நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: சோ.முத்தமிழ்செல்வன் எழுதிய "பாவேந்தரில் பாரதி" நூல் | So Muthamizhelvan's Pavendaril Bharathi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: சோ.முத்தமிழ்செல்வன் எழுதிய “பாவேந்தரில் பாரதி” நூல்

“பாவேந்தரில் பாரதி”- நூல் திறனாய்வு இருபதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கிய வடிவினைச் சமைத்தவர்களில் மாபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள் மகாகவி பாரதியும், பாரதிதாசனும் ஆவர். பண்டிதர்களின் மரபுகளை ஓரங்கட்டிப் புதுமைகளைச் சாதாரணக் கல்வியாளனுக்கும், கவிஞனுக்கும் கொண்டு போய்க் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும். சமமான,…
கலாச்சார தொழிற்சாலை (Culture Factory) தொடர் – 5 - ஆர்.பத்ரி | R.Badri | கேள்விக்குள்ளாக்குதலும் மாற்றுச் சிந்தனையும் - https://bookday.in/

கலாச்சார தொழிற்சாலை தொடர் – 5

கேள்விக்குள்ளாக்குதலும் மாற்றுச் சிந்தனையும் கலாச்சார தொழிற்சாலை தொடர் – 5 மக்கள் கலைஞன் சார்லி சாப்ளின் நடிப்பில் 1921 இல் வெளியான ’தி கிட்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கண்ணாடி ரிப்பேர் செய்யும் வயதான ஒருவரின் பராமரிப்பில் ஒரு அனாதைச் சிறுவன்…
Karl Marx Frederick Engels The Communist Manifesto (மார்க்ஸ் - எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்)

மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்  – எஸ்.வி.ராஜதுரை

கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது மார்க்ஸியத்தில் அக்கறை உள்ளவர்களோ விமர்சனப் பகுப்பாய்வுக் கற்பனாவாத சோசலிசமும்  கம்யூனிசம் பற்றி – குறிப்பாக  சேன் சிமோன் (Saint-Simon), சார்ல்ஸ் ஃ பூரியே (Charles Fourier),  இராபர்ட் ஓவன் (Robert Owen) ஆகியோரைப் பற்றி முதன்…
 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

  லெனினின் நூற்றாண்டு நினைவு போற்றப்படும் இந்த ஆண்டில் அவரிடமிருந்து கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். அவரது மிகச் சிறந்த படைப்புகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை இளம் தலைமுறைக் கம்யூனிஸ்டுகளுக்கு அறிமுகப்படுத்துவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமை. அவர்கள் செய்ய வேண்டிய…
எழுத்தாளர் இமையதின் “பெத்தவன்” சிறுகதைகள்

எழுத்தாளர் இமையதின் “பெத்தவன்” சிறுகதைகள்

  கோவேறு கழுதைகள் எனும் நாவலின் மூலம் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் அழுத்தமான தடம் பதித்த எழுத்தாளர் இமையம் அவர்களின் நெடுங்கதை தான் பெத்தவன். இது ஒரு மிக முக்கியமான கதையாகும். வட மாவட்டங்களில் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும் சாதியக்…
போயிட்டு வாங்க சார்

நூல் அறிமுகம்: போயிட்டு வாங்க சார் (Goodbye Mr Chips) – தி. தாஜ்தீன்

      Goodbye,Mr.Chips_1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை 1934-இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன்,இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக இருப்பவர் இங்கிலாந்து பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் 'சிப்பிங்…
kavithai : eni penmai by shanthi saravanan கவிதை : இனி பெண்மை - சாந்தி சரவணன்

கவிதை : இனி பெண்மை – சாந்தி சரவணன்

அகராதியில் அழிந்தது பெண் சிசுக் கொலை அகழ்வாராய்ச்சியில் பெண் நடுகற்கள் எதிர்காலத்தில் கிடைக்காது திரெளபதியும், சீதையும் வருங்கால இதிகாசத்தில் இடம் பெறமாட்டார்கள் கிருஷ்ணனுக்கும் ஆஞ்சநேயருக்கும் இனி வேலையில்லை வால்மீகியும், கம்பனும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பர் ஆசிபா கொடுமை இனி புவியில் இல்லை…
மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி

மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி




கோட்சேவைக் கூட திருத்திட லாம்…

காந்தி மறுமுறை பிறப்பாரா…

சாணிப்பால்  மொத்தை சௌக்கடி  நூறு புசித்திடலாம்..
அம்பேத்கர் இங்கு  உதிப்பாரா…

அடுக்களைக்கு விறகாகி  ஆதிக்க இரையாகலாம்
பாரதி எழுந்து வருவானா..

நூறு ஆண்டு கூடுதலாய்..
பரங்கியர்  பல்லக்குச் சுமக்கலாம்.
நேதாஜி மீண்டும் கிடைப்பாரா..

பட்டினி உண்டு ஆண்டானுக்கு  பழுதாகலாம்
மார்க்ஸ் புரட்சி வெடிக்குமா..

சிறுத்தும் கருத்தும் வாழ்கிறோம்..
புலங்கள் பலதும் பெயர்கிறோம்..
மீண்டும் புலருமா ஆகஸ்டு பதினைந்து …

து.பா.பரமேஸ்வரி
சென்னை

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




புவியின் வித்து
*******************
புல்லும் பேசும்
பூவும் பேசும்
கல்லும் பேசும்
கனியும் பேசும்!

புலியும் பேசும்
பூனையும் பேசும்
தத்துவ வித்திவன்
தரணியின் முதல்வன்!

அன்பால் உலகை
ஆண்டிடும் அரசன்
அவனிக்கு இவனோர்
அவதார புருஷன்!

அரண்மனை சுகத்தை
அனுபவித்திருந்தால்
அகிலம் ஆசையில்
அழிந்தே இருக்கும்!

இல்லற சுகத்தை
இனிதெனக் கருதா
உன்னதக் கோமான்
உலகின் முதல்வன்!

நானிலம் உய்ய
நல்வழி காட்ட
தன்னிலை துறந்த
தரணியின் தாயிவன்!

தேடிய ஞானம்
திரைகடல் பெரிது
அமுதத்தை விடவும்
அகிலத்தில் உயர்வு!

காற்றின் நிகரிவன்
கருத்துகள் எல்லாம்
சுவாசித்தால் தெரியும்
சுகமிது என்று!

புத்தன் புனிதன்
புலமிதைக் காப்போன்
புறப்படுத் தோழா
அவன்வழி செல்வோம்!

பூமியின் சொத்து
*********************
இன்று மட்டுமல்ல
என்றும்
புதிது புதிதாய்
பிறப்பவன் நீ!

அக்கினிக் குஞ்சுகளை
அடைகாக்கும்
தீக் கங்கு நீ!

அன்று
அக்ரஹாரத்தில்
தவறிப் பிறந்தவன் நீ!

இன்று
ஆணிலும் பிறக்கின்றாய்
பெண்ணிலும் பிறக்கின்றாய்!

சமயங்கள், சாதிகள்
மொழிகள், நாடுகளென்று
எங்கும்…..
பிறந்து கொண்டேயிருக்கின்றாய்!

ஒரு பெண்ணால்
உணர முடியாத
உள் வலிகளை
உன்னால் மட்டுமே
உணர முடிந்தது!

உன்னை
ஆண் சாதிக்குள்
எப்படி அடக்கி வைக்க முடியும்?

அடங்காத
ஆண்மையை, பெண்மைக்குக் கொடுத்து
அழகு பார்த்தவன் நீ!

பாரதி….
நீ
உருவத்தால் ஆண்;
உணர்வுகளால் பெண்!
சரஸ்வதி பெண்!

அறிவைக்கொடு
ஆஸ்தியைக்கொடு
என
இறைவனிடம்
பிச்சையெடுப்பவரின்
முகத்தில்…
துப்பியவன் நீ!

சுடர்மிகும் அறிவுடன்
படைத்ததற்காக
ஆதி பராசக்தியை
அர்ச்சனை செய்தவன் நீ!

எமனை
அருகில் அழைத்து
எட்டி உதைப்பேனென
கர்ஜித்த
இறுமாப்பு உன்னுடைய
ஆண்மை!

சோற்றுக்கு மட்டும்
சோதனையில்லாமல்
இருந்திருந்தால்….
பரங்கியரையும்….
பார்ப்பனீயத்தையும்
நீ ஒருவனே
பந்தாடியிருப்பாய்!

உன்னை…
பாட்டுக்கொருப் புலவனென
பட்டிக்குள் அடைத்து விட்டார்கள்!

நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத…
அடங்காத….
அடலேறே…
நீ…
நிலத்தில் உதிக்கும்
சூரியன்!

அதனால்தான்
அந்த
ஆதவனைப்போல
தினம் தினம்
பிறந்து கொண்டேயிருக்கின்றாய்!
இன்றும்…

– பாங்கைத் தமிழனின்