Aruppukalam Poem By Suryamithran. சூர்யமித்திரனின் அறுப்புக்காலம் கவிதை

அறுப்புக்காலம் கவிதை – சூர்யமித்திரன்




எத்தனை தடவை
புதுப்பித்தாலும்
சிரஞ்சீவியாய்
ஆயுள்வளர்க்கும்
வேலை வாய்ப்பு.

தண்டச்சோறு
நெஞ்சில் குத்த
ம்மே..என்றழைத்த
ஆட்டுப்பண்ணை
குறும்பாடு
குறுகுறு என்று
எனைப்பார்த்ததும்
தூக்கினோம்.

துட்டு பார்த்த
புதுசில்
வேவுபார்த்த
காக்கியிடம்
காபந்து செய்ய கேட்டும்

போட்டுக்கொடுத்த
தடைக்கல்லை
சற்று
தள்ளிவைத்தோம்.

சீர்திருத்தப் பள்ளி
நிறைய
இளம் குற்ற சிறார்கள்.

எனில்
இழுத்துமூடவேண்டியது
வேலை தராத
தண்டச்சோறு
எக்சேஞ்ச் தானே.