நூல் அறிமுகம்: அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்

நூல் அறிமுகம்: அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்




ஒரு ஊரில் மாறன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு கதை கேட்காமல் தூக்கம் வராது.
ஒரு நாள் அவங்க அம்மா தூங்கிட்டதால அப்பா தான் கதை சொன்னார். அப்போ ஒரு கேள்வி கேட்டார்.
அவர் என்ன கேள்வி கேட்டார்ன்னா, அவங்க வீட்டு ஹால்ல ஒரு பெரியார் போட்டோ இருந்தது. அதைப் பத்தி கதை சொன்னார்.

அவர், பெரியார் பத்தி விசயங்களை சொன்னார். என்னவென்றால் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க ஹால்ல ஒரு நிழல் தெரிந்தது.
பெரியார் நிழல் தான்.
அப்போ அதைப் பார்த்து அங்கே போனான்..
ஐ.. பெரியார்..! அப்பா, இங்கே பாருங்க, பெரியார் தாத்தா..!

அவரும் வந்து பார்த்தார்.. அட, ஆமா.. பெரியார் தாத்தா தான்..
மாறன் அவங்க அப்பாவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது.

பெரியார் தாத்தா சொன்னார், பேரா, ஏங்கூட வா.. சில விசயங்கள் சொல்றேன் என்றார். அப்போ அவர் கையில் ஒரு தடி வைத்திருந்தார்.. அதை வைத்து ஒரு மினி ஜெட் உருவானது.. அதில் ஏறிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தில் மக்கள் எல்லோரும் கேஸ் எரிக்க பணம் கட்ட முடியாமல் மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி விறகு எரித்தனர். மரத்தையெல்லாம் வீணாக்கி விட்டார்கள்..

இத எல்லாத்தையும் மாறனிடம் சொல்லிக் கொண்டே வீடு போய் சேர்ந்தனர். பெரியார் தாத்தா எப்படியாவது மக்களுக்கு புத்தி வர வைக்கணும் என்று ஒரு திட்டம் போட்டார்.

மாறனைக் கூப்பிட்டு நான் ஒன்று தருகிறேன்.. அதைக் கொண்டு போய் கிராமத்தின் எல்லையில் நட்டு வை என்றார்..

குங்கும பொட்டு வச்சவர் சொன்னார், நாங்களே வாழ முடியாமல் இருக்கிறோம்.. நீ செடியை வேற நட்டு வைக்கிற.. இதுக்கு யார் தண்ணீர் ஊத்துவா?

அதைப் பாத்த பெரியார் தாத்தா, இவங்கல்லாம் திருத்தவே முடியாது. மாறன் வீட்டுக்குப் போயி தாத்தாவிடம் அங்க நடந்தத சொன்னான்..

கிராமத்துக்கு நடுவுல்ல ஒரு ஆலமரம் இருந்தது. அது யாராவது அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை உடச்சா கூட, அந்த ஆலமரம் வேரோடு எழுந்து வந்து அடிச்சு தொவக்யும்..

மாறன் கிளையை உடைத்தா மட்டும் ஆலமரம் அவனை ஒன்னும் செய்யாது.. ஏனென்றால் ( அதை கதை முடியும் போது கூறுகிறேன்)

மாறன் நட்டு வைத்த செடி வளர்ந்தது. அதைப் பார்த்து வாயைப் பொலந்தார்கள்.. இதை யார் நட்டு வைக்கச் சொன்னது என்று கேட்டார்கள்.. பெரியார் தாத்தா தான் நட்டு வைக்கச் சொன்னார் என்றான்..

பெரியார் தாத்தா வந்தார். கிராமத்து மக்களிடம், நீங்களும் செடிகளை நட்டு வையுங்க.. எதற்காக என்றால் இயற்கையைப் பாதுகாக்கத்தான் சொல்கிறேன்..

இடையில் மாறன் கிளையை உடைத்தால் மட்டும் ஏன் ஆலமரம் அவனை அடிக்காது என்று சொன்னேன்ல.. ஏன் என்றால் தாத்தா எல்லாத்தையும் கண்ட்ரோல் ரூமில் இருந்து கண்ட்ரோல் செய்தார்..

இதில் இருந்து என்ன புரியிது என்றால் இயற்கையை அழிக்கக் கூடாது. இயற்கையை இன்னும் அதிகரிக்கணும்..

நூல் : பெரியார் தாத்தா
ஆசிரியர் : அருண் மோ
விலை : ரூ.₹350
வெளியீடு : மகிழ் பதிப்பகம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

சு.டார்வின், நான்காம் வகுப்பு
10.11.22