சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




எல்லோருக்குமான இசை
பறையிசை …….!!!!
*******************************
வெட்டப்பட்டு சிதறிக் கிடக்கின்றது
பறையை வாசித்த கட்டை விரல்,

தரையில் சிதறிய கட்டை விரல் துடிக்கிறது
மீண்டும் ஓரு முறை
பறையை வாசிப்பதற்கு,

தோட்டியின்
தோலில் மாட்டிய பறை
அறுந்து கீழே விழுந்து ஓடுகிறது,
சாலையின் தரையில் வெட்டப்பட்டு கிடக்கும் கட்டை விரலைத் தேடி,

காலில் கட்டிய
சலங்கைகளின்
முத்துக்கள்
சிதறிச் சாலைகளில்
தெறித்து ஓடுகின்றன
துடித்துக்கொண்டிருக்கிற கட்டை விரலின் நாடித்துடிப்பை நிறுத்துவதற்காக,

சாவுக்கு ஆடிய கால்கள்,
அந்த கண் திறக்காத சாமிக்கும் அடித்த கைகள்
கண் கலங்கி நிற்கிறது
வெட்டப்பட்ட விரல்களால்
பறையை வாசிக்க முடியாததால்,

மீண்டும் முளைத்துக் கொள்கிறன்
கட்டை விரலும் பறையும்
மகனின் கைகளில்,

அதிர்ந்து ஓங்கி
ஒலிக்கிறது சேரியெங்கும்
மகனின் தோளில்
மாட்டிய மாட்டுத்தோல் பறை,
சங்கப்பறையாக,
சமத்துவப் பறையாக
சாதிக்கெதிரான பறையாக…..!!!!!

மாட்டுக்கறி எலும்புகள்
****************************
சைக்கிள் பெட்டியில்
ஏற்றப்பட்ட மாட்டுக்கறி
தெரு முழுவதும் வலம் வருகிறது அதிகாலை வேளையில்,

தெருவில்
வலம் வரும் சைக்கிளை மறைத்து நிற்கின்றனர் பெண்களும்
குழந்தைகளும் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு,

“கறி கறி” என்று கூவிக்கொண்டே
சைக்கிளை நகர்த்துகிறான்,
இரத்த கரையை உடல் முழுவதும் பூசிய அப்பாசாமி,

அரை கிலோ, ஓரு கிலோ
என கறியை வாங்கிக்கொண்டு
நகருகின்றனர் பெண்கள் வீட்டின் அடுப்பாங்கரையை நோக்கி,

பெட்டியின் ஓட்டை
வழியாக சாலையில் ஓழுகும்
மாட்டுக்கறி இரத்தத்தை
நக்கிக்கொண்டே பின்தொடர்கிறது கருப்பு நிற நாய் ஒன்று,

வாங்கிய கறியை
அருவாமனையால் செருவாக அறிகிறார் அப்பா திண்ணையில்
அமர்ந்து கொண்டு,

காக்கைகள் காலையிலிருந்தே
தலையைச் சுற்றியே வட்ட மடித்துக்
கொண்டிருக்கின்றன
அப்பா எலும்புத் துண்டுகளை
அறுத்துத் தூக்கி வீசுவதால்,

அடுப்புச் சட்டியில்
வெந்து கொண்டிருக்கின்றன
மாட்டுக்கறி எலும்புகள்,
வேகாத முட்டி எலும்புகளை
தட்டில் போட்டுக் கடித்து இழுக்கிறார்கள்
பல்லு போன தாத்தாவும் பாட்டியும்,

அடுப்பிலிருந்து இறக்கிய
சட்டியைச் சுற்றியே
அமர்ந்து கொண்டு மாட்டுக்கறியை போட்டிப் போட்டு சாப்பிடுகின்றனர் மாட்டுக்கறியின் வாசத்தையே
அறியாத அண்ணனும் தம்பியும்,

தெருவு முழுவதிலும்
தோட்டம் முழுவதிலும் கிடக்கின்றன
எலும்பு துண்டுகள் ,
எலும்பு துண்டுகளைப் பொறுக்கி
சாக்கு பையில் போட்டு கொண்டு
நடக்கிறார் அடையாளம்
தெரியாத முதியவர் ஒருவன்…….!!!!!

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,

Sakthiyin Kavithaigal 4 சக்தியின் கவிதைகள் 4

சக்தியின் கவிதைகள்

கடவுளும் கந்தசாமியும்
****************************
இரவு
முழுவதும் மூட்டையை
சுமக்கிறான்
ஓடாய் தேந்து
போன கந்தசாமி,

மூட்டையை
சுமந்த கந்தசாமிக்கு
முதுகுவலி ஏற்படுகிறது
அழுது கொண்டே கோவிலில்
உள்ளே உள்ள சிலையை
வனங்குகிறான்,
சிலையும் அழுகிறது
நானும் பல ஆண்டுகளாக
இங்கேயே கிடக்கிறேனென்று,

மூட்டையை சுமந்து
வாங்கிய சம்பளத்தில்
சம்பங்கி மாலை,
கற்பூரம்,
பத்தி,
இரண்டு வாழைப்பழம்,
வெற்றிலை பாக்கு,
தட்சணை பத்து ரூபாய், எடுத்துக்கொண்டுகோவிலின்
உள்ளே நுழைகிறேன்
கடவுளை காணோம்
கற்சிலை மட்டும் தெரிகிறது,

சிலையும் தெரிகிறது
கற்பூரமும் எரிகிறது,
ஊதுபத்தியும்
புகையை கக்குகிறது,
கோவிந்தா,
கோவிந்தா என
அழுதுகொண்டே
என்று குரல் எழுப்புகிறான் கந்தசாமி …..!

இருட்டு அறையும்  கருப்பு பூனையும்
*******************************************
ஜன்னல்கள் இல்லாத
பழைய பொருட்கள்
வைக்கப்பட்ட இருட்டு அறையில்
உடைந்த நாற்காலியில் மேல்
படுத்து தூங்குகிறது
கருப்பு பூனை,

இருட்டிலே படுத்த
பூனையின் கண்கள்
வெளிச்சத்தை
கொடுக்கிறது
இருட்டு அறையில் எரியும்
குண்டு பல்புகளைப்போல,

அந்த இருட்டு அறையின்
தகர கதவை திறக்கும் ஒலியினாள் தூங்கிய பூனைக்குட்டி
துள்ளிக் குதித்து ஓடுகிறது
பானை சந்தின் ஓரத்திலே

கருப்பு பூனையின்
வெள்ளை நிற மீசைகள்
தயிர் பானைகள்
முழுவதும் பரவிக்கிடக்கிறது
இரவு நேரத்திலே அடுப்பு மோடையில் நுழைவதால்,

வீடுகள் முழுவதும்
பாத்திரங்களை
உருட்டி விளையாடுகிறது
கருப்பு பூனை பாத்திரங்களை விளையாட்டு பந்துகளாக நினைத்துக்கொண்டு,

மாட்டுக்கறியின்  எலும்பு
துண்டுகளை கடித்து குதறிய
பூனைக்குட்டி
அம்மாவின் முந்தானை
துணியால் முகத்தை
துடைத்துக்கொண்டு ஓடுகிறது,
விளக்குகள் இல்லாத
இருட்டு அறையை நோக்கி….!!!!

Kizhintha Mukathirai Poem S. Lingarasu கிழிந்த முகத்திரை கவிதை - ச.லிங்கராசு

கிழிந்த முகத்திரை கவிதை – ச.லிங்கராசு




முகத்திரையை ஒதுக்கும்
உங்கள் எண்ணத்தில்
உங்கள் முகத்திரை கிழிந்ததே
உலகளவில்
அறிவீர்களா?
அறிந்தும் அறியாததைப் போல்
பாவனை செய்வதே
உங்கள் அரசியல்

மக்களையே நினைக்காது
மதங்களை மோத விட்டு
வாக்கு அறுவடை செய்ய முனையும்
உங்கள் மதிகெட்ட போக்கு
இன்னும் எத்தனை நாட்களுக்கு?

அறிவியல் மாநாடுகளில்
அளந்து விடும் புராணப் புரட்டுகளால்
அதிரும் சிரிப்பலைகளை அறிவீர்களா நீங்கள்?

மாட்டுக் கறிக்குப் பூட்டு
ஆனால் ஏற்றுமதிக்கு விலக்கு
என்ன உங்கள் அரசியல் என்றே
எவருக்கும் இங்கு புரியவில்லை

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற தமிழகத்தில்
எல்லோருக்கும் ஒரு மதம்
ஒரு மொழி என்றால் காக்கையும்
குருவியும் கைக் கொட்டி
சிரியாதோ?

கடவுளும் மதமும் கடைச்சரக்கு
உங்களுக்கு
நினைத்த போதெல்லாம்
ஆட்சிக்காக காட்சிப் பொருளாக

இன்னும் எத்தனை நாட்களுக்கு
இந்த இறுமாப்பு?
மக்கள் தீர்ப்பை உங்கள்
மகேஷ்வரனாலும் மாற்ற முடியாது

Shakthi's Poems சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




மகனின் கடைசி வாகனம்
*******************************
“தத்தெடுத்த
மகனை
அவனுடைய
வீட்டிற்கு அனுப்புவதற்காக
தயாராக்கி
கொண்டிருக்கிறார்கள்
ஊர் மக்கள் ,

நீண்ட
நேரமாக
காலையிலிருந்தே
வாகனமும்
வாசலில் வந்து
நின்று கொண்டிருக்கிறது ,

வழியனுப்புவதற்கு
ஊரே வீட்டின்
வாசலில் சூழ்ந்துக்
கொண்டிருக்க
மேள தாளங்களோடு
சிலப்பேர்
ஆடி பாடி கொண்டிருக்க ,

பூமியிலிருந்து
அனுப்பிய பட்டாசுகள்
மேலிருந்து
வெடித்து இடிகளாக
பொழிந்து கொண்டிருக்க

இரண்டு
நாட்களாக
குளிக்காதவனை
அத்தை வீட்டிலிருந்து
தண்ணீரை
எடுத்து வந்து
தலை முழுக குளிப்பாட்டி

புது உடை
உடுத்தியவனை
அழுதுகொண்டே
வழியனுப்பி வைக்கிறார்
அப்பாவும் அம்மாவும்
ஊரார்
உறவினர்கள்
முன்னிலையில் ,

நான்காயிரம்
நண்பர்கள்
புடை சூழ
ஆரவாரத்துடன்
ஆற்றங்கரை
நோக்கி நகர்ந்து
செல்கிறது மகன் ஏறி
படுத்துக்கொண்ட
திரும்பி
வராத கடைசி வாகனம் “……….!!!!!!

அம்மாக்களின் அன்பும் அக்கறையும்…..!!!!!
****************************************************
காற்றை விட
மிக வேகமாக
சுழன்றுக்கொண்டிருப்பவள் அம்மா,

இரவு
விடியாத
பொழுதும்
நான்கு மணிக்கே
விழித்துக்கொள்கிறது
அம்மாவின் கண்கள்,

விழித்துக்கொள்கிற
கண்களில்பசை தடவி
பேப்பரை ஒட்டிவைத்ததை
போல கண்களைமூடி மூடி
திறக்கிறது
அம்மாவின் இமைகதவுகள்,

சாணம் தெளித்தல்,
வாசலை பெருக்குதல்,
கோலம் போடுதல்,
பாத்திரம் விளக்குதல்,
தண்ணீர் பிடித்தல்,
சாப்பாடு செய்தல்,
துணி துவைத்தல்,
வீட்டை சுத்தம் செய்தல்,
மகன், மகளுக்கு தலை வாருதல்,
ஆடு, மாடுகளுக்கு புல்லை பரிமாறுதல் ,
விறகு பொருக்குதல்,
அப்பாவுக்கு பணிவிடை செய்தல்,

காற்றை விட
மிக வேகமாக
பம்பரமாக  சுழல்கிறது
அம்மாவின் உடலும்
அன்பும் அக்கறையும்,

நிலவை காட்டி
பசியாற்றிய
அம்மாவின் கைகளுக்கு
வெற்றிலையும் பாக்கும்
சுண்ணாம்பும் மட்டுமே உணவாகிறது
அப்பாவின் குடிசையின் வாசலில்,

கதை கதையாக
கூறி உறங்க வைத்த
அம்மாவின் கண்கள்
சாமம் வரை உறங்காமல்
விழித்திருக்கிறது
அடுப்பு மோடையில் ,

மகன், மகள், கணவர்
என எல்லோருக்கும்
பகிர்ந்தளித்த அம்மாவுக்கு
உணவாகிறது அப்பா மிச்சம்
வைத்த ரசமும்
கறி இல்லாத
எலும்பு துண்டுகளும்,
கொஞ்சோன்டு
சோறு மட்டும்தான்.

கடைசி கவிதை…..!!!!
***************************
இன்னும்
சற்று நேரத்தில்
எழுதப்பட இருக்கிறது
அவனுடைய
கடைசி கவிதை

ஜன்னலை
திறந்து வைத்து
மரத்தை பார்க்கிறேன் ,
அணிலொன்று
ஒரு மாம்பழத்தை முழுவதுமாக
தின்று முடித்துக் கொண்டிருந்தது ,

படுத்துக்கொண்டு
அந்தரத்தில் தொங்கும்
மின்விசிறியையே
உற்று பார்க்கிறேன்
மரம் இல்லாமல்
காற்றை எங்கிருந்து
கடன் வாங்கி
கொடுத்துக்
கொண்டிருக்கிறதென்று புரியாமல் ,

கண்ணாடியில்
என் முகத்தை பார்க்கிறேன்
மீசையும் தாடியும்
நீண்டு வளர்ந்திருந்தது
கண்ணாடியில்
தெரியும் மீசையை
முருக்கிவிட்டு
கொண்டிருந்தது
கண்ணாடியின் கைகள் ,

சமையல்
அறையிலிருந்து
யாரோ
அழுகிற சத்தம்
கேட்டு ஓடிப்போய்
பார்க்கிறேன்
அம்மாவும்
சண்டைக்கோழியொன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன,

சமாதானம் செய்து
வைத்து விட்டு
ஒரு பிடி கறிச்சோற்றை
தின்றவாறே வீட்டிலிருந்து
வெளியேறுகிறேன்

எனக்கு
முன்பாகவே என் உயிர்
வாசலில் வந்து காத்து
கொண்டிருக்கிறதாம்
விடிய காலையிலிருந்தே ” …….!!!!!!!

உழைக்கும் மக்களின் உணர்வும்
உணவும்  மாட்டுக்கறி……!!!!!!

***************************************
காலையில்
ஐந்து மணிக்கே
சைக்கிளை
எடுத்துக்கொண்டு
வேகமாக மிதித்து ஓட்டிய கால்களுக்கு
ஆறுதல் கிடைத்தது
இரண்டு முட்டி
எலும்பு துண்டுகள் தான்,
பனியில்
நனைந்தவாறு
ஓட்டிக்கொண்டு
போன அப்பாவுக்கு
முட்டி எலும்பு
துண்டுகளை பொடியாக
வெட்டி சூப்பு வைத்து கொடுக்கிறாள் அம்மா,
ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்
காக்கைகளும்
நாய்க்குட்டிகளும்
தெருவெங்கும்
அலைமோதுகிறது
மாட்டுக்கறி குழம்பின்
ருசியை அறிய,
பச்சை
புற்களை தின்ற
மாடுகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மல்லாக்க
படுத்துக்கொண்டு
கறி வாங்குகிறவர்களின்
முகங்களையே
பார்த்து கண்ணீரை
வடிக்கிறது ,
மாட்டுக்கறி குழம்பை
திருட்டு
தனமான ருசி
பார்க்கிறது பக்கத்து
வீட்டு பூனைக்குட்டிகள் ,
கிருஷ்ணர்
போல வேடமிட்ட
குழந்தைகள்
மாட்டு கால் எலும்பு
துண்டுகளை
புல்லாங்குழலாக நினைத்து
உறிஞ்சி இழுத்தவாறு
மூச்சு வாங்க ஓடுகின்றன கிணற்று மேட்டு தெருவெங்கும்,
கறிக்கடையெங்கும்
மக்கள் கூட்டம்
நிரம்பி வழிகிறது,
நிரம்பி வழியும்
கூட்டத்தை
கிழித்துக்கொண்டு
கறிகளை தூக்கி
கொண்டு
பறக்கிறது காக்கைகள்,
பச்சை நிற
இலை மேல்
வெள்ளை நிற சாதம்
காவி நிறம்
மாட்டுக்கறிக்குழம்பு
தேசிய கொடி பறக்கிறது
உழைக்கும் மக்கள்
வாழும் உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்,
இரவு ழுவதும்
பறை இசையை
வாசித்து
அலுத்துப் போன
அப்பாவுக்கும்
அண்ணனுக்கும் வெந்துக்கொண்டிருக்கிறது
சட்டியில் மாட்டுக்கறி
எலும்பு துண்டுகள்,
தலைகீழாக
தொங்குகிறது
மாட்டின் தொடைகள்
தொடைகளை தொட்டுப்பார்க்கிறார்கள்
மேல் தெருவு
மாணிக்கம் மகனும்
ஐய்யப்பன் மகனும்
அரை கிலோ கறி வாங்கி யாருக்கும் தெரியாமல்
சமைத்து கடித்து இழுத்திட …..!!!!