Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

செல்லுலாய்டின் மாபூமி

காகிதத்தில் ஒளிரும் திரைகள்

ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்ட உணர்வை இந்த புத்தக வாசிப்பு நமக்கு அளிக்கின்றது. வித்தியாசமான கதைகள் எளிய மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகின்றன.

 

நம் நாட்டில் இந்த மாதிரியான படங்கள் மிக சிலவே. இன்றைய சூழலில் அவை பெரும் மாற்றம் பெற்று வருகின்றன. “செல்லுலாய்டின் மாபூமி” நூல் தமுஎகசவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன் அவர்களால் தொகுக்கப்பட்ட 28 இந்திய ,மற்றும் சர்வதேச திரைப்படங்களின் தொகுப்பு.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

நம் கண்முன்னே ஒவ்வொரு திரைப்படத்தின் கதைமாந்தர்களையும், கதைக்களத்தையும், அதை தயாரித்த இயக்குனர்களையும், அப்படம் பெற்ற விருதுகளையும் பட்டியல் இட்டு நம் முன்னே விருந்து படைக்கின்றார். ஆப்கான், ஆப்பிரிக்க, சைனா, ஜப்பான் போன்ற பல நாடுகளின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆதாமிண்ட மகன் அபு… மலையாள மொழி திரைப்படம். இயக்குனர் மது அம்பட்டின் ஒரு ஏழை இஸ்லாமிய குடும்பம் தங்கள் மார்க்க கடமையான ஹஜ் செல்ல முயன்று செல்லமுடியாமல் போவது தான் கதை. மார்க்கம் என்பது புறத்தில் தேடுவது அல்ல அது உள்ளார்ந்தது என்பதை உணர்த்தும் படம். 4 தேசிய விருதுகள் பெற்ற படம் தி டே ஐ பிகேம் எ வுமன் ஓரு ஈரான் படம்; இயக்குனர்  மெர்ஸியா மெஷ்கினி. மூன்று பெண்களைப் பற்றிய படம்.

ஈரான் நாட்டில் பெண்கள் வெளியே வரமுடியாத சூழலில் சிறுமி ஒருத்தி தன் தாய் மற்றும் பாட்டியின் உதவியால் டீ கடை ஒன்றில் ஆண் வேடத்தில் பணிச்செய்ய , பின்னர் கண்டு பிடிக்கப்பட்டு 70 வயது முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதே கதை. இப்படம் வெனிஸ் திரைப்பட விருதுகள் மற்றும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது டெத் ஆன் எ புல் மூன் டே , இலங்கை இன படுக்கொலை போரில் உயிர் இழந்த ஒரு வீரனின் குடும்பக்கதை; இப்பட இயக்குனர் பிரசன்ன விதனாங்கே. தமையன் இறந்ததை ஏற்காமல் அவனுக்காக காத்திருக்கும் ஒரு கண்ணிழந்த தந்தையின் உணர்வுபூர்வமாண கதை.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் தன் தேவைக்காக இனம், மொழி சாதி, மதம் என்று அடையாள அரசியல் மூலம் போரைப் பயன்படுத்துகின்றது. இப்படம் பிண்ணனி இசையன்றி எடுக்கப்பட்டு, இலங்கை அரசால் தடைச் செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்ட படம்.

ஹரிச்சந்திரா பேக்டரி , தாதா சாகிப் பால்கே பற்றிய முதல் மௌனப்படம் .இயக்குனர் பரேஸ் மொகாசி. தாதா சாகிப் பால்கே திரைப்படம் எடுத்த கதைதான் இப்படம்.
முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படம் .ஆண்கள் பெண் வேடமிட்டு நடித்த படம். 10 க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற படம் மேஹா தொகா தாரா இந்தியாவின் முதல் அரசியல் திரைப்பட இயக்குனர் வங்காளத்தை சேர்ந்த ‘ரித்விக் கட்டக்’ இயக்கிய இப்படம். இந்தியாவில் காணப்படும் கூட்டு குடும்ப சூழல் குறித்த படம். தனக்கென்று வாழாமல் குடும்பத்தினருக்காக வாழும் ஒரு பெண் பற்றிய படம்.

வங்காள இயக்குனர் கௌதம் கோஷ் தெலுங்கானா விவசாய போராட்ட களத்தை பற்றி தெலுங்கில் எடுத்தப்படம் மாபூமி. இந்த படம் இந்திய அரசின் தேசிய விருது ஆந்திராவின் நந்தி விருது பெற்றது. வட ஆந்திராவின் ஸ்ரீபுரம் கதைக்களம் நாயகன் ஆந்திர ஜமீன்தார்களை எதிர்த்து சாதி வேறுபாடுகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது தான் கதை.

பியூட்டி புல் பாக்ஸர் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தாய்லாந்து படம். இயக்குனர் எக்காசாய் உக்ராங்தம் திருநங்கைப்பற்றி எடுத்த மிக உணர்வுபூர்வமாண படம். குத்து சண்டை வீரனான கதை நாயகன் எப்படி பெண்பாலாக மாறி உலக புகழ்பெற்ற கதாநாயகன் ஆகின்றான் என்பதே கதை. உலக திரைப்பட விருதுகள் பல பெற்றுள்ளது

டோக்கியோ ஸ்டோரி ஜப்பானிய மொழி திரைப்படம்; இயக்குனர் யசுஜிரோ. வயதான காலத்தில் எல்லாரும் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவுகளுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். இக்கதையில் வரும் முதியவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளைத் தேடி டோக்கியோ செல்கின்றனர். இயலாத சூழலில் திரும்புகின்றனர். அவசர உலகில் வாழும் உறவுகள் எப்படி உறவுகளை சந்தைப்பொருளாக பார்க்கின்றன என உணர்ச்சிபூர்வமாக கூறும் படம்.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

மலையாள இயக்குனர் கமல் அவர்களால் மலையாள திரைப்படத்தின் தந்தையான கே.சி டேனியலின் பற்றிய உண்மை கதை செல்லுலாய்ட். 2000 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் விருது பெற்ற திரைப்படம். தாதா சாகிப் பால்கே அவர்களிடம் சென்று படம் எடுக்க பயின்று பல பொருளாதார சமூக சிக்கலுக்கு இடையே எடுக்கப்பட்ட படம். படத்தினை வெளியிடுகையில் ஏற்பட்ட சாதி கலவரத்தில் படம் பெட்டிக்குள் சுருண்டது. மலையாளத்தின் முதல் படமே சாதியின் பெயரால் தடைப்பட்டது. பின்னர் கேசி டேனியல் பிறந்த ஊரான கொட்டாரம் வந்து பல் மருத்துவத் தொழில் மூலம் வாழ்க்கை நடத்துகின்றார். எழுத்தாளர் சேலங்காட் கோபாலகிருஷ்னனின் தொடர் முயற்சியால் மலையாளத்தில் முதல் சினமா எடுத்ததனால் கிடைக்கும் விருது அவரது கடைசி மகனிடம் வழங்கப்படுகின்றது.

வங்காளத்தில் பிரபலமான எழுத்தாளர் படத் தயாரிப்பாளர் இயக்குநர் மிருனாள் சென் இயக்கிய படம் “மிஸ்டர் மிசஸ் அய்யர்”. கல்கத்தாவிலிருந்து தனியாக வரும் ஓரு பிராமண பெண் தன்னுடன் வரும் ஆடவன் இஸ்லாமியர் என அறியாமல் அவருடைய உதவியால் பல இன்னல்களை தாண்டி சென்னையிலுள்ள தன் கணவருடன் இணைகின்றார். இந்தியரின் பொதுபுத்தி பாதிப்பால் முதலில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டாலும் பின்னர் வேற்றுமையை களைந்து ஒற்றுமையாக இருப்பதே யதார்த்தம் என்பதை உணர்த்துகிறார்.

“ரைஸ் பீப்பிள் “கம்போடியா படம். இயக்குநர் ரிதி பான். கம்போடிய நாட்டு அரசின் சர்வாதிகாரப்போக்கில் சாதாரண விவசாயிகளை அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். இக்கதையில் ஏழை விவசாயி ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு மகள்களுடன் தன் 14 பிளாட் அளவுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார். அவரது வாழ்வியலையும் அவரது அச்சத்தையும் இப்படம் விவரிக்கின்றது .விவசாயத்திற்கும் விவசாயிக்குமான உறவு என்பது வெறும் உழைப்பவனுக்கும் உழைப்புகருவிக்குமான உறவு அல்ல அது; உணர்வுகளில் பின்னப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இன்றைய அரசாங்கத்தற்கு கார்ப்பரேட்டுகளின் மொழி புரியும் விவசாயிகளின் மொழி புரிவதேயில்லை என்பதை விவரிக்கிறது.

தி சைக்கிளிஸ்ட் இயக்குனர் மோஸன் மக்மல் பஃப் இயக்கிய ஆப்கன் படம் “தி சைக்கிளிஸ்ட்”. உலகின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. நசிம் கடின உழைப்பாளி தன் மனைவி யின் மருத்துவ செலவுக்காக இடைவிடாது 5 நாள்கள் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்க, மகன் ஜாமியின் உதவியுடன் முடிவில் ஏழு நாட்கள் கழித்தும் உணர்வில்லாமல் ஓட்டிக்கொண்டே இருக்கிறார். நோயாளி தாயை வரும் பணம் கொண்டு காப்பாற்றுகின்றார் மகன். இப்படம் உலக அளவில் பல விருதுகளை வென்றுள்ளது. எந்தவிதமான சேமிப்பு பாதுகாப்பு இன்றி ஓய்வின்றி உழைத்து, அந்த உழைப்பே தனது இயல்பாகி போகும் ஏழை உழைப்பாளிகள் பற்றிய கதை.

“மார்டன் டைம்ஸ்” சார்லி சாப்லினால் 1935 ல் எடுக்கப்பட்ட மௌன மொழி திரைப்படம். உழைப்பே தனது சுபாவமாக மாறிப்போன தொழிலாளி் எப்படி உழைப்பின் மூலம் இயந்திரமாகின்றான். வாழ வழியின்றி அலைகின்றான் என்பதை சிரிப்புடன் சிந்திக்க வைக்கிறார் சாப்ளின். கிடைக்கும் வேலைகளை மாறி மாறி செய்து வருகையில் நாயகியை சந்திக்கின்றார் சாப்ளின். வேலை தேடித் தேடி அலைந்து முடிவில் போலீஸிடம் இருந்து தப்பி இருவரும் வெளியேறுகின்றனர். 80 வருடங்களுக்கு முன்பே எந்த வசனங்களும் அல்லாமல் சிரிக்க சிரிக்க முதலாளித்துவமும் தனியார்மயமும் எப்படி உழைப்பாளி மக்களை இயந்திரங்களாக உருவாக்குகின்றன என்பதை சொன்ன படம்.

மக்களுக்காக மக்கள் முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்துக் கொள்பவர்கள் கம்யூனிஸ்டுகள். திரைப்படங்கள் வழியே சென்று மக்கள் மனங்களை மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கிய தமிழக அரசியல் களம் போலவே, ஆப்பிரிக்க நாட்டு பழங்குடியின மக்களின் மூடபழக்கவழக்கங்களை மாற்றிட முயன்றிருக்கிறார் “மூலாத்” திரைப்படத்தின் இயக்குநர் உஸ்மான் செம்போன்.

ஆண்கள் செய்து கொள்ளும் சுன்னத் போலவே பெண்களும் செய்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தினால் சிறுமிகள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இது போன்று தன் மகளுக்கும் சுன்னத் செய்ய வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால் அதனை ஏற்க மறுக்கிறாள் படத்தின் நாயகி கோலே. இதனைக் கண்டு ஈர்க்கப்பட்ட சிறுமிகள் நாயகியிடம் ஒன்றிணைகிறார்கள். இச்செயலால் வெகுண்ட அவளது கணவனால் சாட்டையடிக்கு உள்ளாக்கப்படுகிறாள் நாயகி கோலே. இத்தகைய இன்னல்களை புறந்தள்ளி உலக நடப்புகளை வானொலி வழியே அனைவரையும் கேட்கச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறாள் கோலே. இதனைக் கண்ணுற்ற பழமைவாதிகளால் வீடுகள் தோறும் உள்ள வானொலிகள் உடைக்கப்படுகின்றன. இச்செயல்களால் நாயகி கோலே ஊக்கம் கொண்டாளேயன்றி பின்னடைவாகவில்லை. இறுதியாக மக்கள் மனங்களில் வெற்றி கொண்டவளாக வீடுகள் தோறும் டிவி ஆன்டெனாக்கள் தோன்றுவது போல காட்டப்படுவது இயக்குநரின் கருத்து வண்ணத்தை காட்டுகிறது.

பெண்களுக்கு எதிரான கருத்துகளும் அவர்களை நுகர்வுப் பண்டமாக பார்ப்பதுமான விசயங்கள் சமூகங்களிலும் மட்டுமல்லாது மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய அரசுகளே அதற்கு மாறாக மதத்தின் துணை கொண்டு ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களிடமே மண்டி கிடக்கிறது என்பதனை காட்டும் விதமாக நடந்த உண்மை நிகழ்வை கொண்டு வெளிச்சம் போட்டு காட்டுகிறது “ஒசாமா” ஆப்கன் நாட்டு திரைப்படம். தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஆப்கன் நாடு அங்கே ஆண் துணை இல்லாமல் வாழ்க்கை நகர்த்தி வரும் பெண் தனது வயதான தாயையும் கவனித்துக் கொண்டு பூப்படையாத தன் மகளையும் பல்வேறு துன்பங்களுக்கிடையே வளர்த்து வரும் சூழலில் தனது அன்பு மகளை பூப்படையா மகளை தாலிபான்கள் அவர்களது பயிற்சி பெறும் கூடத்திற்கு பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு அங்கே அவளுக்கு தண்டணை தரப்ப்படுகிறது என்ன தண்டணை தெரியுமா?

70வயது முதியவருக்கு அப்பெண் பூப்படைய செய்வதற்காக மனைவியாக்கப்படுகிறாள். படம் பார்த்தவர் நெஞ்சங்களை பதற வைத்து இனி ஒரு போதும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடை நில்லாது போராட வேண்டும் என்கின்ற தூண்டுதலை உருவாக்கியது. இதனாலேயே பல விருதுகளை பெற்றது என்பதில் வியப்பதுமில்லை.

“பர்சானியா” இந்தி மொழிப்படம் . 2002 குஜராத் மாநில கலவரத்தின் கொடிய முகத்தை காட்டும் படம் இயக்குனர் ராகுல் தோலக் 2006 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பெற்ற படம். சிறந்த இயக்குனருக்கான விருது பெற்ற படம். ஆனால் இது வரை குஜராத் மாநிலத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ள படம்.

அகமதாபாத்தில் உள்ள காலனி ஒன்றில் இந்து முஸ்லீம் சீக்கியர் என்று பலவகை மததினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் .குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு நடைப்பெற்ற நேரத்தில் எல்லா இடங்களிலும் கலவரங்கள் ஏற்பட்டன. அதில் பெரும்பாலான முஸ்லீம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இங்கு இந்துக்கள் பூணூல் இல்லாதவர்கள் விரட்டப்பட்டனர். அதில் சைரஸ் குடும்பமும் ஒன்று. அவரது மகன் பர்சான் சிறந்த கிரிகெட் வீரன் காணாமல் போகிறான். சைரஸ் போலீஸ் நிலையத்தல் புகார் அளிக்கும் போது அவரை பின்னால் உள்ள பிணவறையில் தேட சொல்கின்றனர் ; நகரம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிகின்றது. மத்திய அரசால் மனித உரிமை விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் .

“தி ரோட் ஹோம்” சீன இயக்குனர் ஷாங்யுமு இயக்கியப் படம். உலக அளவில் பல விருதுகள் மற்றும் பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளி சிங்கம் விருதும் பெற்றுள்ளது. அன்பும் காதலும் எந்த பருவத்திலும் வாழ்க்கையில் கிடைப்பது வாழ்வின் அற்புதம். கதையின் கதாநாயகன் ஷாயுங் ஆசிரியராக பணியாற்றும் கிராமத்தின் நாயகி் ஷாவோ. இருவரின் மகன் யுசெங்.

நாயகன் இறந்ததும் அவரின் உடலை 40 கி்மீ கைகளில் சுமந்தே எடுத்துவர ஷாவோ விரும்ப அதை மகன் நிறைவேற்றுகின்றார். தாங்கள் நடந்த காதலித்த இடங்களில் அவரின் மிக முக்கியமான உணர்வுகள் நிறைந்தவை. அம்மாவின் உணர்விற்கு மதிப்பளிக்கின்றார் , மேலும் தன் தந்தையாரை போன்று அவர் தாயாரின் காதில் விழுமாறு வகுப்பில் பாடம் எடுக்கின்றார். வாழ்க்கையில் காதலுக்கென்று ஒரு தனித்த அத்தியாயம் இருக்கின்றது அது எல்லார் வாழ்விலும் உண்டாகும்உண்டாகும்.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

இயக்குனர் சத்யஜித்ரே இயக்கிய வங்காள மொழிப்படம் சாருலதா. இப்படம் 1965 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 15 வது பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றுள்ளார். பெண் உளவியலை மையமாக கொண்ட படம். நாயகி சாருலதா கற்பனைத் திறனும் கலைத் திறனும் கூடிய பெண். நிறைய புத்தகங்கள் வாசிப்பது என பொழுதைக் கழிக்கின்றாள். தன் கணவரின் தம்பியுடன் சாருலதா இலக்கியம் குறித்து கலந்துரையாட செய்கின்றார் அவரின் தூண்டுதலால் தனது முதல் புத்தகத்தை வெளியிட அப்போது தான் தன் மனைவியின் இலக்கிய தாகம் கணவருக்கு புரிகின்றது . பிறகு கணவருடன் மனைவியுடனான புரிதல் துவங்குகின்றதை சித்திரிப்பது “சாருலதா”.

 

ஆப்பிரிக்கா கண்டத்து சாட் நாட்டின் இயக்குனர் மகமத் சாலே ஹாரூண் எடுத்தது அபோனா. பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் நிறைந்த சூழலில் பெற்றோர் குழந்தைகளிடம் அன்பாய் அரவணப்பாய் இருக்க நினைத்தாலும் பல நேரங்களிலில் அது முடியாமல் போகின்றது. குழந்தைகளுக்கு தந்தைதான் முதல் ஹீரோ. இப்படம் தந்தையை தொலைத்த இரு சிறுவர்கள் பற்றியது. தாய் அவர்களை ஒரு விடுதியில் சேர்க்க ஒரு சிறுவன் இறந்து விட தாயைத்தேடி வாய்பேச இயலாத சிறு பெண்ணுடன் வரும் சிறுவன் தாய் மனநலகாப்பகத்தில் இருப்பது கண்டு அவளை வீட்டிற்கு அழைத்து வந்து காப்பாற்றுகின்றான் . உலகதரம் வாய்ந்த இந்தப் படம் மிக ஆழமான உணர்வுபூர்வமானது.

“டிராவலர்ஸ் அண்ட் மெஜிசியன்ஸ்” பூடான் நாட்டின் இயக்குநர் கியன்ஸி்நோர்பு இயக்கியது. ஆயிரம் ஆசிரியர்களும், புத்தகங்களும் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடத்தை நல்ல பயணம் கற்றுக் கொடுக்கும். படத்தின் நாயகன் தாந்துபு மலைகிராமம் ஒன்றில் பணியாற்றுகிறான். அமெரிக்கா சென்று வாழும் கனவில் தினமும் அழைப்பை எதிர்பார்க்கும் நபர். அந்த அழைப்பு வந்ததும் தலைநகரத்தை நோக்கி கிளம்புகின்றான் .செல்லுவதற்கு வாகனத்தை எதிர்நோக்கி காத்திருக்க ஒரு புத்த துறவி வருகின்றார். ஒரு முதியவரும் வருகிறார். புத்த துறவி காலத்தை கடத்த ஒரு கதை ஒன்றை சொல்ல தொடங்குகிறார்; மூவரும் ஒரு லாரியில் பயணம் தொடங்க வழியில் ஒரு தந்தையும் மகளும் ஏறுகின்றனர் அந்த பெண் தாந்துபுவை விரும்புகின்றாள். தாந்துபு காதலில் விழ படம் முடிகின்றது; பயணம் தொடர்கின்றது. யாருடனும் ஒட்டாமல் வாழ நினைக்கும் நாயகன் முடிவில் அன்பாய் பழகவும் இயற்கையை ரசிக்கவும் விட்டுக் கொடுக்கவும் கற்றுக் கொள்கின்றான்.

ஈரானிய இயக்குனர் பாபக் பயாமியின் “சீக்ரெட் பேலட்”.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கசிங்கம் விருது, சிறந்த இயக்குனர் விருது பெற்றுள்ளது. தேர்தல் வழியான ஜனநாயகப் பாதை என்பது, வாக்களிப்பது மட்டும் அல்ல; கடினமான பணியும் கூட. ஈரானில் உள்ள தீவு ஒன்றில் தேர்தல் பணிக்காக செல்லும் ஒரு பெண் சந்திக்கும் அனுபவங்கள் தான் இப்படம் . வாக்களர்களை அவர் கைக்கொள்ளும் விதம் அவரின் நேர்மை அருமை. பல நெருக்கடிகள் பயணங்களை மேற் கொண்டு அங்குள்ள பெண்கள் முதியவர்கள் உட்பட கிராமத்தினரை சந்தித்து வாக்கு சேகரிக்கின்றார் ,முடிவில் துணைக்கு வரும் வீரரே வருடத்திற்கு மூன்று முறை தேர்தல் வரக்கூடாதா என வினவும் அளவிற்கு அர்பணிப்பாக பணிச்செய்து திரும்புகின்றார்

உக்ரேன் ரஷ்யா உடனான போர் வெடித்த நேரத்தில் இந்த “குட் பை லெனின்” படம் ஒரு கனத்த நினைவைத் தருகின்றது. ஜெர்மானிய படமீது. இயக்குனர் உல்ப்ஹாங் பெக்கர். உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்ற படம்.

கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் ஒரு குடும்பத்தின் தந்தை மேற்கு ஜெர்மனிக்கு செல்கிறார். சோசலிச அரசால் மக்கள் தேவைக்காக கவுரப்படுத்தப்பட்ட ஒரு தாய் தன் நாட்டில் ஏற்படும் கிளர்ச்சியால் மன வேதனை அடைந்து மனம் அதிர்ச்சி் அடைந்து கோமாவினால் மருத்துவமனையில் இருக்கின்றார். மகன் அலெக்ஸ் தாயைக் கவனித்து்கொள்கின்றார். சகோதரி ஒரு உணவு விடுதியில் பணிபுரிய பல கலாசார மாற்றங்கள் நிகழ்கின்றது.

சோவியத் சிதையுண்டு 25 ஆண்டுகள் ஆன பின்பும் அதன் நிலையை எண்ணி வேதனையடையும் பல கோடி மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கிழக்கு மேற்கு ஜெர்மனியின் இணைப்பிற்கு பின்னரே தாயார் சுய நினைவிற்கு வர மருத்துவரின் ஆலோசனைப் படி கலாச்சார மாற்றங்களை அவரிடமிருந்து மறைக்க முயல கடைசியில் அவர் அறிந்து கொள்கின்றார். மறுபடி உடல் கெட்டு இறக்கும் கணத்தில் தன் கணவரை கடைசியாக காண விரும்புகிறார்.

“மால்கம் எக்ஸ்” ஆப்ரிக்க திரைப்படம். இயக்குனர் ஸ்பைக் லீ. ஒரு இளைஞர் சராசரியாக அதிக பலவீனங்களுடன் இருந்த மால்கம் எப்படி ஒரு தலைவனாகின்றான் தன் சமூகத்தற்காக போராடி அதன் விளைவாக கொல்லப்படுகின்றான் என்பதே கதை.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

மால்கமின் தந்தை சிறு வயதிலேயே வெள்ளையர்களால் கொல்லப்படுகின்றார். தாய் ஒரு வெள்ளைக்கார இனத்தவர். ஆனால் அவரும் வெள்ளை இனத்தவரை வெறுக்கின்றார்.
மால்கம் சிறு வயதில் பல கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டு சிறை செஅன்று கைதி ஒருவரால் விளக்கம் பெற்று திருந்தி, எலிஜா முகமது என்ற கறுப்பின விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து முக்கிய தலைவராகின்றார். 39 வயதான மால்கம் தன் மேடை பேச்சு நிகழ்வில் சுட்டுக்கொல்லப்படுகின்றார் .

கறுப்பின மக்கள் விடுதலைக்காக போராடிய ஒரு தலைவரை நாடு இழந்தது . அம்பேத்கரைப் போலவே மால்கமும் தனது மார்க்கத்தை விடுத்து சகோதரத்துவம் பேணும் இஸ்லாத்தை தழுவினார். தனது பேரையும் மால்கம் x என மாற்றிக்கொண்டார். தைவான் நாட்டு இயக்குனர் சாய் மிங் லியாங் இயக்கிய படம் “வாட் டைம் இஸ் இட் தேர்”. அவசர உலகில் இயந்திரமாகிவிட்ட சூழல், இழப்புகளை அல்லது நெருங்கிய உறவுகளை பிரிந்து விட்ட நேரத்தில் மனதில் ஏற்படும் மோசமான பலவீனம் பற்றிய படம்.

கேங் ஒரு கடிகார கடை நடத்தி வருகின்றார். அவருடைய தந்தை திடீரென இறந்து விட அவரது இழப்பு ஒரு பயம் கலந்த தனிமையை தருவதை கேங்கும் அவரது தாயாரும் உணர்கின்றனர். கடைக்கு வரும் சியி என்ற பெண், தான் வெளிநாடு செல்லவிருப்பதால் தனக்கு இரு நாடுகளின் மணிகாட்டும் கேங் அணிந்த கடிகாரம் தனக்கு வேண்டும் என்று கூறி வாங்கி செல்கிறார். கேங்கின் தாய் கணவர் திரும்பி வந்து விடுவார் என்ற கனவில் காத்திருக்க, கேங் தன் காதலி சியி பாரீஸ் நகரில் இருப்பதால் அந்த நேரத்தை தன் வீட்டு கடிகாரத்தில் செட் செய்ய, அதை தன் கணவர்தான் மாற்றியதாக கேங்கின் தாயார் நினைக்க, கேங் தனது காதலி சியி இன் நினைவால் வாட, சியி தனது நாட்டைப் பிரிந்த நினைவில் மனப் பிரம்மையால் தவிக்கின்றாள். பின்னணி இசையே இல்லாத இப்படம் இயற்கை ஒலியால் வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளது.

“காமோஷ் பானி” ஒரு பாகிஸ்தானியப் பெண் குறித்த உருது மொழி திரைப்படம் இப் படத்தின் இயக்குனர் சபிஹாசமர் ஒரு பெண். 2003 ல் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை பெற்றது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பல இந்திய கிராமங்கள் பாகிஸ்தானின் பகுதியானது. பிரிவினைகளின் போது எந்த வீடானாலும் நாடானாலும் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான்.

இப்படத்தில் ஸர்க்கி எனும் கிராமத்தில் வாழும் ஆயிஷா அவர் மகன் சலீம், ஜூபைதாவை காதலிக்கும் சலீம் மத அடிப்படை தீவிரவாத அமைப்பில் சேர்ந்து தலைவனாகிறான். அவனுடைய தாய் ஆயிஷா இந்தியாவிலிருந்து அகதியாக வந்து ஓரு இஸ்லாமியரை திருமணம் செய்த சீக்கிய பெண். அவர் தான் வைத்திருந்த தங்க சங்கிலி ஒன்றை ஜூபைதாவிற்கு தருகின்றார் அதில் அவர் குழந்தை கால புகைப்படம் ஒன்றுள்ளது. ஒரு சீக்கியர் தன் சகோதரியைத் தேடி வருகின்றார் தன் தந்தை சாகும் தருவாயில் இருப்பதாகவும் தன் சகோதரியை தேடி வந்ததாக கூற, ஆயிஷாவை எல்லோரும் ஒதுக்கி வைக்க துக்கம் தாளாமல் கிணற்றில் விழுந்து உயிர் தியாகம் செய்கிறார் . பாகிஸ்தானின் மதவாததிற்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இது.

“தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க்” இப்படத்தின் இயக்குனர் கார்ல் தியோடர் டிரேயர். பிரான்ஸ் நாட்டு திரைப்படம். மதமும் அரசும் ஓன்று சேர்ந்தால் சுய நலம் சார்ந்த செயல்களுக்காக சொந்த மதக்காரரைக் கூட எந்த அளவிற்கு கொடுமை செய்யும் என்பதை இயல்பாக சொல்லியப் படம். இதுஒரு மௌனப்படம் .50 வருடங்களுக்கு பின் பின்னணி இசை சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோன் தன் 17 வது வயதில் பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிராக இராணுவத்தினை ஒருங்கிணைத்து எதிர்த்து நின்று போராடினார். 19 ஆவது வயதில் ஆங்கில அரசு அவரை சிறைப்பிடித்து உயிருடன் எரித்தது. வீரம் செறிந்த இளம் நாயகி தன் கடைசி நாளில் விசாரணை என்ற பெயரில் பல விதமான கொடுமைகளையும் தாக்குதல்களையும் மதபீடத்தின் பெயரால் எதிர் கொண்டதை வலிமையாக பதிவு செய்த படம்.

“அட் பைவ் இன் தி ஆப்டர்னூன்” தன் 17 வது வயதில் இப்படத்தை இயக்கிய பெண் சமீரா மக்மல்பஃப். இவரின் தந்தையும் புகழ்பெற்ற ஈரான் இயக்குனர். பல சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது. நாயகி நோக்ரா தன் தந்தை மற்றும் அண்ணனின் கைக்குழந்தை அண்ணி ஆகியோருடன் உடைந்த விமானத்தின் பாகத்தில் வாழ்ந்து வருகையில் தண்ணீர் தேடி செல்கின்றார். அப்போது ஒரு இளைஞர் ஒருவருடன் பழக அவரால் கவிதை எழுதப் பழகுகிறார். பள்ளியில் ஆசிரியரின் கேள்விக்கு தான் ஒரு அதிபராக வேண்டும் என்ற கனவை கூறுகிறார். நண்பரான இளைஞர் அவர் கனவுக்காக உதவிகள் செய்கிறார். பசியால் நீர் இல்லாமல் கைக்குழந்தை இறந்து விட அவர்கள் இடம் பெயர்ந்து கொண்டே போகின்றனர்.

தி பியானோ நியூசிலாந்து திரைப்படம், இயக்குனர் ஜேன்காம்பியன் என்ற பெண்மணி. அடா பேச முடியாத பெண். திருமணம் முடிந்து தன் பெண் ஃப்ளோரா உடனும் சீதனமாக தான் விரும்பும் பியானோ உடன் நியூசிலாந்து கடற்கரைக்கு கணவன் ஸ்டூவர்ட் வீட்டிற்கு வருகின்றார்வருகின்றார். கணவர் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி. பைன்ஸ் அத்தீவின் பழங்குடி தலைவன் .

பியானோ மேல் விருப்பம் கொண்ட பைன்ஸ், தன் நிலத்திற்கு பதில் பியானோவை வாங்குகிறார். கற்று தர அடா ஒப்புக்கொண்டு கற்பிக்கின்றார். பைன்ஸ் அடா மேல் விருப்பம் கொள்ள முதலில் மறுக்கும் அடா கடைசியில் விரும்ப ஆரம்பிக்கறார். இவ்விவரம் கணவருக்கு தெரியவர அடாவின் சுண்டு விரலை வெட்டிவிடுகின்றார். பியானோவின் கட்டையில் தன் நிலையை விளக்கி தன் வெட்டுப்பட்ட விரலுடன் மகள்மூலம் பைன்ஸுக்கு அனுப்பிவிடுகின்றார். முடிவில் அடா, ஃப்ளோரா, பைன்ஸ் மூன்றுபேரும் பியானோவுடன் கப்பலில் தீவை விட்டு
வெளியேற தான் மிகவும் நேசிக்கும் பியானோவை கடலில் எறிந்துவிட்டு பயணிக்கின்றனர்.

என்னைப் போன்ற புதியவர்களுக்கு புரியும் வகையில் சுவாரசியத்தோடு படம் குறித்த தகவல்களோடு மிகுந்த சிரத்தை எடுத்து தான் பார்த்த ரசித்த படங்களை சினிமா பற்றிய சிறந்த நூலாக எழுதி இருக்கும் களப்பிரனுக்கு வாழ்த்துகள்.இது ஒரு பாரதி புத்தகாலய வெளியீடு.

நூல்: செல்லுலாய்டின் மாபூமி
ஆசிரியர்: களப்பிரன்
விலை: 150/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தொடர் 22: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



மேற்கு ஐரோப்பிய சினிமா

துருக்கிய சினிமா மிகவும் அறிவு ஜீவித்தனமாயிருக்கிறது. மிக மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் துருக்கிய திரைப்படங்கள் சில மிக மிக ஆழமான பொருள் பொதிந்தவை. மனிதனின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அவற்றின் கேள்விகளையும் உள்ளிட்ட கதையாடல்கள் ஊடே அவற்றுக்கான பதில்களை தாமாகவே மிகவும் சாவதானமான நடையில் தேடிக் கொண்டவையாக இருப்பவை. யோசிக்கும்போது, ஒரு வித “ மணிகவுல் ” தனமான சினிமாவாக சில துருக்கித் திரைப்படங்கள் படுகின்றன. அப்படியிருப்பதுவே அவற்றின் மேன்மை. துருக்கிய சினிமாவின் அரிதான திரைப்படங்கள் சிலதைத் தயாரித்து இயக்கி நடித்து, சர்வதேச அளவில் பெயரும் பாராட்டும் புகழும் பெற்றவர் நூரி பில்கெ சீலான் (NURI BILGE CEYLAN). இவரது மனைவி எப்ரு சீலானும் (EBRU CEYLAN) இவரோடு இவரது படங்களில் நடித்து வருபவர்.

Nuribilgeceylan.jpg
NURI BILGE CEYLAN

நூரி துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் 1959 – ல் பிறந்தவர். பொறியியல் பட்டப் படிப்பை முடீத்த இவர் இஸ்தான் புல் நகரின் மிமர் செரியன் (MIMAR SERIAN ) பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டுகள் திரைப்பட ஆக்கத்துக்கான படிப்பை முடித்துத் தேறியவர். இவரது மனைவி எப்ருவும் அதே சர்வ கலா சாலையில் திரைப்படிப்பு படித்து தேறியவர். நூரி 1995-ல் எடுத்த “ கோஸோ ” ( KOZO ) எனும் குறும்படம் புகழ்பெற்றது. பிறது இவர் கசபா ( KASABA – 1997 ), மாயிஸ் சிகின்டிஸி ( MAYIS SIKIN – NAYIS SIKINTISI – 1999 ), உஸக் (UZAK – 2002 ) க்ளைமேட் (IKLIMLER – 2006 ) ஆகிய திரைப்படங்களைச் செய்திருப்பவர். உளிக் படத்தில் முயன்ற தனித்தன்மைகளை நூரி, க்ளைமேட் படத்தில் தான் முழுமையாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார்.

துருக்கிய மொழியில் IKLIMLER என்று சொல்லப்படம் CLIMATES நவீன உலக சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இப்படம் ஆக்கப்பட்ட விதம் குறித்தான சிறிய ஆவணப்படம் ஒன்றில், படத்தின் வெவ்வேறு மூன்று காட்சி நிகழ்வுகளை தூரி படமாக்கி இயக்கும் விதத்தைக் காண்கையில், அவர் ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு நடிப்பு அசைவையும் எவ்வளவுக்கு எளிதாகவும் அதே சமயம் கால விரயமின்றி கச்சிதமாயும், காட்சி அரங்கேறும் சமயம் – எதிர்பாராத சிறு குறுக்கீடுகளை சமாளிக்கும் விதமும் துல்லியமாக தெரிபவை.

“ க்ளைமேட்ஸ் ” ஓர் இத்தாலியல் ( EXISTENTIALIST ) கோட்பாட்டை உட்கொண்டு உள்ளடக்கிய காவியம். துருக்கியின் புற நகர்ப் பகுதியின் கோடை, மழை, குளிர் – பனிக்காலமென்ற மூன்று பருவ காலங்களின் போது நிகழும் ஓர் ஆண் – பெண் உறவின் சிதறலையும் அது ஒன்று சேருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் கதையைக் கொண்டிருப்பது. தங்களுக்கு கிடைத்து பிறகு விலகிச் செல்லும் வாழ்க்கையின் பத்தை மீண்டும் தக்க வைக்கும் முயற்சியில் மனப்போராட்டம் கொண்ட ஓர் ஆண் – பெண் உறவைப் பற்றிய அரிய படம் க்ளைமேட்ஸ். மிக உயரிய நடிப்பாற்றலின் வெளிப்பாடும் திகைக்க வைக்கும் காமிரா கோணங்களும் இக்கதையை நகர்த்துகின்றன.

இஸா ( ISA )  வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் கல்லூரி போதகரும், உயர்பட்டப் படிப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு காஸ் ( KAS ) எனும் நகரில் இருப்பவன். இவனது பெற்றோர்கள் சற்று தொலைவிலுள்ள இடத்தில் வசிப்பவர்கள். இவனது காதலி பஹார் ( BAHAR ) . இவள் தொலைக்காட்சிப் படத் தயாரிப்பு நிறுவனமொன்றில் கலை இயக்குனராக பணியிலிருப்பவள். காஸ் நகரில் இஸா ஒரு விடுதியிலிருக்கையில் பஹார் அவனைச் சந்திக்க வருகிறாள். அது நல்ல கோடைகாலம். வெயில் அதிகம். நகரின் புறப்பகுதியிலிருக்கும் மிகப் பழைமையான அசீரிய – பர்ஷிய நகர எச்சமாய் நிற்கும் கட்டிடத்தின் பிரம்மாண்ட தூண்களை இஸா காமிராவில் படமெடுக்கிறான். பஹார் கவனித்தபடி அலுப்பால் பொறுமையிழந்து கொண்டிருக்கிறாள். ஆனால் தனக்கு அலுப்பு எதுவுமில்லை என கூறிவிட்டு தூரமாய் போய் நிற்கிறாள்.

பிறகு அவர்கள் ஸ்கூட்டரில் வெகு தூரத்திலுள்ள அவ்வூர் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள். இஸா கடலில் நீராட, பஹார் மணலில் அரை நிர்வாணத்தில் சூரிய குளியல் எடுத்த நிலையில் கண்மூடி மல்லாந்து படுத்திருக்கிறாள். இஸா அவளை நெருங்கி, தன் கை கால்களில் படிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு அன்போடு அழைத்து முத்தமிடுகிறான். அவள் தன்னை மறந்து கிடக்கையில், இஸா விளையாட்டாக மணலை அள்ளி அவளை கழுத்து வரை மூடுகிறான். அவளும் அவனது விளையாட்டை ரசித்தபடி கண் மூடிக் கிடக்கிறாள். திடீரென்று அவன் மணலையள்ளி அவளது மூக்கு வாய் தலை முழுவதையும் மூடி மணல் சமாதி கட்டி விட, பஹார் அலறித் துடித்து எழுந்து விடுகிறாள். இதை, வெறும் விளையாட்டா, அல்லது வினையாவென்று அவளாலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை நம்மாலும் நினைக்க முடியவில்லை.

அடுத்து அவர்கள் கடற்கரையிலிருந்து விடுதியை நோக்கி மலைப் பாதையில் ஸ்கூட்டரில் வேகமாய் வந்து கொண்டிருக்கையில், பின்னால் உட்கார்ந்து வரும் பஹார், சட்டென்று இஸாவின் கண்களை இறுகப் பொத்துகிறாள். அவன் அலறியடித்து ஸ்கூட்டரை பாலன்ஸ் இழந்து கன்னா பின்னாவென திருப்பியோட்ட அது, “ ஸ்கிட் ” டாகி விழுகிறது. அவன் எழுந்து அவளைத் திட்டி அடிக்கிறான். அவளது அந்த செய்கையால் இருவருமே இறந்து போயிருக்க வேண்டியவர்கள் என்று திட்டுகிறான். அவளைத் தூக்கி கடலில் அமுக்கப் போகிறான். பஹாரும் பதிலுக்கு அவனை அடித்தும் காலால் உதைத்தும் வைக்கிறாள். பிறகு மௌனமாக நடந்தே போகிறாள். அவனிடமிருந்து அவள் பிரிந்து தன் ஊருக்குப் போய் விடுகிறாள். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவர்கள் உறவில் அது மேலும் பெரிதாகிறது.

இதையெல்லாம் பொருட்படுத்தாது இஸா புத்தகக் கடையொன்றில் தன் நண்பன் குய்வன் (GIJVEN ) எனும் பத்திரிகையாளனையும் அவனது கவர்ச்சியான காதலி செராப்பை (SERAP) யும் சந்திக்கிறான். பஹாரையும் அவர்கள் அறிந்தவர்களே. பஹாருக்கும் இஸாவுக்குமான உறவு பற்றியும் பேசுகின்றனர். தான் பத்திரிகை வேலையாய் அன்று வெளியூருக்குப் போக இருப்பதை குய்வன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட இஸா, அன்றிரவு செராப்பின் வீட்டுக்குப் போய் அவளது விருப்பத்துக்கு எதிராக நுழைகிறான். பஹாருக்கும் அவனுக்குமிடையில் உறவு விரிசலடைந்திருப்பது குறித்து மீண்டும் செராப் கேட்கிறாள். ஆண்  பெண்ணுக்கிடையில் உருவாகும் அந்தரங்க உறவு விரிசலை அறிவதில் தனக்கு ஆர்வமதிகம் என்கிறாள் செராப். இஸா அவளை நெருங்குகிறான். அவளது பலத்த எதிர்ப்பையும், முறியடிப்பையும் மீறி, இஸா செராப்புடன் வல்லுடலுறவு கொள்ளுகிறான். இஸா தன் பெற்றோர்களிடம் போகையில், “ சீக்கிரம் பஹாரை மணந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள் ” , என்கிறாள் அம்மா.

இஸாப்பிற்கு செராப்பிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வரவும், அவன் அவளிடம் போகிறான். நேற்று அவனால் வல்லுறவுக்கு உட்பட்ட செராப் இன்று தானாக முன் வந்து அவனையழைக்கிறாள். இஸா வேண்டா வெறுப்பாக இருக்கிறான்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ISHAKPASHA

அதன் பிறகு இஸா காஸ் நகரை விட்டு பழைமையான இஷக்பாஷா ( ISHAKPASHA ) எனும் நகரையடைந்து புகைப்படமெடுக்கிறான். மழைக் காலம் போய் குளிர்மிக்க பனிக்காலம் வந்திருக்கிறது. தான் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியில் பார்க்கையில் பனி மூடிய சூழலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை படமாக்க வண்டியில் வந்து இறங்கும் பஹாரைப் பார்க்கிறான் இஸா. அவன் மனம் முற்றிலும் மாறுகிறது. அவளுக்காக இளகுகிறது. அவள் வந்த பஸ் புறப்படத் தயாராகும்போது இவன் பஸ்ஸில் நுழைந்து அவளருகில் உட்காருகிறான். அவள் திடீரென விசும்பி அழுகிறாள்.

அவளை சமாதானப்படுத்திவிட்டு, இனி இருவரும் முன்பு மாதிரி இருக்கலாமென்றும், இஸ்தான் புல்லுக்குப் போய் திருமணம் செய்து கொண்டு குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழலாமென்கிறான். அவள் மேற்கொண்டு தனக்கு டெலிபோன் செய்ய வேண்டாமென கூறிவிட, பஸ் புறப்படத் தயாராகிறது. இசா போய் விடுகிறான். ஆனால் இரவு அவனது விடுதியறைக்கு பஹார் வருகிறாள். அவர்கள் உறவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இஸாவாக தூரியும், பஹாராக அவன் மனைவி எப்ருவும் சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவை காமிரா கலைஞர் கோகன் துயாகி ( GOKHAN TUYAKI ) பாராட்டும்படி செய்திருக்கிறார்.

துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் ஒருவித தார்மீக எரிச்சல், பொறாமை சண்டையெல்லாம் நிலவி வந்திருக்கிறது. கிரேக்க – ரோமானிய கலை வடிவங்களின் ஆதி கட்டுமான சிதிலங்கள் துருக்கியின் பெருமை வாய்ந்த தொல்லியல் சான்றுகளாய் நிற்பவை.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
MICHAEL CACOYANNIS

கிரேக்க சினிமாவின் நன்கறியப்பட்ட ஓரிரண்டு திரைப்படக் கலைஞர்களில் ஒருவர் மைகேல் ககோயானிஸ் ( MICHAEL CACOYANNIS ). ககோயானிஸ் செய்த இரு கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் நவீன கிரேக்க சினிமாவிற்கு பெருமை சேர்த்தவை. அவற்றில் ஒன்று, “ கருப்பு உடையில் ஒரு பெண் ” . ( A GIRL IN BLACK ). Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ் ககோயானிஸ் தமது முதல் கிரேக்கப் படம், A WINDFALL IN ATHENS “ – ஐ 1954 – ல் தயாரித்து இயக்கினார். அதன் பிறகு இயக்கி 1956 – ல் வெளிவந்த கருப்பு உடையில் ஒரு பெண் – படம் உலகுக்கு அவரை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு கிரேக்க சினிமாவையும் மைகேல் ககோயானிஸ்ஸையும், அதில் தகாநாயகியாய் நடித்த எல்லி லாம்பட்டி ( ELLI LAMBETTI ) யையும் சர்வதேச கவனம் பெறச் செய்தது. இப்படத்தின் சில சிறப்புகளில் ஒன்று இதன் படமாக்கல் முறை. இதன் கதை, இயக்குனர் ககோயானிஸை தொடர்ந்து சில காலத்துக்கு அலைக் கழித்துக் கொண்டிருந்திருக்கும் என்பது அடுத்து அவர் செய்த ஓரிரண்டு படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.

பாவ்லோ ( PAVLO ) திறமையான எழுத்தாளனாயிருந்தும் அதிர்ஷ்டமற்ற இளைஞன். அந்தோனி நடுத்தர வயதான கட்டிட பொறியியல் வல்லுனன். இருவரும் நண்பர்கள். கிரேக்கம், நிறைய சிறு சிறு தீவுகளைக் கொண்டிருப்பது. ஒவ்வொரு தீவும் தனித்துவம் கொண்டதென்றாலும், மக்களின் சிந்தனை, வாழ்வுமுறை என்பவை தீவுக்குத் தீவு எவ்வித வேறுபாடும் கொண்டிருக்கவில்லை. தீவுகளைச் சென்றடைய அழகிய பயணிகள் கப்பல்களுண்டு. அப்படியான கப்பல் ஒன்றில் பாவ்லோவும் அண்டோனியும் ஹைட்ரா ( HYDRA ) எனும் தீவுக்கு பயணித்து போய் ஒரு வாரத்துக்கு தங்கி கழிக்க விரும்பி புறப்படுகிறார்கள். தீவில் இறங்கினதுமே கூலியொருவன் அறிமுகமாகி இவர்களின் ஜங்கமங்களை தூக்கிக் கொண்டவன். அவர்கள் விருப்பப்படி பழைய வீடு ஒன்றில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்கிறான்.

அந்த வீடு ஃப்ரோசோ ( PHROSO ) என்ற நடுத்தர வயது விதவைக்குச் சொந்தமானது. அவளுடைய அழகிய இளம் பெண் மரினா ( MARINA), அவளுக்கு இளையவன் மிட்சோ ( MITSO ). அந்த பழுதடைந்த கிரேக்க வீடு போலவே, அந்த குடும்பமும் தத்தளிக்கிறது. பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும். பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இந்த நிலையில் அம்மாகாரி ஃப்ரோசோவுக்கும் பனாகிஸ் ( PANAGIS ) என்பவனுக்குமான கள்ள உறவு புதர் மறைவில் நடப்பதை சிறுவர்கள் பார்த்துவிட, அம்பலமாகிறது. கோபமுற்ற மகன் மிட்சோ, அம்மாவை தெருவில் வைத்து அடிக்கிறான். குடும்பப் பெயர் கெட்டதால், அக்காவும் தம்பியும் வெளியில் தலைகாட்டவும் முடியவில்லை.

இதையெல்லாம் பாவ்லோவும் அண்டோனியும் கவனிக்கின்றனர். அதே சமயம் பாவ்லோ மரினாவை நேசிக்கிறான். அவளும் அவன் காதலை ஏற்கிறாள். ஆனால் அண்டோனி இதை விரும்பவில்லை. ஊருக்குப் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மரினா பேரில் ஒருதலைக் காதல் கொண்ட அவ்வூர் இளைஞன் கிறிஸ்டோ வன்முறைக்குத் தயாரா கையில் மரினாவின் தம்பி மிட்ஸோ சண்டை வலித்து ரவுடிகளால் தாக்கப்படுகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை வம்புக்கிழுத்தபடியே இருக்கிறான். பாவ்லோ மரினாவைத் தன்னோடு ஏதென்சுக்கு வந்து விட கேட்கிறான். அண்டோனி, பாவ்லோ புறப்படாததால் தான் மட்டும் புறப்பட்டுப் போகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறான்.

பாவ்லோவ் படகுச் சவாரி செய்ய படகு ஒன்றை வேண்டுகிறான். கிறிஸ்டோ தனது மீன்பிடிக்கும் படகை தர முன் வருவதோடு அதனுள் கடல் நீர் புகும்படி செய்து விடுகிறான். படகு மூழ்கட்டும் என்ற எண்ணம். பாவ்லோ படகை கிளப்புகையில், கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் – பெண் குழந்தைகள் ஓடி வந்து தங்களையும் ஏற்றிச் செல்லுமாறு கேட்க பாவ்லோ சம்மதித்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு படகு வலிக்கிறான். சிறிது தூரம் போனதும் தண்ணீர் படகினுள் புகுந்து அது மூழ்கத் தொடங்குகிறது.

குழந்தைகளில் ஒரு சிறுமி கிறிஸ்டோவின் தங்கை. நிறைய குழந்தைகள் நீரில் மூழ்கி மாண்டு போகின்றன. பாவ்லோவை போலீஸ் கைது செய்து சிறையிலிடுகிறது. அவன் மீது கொலைக் குற்றம் பதிவாகிறது. மரினா கிறிஸ்டோவை கட்டாயப்படுத்தி உண்மையைக் கேட்டறிவதோடு, போலீசில் உண்மையைச் சொல்ல மிரட்டுகிறாள். குற்றமனப்பான்மை தாக்க, அவன் போலீசில் உண்மையைக் கூறி சரணடைகிறான். விடுதலையடைந்த பாவ்லோ கடற்கரையில் இவனுக்காக நிற்கும் மரினாவை எதிர்பார்ப்போடு சந்திக்கிறான்.

இந்தப் படத்தின் கதை வசனம் நடிப்பு எல்லாமே எளிமையானது. ஆனால் படமாக்கப்பட்ட முறை இசை, ஒளிப்பதிவு என்பவை பிரமிப்பூட்டுபவை. பாவ்லோவாக டிமிட்ரி ஹான் ( DIMITRI HORN) என்பவரும் மரினாவாக எல்லி லாம்பெட்டி என்பவரும் ( ELLI LAMBETTI ) சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா நிபுணர் வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் எட்டே எட்டு வாரங்களில் ஒரே ஒரு காமிராவைக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது கருப்பு உடையில் ஒரு பெண்.

 

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ZORBA THE GREEK

ககோயான்னிஸ் இயக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க கிரேக்கப் படம் “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இப்படம் ஆங்கிலமாக்கப்பட்டு சென்னை ஓடியன் தியேட்டரில் திரையிடப்பட்டது. இப்படம்  1964-ல் வெளிவந்தது. இந்தப் படத்தில் “ க்ரேட் “ ( CRETE ) என்ற கிரேக்கத் தீவின் பொது மக்களே உதிரிபாகங்களில் வியப்பூட்டும்படி நடித்திருக்கிறார்கள்.

நிகோஸ் கஸாண்ட்ஸகிஸ் ( NIKOS KAZANTZAKIS ) கிரேக்க மொழி இலக்கியத்தின் தாஸ்தாயெவ்ஸ்கி என போற்றப்படுபவர். கஸாண்ட்ஸகியின் அமர நாவல், “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இந்நாவலை திரைப்படமாக்கிய தயாரிப்பாளருள் ஒருவர், அதில் ஜோர்பாவாக நடித்த உலகப் புகழ் பெற்ற குணசித்திர நடிகர் ஆந்தனி க்வின். ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN) ஏற்கனவே “ THE VISIT “ போன்ற அற்புதமான திரைப்படங்கள் தயாரிப்பிலும் பொறுப்பேற்று நடித்த மிக உயரிய நடிகர்.

கிரேக்க தேசத்தின் பல சிறு தீவுகளில் ஒன்று க்ரேட்.. இதில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் ஒன்று தூரீந்து செயல்பாடின்றி கிடக்கிறது. க்ரேட் மோசமான வறுமையில் கிடக்கிறது. அச் சுரங்கத்தின் உரிமையாளரின் மகன் இங்கிலாந்து கப்பலில் ஏதென்ஸ் வந்து அங்கிருந்து க்ரேட் தீவுக்கு வருகிறான். கவிதை, கட்டுரைகள் எழுதும் புத்தகப் புழு அவன். நடுவழியில் சரியான மழையில் நரைத்த முடியும் மழிக்காத முகமுமாய் ஒருவன் அறிமுகமாகிறான்.

“ நான் ஜோர்பா. அலெக்சிஸ் ஜோர்பா.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் சுரங்க வேலையில் அனுபவமிக்கவன் என்பதால் இருவரும் நண்பர்களாகின்றனர். இளைஞன் இங்கிலாந்தில் வளர்ந்த கிரேக்கன். ஜோர்பா தன்னையும் சேர்த்துக் கொள்ள கேட்டு உடன் புறப்படுகிறான். இவர்கள் தீவின் நகரை நோக்கி வாடககைக் காரில் வருவதைப் பார்க்கும் ஓர் அரை லூசு “ அமெரிக்கன் வருகிறான் ” , என்று வீடு வீடாகச் சொல்லுகிறான். வறுமையில் வாடும் அந்த ஜனங்கள், அமெரிக்கன் என்றால் பணக்காரன் என்று எண்ணத்தில் “ கஞ்சிவரதப்பா ”, என்றதும், “ எங்கே வருதப்பா ” , என்று அலை பாய்கின்றனர்.

தீவில் சிறு விடுதி வைத்து நடத்தும் ஹார்டென்ஸ் ( HARTENSE ) என்ற வயதான ஃபிரெஞ்சுக்காரி ஒருத்திக்கு அறிமுகமாகி அவளது இடத்தில் தங்குகின்றனர். இளமையில் பாரிஸில் காபரே நடனக்காரியாக இருந்த அந்த பணக்காரிக்கு நிறைய ஆண் உறவு இருந்தது. எல்லாம் கப்பல் தலைவர்கள். கடைசியாக ஒரு கப்பல்காரன் அவளை விதவையாக்கி இந்தத் தீவில் விட்டுவிட்டு இறந்து போனான். ஹார்டென்சுக்கு துணையாக அரை லூசும், மாலுமி விட்டுச் சென்ற “ காணவரோ ” ( CANAVARO ) என்ற கூண்டுக் கிளியுமிருந்தனர். ஊரில் லோலா என்ற ஓர் அழகிய இளம் விதவை. லோலாபேரில் ஊரில் பலருக்கும் காம இச்சையுண்டு. இளைஞனின் சுரங்கம், நில புலன்களை மாவ்ரண்டோனி என்பவன் பார்த்துக் கொள்ளுகிறான். இவனது மகன் பாவ்லோவுக்கு லோலா மீது பயங்கர காதல். ஆனால் அவள் இவனை விரும்பவில்லை.

ஹார்டென்சுக்கு அந்த வயதிலும் ஓர் ஆண் துணை தேவைப்படுகிறது. அதை, ஜோர்பா பூர்த்தி செய்கிறான். தூர்ந்து சரிந்து பாழாகிக் கிடக்கும் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் புத்தியிர் பெற உள் கட்டுமானத்துக்கு ஏராளமான மரங்கள் தேவைப்பட்டன. அருகிலுள்ள மலையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவை அவ்வூர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உரியவை. சுரங்கம் மீண்டும் உயிர் பெற்றால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி ஜோர்பாவும், குட்டி முதலாளியும் அனுமதி பெற்று மரங்களைக் கீழே இறக்க திட்டமிடுகின்றனர்.

இதனிடையில் குட்டி முதலாளிக்கும் விதவை லோலாவுக்கும் காதல் உறவு ஏற்படுகிறது. அவளை நெருங்கும்படி ஜோர்பாவும் முதலாளிக்குத் தூபமிடுகிறான்.

முதல் கட்டமாய் கொஞ்சம் பேர் சுரங்கத்துள் இறங்குகிறார்கள். சுரங்கம் மீண்டும் குமுறி சரிகிறது. இதனால் மிகவும் மனம் தளர்ந்த முதலாளியை உற்சாகப்படுத்தும் பொருட்டு ஜோர்பா நடனமாடுகிறான். இந் நடனமும் அதன் பின் ஒலிக்கும் ஸ்பானிஷ் கிட்டார் வாத்திளய இசையும் மிக மிக ரம்மியமானது மட்டுமல்ல, முக்கியமும் ஆகும். படத்தின் ஜீவன் போன்றது. ZORBA என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதுகெலும்பு போன்றது இந் நடனமும் இசைவும். அதற்கான கிரேக்க நாடோடி கிட்டாரின் பெயர் “ சந்தூரி ” ( SANTOURI ) என்பது என்று கூறுகிறான் ஜோர்பா. எப்போதெல்லாம் தன் மனத்தில் தொய்வும், சோர்வும், தோல்வி மனப்பான்மையும் சோகமும் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தான் நடனமாடுவதாக கூறுகிறான் ஜோர்பா.

“ என் மனைவி இறந்தாள், முதல் மகனும் இறந்தான். அப்போது நான் நடனமாடினேன். அதனால் இன்று நன்றாக இருக்கிறேன் “, என்கிறான்.

அன்றிரவு முதலாளி இளைஞனை லோலாவிடம் அனுப்பி வைக்கிறான்.

மறுநாள் அதைக் கொண்டாடும் விதமாக ரம் குடிக்க வைக்கிறான்.

“ ஜோர்பா, உன்னை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ” என்கிறான் இளைஞன். உடனே சட்டென்று தொடர்கிறான் ஜோர்பா.

“ சாத்தானும் கூட, பாஸ் ” , “ நாம் செய்யும் காரியங்களில் சாத்தான்தனமும் கலந்திருக்கு “ , என்கிறான்.

மரங்களை வெட்டி மலையிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு ஒரு திட்டம் வகுத்து முதலாளியின் ஒப்புதலைப் பெற்ற அவள் ஏதென்சுக்குப் போய் சில முக்கிய உபகரணங்களை வாங்கி வரப் போகிறான். திரும்பி வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. லோலா பேரில் அடங்காத காம இச்சை கொண்ட பாவ்லோ அவளோடு முதலாளி இளைஞன் இருப்பதை பார்த்துவிட்டு மனமுடைந்து கடலில் விழுந்து சாகிறான். இது பெரிய விஷயமாகிறது. தேவாலயத்துக்கு எல்லோரும் போகிற நேரம், லோலாவும் புறப்படுகிறாள். இறந்துபோன மகனுக்கு பழி வாங்க அவனது அப்பா முடிவெடுத்து ஊரார் முன்னிலையில், அவளைக் குத்திக் கொன்று விடுகிறான்.

மழை கடுமையான நிலையில் நனைத்தபடி ஃபிரெஞ்சுக்காரி ஹார்டென்ஸ் இறந்து போகிறாள் நாதியற்ற அயல்நாட்டுப் பணக்காரியான அவளது வீட்டுக்குள் அத் தீவின் பஞ்சத்திலடிபட்ட ஆண் பெண்கள் புகுந்து அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு போகின்றனர். அரசாங்கம் அவற்றை வசப்படுத்து முன் நாமே எடுத்துக் கொள்ளலாமென்று கத்தியபடியே அவர்கள் சூரையாடுகிறார்கள். இந்தக் காட்சியும் லோலாவின் படுகொலைக் காட்சியும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

கடைசி முயற்சியாக, மரங்களை வெட்டி கீழே கொண்டு வருவதைப் பார்க்க தேவாலயப் பாதிரியார் முதல் ஊரே கூடியிருக்கையில், அந்த முயற்சியும் பெருத்த தோல்வியில் முடிகிறது. ஊருக்கே திரும்பி விடுவதாய் முதலாளி இளைஞன் கூறுகிறான். ஜோர்பா மீண்டும் தனியனாய் நிற்கிறான். முதல் முறையாக தனக்கு நடனம் கற்றுத் தருமாறு ஜோர்பாவை முதலாளி கேட்கிறான். நடனமாடுதென்பது, தோல்வி, இழப்பு, மரணம் என்பதன்போது அத்துயரை மறக்கதான் செய்யும் காரியம் என்பான் ஜோர்பா. இப்போது அவன் இளைஞனுக்கு கடற்கரையில் நடனமாட ஒவ்வொரு அடியெடுத்து கற்றுத் தருகிறான்.

ஜோர்பாவாக ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN ) மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகள் பரிந்துறைக்கப்பட்டவர். இளைஞனாக ALAN BATES –ம், லோலாவாக IRNE PAPA – வும் நிறைவாக செய்திருக்கின்றனர். இதன் இனிய இசையை மிகிஸ் ( MIKIS THEODU RAKIS) தியோடோராகிஸும், ஒளிப்பதிவை வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) யும் செய்திருக்கின்றனர்.

நவீன கிரேக்க சினிமாவின் மிக முக்கிய குறியீடாக பரந்துபட்ட பார்வையில் பேசப்படுபவர் தியோடோரோஸ் ஆஞ்செலோ பௌலோஸ் ( THEUDOROS ANGELO POULOS ). இவருடையது பிரமிப்பூட்டும் திரைப் படங்கள்.

தியோ ஆஞ்செலோ பௌலோஸ் ஏதென்சில் 1935-ல் பிறந்தவர். ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து விட்டு, ஃபிரெஞ்சு திரைப்பட பள்ளியான IDHEC – ல் திரைப்படக் கலையை கற்றவர். பிரான்சிலிருந்து 1964-ல் ஏதென்சுக்கு திரும்பியவர். ‘’ DIMOKRATIKI ALLAGI “ என்ற கிரேக்க தினசரி இதழில் 1967 வரை சினிமா விமர்சகராகப் பணியாற்றியவர். 1965-ல் இவர் திரைப்படமெடுக்கத் தொடங்கினார். 1968-ல் “ BROAD CAST “ என்ற குறும்படத்தை இயக்கினார். 1975-ல் இவரது “ THE TRAVELLING PLAYERS “ என்ற படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1988-ல் வெளியான இவரது “ LANDSCAPE IN THE MIST ”, 1991-ல் வெளியான ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “. GAZE 1996-ல் எடுத்த “ ULYSSES GAZE “ ஆகிய மூன்று திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றவை.

சமகால உலக சினிமாவில் இவரது கிரேக்கத் திரைப்படங்கள் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியவை. அதே சமயம் இவரும் வேறொரு உலக சினிமா ஆளுமை – மேதையின் திரைப்படங்களால் பாதிப்பு பெற்றவர். இவரது முக்கிய பேட்டியைக் கொண்ட ஆவணப்படம் ஒன்று மிக முக்கியமானது. அந்த நேர்காணலில் அவர் இசையைப் பற்றி மிக விரிவாக பேசுகிறார். சத்யஜித் ரே தம் படங்களுக்கான இசை குறித்து பேசியதற்கு இணையானது தியோ ஆஞ்செலோபௌலோசின் இசைக் குறித்த கருத்துக்கள். இவரது படங்களில் இசைக் கோர்வை ரம்மியமாய், எடுப்பாய் சிலிர்க்க வைக்கும்.

இந்த நேர்காணலில் இவர், உலக சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான ரஷ்ய திரைப்பட மேதை, ஆண்ட்ரீ தார்காவ்ஸ்கி குறித்து நிறைய சிலாகிக்கிறார். அவரோடு ஃபிரான்சில் கழித்த நாட்களை பெருமையோடு நினைவு கூர்கிறார். தார்க்காவ்ஸ்கியின் பாதிப்பு தியோவின் பல படங்களில் தெரிகிறது. ஆரம்பத்தில் தாம் ஜெர்மானிய தத்துவ நாடக மேதை BERTOLT BRECHT – ன் ஆளுமையால் முழுக்கவே பாதிக்கப்பட்டிருந்ததாயும் பிறகு அதிலிருந்து வெளியில் வந்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடிலின் மரணம் குறித்த கருத்துக்கு நேரெதிரான வழியில் படம் எடுத்ததாயும் கூறுகிறார்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தியோ ஆஞ்செலோ பௌலோசின்  ‘’ ALEXANDER THE GREAT “ 1980-ல் வெளி வந்தது. படம் தொடங்கும்போது ஒரு சிறு வாசகம் : கிரேக்க நாட்டை அந்நியர் படையெடுத்து தாக்க வருகையில் , மாசிடோனிய வீரர்களோடு அலெக்சாண்டர் என்ற வீர இளைஞன் போரிட்டு முறியடித்துத் துரத்தினான். அதன் பின் அவன் ஆசியாவின் பகுதிக்குள் நுழைந்து போரிட்டு, சிறைபட்டிருந்தவர்களை மீட்டான். நிறைய நாடுகளை வென்று மகா அலெக்ஸாண்டர் என்றானான்.

இதையடுத்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் கோச்சு வண்டிகளும் குதிரைச் சவாரியுமாயிருந்த காலத்து கிரேக்கம். கிராமங்கள் பலதின் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான நிலபுலன்களை அங்குள்ள பிரபுக்கள் ஆக்கிரமித்தும் பிடுங்கியும் சொந்தமாக்கிக் கொண்டதை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களை நியாயம் வேண்டி குரல் கொடுத்தவர்களை அரசியல் குற்றவாளிகளாய் அரசு சிறையிலடைத்திருந்தது. அவர்கள் ஒருநாள் சிறையிலிருந்து தப்பி காட்டுக்குள் நுழைகின்றனர்.

ஓரிடத்தில் வெள்ளைக் குதிரையொன்றும் நட்டு வைத்த வாளும், வாள் மீது பண்டைய கால கிரேக்க போர்வீரர் தரிக்கும் தலைக் கவசமும் இருக்கிறது. தப்பி வந்தவர்களில் தலைவனாயிருந்தவன் இவற்றை எடுத்து குதிரைமேல் ஏறி பயணமாகிறான். அவன் அலெக்ஸாண்டர் என எல்லாராலும் அழைக்கப்படுகிறான். அவனைத் தொடர்ந்து தப்பி வந்தவர்களும் அவனோடு இணைந்து ஒரு படையாக உருவாகிறார்கள். கிராமம் கிராமமாக அலெக்ஸாண்டர், அந்த ஹெல்மட் அணிந்து போர்வாளை இடையில் செருகி வெள்ளைக் குதிரைமீதமர்ந்து, தன் படையினர் முன்னும் பின்னும் நடந்து வர பயணித்து கிராமங்கள் தோறும் அறிமுகமாகிறான்.

போலீஸ் நிலையங்களில் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடித்துக் கொள்ளுகிறார்கள். ஏழெட்டு பிரபுக்களையும், சமாட்டிகளையும் கடத்தி வந்து பணயக் கைதியாய் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுடன் பேரம் பேசுகிறான் அலெக்ஸாண்டர். தன்னிடமிருக்கும் சீமான்களையும் சீமாட்டிகளையும் விடுவிக்க, கிராம வாசிகளிடமிருந்து அபரிக்கப்பட்ட நிலங்களைப் பிடுஙகி உரியவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும். அலெக்ஸாண்டர் மீதும், அவனது படையினர் மீதும் விதிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ரத்தாகி, பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால் நிபந்தனைகள் நிராகரிக்கப்படுகின்றன. இடையிடையே அலெக்ஸாண்டருக்கு காக்கய் வலிப்பு வந்து விடும். உடனே அங்குள்ள எல்லோரையும் திரும்பி நின்று முதுகைக் காட்ட கட்டளையிடுவார்கள் காப்டனின் வலிப்பு அவஸ்தை யாருக்கும் தெரிந்து விடலாகாது. ( ஜுலியஸ் சீசரின் விஷயமும் கூட ? ) இந்த அலெக்ஸாண்டர் என்பவன் முழு வழுக்கைத் தலையும் அதை சமன்படுத்தும் விதமாய் பின் சிகையை ஏராளமாய் வளரவிட்டும், தாடியை நீண்டு பறக்க விட்ட தலையைக் கொண்டவன். மனைவி கிடையாது. ஒரே ஒரு மகள், கிராமத்திலுள்ள பழைய வீட்டிலிருக்கிறாள். அலெக்ஸாண்டர் தன் படையுடன் தன் சொந்த ஊருக்கு, பணயக் கைதிகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறான்.

இவனுடைய படையைச் சேர்ந்த ஒருவன் பணயக் கைதிகளிலிருக்கும் அழகிய சீமாட்டி ஒருத்தியை கற்பழிக்க முயற்சிக்கையில் பிடிபட்டு அலெக்ஸாண்டரால் தூக்கிலிடப்படுவதோடு பெண் பயணக் கைதிகளை விடுவித்து விரட்டி விடுகிறான். அவனுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பணயக் கைதிகளைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். அச்சமயத்தில் அரசு உயரதிகாரி நிறுத்தக் கோரி நிபந்தனைகள் ஏற்கப்படுவதாய்க் கூறுகிறார். ஆனால் விரைவில் அரசு இராணுவம் கிராமத்தைச் சுற்றி வளைக்கிறது.

தன்னை எதிர்த்து எதிர் புரட்சி செய்தவர்களைச் சுட உத்தரவிடுகையில் அலெக்ஸாண்டரின் மகளே தன் தாயின் திருமண உடை தரித்து சுடப்படுபவர்களோடு சேர்ந்து நின்று, “ நானும் அவர்களில் ஒருத்தியே ” என்கிறாள். அவளையும் சேர்த்து சுட்டுக் கொல்லுகிறார்கள். இதனிடையில் அலெக்ஸாண்டர் என்ற பெயர் கொண்ட சிறுவன் ஒருவனும் அவனது ஆசிரியர் ஒருவரும் படத்தின் முக்கிய பாத்திரங்களாய் வருகிறார்கள். ஆசிரியர்தான் எதிர் புரட்சியாளர்கள் உருவானதுக்கு பொறுப்பானவர் என்பதால் அவரும் சுடப்பட்டுச் சாகிறார்.

இராணுவம் அலெக்ஸாண்டரின் படையினரைச் சுட்டு காலி செய்த நிலையில் மகா அலெக்ஸாண்டரும் இறந்து கீழே சாய்கிறான். அடுத்த காட்சியில் கிரேக்க யுத்த ஹெல்மட்டணிந்த அவனது தலையளவு வெள்ளைக் கற்சிற்பம் தரையில் கிடக்கிறது. இராணுவத் தலைவன் பயந்து அதை நெருங்குகையில் குதிரைக் குளம்பொலி கேட்டு பயந்து ஓடிவிடுகிறான். சிறுவன் அலெக்ஸாண்டர் மட்டக் குதிரை மீதமர்ந்து போகிறான். அவன் மலை மீதிருந்து பார்க்க, நவீன மயமான கிரேக்க நகரம், அதன் பல மாடி கட்டிடங்களோடு தெரிகிறது. இப்படத்தின் கதையோட்டத்தின் வழியே ஆஞ்செலோ பௌலோசியின் அரசியல் சார்பும் தெரிய வருகிறது.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

1991-ல் இவர் எடுத்த ‘’ SUSPENDED STEP OF A STORK “ என்ற அரிய படம், தேசத்துக்க தேசம் கொண்ட எல்லை, போர் நிமித்தம் ஏற்படும் அகதிகள் வருகை, அதன் காரணமான பிரச்சினைகள் உள்ளிட்டது. உலகப் போரின் போதே ரஷ்யாவிலிருந்த ஏராளமான கிரேக்கர்கள் அகதிகளாக கிரீஸுக்கு திரும்பி வந்து பிரச்சினைகள் ஏற்படுத்திய வரலாற்றை இப்படம் ஓர் உரையாடலில் தெரிவிக்கிறது. துருக்கியும் அல்பேனியாவும் கிரேக்கத்துக்கு அண்டை நாடுகள். சற்று தள்ளி இத்தாலிவுமிருப்பதால் இங்கேற்படும் போர்களின் போது பீதியில் மக்கள் அகதிகளாக கிரேக்க பூமிக்குள் நுழைவது வழக்கம்.

சமீபத்தில் நடந்த துருக்கி, சிரியா போர்களின்போது அகதிகளின் வருகை பெருகியது. இந்த பின்னணியில் கிரேக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் எவ்வித காரணமுமின்றி மறைந்து விடுகிறார். கொலைக் காட்சி ஊடகம் ஒன்று, அகதிகள், அவர்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகளை பதிவு செய்ய வருகிறது. அதன் முக்கிய மைய இயக்குனரான இளைஞன் ஒருவனுக்கு மறைந்து போன அரசசியல்வாதியைக் கண்டுபிடிப்பதும் ஒரு சவாலாகிறது. அந்த அரசியல்வாதியை அறிந்தவர்களும் கூட அறியாதவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

அவரோடு நன்கு பழகி உறவு கொண்ட அயல்நாட்டுப் பெய் ( தனக்கு கிரேக்கமொழி தெரியாது என்று சொல்லிக் கொண்டவள் ) தொலைக்காட்சிக்காரனுக்கு அறிமுகமாகி சிலவற்றைக் கூறுகிறாள். உபயோகமற்று ரெயில்வே வெளியில் நிற்கும் நிறைய ரயில்பெட்டிகள் அகதிகள் தங்குமிடங்களாயிருக்கின்றன. அகதிகள் வருகையும் தொடர்ந்து அதிகரித்து கிரேக்கம் ஊதிப் பெருக்கும்போது, அவர்களின் வருகைக்கு தடை விதிக்கிறது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டு அந்தந்த எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவம் காவல் புரிகிறது. டி.வி.காரன் தன் கிரேக்க ராணுவ கர்னலின் உதவியுடன் தைரியமாக சுற்றுகிறான்.

ஒருமுறை எல்லைக்கு அழைத்துச் சென்று, கிரேக்க எல்லைக் கோடான நீல நிறக் கோட்டைக் காட்டி கூறுகிறார். “ இந்தக் கோட்டைத் தாண்டி சும்மா, ஓர் அடி வைத்து விடமுடியாது. வச்சா ? ” என்று கூறி வலதுகாலை உயர்த்துகையிலேயே, அடுத்த நாட்டு இராணுவ அதிகாரி துப்பாக்கியுடன் விரைந்து வருவது தெரிகிறது. அடுத்து என்னவேண்டுமாகிலும் நடக்கலாம். அதுவே இப்படத்தின் தலைப்பாகவும் ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “ என்பது.

அவன் பனிமழையில் ஒரு ரயில் பெட்டிக்குள் நுழைய கூடவே ஒரு மனிதன் வருகிறான். அம்மனிதனின் அனுமதியின்றி நுழைந்ததற்கு மன்னிப்பு கோரி பனிக்காக அண்டுகிறான் டி.வி.காரன். அந்த அகதியின் தோற்றமும் முகமும் டி.வி.காரனக்கு சந்தேகத்தையும் நம்பிக்கையையும், ஆர்வத்தையுமூட்டுகிறது. ஒரு பையன் ஓடி வந்து ரொட்டி வினியோகம் செய்து விட்டு, “ காற்றாடி பற்றி கதை சொல்லு ” என்று அகதியைக் கேட்க, அகதி, காற்றாடி ( பட்டம் )யிலிருந்து, ராக்கெட், அதிலிருந்து வான எல்லை, நாடுகளின் எல்லைகள் வரை சொல்லி விட்டு, மேற்கொண்டு இன்னொரு நாள் பேசலாமென்கிறான்.

டி.வி.குழு ரெயில்வே பெட்டிகளை, அங்கு வசிக்கும் ஏராளமான – கணக்கில் வராத அகதிகளைப் படமாக்குகிறது. அறைக்கு வந்து T.V. இளைஞன் பழைய படம் ஒன்றைப் போட்டு, மறைந்துபோன கிரேக்க வம்சாவளி மந்திரியின் பேச்சையும், முகத்தையும் ZOOM செய்து கவனிக்கிறான். அவன் சந்தேகம் தீருகிறது. ரயில்பெட்டியில் பார்த்த நபரேதான். டி.வி.காரனும் அவனது குழுவும் வருகை தரும் உணவு விடுதியில் ஓர் இளம்பெண் இவனையே உற்று கவனிக்கிறாள். இவனது அறை வரை வந்து விட்டு, தான் போக வேண்டுமென்று கூறி போய் விடுகிறாள். அந்த இளம் கிரேக்க வம்சாவளி அகதிப் பெண் டி.வி.காரனின் மற்றொரு கேள்விக்குறி.

ஒருநாள் அவளிறியாது பின் தொடர்ந்து அகதிக் குடியிருப்பிலுள்ள அவளுடைய இடத்தையடைகிறான். தனக்கு இளைய குழந்தைகள் இரண்டைப் படுக்க வைத்து விட்டு கூறுகிறாள். பிரம்மாண்டமாய் ஓடும் ஆற்றுக்கு அப்பாலிருந்து அகதிகளாய் வந்ததையும், அம்மா இறந்ததையும், அப்பா டெலிஃபோன் பழுது பார்ப்பவராய் வேலை பார்ப்பதாய் கூறுகிறாள். மோசமான பருவநிலையால் டெலிபோன்கள் நிறைய பழுதடைந்ததால் இராப்பகலாக மஞ்சள் சீருடையில் டெலிபோன் பணியாளர்கள் மழையில் வேலை செய்கிறார்கள். அப்பெண்ணின் அப்பா வருகிறார். டி.வி.காரனுக்கு மேலும் ஒரு திடுக்கிடல். வந்தவர், அகதிகள் ரயிலில் பார்த்த அதே ஆள். தங்களோடு உணவருந்த அழைக்கிறார்.

இரண்டொரு நாட்களில் ஆற்றுக்கு மறுபுறமுள்ள தேசத்திலிருக்கும் இளைஞனுக்கும், இங்குள்ள டெலிபோன்காரரின் பெண்ணுக்கும் சோகமான கல்யாணம் நடக்கிறது.மறுகரையில் மணமகனும் அவனைச் சேர்ந்தவர்களுமாய் நிற்க, இக் கரையில் மணப் பெண்ணும் அவள் தந்தையும், மற்ற அகதிகளும் நிற்க, பாதிரியார் சைக்கிளில் வந்து ஆணும் பெண்ணும் அகதிகளால் ஆறு பிரிக்க விலகி நிற்கும் நிலையிலேயே திருமணச் சடங்கை முடித்தவராய்ப் போகிறார்.

“ என் கணவன் ஒருநாள் ஆற்றைக் கடந்து வந்து என்னை அழைத்துப் போகப் போகிறான் ” , என்று மணப்பெண் கூறுகிறாள்.

” நீங்கள் எனக்கு காற்றாடி கதையை சொல்லி முடிக்கவில்லையே ” என்று கேட்கிறான் ரொட்டி வினியோகிக்கும் பையன்.

” நீயே முடிவை அனுமானித்துக் கொள் ”, என்கிறார். மணப்பெண்ணின் தந்தையும் டெலிபோன் பணியாளருமான அகதி. டி.வி.கார இளைஞனைப் பொறுத்தளவு அவனும், கிரேக்க மக்களும் தேடும் மறைந்துபோன மந்திரியும் அவராகத் தானிருக்க வேண்டும் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. டி.வி.குழு புறப்படுகிறது.

இப்படத்தில் காணாமற்போன மந்திரியாகவும், அகதியாக டெலிபோன் பணியாளராக வரும் மிகச் சிறந்த இத்தாலி நடிகரும், சர்வதேச அளவில் புகழும் பரிசும் பெற்ற மார்செல்லோ மாஸ்ட்ராயினி நடிக்கிறார். தியோ ஆஞ்செலோபௌலசின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கிழக்குமுகமாய்

கீழை நாடுகளில் ஜப்பானின் கலாச்சாரம் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது அவர்களின் கிமோனாயில் மண்டியிட்டு உட்காருவது, தேநீர் உபசரிப்பு, அழகிய குடை மற்றும் விசிறி, இவையனைத்தும் சடங்குகளாகவே மேற்கொண்டு வந்தவை. பண்டைய ஜப்பான் (16-17ம் நூற்றாண்டு) எனும்போது அதன் புகழ்பெற்ற சாமுராய் போர் வீரர்கள், சண்டை காலத்திலும் அமைதி காலத்திலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள், அவர்கள் உயிருக்கும் மேலாக மதித்த சுயகவுரவம், இதன் காரணமாய் அவர்கள் மேற்கொண்ட தற்கொலைச் சடங்கு என்பவை முக்கிய ஜப்பானிய கலாச்சார பண்பாடுகள். இவற்றை வைத்து ஹாலிவுட்டிலும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, SAYANORA ATEA HOUSE AT AUGUSTMOON என்பவை. ஜப்பானின் அசல் இயக்குனர்களால் உருவான மகத்தான திரைப்படங்களைப் பார்க்குமுன் ஜப்பானின் மகத்தான கலைஞன் ஒருவனைப் பற்றியும் பேசலாம்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
The Sea of Fertility by Yukio Mishima

யூகியோ மிசிமா- சாமுராய் – ஹராகிரி
யூகியோ மிஷிமா (YUKIO MISHIMA) தன் 45- வது வயதின் போதே 20 நாவல்கள், 39 நாடகங்கள், ஒரு பயண நூல், எண்பது சொச்சம் சிறுகதைகள், மற்றும் கணக்கற்ற கட்டுரைகள் எழுதியிருந்த ஜப்பானின் எழுத்தாளர் 1968-ன் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு முக்கிய தகுதியாளராய் சொல்லப்பட்டிருந்தவர். ஆனால், ஜப்பானின் மற்றொரு நாவலாசிரியர் யாசுநாரி காவ பாட்டா (YASUNARI KAWABATA) என்பவருக்கு அவ்வாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிஷிமா திரைப்படங்கள் தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். கராத்தே மற்றும் பண்டைய ஜப்பானிய கெண்டோ என்ற வாட்போர் பயிற்சியும் பெற்றவர். இதனால் ஜப்பானின் ஹெமிங்வே என்று அழைக்கப்பட்டவர்.

மிஷிமா நான்கு பகுதிகளாக ஒரு மாபெரும் நாவலை எழுதி முடித்தார். அதன் இறுதி பகுதியை எழுதி முடித்து (THE SEA OF FERTILITY) என்று அதற்கு பெயரிட்டு பதிப்பகத்துக்குச் சேர்த்தார். நிலவில் தண்ணீரற்ற சில்லிட்ட காலியான கடல்கள் என விஞ்ஞானம் கருதும் நிலவுப் பகுதியை SEA OF FERTILITY என அழைப்பார்கள். நாவலின் இவ்விருதி பகுதி ஜப்பானின் பாரம்பரிய கனவான் தன்மைகளையும், 1912 முதல் 1970 வரையிலான புதிய சீமான் செழிப்பையும் அவரது சமகால ஜப்பானிய வாழ்க்கையில் அவர் கண்டுணர்ந்த அதீத வெறுமையையும் பற்றி விவரிக்கப்படுகிறது.

1960ன் தொடக்கத்தில் மிஷிமா SHIELD SOCIETY என்ற தேசியத்தைப் பாதுகாக்கும் படையொன்றைத் தொடங்கினார். அவரது சிந்தனையை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் கொஞ்சம்பேர் படையில் சேர்ந்தனர்.

மேற்கத்திய நாகரீகத்தையும் மேற்கத்திய அரசியல் சட்ட அமைப்பையும் தழுவிக் கொண்ட ஜப்பானில்தான் கண்ட பொருளியல் சீரழிவைப் பற்றிய தம் வெளிப்படையான மனக்குறையை மிஷிமா தமது ஆரம்ப எழுத்துக்களிலும் வாழ்க்கையிலும் கையாண்டு வெளிப்படுத்தியவர். ‘‘ஒரு தேசத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முக்கியமான யுத்தத்தை முற்றிலுமாய் துறக்க வேண்டும்’’ என்று 2-ம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா விதித்த அரசியல் சாசனத்தை மிஷிமா ஏற்கவில்லை. உலகப் போருக்கு முன்பிருந்த அசல் ஜப்பானிய அரசியல் சாசனம் புதுப்பிக்கப்பட்டு ஜப்பானிய அரசர் மீண்டும் புனிதமானவராய் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் யுத்தத்தில் ஜப்பான் இழந்த கெளரவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினார் மிஷிமா.

சுமார் 100 இளைஞர்கள் சேர்ந்தார்கள். ஜப்பான் ராணுவத்தினரை தம் படையில் சேர்க்கும் முயற்சியில் தோல்வியுற்ற மிஷிமா, ராணுவ தளபதியை பேட்டி எடுப்பதுபோல தம் வீரர்களோடு சென்று அவரைக் கட்டி போட்டுவிட்டார். தளபதியின் ராணுவ வீரர்கள் ஓடி வரவும் அவர்களில் எட்டுப் பேரை மிஷிமாவின் வீரர்கள் வாளால் வெட்டிக் கொன்றனர். போலீசும் விரைந்து வந்தது. 1200 ராணுவ வீரர்கள் சுற்றி நின்றனர். தளபதியுடன் கதவைச் சுத்திக் கொண்ட மிஷிமா பால்கனியில் போய் நின்று கொண்டு சாமுராய் பாணியில் உடுத்து பத்து நிமிடங்கள் பேசினார். நடப்பு அரசியல் சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழ ராணுவத்தை அழைத்தார்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Seppuku Image Credit: Wikipedia

மேற்கத்திய பாணி அரசியல் சாசனத்தை ஒழித்து, உலகப் போருக்கு முன்னிருந்த பழைய மன்னரின் அரசியல் சட்டங்களையே பின்பற்றுவதன் மூலம் ஜப்பானியரின் பண்டைய பெருமைகளையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க தம் படையில் இணையுமாறும் புரட்சி செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். அவரது முயற்சி ஏற்கப்படவில்லை. மிஷிமா ஜப்பானிய சாமுராய்களின் பாரம்பரிய தற்கொலை வடிவான ‘‘செப்புகு’’ (SEPPUKU)வின் நியதிபடி தன் வாளையெடுத்து தம் வயிற்றில் ஆழமாய் இறக்கினார். செப்புகு என்பதை ஹராகிரி என்றும் அழைப்பார்கள். உடனே தாமதிக்காது அவரது படையைச் சேர்ந்த மகாகட்சு மோரிடா என்பவன் தன் வாளை உயர்த்தி ஒரே வீச்சில் மிசிமாவின் தலையை வெட்டி உருண்டோடச் செய்தான். இது புனித காரியமாக கெளரவ மரணமாய் சாமுராய்கள் கருதுவர். மிசிமாவின் இயற்பெயர், கிமிடேக் ஹிராவோகா (KIMITAKE HIRAOKA) என்பது சாமுராய் பரம்பரையில் வந்த செல்வந்தரின் மைந்தர். ஹராகிரியை வைத்து ஜப்பானில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் மிகச் சிறப்பான படம், ‘‘ஹராகிரி,’’

ஜப்பானிய திரைப்பட கலைஞர்களில் தனித்துவமிக்க, ஆனால் சரியாக கவனிக்கப்படாத படைப்பாளி மசாகி கோபயாஜி. தீவிரமாய் போரை எதிர்த்தவர் என்ற ரீதியில் மிசிமாவின் கொள்கைக்கு நேர்மாறானவர். இவர் இயக்கிய HUMAN CONDITION என்ற மகத்தான திரைப்படம் மூன்று தொகுப்புகளாய் ஒன்பது மணிநேரம் ஓடக்கூடிய காவியத் திரைப்படம். 1962ல் கோபயாஷியின் மிகச் சிறந்த படமென கருதப்படும் ஹராகிரி வெளிவந்தது. ஜப்பானிய திரைப்படங்களில் மிக முக்கியமானது ஹராகிரி. 1630களின் கதை நிலவரப்படி, ‘‘இயி’’ எனும் வம்சாவளியின் மாளிகைக்கு ஹன்சிரோ ட்சுகுமோ எனும் சாமுராய் ஒருவர் வருகிறார். சாமுராய் எனப்படும் ஜப்பானிய பாரம்பரிய பயிற்சி பெற்ற வாட்போர் வீரர்கள் பிரபுக்களின் பாதுகாப்பாளர் குழுவிலிருப்பார்கள். அன்றைய ஜப்பானில் உள்நாட்டுப் போர்களில் சாமுராய்கள் போரிட்டவர்கள்.

இச்சமயம், அந்தப் போர்கள்ஓய்ந்து, அமைதி நிலவியதால், அங்கிருந்த சாமுராய் குழுக்கள் கலைக்கப்பட்டன. வேறு வேலையில் ஈடுபட முடியாது வறுமையில் உழன்ற ட்சுகுமோ இயிகுல மாளிகைக்கு வந்து அங்கு தான் ஹராகிரி செய்து கொள்ள அனுமதி கேட்கிறார். பணமின்றி, உணவின்றி வறுமையில் கஸ்டப்படுவதைவிட ஹராகிரி மூலம் தன்னை முடித்துக் கொள்ள வந்திருப்பதாய் கூறுகிறார். அன்றைய ஜப்பானில் ஹராகிரி முறையில் உயிர் விடுவது புனித காரியமாய் கருதப்பட்டது. அதைச் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிமுறைகளை ஏற்கவேண்டும். அவசரமின்றி நிதானமாய் செய்யவேண்டும்.

ஹராகிரி ஒரு சடங்கான தற்கொலை குறுவாளாக அடிவயிற்றை இடமிருந்து வலமாய் ஆழமாய்க் கிழித்துக் கொண்டவுடன் இதற்கு உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தம் வாளால் தலையை வெட்டி ஹராகிரி சாவை முடிப்பார். சிலர் பணம் பெறுவதற்காக தான் ஹராகரி செய்வதாய்க் கூறினால் ஐயோ பாவம் என்று பணத்தைத் தந்து அனுப்புவார்கள். சுகுமோவையும் அவ்விதமாய் நினைத்த மாளிகைத் தலைவர் ஓமாகாதா, மோத்தோம் என்ற சாமுராய் பணத்துக்காக வந்ததையும் கட்டாய ஹராகிரியில் மடிந்ததையும் சுகுமோவுக்கு கூறுகிறார். சுகுமோ, தான் பணத்துக்கன்றி உயிரை மாய்த்துக் கொள்ளவே வந்திருப்பதாகக் கூறி ஹராகிரிக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கிருக்கும் எல்லா சாமுராய்களும் ஹராகிரி நிகழ்விடத்தைச் சுற்றி தலைவரோடு அமர்நதிருக்கின்றனர்.

சுகுமோ தன் தலையை இறுதியில் வெட்டக்கூடிய வரை தான் தேர்ந்தெடுப்பதாக கோரி தேர்ந்தெடுத்த சாமுராய் வீரன் உடல் நலம் சரியில்லையென கூறி வருவதில்லை வேறொரு நபரை சுகுமோ ஏற்காத நிலையில் தலைவரின் அனுமதியுடன் அவன் தன் கதையைச் சொல்லுகிறான்.

வேலையையும் மனைவியையும் இழந்த சுகுமோவின் அழகிய மகனை மோத்தோமேக்கு திருமணம் செய்து தருகிறார். ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது வறுமை அதிகரித்த நிலையில் சுகுமோவின் மகள் காசநோய் கண்டு அவதியுறுகிறாள். குழந்தைக்கு கடுமையான ஜூரம். எங்காவது பணம் கேட்டு வருவதாய்ப் போன மருமகன் வீடு திரும்பவேயில்லை. வறுமையில் உழன்ற சில சாமுராய்கள் ஹராகிரி செய்துகொள்ள முன் வரும்போது இரக்கப்பட்டு சில பிரபுக்கள் தற்கொலையைத் தவிர்க்க பணம் தந்து அனுப்புவர் அல்லது தங்களிடமே வேலைக்கு சேர்த்துக் கொள்ளுவர் என்ற நினைப்பில் மோத்தோமே இயிமாளிகைக்கு வந்து ஹராகிரி புரிந்து கொள்ள அனுமதி கேட்கிறான். மருத்துவச் செலவுக்கு ஏற்கெனவே அவன் தன் வாளின் அலகை விற்றிருந்ததால் மூங்கில் பிளாச்சலான அலகை கைப்பிடியில் பொருத்தி வைத்திருந்தான். மோத்தோமே பணத்துக்கே ஹராகிரி செய்ய நாடகமாடுகிறான் என நினைத்த மாளிகைப் பிரபு ஹராகிரி செய்ய அனுமதிக்கிறார். மருமகன் இறக்கிறான். தொடர்ந்து குழந்தையும் மகளும் இறக்கவே சுகுமோ அனாதையாகிறார்.

எல்லாவற்றுக்கும் பழிவாங்க சுகுமோ இயி மாளிகைக்கு வந்திருக்கிறார் என்பது அங்குள்ளவர்களுக்குப் புரிகிறது. சுகுமோ ஹராகிரிக்கு உதவிட விரும்பிக் கேட்ட மூன்று பேரும் மூங்கில் வாளைக் கொண்டு மோத்தோமேவை ஹராகிரி புரிய வற்புறுத்தியவர்கள். கதையை முடித்த சுகுமோ அந்த மூவரின் குடுமிகளை அனைவரின் முன் வீசி எறிகிறார். இங்கு வருமுன் மோத்தோமோவைஅவமானப்படுத்திய அந்த மூவரையும் தனித்த வாட்போரில் எதிர்கொண்டு கொல்லாது குடுமிகளை மட்டும் அறுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எதிரியிடம் குடுமியை இழப்பதென்பது அவமான காரியமாய் சாமுராய்கள் கருதுவார்கள்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Shichirō Fukazawa Image Credit: Wikipedia

காலாவதியாகி அர்த்தமிழந்த சாமுராய் கட்டுபாட்டின் அதிகாரத்தை சுகுமோ கேலி செய்கிறார் மிக்க அவமானமடையும் பிரபு சுகுமோவைக் கொல்லும்படி உத்திரவிட பயங்கர வாட் போர் நடக்கிறது. சுகுமோ நான்கு பேரைக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் சாமுராய் குலத்தின் குறியீடாக இயி இனத்தார் வணங்கப்பட்ட குல தெய்வ உருவத்தை இழுத்து எறிந்து சிதைத்து அவர்கள் என்றென்றும் மறக்க முடியாதபடி அவமானமுறச் செய்த பின் வாளைத் தம் உடலில் பாய்ச்சி தன்னை மாய்த்துக் கொள்ளுகிறார். நடந்தேறிய சகல உண்மை நிகழ்வுகளையும் நேரெதிராக திரித்து பொய்யாகப் பதிவேட்டில் எழுதிவைக்க பிரபு ஆணையிடுகிறார்.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்ஜப்பானிய சமூகத்தின் அடக்குமுறை கூடிய அதிகார அமைப்பு கோபயாஷியின் திரைப்படங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகிறது. சுகுமோவாக நகதாய் அற்புதமாய் நடிக்கிறார். மூலக்கதையை எழுதியவர் ஜப்பானின் சிறந்த எழுத்தாளர் YASUHIKO TAKIGUCHI. படத்தின் அற்புதமான ஒளிப்பதிவை செய்திருப்பவர். YOSHIO MIYAJIMA. ஜப்பானிய மொழியில் ஹரா என்றால் வயிறு. கிரி என்றால் இரண்டாக பிளப்பது என்று பொருள்.
சீனாவைப் போலவும் இந்தியாவைப் போலவும் ஜப்பானும் காலங்காலமாய் பாரம்பரிய கலாச்சார சங்கரிகளையும், விசித்திரமான பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் நாடு. ஜப்பானின் பண்டைய பாரம்பரிய செவி வழிக்கதைகளில் ஒன்று ஒபசூடெ OBASUTE இந்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு ஜப்பானின் புகழ் பெற்ற நாவலாசிரியர் ஷிசிரோ ஃபுகாஸாவா SHICHIRO FUKAZAWA எழுதிய நாவல் BALLAD OF NARAYAMA (நாராயாமாவின் கவிதை இசை நாடகம்) ஆச்சரியம் என்பதைவிட மனதை உருக்கும் இசை நாடகம் எனலாம்.

இந்நாவலை ஜப்பானிய திரைப்பட மேதைகளில் ஒருவரான கீய்சுகே கினோசிடா KEISUKE KINOSHITA என் பவர் மகத்தான திரைக் காவியமாய் இயக்கியளித்திருக்கிறார். கினோஷிடா, ஜப்பானின் சமகால திரைப்பட மேதைகளில் நன்கு அறியப்பட்ட அகிரா குரோசாலா கோபயாசி மற்றும் யசுஜிரோ ஓசு ஆகியோரின் வரிசையிலிருப்பவர். இவரது நாராயாமா கதைச் சித்தரிப்பின் வகை மிகவும் வேறுபட்டது. அதீத அழகியல் சார்ந்தது. நேராக ஒரு சினிமாவாகச் செய்யாமல், ஜப்பானின் பாரம்பரிய நாடகப் பாணியான தாபுச்சி தியேட்டர் TABUCHI THEATRE கலை வடிவையும், நவீன திரைப்பட கலைமுறையையும் இணைத்து செய்துள்ளார் கினோசிடா ஜப்பானின் கலாச்சார மதிப்பீடுகளை இப்படத்தின் வழியாக அவர் ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்.

19-ம் நூற்றாண்டு ஜப்பானின் பணிமூடிய மலைகளிடையே உள்ள சிறிய கிராமத்தில் வாழ்க்கை என்பது சவால்கள் மிக்கது. பஞ்சம், தானியத்தைக் கவர்ந்து செல்லும் கள்வர்கள் ஒரு புறம். அந்த கிராமத்தில் ஒரு வினோத சடங்கு ரீதியான பழக்கம். எழுபது வயதை அடைந்த முதியவர்களை அக்குடும்பத்தின் மூத்த ஆண் மகன் முதுகில் சுமந்துச் சென்று தூரத்திலுள்ள மலையுச்சிலமைந்த இடுகாட்டில் உயிரோடு விட்டு விட்டு வந்துவிட வேண்டும். 70 வயதான முதியவர்கள் அங்கிருந்தவாறே இறப்பார்கள். அவர்கள் அங்கிருக்கும் கடவுளோடு சேர்வார்கள் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையால்தான் உயிரோடு அங்கு பயணித்து விடப்பட்டு இறக்க முதியவர்கள் முன் வருகிறார்கள். எப்போது தங்களுக்கு எழுபது வயதாகும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஒரு சிலர் அவ்வாறு சாவதற்கு விரும்பாது வாழவே விரும்புகிறார்கள். அந்த இடுகாடு இருக்குமிடம் ஒரு மலையுச்சிப் பகுதி. அம்மலைதான் நாராயாமா. அக்கிராமத்தில் எழுபதை எட்டுபவள் கிழவி ஓரின் (ORIN) இவளைச் சுற்றித்தான் கதை. இவளுக்கு நிறைய பிள்ளைகள், மூத்தவன் தட்சுஹை (TATSUHEI) தாரமிழந்தவன். அவனையு்ம் அவனது குழந்தையையும் கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டு நாராயாமாவுக்கு நிம்மதியாகப் போய் விடலாமென சொல்லுகிறாள் ஓரின்.

உப்பு வியாபாரி ஒருவன் முயற்சியில் அடுத்த ஊரிலுள்ள விதவைப் பெண் ஓரினுக்கு புது மருமகளாகி தட்சுஹையை மணக்கிறாள். கடமை முடிகிறது, ஓரின் கிழவிக்கும் 70-வது பிறந்த நாள் வருகிறது. 70 வயதிலும் அவளுக்கு 33 பற்களிருக்கின்றன. அவை பிசாசுப் பற்கள் என்று சொல்லி ஊரார் கேலி செய்கிறார்கள். அவ்வளவு பற்களோடு நாராயாமாவுக்கு பயணிப்பது சரியல்ல என வேதனையுறும் ஓரின் தானே முன் பற்களை அடித்து நீக்கிவிடுகிறாள்.

பனிகாலம் தொடங்கவும் ஓரின் தன் மூத்த மகனை தன்னை நாராயமாவுக்குக் கொண்டு விடச் சொல்லுகிறாள். அதற்கான சடங்கும் அதன்போது ஓதப்படும் கட்டளைகளும் முக்கியமானது. ஒரு சிறு நாற்காலியை மகன் முதுகில் கட்டி, அதில் தன் தாயையோ தந்தையையோ உட்காரச் செய்து, தன்னை இறுகப் பிடித்துக் கொள்ள செய்து ஓடை, பள்ளத்தாக்குகள், கரடு முரடான மலைப் பாதைகளில் ஏறியிறங்கி நாராயாமாவை அடைய வேண்டும். போவது யார் கண்ணிலும் படக் கூடாது. இந்த இறுதிப் பயணத்தை யாரும் பார்த்து விடாதபடி இரவோடிரவாகச் செய்ய வேண்டும். ஒரு நீர் நிலையையடுத்து ஏழு வளைவுகள் எனப்படும் ஏழு பள்ளத்தாக்குகளைக் கடந்தால் நாராயாமாவுக்குள் நுழையலாம். சுமப்பவன் திரும்பிப் பார்க்கவே கூடாது அம்மாவை விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வேகமாய் திரும்பி வரவேண்டும்.

ஒரே ஒரு சலுகை என்னவென்றால், ஏழு வளைவுகளைக் கடந்தும் விரும்பினால் ஒரே ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம். இவை கட்டளைகள். இக்கட்டளைகள் ஆறுபேர் கொண்ட குருமார்களால் (அதில் ஒருவர் பெண்) நிபந்தனையாக பயணத்தின்போது முதல் நாளிரவில் நடக்கும் சடங்கின் போது ஓதப்படுகின்றன. மறுநாள் நள்ளிரவில் தாயை சுமந்துகொண்டு மலை, காடுகளில் கடுமையான நடைப்பயணம் மேற்கொண்டு விடியும்போது நாராயாமாவை அடைந்து ஓரினை இறக்கிவிட்டு திரும்புகிறான் மகன். வழியில் தன் எழுவது வயது அப்பனை அவனது சம்மதமின்றி வற்புறுத்தி கயிற்றால் கட்டித் தூக்கி வருகிறான் இன்னொரு ஊர்க்காரன். அப்பன் முடியாதென்று சண்டையிடவே, அவரை அப்படியே மலையிலிருந்து உருட்டிவிடுகிறான். ஓரின் மகனுக்கும் அவனுக்கும் இதனால் சண்டை மூண்டு அவனும் தன் வழியிலேயே உருண்டு மாள்கிறான். தட்சுஹை திரும்பி ஓடிப் போய் அம்மாவைப் பார்த்து குதூகலத்தோடு கூறுகிறான்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Akira Kurosawa Image Credit: Wikipedia

‘‘அம்மா, பனி விழத் தொடங்கிவிட்டது. இனி மேல் உனக்கு வலியோ அசெளகரியமோ இருக்காது’ இந்தப் படத்தை கீய்ஷீகே கினோஷிடா ஒரு இசைநாடக வடிவில் தாபுச்சி தியேட்டர் எனும் ஜப்பானிய பாரம்பரிய வடிவில் இயக்கியுள்ளார். படம் முடிவில் பயணிகளையும் சரக்கையும் கொண்ட புகைவண்டித் தொடர் ஒன்று வேகமாய் ஓடுகிறது. ஆளரவமற்ற ரயில்வே ஸ்டேஷனின் பெயர்ப் பலகையில் ஓபாசுடே (OBASUTE) என்ற பெயர் இருக்க அடியில் ‘‘கைவிடப்படும் இடம்’’ என்ற ஜப்பானிய சொற்களிருக்கின்றன. ஓரினாக நாடக நடிகை கினுயோ தனகாவும் (KINUYO TANAKA) மகனாக தெய்ஜி தகாஹாஷியும் (TEIJI TAKAHASHI) சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜப்பானுக்குள்ளேயே அதிகம் திரையிடப்பட்ட இப்படத்திற்கு ஜப்பானின் 3 கினெமோ ஜூன்போ (KINEMO JUNPO) பரிசுகள் சிறந்த டைரக் ஷனுக்கும் சிறந்த நடிகைக்கும் சிறந்த படத்துக்குமென வழங்கப்பட்டது.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்அதே சமயம் இக்கதையை முழுக்கவும் முற்றிலுமாய் ஓர் அரிய நவீன சினிமாவாக ஷோஹை இமாமுரா இயக்கி வெளியிட்டார். (SHOHEI IMAMURA) பிரம்மாண்டமும் பிரமிப்புமிக்க இப்படம் உலகெங்கும் திரையிடப்படுகையில் சென்னை கெயிட்டி தியேட்டரில் திரையிடப்பட்டது. இமாமுரா பாலே ஆஃப் நாராயாமாவை 1983-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். முதல் வகையில் இடம் பெறாத சில காட்சிகள் இந்த புதிய படத்தில் இடம் பெற்று சினிமா என்பதை காட்டியது. காட்டில் ஓர் இளம் ஜோடி உடலுறவு கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உடற்பசி கொண்ட ஒருவன் அந்த நேரத்துக்கு பெண் துணை கிடைக்காததால், அடுத்த வீட்டுக்காரன் பெண் நாயைப் புணருகிற காட்சி.

மகன் தாய் ஓரினை முதுகில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பாதை, மலைப்பாதை, மரப்பாலம், பள்ளத் தாக்குகளில் இரவில் கடுமையான நடைப் பயணம் செய்யும் படத்தின் கடைசிக் காட்சி தூக்கி வாரிப் போடுகிறது. நாராயாமா மலையை நெருங்குகையில் கிடக்கும் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் முழுசும், சிதறியுமாய் சமீபத்தில் வைக்கப்பட்டு இறந்து போய், பறவைகளால் குதறப்பட்ட ஒரு கிழவியின் எலும்புக்கூட்டோடு தலைமுடியும், மிச்சம் மீதி அழுகிய சதையும் இப்படத்தின் ஒளிப் பதிவை பிரமிக்கும் வகையில் காமிரா கலைஞர் மசாவோ தோச்சிசாவா (MASAO TOCHIZAWA) அமைத்திருக்கிறார். கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இமாமுராவுக்கு இப்படத்துக்கு தங்க இலச்சினைப் பரிசு அளிக்கப்பட்டது. ஓரின் பாத்திரத்தில் சுமிகோ சகாமோடோ (SUMIKO SAKAMOTO)வும் மகன் தட்சுஹை பாத்திரத்தில் கென் ஓகாடாவும் (KEN OGATA) அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

உலகப் புகழ் பெற்ற திரைப்பட மேதைகளுள் முக்கியமான ஒருவர் ஜப்பானின் அகிரா குரோசாவா (AKIRA KUROSAWA) இவர் படங்கள் பல முறை அமைப்புகளால் பரிசு பெற்றவை. அவ்வப்போது பிற மொழியிலுள்ள நாடகங்கள், நாவல்களையும் ஜப்பானிய மண்ணின் பாரம்பரியத்துக் கேற்றவாறு படமெடுத்து, அவை எவற்றின் தழுவல் என்பதை நேர்மையோடு பதிவிடுவார். ஷேக்ஸ்பியரின் சில நாடகங்களையும் (RAN, THRONE OF BLOOD) தாஸ்தாவெஸ்கியின் நாவலையும் (IDIOT) குரோ சாவா ஜப்பானிய படங்களாகத் தழுவி எடுத்திருக்கிறார். போலவே இவரது அசல் ஜப்பானிய கதைத் திரைப் படங்களை (RASHOMAN, SEVEN SAMURAI ஹாலிவுட்டிலும் தமிழிலும் கண்ணியமாக வெளிப்படையாக தழுவி படமெடுத்திருக்கிறார்கள். (OUTRAGE, அந்த நாள், THE MAGMFICENT SEVEN)

குரோவாவின் அமரத்துவமான திரைப்படங்களான ரஷோமன், செவன் சாமுராய், ரெட் பியர்டு, இகிரு, யோஜிம்போ, ரான், ட்ரீம்ஸ் என்பவை சும்மா பட்டியலுக்காகச் சொல்லவில்லை. அவரை ஓர் உலகத் திரைப்பட மேதையென கருதச் செய்தவை. ரஷோமன் படத்தின் கதையை தி.சு. சதாசிவத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் ஸ்நேகா பதிப்பகம் சிறப்புற வெளியிட்டார்கள். படத்தின் அசல் திரைக்கதை வசனமாகும் இது. குரோசாவா பற்றிய அரிய நூலை திரைப் பட ஆய்வு எழுத்தாளர் எஸ். ஆனந்த் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வெகு சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், அகிரா குரோசாவா ஜப்பானின் சத்யஜித்ரே என்றால், கோபயாஷி ஜப்பானின் ரித்விக்கடக் எனலாம். குரோசாவா ஜப்பானில் கொஞ்சம் வேலை குறைந்திருந்த நேரத்தில் 1974ல் 1974ல் ரஷ்யாவில் அவ்வரசாங்க அழைப்பின் பேரில் போயிருந்து ஓர் அரிய திரைப்படத்தைச் செய்தார். அதுதான் டெர்சு உஜாலா.

டெர்சு உஜாலா (DERSU UZALA) ரஷ்யமொழியில் குரோசாவா இயக்கி சென்னை தேவி திரையரங்கில் 1975-ல் திரையிடப்பட்டது. விளதிமிர் ஆர்செனியீவ் என்பவர் (VLADIMIR ARSENIEV) ஜார் கால ரஸ்யாவில் பயணம், பத்திரிகை, நிலம் நீர் மலைகளின் ஆய்வுக்கட்டுரைகள் ஏராளமாய் எழுதியவர். அவரது கதை டெர்சு உஜாலா 1902-ல் இடம் பெறுகிறது. ஓர் அதிகாரி சில வருடங்களுக்கு முன் தான் தன் நண்பர் ஒருவரை அடக்கம் செய்த இடத்தைக் காண வருகிறார். அடையாளம் தெரியவில்லை புதைக்கும் சமயம் இருந்த இரு பெரிய மரங்களையும் எடுத்துவிட்டு இடம் பெரிய அரசு கட்டுமான மொன்றுக்காக சீராக்கப்படுகிறது. ஒரு தீர்மானத்தோடு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டவராய் அவர் சென்று போனதை நினைவுகூர்கிறார். படமும் இவ்வாறே ஃபிளாஸ் பாக்கில் தொடங்குகிறது.

டெர்சு உஜாலா சோவியத் யூனியன் தயாரித்த மகத்தான 70 MM படம். இது அகிரா குரோசாவா இயக்கிய ரஷ்ய மொழிப்படம். 1902ல் ராணுவத்திலிருந்து வந்த சிலரை ஓர் அதிகாரியின் கீழ் சைபீரிய பகுதி ஒன்றை அதன் பள்ளத் தாக்கு, மலைகள், நீர்நிலை போன்றவற்றை மறு ஆய்வு செய்து காடுகள் அருவிகளையும் உள்ளிட்ட பகுதிகளை சர்வே செய்து புதிய வரை படம் (MAP) ஒன்றைத் தயாரிக்க அனுப்புகிறது. அவர்கள் ஒரு புதிய மனிதனைச் சந்திக்கின்றனர். குள்ளமான வயதான கால்கள் வளைந்த ஒரு வேட்டைக்காரனான அவன் பெயர் டெர்சு உஜாலா சைபீரிய பனிப் பிரதேசம், காடுகள் வனவிலங்குகள், நீர் நிலை எல்லாவற்றையும் அறிந்த டெர்சு ஒரு மங்கோலிய இன காட்டு ஜீவி. மனைவியும் மக்களையும் அம்மை நோய்க்கு பலி தந்த டெர்சு தனியாள் விலங்குகளைக் கொன்று விற்று வாழ்பவன். ஒரு புலியைச் சுட்டுக் கொன்றிருக்கும் அவன் புலியின் கூட்டத்தை எதிர்பார்ப்பவன். ஒரு பெரும் சைபீரிய பனிப் புயல் மிகப் பிரமாதமான காமிரா ஒளிப்பதிவால் படமாக்கப்பட்டுள்ளது.

பனிப் புயல் வருவதை தன் கூர்ந்த மதிநூட்பம், அனுபவ ரீதியாக முன்னதாக டெர்சு சர்வே குழுவை க் காப்பாற்றும் காட்சி படத்தின் சிறப்புகளில் ஒன்று. குழு நகருக்குப் போய்விட்டு சில ஆண்டுகள் கழித்து வரும்போது டெர்சுவின் கண் பார்வை கூர்மை குறைந்திருப்பதை அவன் வேட்டையின்போது குறிதவறுவதிலிருந்து தெரிய வருகிறது. கண்களைச் சோதிக்க அழைத்தால் அவன் காட்டைவிட்டு நகருக்கு வர மறுக்கிறான். கஸ்டப்பட்டு அதிகாரி அவனைத் தம்மோடு நகரத்துக்கு அழைத்து வருகிறார். நகரின் வாழ்க்கை, நாகரிகம் எதுவும் டெர்சுவுக்கு ஒத்துப்போகவில்லை. தன்னை தன் காட்டிலேயே கொண்டு விடும்படி நச்சரிக்கிறான். அதிகாரி அன்றைக்கு அதிநவீனமான வேட்டைத் துப்பாக்கி ஒன்றை பரிசளிக்கிறார். பார்வை குறைவால் சற்று தவறாகக் குறி வைத்தாலும் குறி பிசகாது சுடும் துப்பாக்கி அது என்று சொல்லித் தருகிறார். சில நாட்கள் கழித்து போலீஸ்காரர் ஒருவர் அதிகாரியைத் தேடி வந்து விசாரிக்கிறார்.

”இது உங்கள் பெயர் பொறித்த வேட்டைத் துப்பாக்கி. திருடர்கள் சிலரால் விற்க முற்படுகையில் பிடிபட்டது.”

”ஆனால் இது திருடுபோகவில்லை. டெர்சு உஜாலாவென்ற வேட்டைக்காரருக்கு நான் பரிசாக தந்தாயிற்றே?” என்கிறார் அதிகாரி.

”அவரைக் கொன்று போட்டுவிட்டு இத் துப்பாக்கியை பிடுங்கிச் சென்றிருக்கிறார்கள். அந்த முதியவரின் உடலை வந்து பாருங்கள்.”

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Fyodor Dobronravov Image Credit: Wikipedia

அதிகாரி போய் பார்த்துவிட்டு சவ அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். எல்லாம் முடிந்தவுடன் ஒரு போலீசு பவ்யமாய் சல்யூட் அடிக்கிறார். அதிகாரி அதை ஏற்று திரும்புகையில் இன்னொரு முறையும் போலீசு சல்யூட் செய்கிறார். அதிகாரி புரிந்து கொண்டு முக இறுக்கத்தோடு நகருகிறார். ஜார்மன்னன் காலத்து ரஷ்யாவில் போலீசுகாரர் இனாம் எதிர்பார்த்ததை இக்காட்சி சொல்லுகிறது.

அகிரா குரோசாவாவின் சிறந்த இயக்கத்துக்கு இப்படம் மற்றொரு எடுத்துக்காட்டு. படத்தின் வியத்தகு ஒளிப்பதிவை புரிந்திருப்பவர் காமிரா கலைஞர் ஃபியோடோர் டோப் ரோன் ரவோவ் (FYODOR DOBRONRAVOK) என்ற ரஷ்ய ஒளிப்பதிவாளர். ஐசக் ஷ்வார்ட்ஸ்-ன் (ISAAK SHVARTS) இசைக் கோர்வை நுட்பமானது. அதிகாரியாக ரஸ்ய நடிகர் யூரி சோலோமின் (YURI SOLOMIN) என்பவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 1975ம் ஆண்டுக்கான சிறந்த அயல்மொழி பட விருது ஆஸ்கார் அகாதமி விருது விழாவில் பெற்ற படம். மாஸ்கோ சர்வதேச பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பதக்கம் பெற்ற படம்.

அகிரா குரோசாவாவுக்கும் சத்யஜித் ரேக்கும் ஒரு வகையில் ஒற்றுமையுண்டு என கூறும் வகையில் இருவரது கடைசி படங்களும் தோன்றுகின்றன. ரேயின் ”அகாந்துக்”, அவரது கடைசி படம். குரோசாவின் ”மததாயோ” அவரது கடைசி படம். இரு படங்களும் ஒரு வருக் கொருவர் நன்கு புரிந்து கொண்டு அன்பு காட்டுவதை அடிப்படையாகக் கொண்ட படங்கள், இரு படங்களும் ஆழமான உணர்வுகளைக் கொண்டு, அதிகம் வெளிப்புற காட்சிப் பிடிப்புகள் கொண்டதாயில்லாதவை.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்குரோசாவின் ”மத தாயோ”, 1993-ல் வெளிவந்தது. அவரது முப்பதாவதும் கடைசியுமான படம். 60-வயதை எட்டும் ஆசிரியர், புரொபசர் ஹியாகன் உச்சிடா (HYAKKEN UCHIDA) இரண்டாம் உலகப் போர் நடக்கையில் தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எழுத்துப் பணியில் ஈடுபடத் தொடங்குகிறார். சதா நகைச்சுவை ததும்ப பேசி மாணவர்களின் நிறைந்த அன்பைப் பெற்ற ஆசிரியருக்கும் மாணவர்களில் கொஞ்சம் பேருக்கும் நெருக்கமான பிணைப்பு நிலைக்கிறது. அவர் குடியிருக்கும் வீடு விமானத் தாக்குதலில் நாசமாகி குடிசையொண்றில் கணவனும், மனைவியும் சேர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், தம் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆசிரிய தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அவரது மாணவர்களே அவருக்கு குழந்தைகள். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஜப்பானிய வழக்கப்படி புரெபசரை மாணவர்கள் ஒரு கேள்வியைக் கேட்பார்கள்.

”மஹ்தா-கேய்? (MMAHDA-KAI?) என்றால் நீ தயாரா? அதாவது மறு உலகுக்குபோக தயாரா என்பது.

அதற்கு உச்சிடா, மததாயே! (MADADAYO) என்று பதிலளிப்பார். என்றால் ”இன்னும் இல்லை என்று பொருள். மாணவர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி அழகான வீடொன்றைத் தங்கள் அன்பான பேராசிரியருக்குக் கட்டி அதில் குடியமர்த்துகிறார்கள். யுத்தமும் முடிவுக்கு வருகிறது. குழந்தையற்ற உச்சிடா தம்பதிகள், தம் புது வீட்டுக்குள் வந்து சேர்ந்த பூனையொன்றை உயிருக்குயிராய் அன்பு செலுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தப் பூனை ஒரு நாள் ஓடிப் போய் விடுகிறது. திரும்பி வருவதேயில்லை. உச்சிடா சாப்பிடாமல் குழந்தைபோல் பார்த்துக் கொண்ட பூனையின் நினைவாகவே ஒரு நாள் முழுக்க இருப்பார்.

வேறொரு பூனை வந்துசேருகிறது. பேராசிரியர் தன் 77-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நாளில் அவரது மாணவர்களின் பேரக் குழந்தைகளும் கொண்டுவரப்படுகின்றன. அன்றும் அவர் உரக்கச் சொல்லுவார் ”மததாயோ” இன்னும் நேரம் வரவில்லை என்று மனித உறவை, மனிதன்- செல்லப் பிராணி உறவையெல்லாம் மிக நளினமாக துளியும் மிகையின்றி அற்புதமான வெகு இயல்பான மிகையற்ற நடிப்பால் மததாயோ மிகச் சிறந்த படங்களில் ஒன்று. பல விமர்சகர்கள் மததாயோவை குரோசாவா தன் இறுதி படமாக தீர்மானித்தே செய்திருப்பதாக ஹேஷ்யம்கூட கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் அளித்த – பதில், ”கிடையாது, எனக்கு இன்னும் முடிக்க வேண்டிய படங்கள் கையிலிருக்கின்றன” என்பதுதான்.

தாத்சுவோ மட்சுமுரா (TATSUO MATSUMURA) ஆசிரியர் உச்சிடாவாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார். குரோசாவின் சிறந்த இயக்கமும் தகாவோ செயிடோ (TAKAO SAITO)வின் காமிரா கலையும் மிகச் சிறப்பான விஷயங்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

Bioscope Karan 18th Web Article Series by Vittal Rao. This Series About கிழக்கு முகமாய் – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கிழக்கு முகமாய்

பயாஸ்கோப்காரன் சென்னைக்கு வந்து வாழ்க்கையில் நங்கூரமடித்து நின்றதும் திரைப்படங்களை தியேட்டர்களிலும், திரைப்படச் சங்கங்களிலும், மாறி மாறி பார்த்து வைக்கும் வாய்ப்புகளையும் அனுபவங்களையும் பெற முடிந்தது. கீழை நாட்டு திரைப்படக் கலாச்சாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய் ஒருபுறமும், அதேசமயம், ஏதோ ஒரு மெல்லிய சரடால் ஒன்றுக்கொன்று ஒத்திசைத்து நெருக்கமாகி சார்ந்திருப்பதும் கவனிக்கப்படவேண்டியது. சீனப்படம் HONG-FEN [1995]-இல் அரிசி மாவைக் கொண்டு நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நடுத்தர வயதுப் பெண்ணொருத்தியின் வாழ்க்கைச் சித்தரிப்பு. தன் வாழ்வின் குறிக்கோளாக ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடுமையாக உழைத்து பணம் சேர்தது வாங்கி விடுகிறாள்.

இப்போது புதுப் பிரச்சினை ஒன்று. அக்கம் பக்கத்திலிருந்து தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இவள் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்து கூடுகிறார்கள். இவ்வளவு காலமாய் ஒட்டி உறவாடிய சினேகிதிகளை வரவேண்டாமென சொல்ல முடியாது. சிறுசுகள் தொலைக்காட்சிப் பெட்டியைத் தொட்டுப் பார்க்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதை தடுக்கிறார்கள். பிறகு இவளுக்கே தன் பெருமையை மற்றவர்கள் பேச வேண்டுமென்று நினைத்து எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிக்கிறாள். ஒருநாள் டி.வி.பெட்டி வேலை செய்யாமல் மக்கர் செய்கிறது. சொல்லியனுப்பியும் பழுது பார்க்க வல்லுனர் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. சினேகிதிகளின் வருகை நிற்கிறது. இவளைவிட அதிக அக்கறையோடு “சரியாச்சா, சரியாச்சா?” என்று அவர்கள்தான் சதா இவளைக் கேட்டுக் கொண்டேயிருக்க ஒருநாள் பெட்டி சரியாகிறது. ஆனால் முன் போலில்லை. இப்படத்தை வேறுவிதமாக கன்னடத்தில் பார்த்த மாதிரியுமியிருக்கிறது. [குலாபி சினிமா]. உலகத் திரைப்பட விழாவில் காண நேரிட்ட இச் சீனத் திரைப்படத்தை இயக்கியவர் லீ ஷாவோ ஹோங் [LEE SHAO HONG].

Ermo - Alchetron, The Free Social Encyclopedia

“எர்மோ” [ERMO] எனும் சீனப்படம் [1995] குறிப்பிட வேண்டிய ஒன்று. கிராம வாழ்க்கை, பள்ளிக்கூட நாட்கள், என்பனவான அடிப்படை வாழ்வியல் சங்கடங்களை வைத்து பின்னப்பட்ட கதையைக் கொண்ட இப்படத்தை சிறப்பாக இயக்கியவர் மக்கள் சீனாவின் புதிய சினிமாவுக்கான இயக்குநர் ZHOU XIAOWEN.

Red Cherry (1995) - IMDb

1996-ல் திரைப்பட விழாவில் காட்டப்பட்ட செஞ் செர்ரி [RED CHERRY] மிகவும் பேசப்பட்டு பாராட்டப்பட்டு பல்வேறு விருதுகள், பரிசுகள் பெற்ற படம். இப்படம் ஃபாசிஸ எதிர்ப்பு யுத்தத்தில் அடைந்த வெற்றியின் ஐம்பதாம் ஆண்டு நினைவுக்கு அர்ப்பணிக்கப்படுவதான அறிவிப்போடு வெளியானது.
முன்னாள் சோவியத் யூனியனில் பெலோரஷ்யாவுக்கருகில் இயங்கி வந்த இவானோவ் சர்வதேச அனாதைப் பள்ளிக்கூடத்தில் [IVANOV’S INTERNATIONAL SCHOOL] படித்த சில சீன மாணவர்கள், 1940-1945 கால கட்டத்தில் அடைந்த உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் உருவான அரிய சீனத் திரைப்படம் செஞ் செர்ரி [RED CHERRY], 2-ம் உலகப் போரில் பெற்றோர்களை இழந்த சூ சூ [CHU CHU] என்ற சிறுமியையும், லுவோ ஜியாமன் [LUO XIAMAN] என்ற சிறுவனையும் அந்த ரஷ்ய சர்வதேசப் பள்ளியில் சேர்க்கின்றனர். ஜெர்மன் நாஜி படைகள் ரஷ்யாவை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் சண்டை நடந்தவாறு உள்ள 1940-45 கால கட்ட சூழலில் அப்பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெலோரஷ்யாவிலுள்ள கோடை முகாமுக்குச் செல்ல பள்ளி ஏற்பாடு செய்கிறது. கர்னல் கீல் [COL.QIEL] எனும் கிராதக ஜெர்மன் படைத்தலைவன் ரஷ்ய-சீனச் சிறுவர்களைத் தன்னோடு கூடைப்பந்தாட்டமாட கட்டளையிட்டு, முரட்டாட்டம் ஆடி சிறுவர்களை மோதித் தள்ளி காயமுறச் செய்து அதை ரசிக்கிறான். அப்போது பள்ளியின் ரஷ்ய ஆசிரியை மணியடித்து அவர்களை வகுப்புக்கு அழைப்பது நாஜி அதிகாரிக்கு பொறுக்கவில்லை. ஆசிரியை எதிரியின் ஆக்கிரமிப்பையும் கொடுமையையும் குறிப்பால் உணர்த்தி உரையை நிகழ்த்துகிறாள். அவள் பேச்சைக் கேட்கும் ராணுவ அதிகாரி அவளைச் சுட்டு கொன்று விடுகிறான். இதுபோன்ற பல்வேறு துன்பங்களை பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள்.

அடுத்து ஜெர்மனிய ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் ஒருவன் வருகிறான். ஒரு காலை இழந்து பொய்க் காலோடு நடமாடும் ஜெனரல் கொடுமையிலும் கொடுமையானவன். சூ சூவை அவனது இருப்பிடத்தைச் சுத்தம் செய்ய அனுப்புகிறார்கள். நாஜி ஜெனரல் தன்னை ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொள்ளுபவன், அவனுக்கு குரூர எண்ணம் ஒன்று. அழகிய இளம் பெண்களின் உடலில் தனக்கு மிகவும் பிடித்தமான, நாஜிகளின் மூன்றாம் ரீச் [ஹிட்லரின் பரம்பரை]சின் சுவஸ்திகா சின்னத்தை மையமாய் வரைந்து அதற்கு மேலே இரு சிறகுகளையும் விரித்து நிற்கும் கழுகின் உருவை பலவண்ணங்களால் பச்சை குத்தி வைப்பது [TATTOO]. அம்மாதிரி உடலெங்கும் பச்சை குத்தப்பட்ட பெண்ணைக் கொண்டு வந்து மதுவும் விலை மாதுகளோடும் கும்மாளம் போடும் நாஜி, ராணுவ அதிகாரிகளின் கிளப் ஒன்றின் உயரமான மேஜைமீது நிற்க வைத்து நிர்வாணமாக்கி பார்க்கச் செய்து பரவசமடைகிறான்.

அடுத்த ஓவியம் சூ சூ என்பதாகிறது. அவனது லட்சியமே அதுதான். நடமாடும் உயிருள்ள ஓர் ஓவியக்காட்சி, தன் கோர எண்ணத்தையும் செயலையும் கலை என்றே சொல்லிக் கொள்ளுகிறான். அச்சமயம் ருஷ்யர்கள் ஜெர்மன் ராணுவத்தை தாக்கி வருகிறார்கள். ஜெர்மன் ராணுவம் தோற்கும் படலம். “நம்மைச் சுற்றி ரஷ்யர்கள் வந்து விட்டார்கள். நாம் அழியப் போவது உறுதி. அதற்குள் என் மகத்தான இறுதி ஓவியத்தை முடிக்க வேண்டும்.” என வெறியோடு கூவிவிட்டு சூ சூவை நிர்வாணமாக கவிழ்ந்து படுக்க வைத்து மயக்க ஊசி செலுத்தி மயக்கத்திலாழ்த்துகிறான். இரண்டு மூன்று தினங்களில் பல வண்ணங்களிலான இறகு விரித்த கழுகு மற்றும் சுவஸ்திகா சின்னங்களை நாஜி, ஜெர்மனியின் மூன்றாம் ரீச் சின்னத்தை பச்சைக் குத்தி முடித்துவிட்டு, “இது எனது மாஸ்டர் பீஸ்”, என்று கூறிவிட்டு துப்பாக்கியை எடுத்து வாயில் சுட்டுக்கொண்டு சாகிறான். ரஷ்யர்கள் வருகிறார்கள். தப்பியோடும் ஜெர்மன் சிப்பாய்களை ஒளிந்திருந்து சுடும் லுவோ ஜியாமன் தான் ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கி அங்கு தன்னைப் பிடிக்க வரும் ஜெர்மானியரை உள்ளே விட்டு பெட்ரோலை கொட்டி வெடி வைத்து அழிப்பதோடு தானும் மரணமுறுகிறான்.

சூ சூவை கோணிப் பையில் போட்டு பொட்டல் வெளியில் கொண்டு போய் போட்டு விட்டு ஜெர்மானியர்கள் ஓடி விடுகிறார்கள். ருஷ்யர்களால் காப்பாற்றப்பட்ட சூ சூவை சர்வதேச பள்ளியின் பிரின்சிபால் அடையாளம் கண்டு கொள்ளுகிறார். இப்போது முக்கிய பிரச்சினை சூ சூ எனும் உயிருள்ள நடமாடும் ஓவியக் காட்சி. அந்த ஓவியம், ஃபாசிஸ நாஜிகளின் மூன்றாம் ரீச்சின் இலச்சினை போன்ற கழுகும் ஸ்வஸ்திகாவும் பல வண்ண மூலிகை மருந்துகளாலான வண்ணங்களைக் கொண்டு அந்த சீனப் பெண்ணின் முதுகெங்கும் பச்சைக் குத்தப்பட்ட ஒன்று. சாமானியத்தில் அழிக்க முடியாது. ருஷ்ய டாக்டர் ஒருவரும் சர்வதேச டாக்டர்களும் இணைந்து சூ சூவின் பச்சைக் குத்தின முதுகுத் தோலை முற்றிலுமாய் உரித்தெடுத்து விட்டு வேறு தோலை வைத்து SKIN GRAFT ரண சிகிச்சை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தோல்வியுறுகிறது.

போர் ஓய்ந்து சூ சூ சீன தலைநகர் பைஜிங்கிற்கு 1950-ல் திரும்பி வந்தவள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழந்து தன் 63வது வயதில் காலமானார் என்பது செஞ் செர்ரியின் வரலாறு. 1996-ன் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது, ஹவுஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு விருது மற்றும் பல விருதுகளைப் பெற்ற இதில் சூ சூவாக நடித்த GUO-KE-YO என்ற நடிகைக்கு சிறந்த நடிகை விருது கிடைத்த RED CHERRY படத்தை இயக்கியவர் YE YING. படத்தின் சிறப்பான ஒளிப்பதிவை செய்தவர் காமிராமேன் ZHANG LI.

File:Pudong, Shangai.png - Wikipediaஷாங்காய் நகரில் 1958-ல் பிறந்து ஹாங்காங்கில் வளர்ந்து உருவான புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குனர் ஓங்க் கார் வை [WONG KAR WAI]. பதிப்போவிய பயிற்சி பெற்ற ஓங்க் கார்வை எண்பதுகளில் சினிமா தயாரிப்பு துறையில் உதவியாளராயும் திரைக் கதையாசிரியராயும் தொடங்கியவர். இவரது, “AS TEARS GO BY”, [1988] எனும் சீனப் படம் இவரது ஆழ்ந்த காட்சி ரூப தனி நடையை வெளிப்படுத்திற்று. இவரது பெரிதும் பேசப்பட்ட “சங் கிங் எக்ஸ்பிரஸ்” [CHUNG KING EXPRESS]Chungking Express (1994) - IMDb 1994-ல் வெளிவந்தபோது மேற்குலக திரைப்பட ஆர்வலர்களை வசீகரித்து அசத்தியது. அவரது கிராஃபிக் பயிற்சியின் பின்புலத்தில் சங் கிங் எக்ஸ்பிரஸ் அதி நவீன உத்திகள் கொண்ட வண்ணப்படமாய் அமைந்தது. ஹாங்காங் காவல் துறையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனின் தன் வருணனையாகச் சொல்லிப் போகும் இப்படத்தில் அவர் புகுத்தியிருக்கும் வண்ண முறையும் ஒலியமைப்பும் அசாத்தியமானது. அதே சமயம் சீனப் பண்பாடு, பாரம்பரியம், சீனக் கலாச்சாரம் என்பனவற்றின் எச்சமாக எதையும் பார்க்க முடியவில்லை. முழுக்க மேலை நாட்டு கலாச்சாரத்தையும் நாகரிக பூச்சாகவும் விளங்கவல்லதாய் அதன் அடிப்படை கதையமைப்பிலிருந்து சகலத்தையும் அமைத்திருக்கிறார் ஓங்க் கார் வை. மேலைநாட்டு கதை வகை, சூழல், நடிப்பு, ஒப்பனை, இசைக் கோர்வைகளாகவே போய்க் கொண்டிருப்பது. ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றையும், கலை, கலாச்சாரப் பண்பாட்டுக்களையும் கொண்ட சீனத்தின் குறியீடுகளாய்க்கூட இவரது படங்களில் பார்க்க முடியவில்லை. அடுத்து, ஓங்கார் வையின் படமான, “DAYS OF BEING WILD”, ஹாங்காங் நகர சூழலையும் வாழ்வியல் முறையையும் கொண்டிருப்பது. ஹாங்காங் 99 ஆண்டுகளாய் பிரிட்டிஷ் காலனியாக இருந்து வந்திருக்கிறதென்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு ஓங்க் கார்வை போன்றோரின் கம்யூனிஸ ஒவ்வாமை காரணமும் இத்தகைய புதிய கலாச்சார முலாம் பூசப்பட்ட சினிமாவை ஆரத் தழுவிக் கொண்டிருக்கலாம்.

அடுத்து ஓங்கார் வை தயாரித்து இயக்கிய “HAPPY TOGETHER” [1997] எனும் நவீன சீனப்படம். இது ஹாங்காங் நகர நவீன நாகரிக வாழ்க்கையில் இரு இளைஞர்களுக்கிடையேயான ஓரினக் கவர்ச்சி காதல் மற்றும் ஓரினப் பாலுறவு பற்றிய படம். ஒரு சமயம் சோகமும், மறுசமயம் மகிழ்ச்சியோடும் போகும் வாழ்க்கைப் பற்றிய படம். இந்தப் படமும் மேற்கு நாடுகளில் மிக்க வரவேற்பையும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றது. ஓரினப் பாலுறவு எங்கும் இருப்பதொன்று. பூடகமான நடவடிக்கைகள் வெடித்துச் சிதறி அம்பலத்துக்கு வந்து உலக அங்கீகாரத்தை வேண்டும்போது எல்லாவற்றுக்கும் உடனடியாய்க் கிட்டுவதில்லை. அதனால் சிக்கலும் சோகமும் தற்கொலை முயற்சிகளும்கூட இவ்வித உறவில் நிகழ்கின்றன. D.H.லாரன்ஸின் பெண்கள் இருவரிடையேயுள்ள ஓரினப் பாலுறவை பற்றிய கதை ஒன்று “FOX” என்ற பெயரில் 70-களில் வெளியானது. விஷயத்தை பூடகமாய் சொல்லும் படம். 1940-களின் தொடக்கத்தில் புகழ் பெற்ற உருது பெண் எழுத்தாளர் திருமதி இஸ்மத் சுக்தாய் “QUILT” [போர்வை] எனும் பெண்களின் ஓரினப் பாலுறவைச் சொல்லும் அதியற்புத சிறுகதையை எழுதியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் இடையில் தைவானைச் சேர்ந்த மற்றொரு சீன இயக்குனர் ஆங் லீ அமெரிக்க கௌபாய்கள் இருவரிடையேயான ஓரினப் பாலுறவைக் கொண்ட Brokeback Mountain (2005) - IMDb “BROKE BACK MOUNTAIN” என்ற ஆங்கில படத்தை இயக்கி ஆஸ்கர் விருதையும் பெற்றவர். இந்நூற்றாண்டில் எடுக்கப்பட்ட “BLUE IS THE WARMEST COLOUR”, என்ற ஃபிரெஞ்சு திரைப்படம் மிகவும் பேசப்பட்ட பெண்களுக்கிடையேயான ஓரினப் பாலுறவு பற்றிய அரிய படம். இந்தியாவில் ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ், குல்பூஷன் கர்பந்தா ஆகியோர் நடித்த “FIRE”ம் அதே வகை படம். ஓங்க் கார் வையின் “ஹாப்பி டு கெதர்” படத்தில் யூ-ஃபை [YIU-FAI] மற்றும் போ விங்க் [PO WING] எனும் இரு இளைஞர்கள் ஓரினப் பாலுறவு ரீதியாக காதலர்கள். இருவரும் விடுமுறையைக் கழிக்க அர்ஜெண்டினாவுக்கு போயிருக்கையில் விங், யூவை ஒதுக்கி விட்டு தனியேபோய் வேறு பையன்களை ஜோடி சேர்த்துக் கொள்ளுகிறான். யூ, ஹாங்காங்குக்குத் திரும்பிப் போக கடுமையாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறான். ஒருநாள் விங் சிலரால் பலமாய்த் தாக்கப்பட்டு கிடக்கையில், யூ அவனைத்தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வந்து தாய்போல சிகிச்சை உணவெல்லாம் அளித்து உண்மை அன்பு எது என்பதை தெரிவிக்கிறான். இருவரும் பழையபடி நெருக்கமாகி ஊர் திரும்புகிறார்கள். இந்தப் படத்திலும் ஓங்க் கார் வை முழுக்கவும் மேற்கின் மாறிவரும் கலாச்சார மாற்றத்தைத் தாங்கிய ஹாங்காங் சீனர் வாழ்க்கையைத்தான் காட்டுகிறார். படத்தின் சிறப்பம்சம் அதன் உயரிய வண்ண ஒளிப்பதிவு. காமிராமேன் கிறிஸ்டோஃபர் டாயில் [CHRISTOPHER DOYLE] பாரட்டுக்குரிய ஒளிப்பதிவாளர்.

ஓங்க் கார் வையின் வெகுவாகப் பேசப்பட்ட மற்றொரு படம், “2046”. சௌ [CHOW] சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் நகருக்கு வந்த ஒரு எழுத்தாளனும் பத்திரிகையாளனுமாவான். ஹாங்காங் உல்லாச விடுதிகளுக்குப் பெயர் பெற்ற இடம். அவன் புகழ்பெற்ற சூதாட்ட மையம் மற்றும் விலை மாதர்கள் வசிக்கும் பெரிய விடுதியில் பணியிலமர்கிறான். அவனுக்கு மிகவும் இணக்கமும் ஏற்றம் மிக்கதுமான இடம். அவன், தான் எழுதியவை எதிர்காலத்தை முன்வைத்த, நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கால வெளியின் எல்லைக்கப்பாற்பட்ட வெகு தொலைவில் நடந்தேறுவதாய் நினைக்கிறான். ஆனால் அது சரியல்ல. அது அத்தனையும் கடந்த காலத்தவை. அவன் எழுதி வந்த நாவலில் மர்மமான ரயில் வண்டியொன்று அவ்வப்போது வருடம் 2046-ஐ நோக்கி புறப்படும். அங்கு பயணம் மேற்கொண்டு போன ஒவ்வொருவருக்கும் தாங்கள் இழந்துவிட்ட கடந்த கால நினைவுகளை அங்கு போனதும் திரும்பப்பெறும் நோக்கமாகவே இருக்கிறது. 2046-ல் ஒன்றுமே மாற்றமடையவில்லை என்று சொல்லப்படுகிறது. அது உண்மைதானென்பதை யாருமே உறுதியாக அறிந்தவருமில்லை, ஏனெனில் 2046க்கு சென்ற ஒருவரும் திரும்பி வந்ததேயில்லை… ஒருவன் மட்டும் அதை மாற்ற விரும்பி அங்கு நிலையாக நின்றான். இந்த கதைப் போக்கினிடையே “2046” என்பது அந்த சூதாட்ட விலைமாதுள்ள விடுதியில் புகழ்பெற்ற அறை. அறை எண் 2046-ல்தான் சௌவின் காதலியும் இளம் விலைமாதுவான பெண் இருக்கிறாள். இந்த உறவு வாழ்க்கை தொடருகையில் அந்த பெண் வேறொருவனோடு ஜப்பானுக்கு சென்று விடுகிறாள். செள 2046- நாவலின் முடிவுக்கும் மேலே புதியதாக ஒரு பிற்சேர்க்கையை எழுதி முடிக்கிறான் அது 2047. அலுப்பற்ற விறுவிறுப்பான படம். ஓங்க் கார் வையின் சிறந்த இயக்கம், சிறப்பான ஒளிப்பதிவு, எடிடிங்கும் சேர 2046 சிறந்த படமாகிறது.

“BA WANG BIEJI” என்ற சீன சொற்றொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பு “FAREWELL MY CONGUBINE” என்பது. திருமணம் செய்யாது ஆணோடு சேர்ந்து வாழும் பெண் “காங்குபைன்” ஒரு சீன அரசன் தன் “வைப்பை” இறுதியாக அனுப்பி வைக்கும் கதையாடலைக் கொண்ட புகழ் பெற்ற சீன மிக பழைய பாரம்பரிய இசை நாடகத்தின் பெயர் அது. உலகெங்கும் இந்திய தேவதாசிக் குலம் என்று குறிப்பிடப்பட்ட குடிகள் உட்பட தாசிக்குல குடிமக்களுக்கும் இசை, நடனம், கவிதை, இசை, நாடகம், நாடகம் எனும் கலைத் துறைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு, செயல்பாடு, சேவை என்பவை மறுக்க முடியாத அளவில் இன்றளவு இருந்துவரும் நிரூபணங்கள், அந்த வகையில் பண்டைய சீனமும் அந்த கலைப் பங்களிப்புகளில் அதன் தாசிக்குல மாந்தரின் அர்ப்பணிப்புகளைக் கண்டிருக்கிறது. “காங்குபைன்” படத்திலும் தாசிகளும், பண்டைய சீன கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக விளங்கிய இசை நாடக செயற்பாட்டோடு இணைந்திருப்பதை விரிவாகவே கூறுகிறது.

காங்குபைன் கதை 1924-லின் சீனத்து சூழலிலிருந்து ஆரம்பிக்கிறது. “மலர்ச்சி” என்ற பெயர் கொண்ட பிரபலமான விலைமாதர் இடத்திலுள்ள இளம்பெண் ஒருத்தி தன் ஆறுவிரல்கள் கொண்ட பையனோடு பகலில் வெளியேறி சீனத்தின் புகழ்பெற்ற இசை நாடகக் குழுவின் குருவிடம் ஓடுகிறாள். பகலில் விலை மாதைப் பொதுவிடத்தில் பார்க்கும் ஆண்களின் எதிர்வினை அற்புதமாயும் அளவோடும் படமாக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பைஜிங்கிலிருக்கும் “பைஜிங் திரைப்பட அகாடெமி, கலாச்சாரப் புரட்சியும் நால்வர் குழுவின் [CULTURAL REVOLUTION] செயல்பாடுகளும் ஓய்ந்துபோன நிலையில் 1978-ல் திறந்து விடப்பட்டது. அதில் உருவான சீன திரைப்படக்காரர்களின் ஐந்தாவது தலைமுறையின் முதல் இயக்குனர் வரிசை உலக சினிமா அரங்கில் தோன்றியது. அதில் முக்கியமானவர் கெய்கெ சென் [KAIGE CHEN] சீனாவில் கலாச்சார புரட்சி 1966-ல் உச்சத்திலிருந்த சூழலில், கெய்கெ பெற்று அனுபவித்த மிகக் கசப்பான நினைவுகளை, தைரியமாகவும் தீரத்தோடும் தாம் அற்புதமாய் இயக்கிய “FAREWELL MY CONCUBINE” படத்தில் புகுத்திக் கொண்டு வந்திருக்கிறார்.Farewell My Concubine (1993) - IMDb ஒரு கையில் ஆறு விரல்களிருப்பது இசை நாடக நடிப்புக்கு லாயக்கற்றதென்று கூறி, நாடகப் பள்ளியின் தலைவரும் குருவுமானவர் விலைமாதின் மகனான டௌஜியை [DOUZI]யை நிராகரிக்கிறார். மாணவர்கள் கடுமையாய் தண்டிக்கப்படுமிடம் அது. டௌஜியை விட வயதில் பெரிய லேய்ஜி [LAIZI] காங்குபைனில் அரசனாக நடிப்பவன். டெளஜியின் ஆறாவது விரலை கத்தியில் வெட்டியெறிந்துவிட்டு நாடகப் பள்ளியில் சேர்க்கிறாள் விலை மாதான தாய். அவனை அரசனின்
“வைப்புப் பெண்” [CONCUBINE] பாத்திரத்தில் நடிக்க பயிற்சியளித்து மிகச் சிறந்த நடிகையாகிறான் ஆணாகிய டௌஜி. இதனிடையில் இரண்டாம் உலகப்போர், ஷியாங் கேய் ஷேக்கின் நேஷனாலிஸ்ட் கட்சியினரின் கொடுமை, அட்டகாசம் படத்தில் இடம் பெறுகிறது. ஜப்பானின் ஆக்கிரமிப்பும் ஷியாங்கே ஷேக்கின் கோமிங்டாங் கட்சியெனும் தேசியவாதத்தின் தைவான் தீவுக்கு ஓட, தலைவர் மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் மலர்கிறது.

பின் கலாச்சாரப் புரட்சி, நால்வர் குழுவின் தர்பார் எல்லாம் வந்து போகிறது. இச்சமயம், டௌஜியை அரசு கைது செய்து, அவன் செய்ததாக கலாச்சாரப் புரட்சிக் குழு சுமத்திய குற்றங்களுக்காக விசாரணை நடத்துகிறது. ஷியாங்கே ஷேய்கின் கோமிங்க் டாங் சிப்பாய்களுக்கு பாட்டுப் பாடியதற்காகவும், ஜப்பானிய ராணுவத்துக்கு இசைபாடியதற்குமான குற்றங்களாய் அவை. பிறகு அந்தப் பழி வேறொரு குருவின் மீது திரும்புகிறது. லேய்ஜி ஜுஜியன் [JUXIAN] எனும் அழகிய விலைமாதைத் திருமணம் முடிக்கும் செயலால், நாடகத்தில் அரசனும் அவனது ஆசை நாயகியுமாய் நடித்து, நிஜ வாழ்வில் ஓரினப் பாலுறவிலிருந்த டௌஜியும், லெய்ஜியும் பிரிகிறார்கள். கலவரம் ஒன்றில் ஜுஜியின் கரு கலைந்து போகிறது. இரு இசை நாடகக் கலைஞர்களின் ஐம்பது வருட உறவை இவ்வளவு அரசியல் சமூக நிகழ்வுகளினூடே மிக அற்புதமாக திரைக் காவியமாக்கியிருக்கிறார் இயக்குனர் கெய்கே சென்.

The Piano - Rotten Tomatoes

கேன்ஸ் உலகத்திரைப்பட விழாவில் இப்படத்திற்குக் கிடைத்த GOLDEN PALM விருது சீனப்படம் ஒன்றுக்கு கிடைத்த முதல் கேன்ஸ் விருது. அதே சமயம் இவ்விருது மற்றொரு சிறந்த படமான “THE PIANO” என்ற ஆஸ்திரேலிய படத்துக்கும் காங்குபைனுக்கும் சேர்த்து அளிக்கப்பட்டது. காங்குபைன் பெண்ணாக LESLIE CHEUNG-ம், FENGYI CHANG அரசனாயும் நடித்த இப்படம் 1993-ல் வெளியானது. கெய்கே சென்னின் சமகாலத்து திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், எழுத்தாளரும், நடிகரும், சிறந்த காமிரா ஒளிப்பதிவாளருமான ஜாங் இமெள [ZHANG YIMOU] 1987-ல் வெளியான சிறந்த சீனப்படம்“RED SORGHUM”, என்ற படத்தை இயக்கியவர்.

[தொடரும்]

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்