 : கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 10 : கவிதை உலா – நா.வே.அருள்



Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

இரவும் நிலவும் மனிதர்களைத் தூங்க வைக்கும் மகத்தான சொரூபங்கள். ஆனால் அந்த இரவையே உறங்க வைக்கிறான் ஒரு கவிஞன். அவன் தனியாக எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இரவு உறங்குவதற்கு ஒரு தொட்டில் இருப்பதை அவனது கவிதைக் கண்களால் கண்டுபிடிக்கிறான்….ஆனால் விஷயம் என்னவென்றால் அது தூக்கத்தைத் தொலைய வைக்கும் சுவாரசியமான தொட்டில்!

என்ன முடியும் சிறு பிறையால்?
இரவை உறங்க வைக்கும்
சிறு தொட்டிலென மாறி…

Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
அன்பழகன்.ஜி

ஒரு மீனின் மரணம் மனிதனின் மனசில் கல்லறைப் பெட்டியின் மீது ஆணியைப் போல அறையப்படுகிறது. அமைதியான நீர்ப் பரப்பு தகதகக்கும் தகன மேடையாக மாறுகிறது. யாருமே அஞ்சலி செலுத்தாத மரணமாக ஒரு மீனின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. கவிஞனின் வார்த்தைத் தூண்டிலில் வசமாக சிக்கிக் கொள்கிறது ஒரு கவிதை மீன். அது நம் இதயத் தொட்டியில் இசைபாடும் மீன்!

தூண்டிலைச் சுண்ட
வானம் கிழியத் துடிக்கும்
கெண்டை மீன்

Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
நீலச் சங்கியாள் சுகந்தி

தேநீரின் கதை சுவாரசியமானது. தலை வலித்தால் தேநீர். தன்னிச்சையாய்த் தேநீர்.. ஒருவரைச் சந்தித்தால் தேநீர். பிரிவென்றால் தேநீர். தேநீர் இல்லையென்றால் தேசமே இல்லை எனலாம். தேநீர் ஒரு தேசிய பானம். ஒரு தேநீருக்குள் சோகங்களைத் துடைத்தெறியும் சுவை இருக்கிறதாம். ஆனால் ஒரு கவிஞரின் கண்ணுக்குத்தான் தேநீரின் நிறம் தென்படுகிறது. அது ரத்தத்தின் சுவை என்கிற ரகசியம் புரிகிறது.

எத்துணை மோசமான சோகத்தையும்
தேயிலைத்தூளின் மணம்
துடைத்தெறிந்துவிடுகிறது
நினைவில் தேயிலைக்காடுள்ள மிருகமல்ல
தேயிலைக்காக ரத்தம்
சிந்தியவர்களின் ரத்தம் யான்


Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
வீரமணி

இயற்கையைப் படைப்பின் கண்கொண்டு பார்க்கிறான் ஒரு கவிஞன். துன்பம் செய்த அதே இயற்கை இன்பம் செய்வதைக் காண்கிறான். எப்படி இதயத் துடிப்பில் “லப்” உண்டோ அப்படி “டப்” பும் உண்டு. லப் மட்டுமோ, அல்லது டப் மட்டுமோ இல்லை… லப் டப் சேர்ந்தால்தான் இதயத் துடிப்பு. புயல் அடிக்கிற அதே வானிலைதான் மழையையும் கொண்டு வருகிறது. .

நேற்று
வாரித் தூற்றிவிட்டுப்போன
அதே காற்றுதான்
இன்று
என் தோட்டத்திற்கு
மழையை
அழைத்து
வந்திருக்கிறது

முந்தைய தொடர்களை படிக்க: 

தொடர் 1 :  கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்

தொடர் 5 : கவிதை  உலா 5 – நா.வே.அருள்

தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்

தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்

 தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்

 தொடர் 9: கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை – நா.வே.அருள்