சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 4 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 4 – முனைவர். பா. ராம் மனோகர்



குறையா சுற்றுசூழல் குற்றங்கள்!
வருமா நமக்கு மன மாற்றங்கள்?!
முனைவர். பா. ராம் மனோகர்.

“தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு வீடு இவையுண்டு தானுண்டென்போன், சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் “என புரட்சி கவிஞர் பாரதி தாசன் 70 ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்தின் சுயநலம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அது நவீன காலம், உலக மயமாக்கல் போன்றவற்றால் தீவிரமயம் ஆகியது நிதர்சன உண்மை! வளர்ச்சி என்ற பெயரில் தன்னை பற்றிய சிந்தனை மேலோங்கி, அனைத்து துறைகளிலும் சமுதாய நலன் பின்னோக்கி நிற்கின்றது!

சுற்று சூழல் மாசு பாடு என்பது தன் வீடு, இடம் மட்டும் இருக்க கூடாது! மற்ற இடங்களில் இருப்பது ஏற்றுக் கொள்வதும், அதற்கு அரசுத் துறையினை குறைகள் கூறுவதும் நம் வழக்கம் ஆகிவிட்டது. சுற்றுசூழல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பசுமையாக்கம், தூய்மை, மாசகற்றுத்ல்

ஆகியவன, கல்வியறிவு, விழிப்புணர்வு அறிவியல் தொழில் நுட்பம் போன்றவற்றை பலரும் அறிந்த நிலையிலும் பின்பற்றுவதும், சரியாக செயல் படுத்தி வருவதிலும் நாம், நம் நாட்டில் பின் தங்கியுள்ளோம் என்பதை நாம் உணர்வோமா!?

ஆம்! சமீப காலத்தில் நம் நாட்டில் சுற்றுசூழல் குற்றங்கள் பெருகிவிட்டது.

குறிப்பாக 2019-20 ஆண்டுகளில் 78% அதிகம் இக்குற்றங்கள் நடைபெற்றுள்ள நிலை கவலை தரக்கூடியது அல்லவா!? வனங்கள் அழித்தல், வனவிலங்கு வேட்டை, சூழல் பாதிப்பு செய்தல், நீர், காற்று மாசாக்குதல், புகை பிடித்தல், ஒலி மாசு தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்திற்கு எதிர் குற்றம், போன்றவை, அவற்றின் நீதி மன்ற வழக்குகள் எண்ணிக்கை பெருகிவிட்டன. நம் நாட்டில் 2020 ஆம் ஆண்டில் 61767 வழக்குகளும்,2021 ஆம் ஆண்டில் 64,471 வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளன. ஆனால் 2019 ஆம் ஆண்டு 34676 வழக்குகளே இருந்த நிலை!

இதனை விசாரணை செய்து, முடித்து வைக்க கால அவகாசம் எவ்வளவு என்று கணக்கு பார்த்தால், தற்போதைய நிலையில் நீர், காற்று மாசு தொடர்பு குற்ற வழக்குகள் அனைத்தும் முடிய 33 ஆண்டுகள் ஆகும் எனவும், சுற்றுசூழல் பாதுகாப்பு வழக்குகள் நிறைவடைய 54 ஆண்டுகள் ஆகும் என ஆய்வு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

வன விலங்கு குற்றங்கள், சூழல் குற்றங்கள் ஆகியவை உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் அதிகம் நடைபெறுகின்றன. நீர், காற்று மாசு போன்றவை மத்திய பிரதேசம் மேல் சொன்ன மாநிலங்களுடன் சேர்ந்து கொள்கிறது. புகைபிடித்தல் அதிக குற்றத்தில் தமிழ் நாடு, கேரளா மாநிலங்கள், ராஜஸ்தான் உடன் இணைகின்றன. ஒலி மாசு குற்றம் ராஜஸ்தான் மாநிலம் 7186 வழக்குகள் கொண்டு முன்னணி வகித்துள்ளது. மத்திய பிரதேசம், தமிழ் நாடு போன்றவை அதற்கு அடுத்தநிலையில் உள்ளன.ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அந்தமான், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன், டையூ, லடாக் போன்ற மாநிலங்களில் எவ்வித சுற்றுசூழல் குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை, என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு 13316 வழக்குகள் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 42756 சூழல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே காலத்தில் கர்நாடக மாநிலத்தில் 413, கேரளா வில் 1795 மட்டும் பதிவு செய்துள்ள நிலை நம் சிந்தனை தூண்டும் ஒன்று!

சுற்றுசூழல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் இந்திய வன சட்டம் (1927)

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972)

சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் (1986)

உயிரின பல்வகைமை சட்டம் (2002)

நீர் மாசு எதிர்ப்பு, பாதுகாப்பு சட்டம் (1974), காற்று மாசு எதிர்ப்பு சட்டம் (1981)

போன்றவை நம் அரசு உருவாக்கிய சட்டங்கள், எனினும் இது பற்றிய விழிப்புணர்வு, செயல்படுத்தும் நிலையில் தெளிவு, ஒளிவு மறைவற்ற நம்பகத் தன்மை, வெவ்வேறு அரசு துறைகளிலும் ஒருங்கிணைப்பு, போன்றவை இன்றைய நிலையில் சவால்கள் ஆகும். பொருளாதாரம், வணிகம், நவீன அறிவியல் தொழில் நுட்பம் மாற்றங்கள் ஆகியவற்றால் இவற்றிற்கிடையே முரண்பாடுகள் நிலவுகிறது.

சுற்றுசூழல் சட்டங்கள் விழிப்புணர்வு, பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில், முறையாக ஆய்வு செய்து இணைக்கப்படவேண்டிய அவசியம் ஆகும். பொது மக்களுக்கும் உரிய தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரவேண்டிய கடமை அரசு துறைகளுக்கு உள்ளது! சிந்தித்து பார்ப்போம்!!

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 3 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 3 – முனைவர். பா. ராம் மனோகர்



சூரிய  ஆற்றல், சுலபமாய் கிடைக்குமா, நம் மக்களுக்கு!?
முனைவர். பா. ராம் மனோகர்.

சுற்றுசூழல் பிரச்சினைகளில், மிகவும் முக்கியமானது,”ஆற்றல் தேவை” ஆகும். உலக மயமாக்கல், நவீன இந்தியாவில், வணிகம், வாகனங்கள் பெருக்கம், மக்களின் வாழ்க்கை மாற்றத்தினால், மின்சாரம், எரிபொருள் ஆகியவை, அதிகம் பயன்பாடு, ஏற்பட்டுள்ளது எனில் மிகையில்லை! மேலும் படிவ எரி பொருட்கள், பெட்ரோலியம், நிலக்கரி குறைந்து வரும் நிலை ஒரு புறம், இருப்பினும் 1.4பில்லியன் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆற்றல் குறைபாடு, சமீபகாலமாக தவிர்க்க இயலாத ஒன்று.

மாற்று புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களான காற்று, கடலலை, சூரிய ஆற்றல் போன்றவற்றின் தொழில் நுட்பம் அறிந்து அவற்றை செயல்பட பல திட்டங்கள் தீட்டுதலும்

அவசியம் ஆகி, இந்தியாவில் மத்திய அரசு அவற்றை துவக்கம் செய்துள்ளது என்பது உண்மை! எனினும் அவற்றை சரியாக செயல்பட செய்ய பல சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

சூரிய ஆற்றல் கருவிகளின் அடிப்படை பொருட்களான polysilicon பாலிசிலிகான், ingots இங்கோட்ஸ், wafers வெபர்ஸ் போன்றவற்றை நம் நாட்டில் உற்பத்தி செய்ய இயலவில்லை.

Solar photovoltaic (சூரிய ஒளி ஈர்ப்பு கருவி ), நவீன தொழில் நுட்பம், பொருளாதார அளவீடு, உயர் நிலம், மின்சார கட்டணம், குறை திறன் பயன்பாடு, உயர் நிதி கட்டணம், திறன் குறைவான தொழிலாளர் போன்றவை ஒருங்கிணைந்த நிலையில் இல்லாதது, உற்பத்தி விலை அதிகரிக்க காரணம் ஆகிவிட்டது.

சூரிய ஆற்றல் தேவை குறிக்கோளினை, சரியாக அடைய நிலையற்ற கொள்கையும், ஒரு தடை ஆகும்.

வழக்கமான ஆற்றல் கருவி உற்பத்தி நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வணிகம் குறையும் என்ற அச்சத்தில் புது மாற்று ஆற்றல் முறைகளை தவிர்த்து வருகின்றன. மாநிலங்களுக்கு இடையில் சூரிய ஆற்றல் சட்ட விதிகள் மாறுவது, வாங்கும் திறன் மாற்றம் போன்றவை நுகர்வோருக்கு தடையாகிவிடுகிறது.

இந்த சூரிய ஆற்றல் கோட்பாடு, கொள்கை குழப்பம் செயல்பாடு மேற்கொள்ள, தாமதம் ஆகும் நிலை உள்ளது.

இதே போல் பெட்ரோலிய வாகனங்களுக்கு அதிக நிதி, கடன் வழங்கும் நிலை உள்ளது. சூரிய ஆற்றல் திட்டங்கள், கடன் நிதி பெற்று செயல் படும் நிலை கடினம்.

ஒரு புறம் அரசு புதுப்பிக்கும் எரி சக்தி விழிப்புணர்வு மேற்கொள்கிறது. ஆனால் நிலக்கரி உற்பத்தி,, சுரங்க தொழில் ஆகியவற்றிற்கு மானியம் கிடைக்கிறது.2018 ஆம் ஆண்டு துவக்க நிலை வணிக ஆற்றல் நுகர்தலில் 56%நிலக்கரி, 30%எண்ணெய், 6%வாயு, 3%புதுப்பிக்கும் ஆற்றல், 4%நீர் ஆற்றல், 1%அணு ஆற்றல் ஆகிய நிலையில் இருந்தது.

வழியில் முன்னுரிமை, சூரிய ஆற்றல் கருவிகள் உற்பத்தி, வணிகம் ஆகியவற்றுக்கு தர வேண்டும்.

வெப்பமண்டல பருவகால நாட்டில் எளிதில் பெறக்கூடிய ஆற்றல் என்பது சூரிய ஆற்றல் மட்டுமே! இது அனைத்து தரப்பு மக்கள் எளிதில் பெற கட்டணங்கள் குறைப்பு, பெரு விழா அரங்கம், தொழிற்சாலை ஆகியவற்றில் கட்டாய கருவி அமைப்பு போன்ற நிலை வர சட்டம் கொண்டு வரலாம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சூரியன் ஆற்றல் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் முழுமையாக அறிய வேண்டும். சுற்றுசூழல் பாதிக்காத, காற்று மாசு ஏற்படுத்தாத இந்த ஆற்றல் நாம் அனைவரும், எதிர் காலத்தில் எளிதில், விரைவில் பெறுவோம் என்ற நம்பிக்கை கொள்வோம்.

நிதானமான வேகம் கட்டுரை -R.இராஜமோகன்

நிதானமான வேகம் கட்டுரை -R.இராஜமோகன்




அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (setc) ஓட்டுனராகவும் ஓட்டுனர் பயிற்சி ஆசிரியராகவும் (DRIVING INSTRUCTOR)  32 ஆண்டுகள் பணிபுரிந்து சென்ற 2018 ஓய்வு பெற்றுள்ளேன்.

தமிழகத்தின் தலைநகரிலிருந்து அனைத்து மாவட்டங்களின் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து ஓட்டி இருக்கிறேன். ஆனாலும் அதிக காலம் வண்டி ஓட்டியது சென்னை கும்பகோணம் (தடம் எண் 303) வழித்தடத்தில் தான். பெரும்பாலும் இரவு நேரப் பணி தான்  தினசரி சாலைகளில் விபத்துகளைப் பார்த்துப் பார்த்து வேதனை அடைந்ததுடன் நானும் மிக மோசமான விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறேன் எனது தொழிலைப் பற்றி நினைக்கும்போது “மிகவும் பொறுப்பான கடமை உணர்வு மிக்க பொதுச் சேவை செய்து உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய உயர்வான தொழில் என பெருமை கொள்வதா ? அல்லது “அதிக படிப்பறிவில்லாத முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள் ( பேருந்து லாரி ஓட்டுனர்கள் பற்றி பொதுமக்கள் மத்தியில் அப்படித்தான் கருத்து நிலவுகிறது) தேர்ந்தெடுக்கக்கூடிய பாதுகாப்பு இல்லாத உயிரை பணயம் வைக்க கூடிய இரவு பகல் தூக்கம் இல்லாத மிக கடினமான தொழில் என வருத்தம் கொள்வதா?  ஒரு தீர்மானமான முடிவுக்கு வருவதற்கு நேரமில்லை வருடங்கள் உருண்டோடிவிட்டன.

 பதவி உயர்வு பெற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை பணியிடமாகக் கொண்டு பணி தொடர்ந்தேன்.  விபத்துக்களை ஆய்வு செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அதாவது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் எமது பேருந்துகளில் விபத்துகள் நேரிட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளுக்கு உதவி செய்து மாற்றுப் பேருந்துகளில் அனுப்பவேண்டும். காவல்துறையினருடன் இணைந்து TRAFFIC CLEAR செய்ய வேண்டும்.  விபத்தின் தன்மைக்கேற்ப காவல் நிலையம் அரசு பொது மருத்துவமனை மற்றும் RTO அலுவலகத்திற்கு நான் நாள் கணக்கில் அலைய வேண்டி இருக்கும். இறுதியாக ஆய்வறிக்கை ACCIDENT REPORT தயார் செய்து தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும் அதன் அடிப்படையில் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும். இதுவே என் பணி.

ஓட்டுநர் பணியை விட இந்த பணியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கொடுமையானவை. மிக மோசமான விபத்துக்களைப் பார்த்துப் பார்த்து, ஓய்வுக்குப்பின் எப்பாடுபட்டாவது சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும்

என்ற தீர்மானத்துடன் பத்திரிகைகளில் எனது அனுபவங்களைக் கட்டுரையாக எழுதினேன். அகில இந்திய வானொலி நிலையத்தின் காரைக்கால் பண்பலை 100.3-ல்  ஒரு மணி நேர பேட்டியளித்தேன். இந்த நிகழ்ச்சிஅனுபவம் அற்புதம்” என்கிற தலைப்பின் கீழ் 2020இல் ஒலிபரப்பாகி வானொலி நேயர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து TNSTC KUMBAKONAM மண்டல தலைமையக பயிற்சி பள்ளியில் ஓட்டுநர்களுக்கான ஒருநாள் சிறப்புப் பயிற்சி வகுப்பு எடுத்தேன். எமது நிர்வாகத்தினர் எனது வேண்டுகோளுக்கிணங்க சென்னை, திருச்சி, மதுரை பயிற்சிப் பள்ளிகளில் வகுப்பு எடுக்க என்னை அனுமதித்தனர்.  மேலும் கும்பகோணம் சுற்றி உள்ள பள்ளி கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கும் விபத்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தி வருகிறேன்

என்னுடைய வகுப்புகளில் கலந்து கொள்ளும் எனது தம்பிகளான ஓட்டுநர்களுக்கு நான் அறிவுரைகள் ஏதும் வழங்குவது இல்லை. மாறாக என் அனுபவங்களை விளக்கமாகச் சொல்லுகின்றேன். சாதாரண வகுப்பறையில் கரும் பலகையில் வரைந்து மிக மோசமான கொடூரமான விபத்துகளை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறேன்.  இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன வசதிகள் SENSOR CONTROL எதுவுமே இல்லாத வாகனங்களைச் சாதாரணமான manual steering – இல் இயக்கி ஒரே சாலையில் (போகவும் வரவும்) மற்ற வாகன ஓட்டிகளை (குறிப்பாகச் சைக்கிள் ஓட்டிகள்) எப்படி அனுசரித்து ஓட்டினோம் என்பதை விளக்குகிறேன். எப்போதுமே ஒரு ஹெவி ஓட்டுநருக்குச் சவாலாக இருப்பவர் மற்றொரு ஹெவி வண்டியின் ஓட்டுனர்கள் அல்ல.  இந்த வண்டியை அவர் எப்படி எதிர் கொள்வார் என்பதை இங்கிருந்தே அவரது மனநிலையை இந்த ஓட்டுனரால் கணிக்க முடியும். ஆனால் எந்த வகையிலும் கணிக்க முடியாதவர்கள், சவாலாக இருப்பவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் தான்!  எங்கிருந்து வந்தார், எந்த பக்கம் நுழைந்தார், நம் வாகனத்தை எப்படி முந்தினார் எதையுமே கணிக்க முடியாது.  பெரிய வண்டி ஓட்டுநர் RV  கண்ணாடியில் இருசக்கர வாகனத்தைக் கவனித்த அடுத்த வினாடியே புயல்போல் முந்தி சென்று விடும். முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் பற்றியோ எதிரில் வந்து கொண்டிருக்கும் வாகனம் பற்றிய பயமோ கவலையோ இல்லை. 

ஒருவர் மட்டும் செல்லும் இருசக்கர வாகனம் சரியான வேகத்தில் நிதானமாகச் செல்லும் என நம்பலாம். இருவர் செல்லும் வாகனம் ஓரளவு கவனமாகக் கடந்து செல்லும். மூவர் அல்லது நால்வர் (குறிப்பாக நண்பர்கள்) செல்லும் வாகனம் எந்தவிதமான விதிகளுக்கும் கட்டுப்படாது. அந்த நேரம் சாலையைப் பயன்படுத்தும் மற்ற

எல்லோரையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இன்றைய சமுதாயத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது  மூன்று இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஆனால் ஹெல்மெட் எத்தனை உள்ளது? அதை எத்தனை பேர் முறையாகப் பயன்படுத்துகிறோம்? எத்தனை ஹெல்மெட்டுகள் சுவாமி அறையில் தொங்க விடப்பட்டுள்ளன? ஹெல்மெட் என்பதன் உண்மையான அர்த்தம்உயிர்காக்கும் உத்தமதோழன் என்பதுதான். பயணத்தின்போது அணியவும் பின்பற்றவும் தேவை சில நிமிடங்கள் தான். அந்த சில நிமிடங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் பல வருடங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை உணருங்கள் ஹெல்மெட் அணிய தயங்காதீர்; இனிய உயிரை இழக்காதீர். இந்த சாலையைப் பயன்படுத்தும் யாரையும் நம்பாதீர்கள். யாருக்கும் முறைப்படி ஓட்டத் தெரியவில்லை, சாலை விதிகளை யாரும் அறிந்திருக்கவில்லை, முரட்டுத்தனமாக ஓட்டுகிறார்கள் என்று நினையுங்கள். நீங்கள் மட்டுமே எல்லாம் அறிந்து முறைப்படி ஓட்டுவதாக நம்புங்கள். இந்த நம்பிக்கையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பக்குவத்துடன் ஓட்டுவீர்களாயின் விபத்துக்கு வாய்ப்பே இல்லை

என்னுடைய கிளை மேலாளர் விபத்துக்குள்ளான ஓட்டுனரை விசாரிக்கும் போது அந்த ஓட்டுனர் கூறுவார் : அவன் வலது பக்கம் திரும்ப போகிறான் என்று நினைத்தேன் ஐயா அவன் திடீரென்று நிறுத்திவிட்டான் நம் வண்டி பின்னால் மோதி விட்டது என்பார். உன்னை இவர், அவன்  என்ன நினைத்தார் நீ என்ன நினைத்தாய் என்று நான் கேட்கவில்லை என்ன நடந்தது அதை மட்டும் சொல் என்பார்.  சாலையைப் பயன்படுத்தும் எவரும் என்ன நினைக்கிறார் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை மற்ற வாகன ஓட்டிகள் தீர்மானிக்க முடியாது. போதுமான இடைவெளியுடன் முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஒன்றினால் மட்டுமே பின்பக்கம் மோதலை தவிர்க்க முடியும் ஒரு பேருந்தின் பாதுகாப்பான வேகம் என்ன என்ற கேள்விக்கு 40 KMPH 50, 60 என்று பல ஓட்டுநர்கள் பதிலளித்தனர்.

பேருந்து மட்டுமல்ல வேறு எந்த வாகனமாக இருந்தாலும் சரி ; இடத்திற்குத் தகுந்த வேகமே பாதுகாப்பானது என்பதே சரியான பதில்.  60 KMPH தாண்டியும் கூட ஓட்டலாம்; அதற்கான சாலைகள் உள்ளன. ஆனால் நகர எல்லைக்குள் நெரிசலான சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், பள்ளி அருகாமையில் ரவுண்டானாக்களில், மேம்பாலங்களில், பேரிகார்டு ஸ்பீடு பிரேக்கரில், ரயில்வே கிராசிங்கில், சர்வீஸ் ரோடு துவக்க முடிவு சாலைகளில் அரசு பொது மருத்துவமனை சாலைகளில் இப்படிப் பல இடங்களுக்கும் பல வேகங்கள் உள்ளன. இவற்றை நினைத்துக் கொண்டே ஓட்ட  வேண்டியதில்லை. மூளையில் பதிந்து விட்டால் தானாகவே அந்தந்த இடங்களில் கைகள் அனிச்சையாகச் செயல்பட்டு வேகத்தை மட்டுப்படுத்தி விடும்

பல வருடங்கள் பேருந்து லாரிகளில் பணிபுரிந்து கூட பல ஓட்டுனர்களிடம் பல தவறான ஓட்டும் முறைகள் பதிந்து போயிருக்கும். அவை தவறானவை என்பது கூடப் புரியாமல் சுலபமானவை என்றே புரிந்து கொண்டிருப்பார்.  தன் கிளீனருக்கும்  அதையே சொல்லிக் கொடுப்பார். உதாரணமாகப் பகல் நேரங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்வது. அதாவது இவர் செல்லும்வரை எதிரில் வரும் எல்லா வாகனங்களும் வழிவிட்டு ஓரமாய் நிற்க வேண்டுமாம். இவர் சென்ற பின் தான் மற்ற வாகனங்கள் செல்ல வேண்டுமாம் இந்த விதியை இவர் (குறிப்பாக தனியார் பேருந்து ஓட்டுனர்கள்) எந்த பயிற்சி பள்ளியில் கற்றாரோ தெரியவில்லை. சாலையின் இடது புறம் மட்டுமே உங்களுடையது; வலதுபக்கம் எதிரில் வருபவர்களுக்குத் தான் சொந்தமானது எதிரில் வாகனம் வரும்போது லைட் போட்டு காட்டி (அது எந்த வாகனமாக இருந்தாலும் சரி) நிற்க சொல்ல எவருக்கும் உரிமை, அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் காவல்துறை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜன்ஸி வாகனங்களுக்கு மட்டுமே உரியது. அதேபோல் ஓட்டுனர் இருக்கையில் சரியாக நேராக நிமிர்ந்து அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து ஸ்டியரிங்கை முறையாக பிடித்து (க்ளாக் வைஸ் 3-9) ஓட்டினால் மட்டுமே அந்த வாகனம் ஓட்டுனருக்கு கட்டுப்பட்டு ஓடும். அப்படி தான் ஒவ்வொரு வாகனமும் உற்பத்தியின் போதே வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் ஓட்ட வேண்டும். மாறாக சீட்டில் CROSS ஆக அமர்ந்து ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்து மற்றொரு கையில் SHIFT ROD அல்லது ஹாரனை அலட்சியமாக அடித்து ஸ்டைலாக RV கண்ணாடியைப் பார்க்காமலேயே இடது பக்கம் அமர்திருப்பவருடன் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு ஓட்டுவீர்களாயின் இன்றல்ல நாளை அல்ல சில தினங்களுக்குள் நீங்களோ உங்கள் பயணியோ  அல்லது சாலையை பயன்படுத்திய யாரோ  ஒரு அப்பாவியோ மருத்துவமனையில் படுக்கப் போவது உறுதி. அதற்கான தண்டனையும் உமக்குத்தான், உயிரோடு இருந்தால் !

ஒரு சமுதாயம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு “நீ உனது குடும்பத்தை நேசி ஒவ்வொரு தனி மனிதனும் தன் உயிரைவிட குடும்பத்தை நேசித்து அதற்காகவே தன் உழைப்பை வாழ்க்கையை அர்ப்பணிப்பானாயின் இந்த சமுதாயம் மிக சிறப்பாக அமையும்” என அன்னை தெரசா கூறியதாகப் படித்திருக்கிறேன். ஒரு நல்ல ஓட்டுனராகிய நீங்கள் உங்கள் வாகனத்தை நேசியுங்கள். நேசிப்பு என்பது யாருக்கும் இரவல் கொடுக்காமல் இருப்பது மட்டுமல்ல. சிறப்பாகப் பராமரித்து அதன் தேவைகளைப் புரிந்து கொண்டு கழுவி துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். நேரமில்லையா (வாரம் ஒருமுறை) உங்கள் வாகனமானது எஞ்சின் சத்தம், ஹெட்லைட் வெளிச்சம், ஹாரன் சத்தம் போன்ற பல மொழிகளில் உங்களிடம் பேசும் என்னிடம் பேசி இருக்கிறது ! அந்த மொழிகள் உங்களுக்கு மட்டுமே புரியும் புரிந்துகொண்டு ஓட்டுங்கள் அழகாக ஓட்டலாம்

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்” எனத்துவங்கும் பழைய பாடலில் எங்கே வாழ்க்கை தொடங்கும் என்ற சரணத்தைக் கவியரசு கண்ணதாசன் நமக்காகத்தான் அன்றே எழுதி இருக்கிறார் என தோன்றுகிறது. அனுபவித்துக் கேளுங்கள் ஆழ் மனதில் ஆணி அடித்து  வைத்துக்கொள்ளுங்கள் நிதானமான வேகம் நிம்மதியான பயணம் அதிரடி வேகம் ஆபத்தில் தான் முடியும். சென்னை கோயம்பேடு காவல் நிலைய வாசலில் பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த வாசகம் கல்வெட்டு போல் மனதில் பதிந்து விட்டது அதாவது சாகசம் புரியும் இடம் சாலைகள் அல்ல மெதுவாகச் செல்பவர்கள் கோழைகள்  அல்ல உண்மைதான் நிதானமாகப் பொறுப்புடன் கவனமாக ஓட்டுபவரை கண்டால் மற்றவர்களுக்கு இலக்காரம் தான் பயந்த சுபாவம் ஓட்டத்தெரியாதவன் உள்ளவன் என்றுதான் நினைக்கின்றனர். பரவாயில்லை அப்படியே இருக்கட்டும் அதிவேகம் செல்பவன் யார் தெரியுமா அரக்கன்! மனித உயிர்களைப் பலி கொள்ளத் துடிக்கும் இரத்த வெறிபிடித்த மிருகம். நீங்கள் மனிதனா மிருகமா…?

இன்றைய வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துகளுக்கு அடுத்தபடியாக பெரும் சவாலாக மன உளைச்சலாக உள்ளது எரிபொருள் சிக்கனம் தான். நான் சொல்வதைக் கேளுங்கள். தானாக டீசல் பெட்ரோல் மிச்சமாகும். ஒரு தாய் வயிற்றில் இரட்டை குழந்தைகள் தான் விபத்தில்லா இயக்கம் எரிபொருள் சிக்கனம் ஒரு கல்லில் ஒரு மாங்கா அடித்தவன் திறமைசாலி ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடித்தவன் அதிர்ஷ்டசாலி நீங்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள். விபத்து விழிப்புணர்வோடு வாகனம் ஓட்டுங்கள் எரிபொருள் மிச்சமாகும்; எரிபொருள் சிக்கனம் எண்ணத்துடன் வாகனம் ஓட்டுங்கள் விபத்து ஏற்படாது அதற்கு நான் கேரண்டி! எரிபொருள் சிக்கனத்திற்கான உயரிய விருதினை நான் அன்றைய போக்குவரத்து செயலர் திரு தீபேந்திரநாத் சாரங்கி அவர்களிடம் பெற்றுள்ளேன். Nithanamana Vekam Article By R.Rajamohan நிதானமான வேகம் கட்டுரை - R.இராஜமோகன்இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என் மகன் “சொல்லவந்ததைச் சுருக்கமாகச் சொல்லி சிக்கனமாக எழுதலாமே” என்றார். எனக்கு அப்படி எழுத தெரியவில்லை. காரணம் என் சர்வீஸில் முப்பது ஆண்டுகளில் பல பேருந்துகளை ஒட்டியிருக்கும் மொத்த தூரம் 26 லட்சத்து 37 ஆயிரம் கிலோமீட்டர்கள் இதையும் தாண்டி ஓட்டிய சாதனையாளர்கள் இருக்கின்றார்கள். சிக்கனமாகக் கொஞ்ச தூரம் ஓட்டி இருக்கவில்லை, அதேபோல சிக்கனமாக எழுதவும் தெரியவில்லை என்னுடைய அனுபவங்களைப் போலவே  என்னுடைய விளக்கங்களும் சற்று விரிவாக தான் வருகின்றன.

அதிக வாகனங்களைக் கொண்டு செயல்படக் கூடிய எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அதன் ஓட்டுநர்களுக்கு விபத்தில்லா இயக்கம் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுக்க தயாராக உள்ளேன். ஓய்வு காலத்தில் பொழுதைப் போக்குவதற்காக இதில் நான் ஈடுபடவில்லை உழைத்து ஓய்ந்த பின்னும் என் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் அளித்து என்னை நம்பிக்கையுடன் புதிய ஓட்டுநர்களுக்கு வழிகாட்டியாய் அமர்த்தி அழகு பார்க்கும் எனது நிர்வாகத்திற்கு (SETC) நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் . 62 வயது நடந்து கொண்டிருக்கிறது இனி வாழப்போகும் நாட்கள் பயனுள்ளதாக என் ஓட்டுனர் சமுதாய தம்பிகளுக்காக விபத்துக்களைத் தடுத்திட என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றேன். விபத்துக்களே இல்லாத தமிழகமே எனது குறிக்கோள். விபத்துக்களைக் குறைத்திடும் உயிர் காக்கும் பணியில் அல்லும் பகலும் வெயிலிலும் மழையிலும் தளராமல் உழைக்கும் தமிழக போக்குவரத்து காவல் துறைக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கும்  இதே பணியில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு அமைப்புகளும் சிறு உதவியாக என் பணி அமையும் என நம்புகிறேன் நன்றி வணக்கம்.

R.இராஜமோகன்
SETC DI RTD
கும்பகோணம்
செல் :9952295910
9789604577

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்





தாய்ப்பால் வகுப்பறை பாடத்திட்டம்

 

மருத்துவமனைப் பள்ளியறையில் வீடுகளில்
வகுப்பறை I. பிரசவ மேசையில் II. பிரசவத்திற்குப் பின்பான வார்டில் III. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு
சுகப்பிரசவம் சிசேரியன்
படிப்புக் காலம் பிரசவித்த முதல் இரண்டு மணி நேரத்தில் 0 முதல் 3 நாட்கள் 0 முதல் 7 நாட்கள் 3-7 முதல் 42

நாட்கள் வரை

பாடமுறை மருத்துவ பள்ளிப்பாடம் வீட்டுப்பாடம்
கற்றல் பாடங்கள் பிரசவித்த உடனேயே மார்பில் பிள்ளையைப் போட்டுத் தவழவிட்டு தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றி கற்றுத் தேர்தல் 1.தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்.

2.தாய்ப்பால் புகட்டுவது பற்றி நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளுதல்.

3.தாய்ப்பால் புகட்டும் பலதரப்பட்ட முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

4.வீடு செல்லும் முன்பாக முழுவதுமாக கற்றுத் தேர்தல்.

1.சிசேரியன் செய்தும் அதன் சிரமமின்றி தாய்ப்பால் குடுக்கும் முறையைக் கற்றுத் தேர்தல்

2.சிசேரியன் கால மருந்துகள், மயக்கநிலை, தாமதமாகும் முதல் தாய்ப்பால் பாலூட்டல் நிகழ்வுகளைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளுதல்.

1.மருத்துவமனையில் கற்றுக் கொண்டதை, எவர் உதவியுமின்றி சுயமாக பிள்ளைக்குப் புகட்டி வீட்டிலேயே பயிற்சி எடுத்தல்

2.குழந்தைகள் தொடர்பாக, தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பாக எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு உடனடியாக அதைக் களைந்து கொள்ளுதல்.

3.வீட்டில் உள்ளோரின் மூடநம்பிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் குழந்தைகளை வளர்த்தெடுத்தல்.

4. நாற்பது நாட்கள் முடிந்த பின்பு அல்லது முதல் தவணைத் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வருகையில் தாய்ப்பால் புகட்டிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்தல்.

நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்

நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்




“சிந்தனையாளர் சாக்ரடீஸ்” என்று பூவை அமுதன் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட 94 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு சுவாரசியமானது.

”பெரிய சாக்கிரட்டீஸ் மாதிரி கேள்வி கேட்க வந்துட்டான் பார்” என்ற சொல்லாடல்  நீண்டகாலமாகவே உண்டு. சிறு வயதிலிருந்தே சாக்ரடீஸ் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. ஏதோ ஒரு நாட்டில் எப்போதோ வாழ்ந்து மறைந்த ஒரு நபர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார் என்றால் சமுதாயத்திற்கு அவரின் அசாத்தியமான பங்களிப்பை போற்றாமல் இருக்க முடியாது.

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரத்தில் கி.மு. 469ம் வருடம் வறுமையான குடும்பத்தில் பிறந்தார் சாக்ரடீஸ். 40 வயது வரை ராணுவத்தில் பணியாற்றி மூன்று போர்களில் நேரடியாக பங்கேற்று போராடி பல பதக்கங்களை வென்றார்.  கிரேக்க நாட்டில் ஏறக்குறைய 2400 ஆண்டுகளுக்கு முன்பே குடியாட்சி இருந்தது.

உலகின் முதல் கேள்வியின் நாயகன் சாக்ரடீஸ் தான். ஏன்? எதற்காக? எப்படி? எதனால்? எவ்வாறு? என்று அடுக்கடுக்காக கேள்விகளால் மக்களின் சிந்தனையை தூண்டியவர். ”எதையும் கேள்வி கேட்காமல் ஏற்காதீர்கள்” என்று மக்களிடம் தொடர்ந்து போதனை செய்தார். ’பக்தி’ என்ற நம்பிக்கையால் சிந்திக்க தவறாதீர்கள் என்று மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்த முனைந்த உலகத்தின் முதல் முற்போக்காளர் சாக்ரடீஸ். ”சிந்திப்பதும், சிந்திப்பதை சொல்வதும் ஒவ்வொரு தனி மனிதனின் பிறப்புரிமை ஆகும்” என்றார்.

சப்பை மூக்கும், தடித்த உதடுகளும், பெருத்த மண்டையும், பெரிய கண்களும், சரிந்த தொப்பையும். அழுக்கு ஆடையுமாக வசீகரமற்ற தோற்றம் கொண்டவர் சாக்ரட்டீஸ். ஆனால் அவர் சந்தை. கோவில், விளையாட்டுத் திடல் போன்று மக்கள் திரளாக உள்ள இடங்களுக்குச் சென்று உரத்த குரலில் பேச ஆரம்பித்துவிட்டால், இளைஞர் முதல் முதியோர் வரை ஆண், பெண் அனைவரும் ஆர்வத்துடன் அவரின் பேச்சை கேட்பார்கள். மாற்றம் விரும்பிய, எழுச்சி உள்ளம் கொண்ட இளைஞர் கூட்டம் தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்களாக அவரை சூழ்ந்து கொண்டனர்.

பொய்யையும், புளுகையும் மூலதனமாக வைத்து மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருந்த கூட்டம் சாக்ரடீஸை கண்டு நடுங்கியது. சாக்ரடீஸின் பகுத்தறிவுக் கொள்கைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் தாங்கள் செல்லாக் காசாகி விடுவோம் என்று அஞ்சிய பழமைவாதிகளும், மதவாதிகளும் அவருக்கு எதிராக திரண்டனர்.

“அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் கடவுளை சாக்ரடீஸ் வணங்குவதில்லை. புதிய மதக் கோட்பாடுகளை புகுத்துகிறார். ஏற்கனவே உள்ள நம்பிக்கையை சிதைக்கிறார்…..….இளைஞர்களை தன் பேச்சு வன்மையால் கெடுத்து விடுகிறார்” என்று சாக்ரடீஸ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

”ஒரு மனிதனை குழந்தையாக தாய் ஈன்றார்; தந்தை படிக்க வைத்தார்; குரு போதித்தார்; அரசு மனிதனாக்கியது; நண்பர்கள் நல்லவனாக்கினார்கள்,  இவ்வளவு பேர் சேர்ந்து நல்லவனாக்கிய ஒருவனை நான் கொடுத்து விட்டேன் என்றால் எனக்கு அவ்வளவு பேரையும் விட அதிக சக்தி இருப்பதாகத் தானே அர்த்தம்? அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்பார் சாக்ரடீஸ்.

பெயருக்கு ஒரு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை முடிவில் நீதிபதிகளாக அமர்ந்திருந்த 501 பேரில் சாக்ரடீஸ் குற்றவாளி என்று 281 பேரும், குற்றவாளி அல்ல என்று 220 பேரும் வாக்களித்தனர். அவருக்கு அப்போதிருந்த சட்ட திட்டங்களின் படி ஹெமலாக் என்ற கொடிய நஞ்சு கொடுக்கப்பட்டு கிமு.399ம் ஆண்டு அவரின் எழுபதாவது வயதில் கொல்லப்பட்டார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், அங்கிருந்து தப்பிப்பதற்கு அவருடைய நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் சாக்ரடீஸ் அதனை தீர்மானமாக மறுத்துவிட்டார். ”உயிருக்கு பயந்து அடுத்த நாட்டில் கோழையாக வாழ நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” என்று கூறி மரணத்தை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு அவர் ஆற்றிய உரையில் “நான் இளைஞர்களைக் கெடுக்கிறேன் என்று என் மீது குற்றம் சாட்டி எனக்கு மரணதண்டனையை விதித்து விட்டீர்கள். விரைவில் என்னை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் என்னோடு என் கருத்துக்களையும் அழித்துவிடலாம் என்ற உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எனக்குப் பின்னால் எண்ணற்ற இளைஞர்கள் என்னைப்போலவே ஏதன்ஸ் நகர மக்களை நல்வழிப்படுத்த தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரையுமே உங்களால் அழித்து விட முடியாது. என்னதான் முயன்றாலும் என் கொள்கைகளை மண்ணோடு மண்ணாக்கிட முடியவே முடியாது என்பதை காலம் கட்டாயம் உங்களுக்கு மெய்ப்பித்து விடும்.” என்று குறிப்பிட்டார் சாக்ரடீஸ்.

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சாக்ரடீஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரின் சீடரானார் ’உயர்ந்த’ குலத்தில் பிறந்த பிளேட்டோ. சாக்ரடீஸின் சிந்தனைகளுக்கு எழுத்து உருவம் கொடுத்தவர் அவர். பின்னாளில் ”காரல் மார்க்சின் பொதுவுடமை புரட்சி கருத்துக்களுக்கும், ரூசோவின் புரட்சி எண்ணங்களுக்கும், இங்கர்சாலின் மூடநம்பிக்கையை எதிர்த்த கருத்துக்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர் சாக்ரடீஸின் முற்போக்கு கருத்துக்களுக்கு எழுத்துருவம் தந்த பிளேட்டோ” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதிகாரி நச்சுக் கோப்பையுடன் வந்தார். ”நண்பா நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தயவுசெய்து சொல்லு” என்று நிதானமாக அவரிடம் கேட்டார் சாக்ரடீஸ்.  ”ஐயா இந்த விஷத்தை நீங்கள் குடிக்க வேண்டும். பிறகு நடக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். பின்னர் படுத்துக்கொள்ளலாம். நஞ்சு தன் காரியத்தை நடத்தி முடித்து விடும்” என்று அந்த அதிகாரி வேதனையுடன் கூறினார்

சாக்ரடீஸ் மனதில் ஆண்டவனை தொழுதுவிட்டு விஷக் கோப்பையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று நிதானமாக பருகினார். பிறகு அவர் அமைதியாக நடக்க ஆரம்பித்தார். அவர் கால்கள் மரத்துப்போகும் உணர்வு வரும்வரை நடந்து கொண்டே இருந்தார். பின்னர் மல்லாந்து படுத்துக் கொண்டார். மரணம் அவரை தழுவிக் கொண்டது.

”பிறர் குறை காண்பவன் அரை மனிதன்; தன்குறை காண்பவனே முழு மனிதன்”
”மருத்துவ நூல் மருந்துகளின் நன்மைக்காக இல்லை; உடலின் நன்மைக்காக உள்ளது. அது போலவே ஆட்சி புரியும் கலை ஆள்பவர்களின் நன்மைக்காக இல்லை; ஆளப்படுகின்ற மக்களின் நன்மைக்காகவே இருக்கிறது”
”எங்கே என்னுடையது, உன்னுடையது என்ற எண்ணம் மறைந்து பொதுவுடமை நிலவுகிறதோ அங்கேதான் யாவருக்கும் பொதுவான மனநிறைவு ஏற்படும்”
போன்ற சாக்ரடீஸின் பல கருத்துக்கள் இன்றளவும் மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
மக்களுக்காக அயராது பாடுபட்டவரின் வரலாறு பற்றிய இந்த நூல் அனைவருக்கும், குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளது.

நூல் : சிந்தனையாளர் சாக்ரடீஸ்
எழுத்தாளர் : பூவை அமுதன்
பதிப்பகம் : பிரேமா பிரசுரம்
பக்கங்கள்:94